என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "release of excess water"

    • மதியம் நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • நாளை காலைக்குள் மேட்டூ அணை தனது முழுகொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.38 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 89.38 டிஎம்பியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. 1,21,934 கனஅடியாக குறைந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது.

    அதை படிப்படியாக உயர்த்தி இன்று காலை 11 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. மதியம் நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக காவி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதே நிலையில் நீர்வரத்து நீடித்தால் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    • பலத்த மழை காரணமாக பிச்சாடடூர் அணை நிரம்பி உள்ளது.
    • இன்று காலை 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் அணை உள்ளது. பலத்த மழை காரணமாக பிச்சாடடூர் அணை நிரம்பி உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் சற்று அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு இன்று (1-ந்தேதி)காலை 10 மணியளவில் உத்தேசமாக 500 கன அடி உபரி நீரை திறந்து விடுகிறது.

    இதனால் ஆரணியாறு ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடப்படுகிறது.

    நீர் தேக்கத்திற்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்பொழுது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அ.நாகுப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அரெட்டி பாளையம் தடுப்பணைகள் மூலம் சராசரியாக 3200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    எனவே ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, தாராட்சி பேரண்டூர் 43யனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வட தில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மானந்தூர்.

    தொளவேடு, மேல் மாளிகைப் பட்டு, கீழ் மாளிகைப்பட்டு, பெரியபாளையம், ராளப் பாடி, மங்களம் காரணி ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துறைநல்லூர், வைரவன்குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்ன காவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவார் பாளையம்.

    பெரும்பேடு, வஞ்சி வாக்கம், வெள்ளோடை ஆலாடு, கொளத்தூர், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்தமணஞ்சேரி, வேலூர், அ.ரெட்டிபாளையம், காட்டூர், தத்தமஞ்சி, கடப்பாக்கம், சிறுபழவேற்காடு. போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம், தாங்கல் பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    பலத்த மழையினால் பொன்னேரி ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி 3250 கன அடி தண்ணீர் வெளியேறி மனோபுரம் ரெட்டிபாளையம் ஆண்டார் மடம் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கிறது. பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 55 ஏரிகளில் 32 ஏரிகள் கொள்ளளவு நிரம்பி உள்ளன.

    மீஞ்சூர் அடுத்த நாளூர் பத்மாவதி நகர்,இந்துஜா நகர், கலைஞர் நகர அத்திப்பட்டு புது நகர், நந்தியம்பாக்கம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம், ஏ.ஏ.எம். நகர், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாய்மான் செட்டி தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

    பொன்னேரி-பழவேற் காடு சாலை, திருவாயர்பாடி ெரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் இளநிலை பொறியாளர் பரந்தாமன் மற்றும் ஊழியர்கள் 2 ராட்சதமின்மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.இதனை அமைச்சர் ஆவடி நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பழவேற்காடுமற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாலைவனம், அத்திப்பட்டு, பள்ளி பாளையம், வைரங்குப்பம் ஆலாடு பாதுகாப்பு மையத்தில் 507 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களுக்கு தேவையான உணவு, பிரட் பிஸ்கட் போர்வை, உள்ளிட்டவைகளை அமைச்சர் சா.மு. நாசர், எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகர், டி.ஜே.எஸ்.கோவிந்தராஜன், சேர்மன் ரவி, பழவேற்காடு அலவி, ஆகியோர் வழங்கினர். அப்போது வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

    சோழவரம் அடுத்த ஆத்தூரில் 2 குடிசை வீடுகள் சின்னம்பேடு, சோம்பட்டு பகுதியில் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தன. மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள், 5 மின்கம்பங்கள் சாய்ந்தன பழவேற்காடு கடற்கரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட படகுகள் என்ஜின்கள், வலைகள், சேதமடைந்து உள்ளன. இன்று காலையும் பொன்னேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.

    • வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
    • கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் சுற்றுப்புற கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

    செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக்டோபர் மாதம் 23-ந் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.


    இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அக்டோபர் மாதம் 24-ந் தேதி மாலை முதல் இரவு வரை தொடர்ந்து 4 மணி நேரம் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.

    26-ந்தேதி அதிகாலை அணையின் நீர்மட்டம் 65.29 அடியை எட்டி 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து, அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் புயல் காரணமாக நேற்று மாலை முதல், இன்று அதிகாலை விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது.
    • நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம் ,ஈரோடு, நாமக்கல், கரூர் ,திருச்சி ,தஞ்சை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வேலூர், சென்னை உள்பட தமிழகத்தின் பெருபாலான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

    மேட்டூர் அைணயில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்படும்.

    இதேபோன்று கால்வாய் பாசன தேவைக்காக ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக ஜூலை 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக ஜூலை 30-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை 43-வது முறையாக எட்டி கடந்த ஆண்டு (2024) முதன்முறையாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 120 அடியை எட்டி 2-வது முறையாக நிரம்பியது.

    ஒரு சில வாரங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை குறைந்தது. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக மேட்டூர் அணை கடந்த 2022-ல் ஒரே ஆண்டு 3 முறை முழுகொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அணை வரலாற்றில் 43-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி முதல் முறையாக நிரம்பியது.

    அதன் பிறகு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து வருடத்தின் கடைசி நாளான நேற்று (31-ந்தேதி) அணை 45-வது முறையாக நிரம்பி இருக்கிறது.

    இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,875 கன அடியிலிருந்து 1,791 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

    அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை 120 அடி எட்டி உள்ளதால் மேட்டூர் காவிரி உபரி நீரேற்றும் திட்டத்தின் கீழ் திப்பம்பட்டியில் உள்ள உபரி நீரேற்றும் நிலையத்தில் இருந்து மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்கும் செயல்பாட்டினை இன்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திப்பம்பட்டி நீரேற்றும் நிலையத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். 

    ×