என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadblocks"

    • சென்னை-கும்பகோணம் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடு வெட்டி பகுதியில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைக்காக சாலை விரிவாக்க பணி மேற்கொள் ளப்பட்டு சாலை யில் மண் குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மழை நீர் தேங்கி தெருக்களில் புகும் அபாயம்ஏற்பட்டது. மேலும் இது சம்பந்தமாக அவ்வப்போது நெடுஞ்சா லை களில் விபத்தும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது. இதனை அகற்று வதற்கு பலமுறை நெடுஞ்சா லை துறை அதி காரி மற்றும் வட்டாட்சி யரிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் குடையுடன் காடுவெட்டி குருவின் மகன் குரு கணல ரசன் தலைமையில் பொது மக்கள் ஒன்று திரண்டு சென்னை- கும்ப கோணம் சாலையில் திடீர் மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த மீன்சு ருட்டி மற்றும் சோழத் தரம் போலீசார் மற்றும் ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக மண் குவி யல்கள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டதுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    • இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார்.

    வேப்பூர், நவ. 16-

    வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 54. இவரது வயலில் மின் அழுத்த கம்பி தாழ்வாக செல்வதாக, 2 நாட்களுக்கு முன் வேப்பூர் துணை மின் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வயலில் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிரை பார்வையிட ராமசாமி சென்றார். ராமசாமி, வயலுக்கு சென்று பல மணிநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் செல்வகுமார், இரவு 7:30 மணியளவில் வயலுக்கு சென்று அவரை தேடினார்.

    அப்போது, அறுந்து விழுந்த மின்கம்பியை ராமசாமி மிதித்து, மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த அப்பகுதி கிராம மக்கள் சிலர், இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார். பின்னர், 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

    • குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்க ம்பட்டி -ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளது.

    இந்த வழியாக அதிக கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் தூசி பரவி காற்று மாசு ஏற்படுகிறது.

    மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடனடியாக தார் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தை கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாக புகார் மனு அளித்தனர்.
    • அரசு மற்றும் தனியார் பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் முறையாக கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராமல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாகவும் பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீர்களால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என கூறினர்.

    எனவே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் வேப்பூர் -பெண்ணாடம் சாலையில் வேப்பூரில் இருந்து பெண்ணாடம் நோக்கி சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனி பாபு மற்றும் ஆவினங்குடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை செய்து ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அதற்கான பணிகளை துவங்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    • மதுரை பசுமலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி 93-வது வார்டுக்கு உட்பட்ட பசுமலை முனியாண்டிபுரம் கருணாநிதி நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இவர்கள் பலகாலமாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மிகவும் சிரமப்பட்ட இப்பகுதி மக்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், திருமங்கலம் கோட்டாட்சியர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

    அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பசுமலையில் மதுரை திருமங்கலம் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சாலையின் இரு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசார் பொதுமக்களிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.மறியலால் சுமார் அரை மணி நேரம் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நாவினிப்பட்டியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினையால் அந்தப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    இதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயன்பாண்டியன், ஏட்டுகள் முருகேசன், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.,

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் மணலூர் பேட்டை - ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது  இந்நிலையில் தியாக துருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகு தியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்பட வில்லை  இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் 

      போக்குவரத்துகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • எதிர்பாராத விதமாக அறுந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது.
    • ஜக்காம் பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே உயர் மின்ன ழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சிறுவன் உயிரி ழந்த நிலையில், மற்றொரு சிறுவன் படுகாய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள வேங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் யுவனேஸ்வரன்(4).அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் நித்திஷ்(4), உள்ளிட்ட 4 சிறுவர்கள் இன்று காலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளி பகுதியில் விளையாடிக் கொண்டி ருந்தனர். அப்போது அப்பகுதியில் சென்ற உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் யுவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த நித்திஷ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காலை 7.30 மணியளவில் நடைபெற்ற சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை மின் ஊழிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஜக்காம்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது மின்வாரிய ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஜக்காம் பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் மயிலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது ஆரியபட்டி ஏ.கண்ணியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏ.கண்ணியம்பட்டி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. தங்களது கிராமத்திற்கு குடிநீர் சீராக சப்ளை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இருந்த போதிலும் குடிநீர் வரவில்லை என தெரிகிறது. தற்போது அந்த பகுதியில் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஏ.கண்ணியம்பட்டி கிராமமக்கள் இன்று உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். பெண்கள் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர்.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் உசிலம் பட்டி-திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அனைத்து வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலைக்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடை பெற்று வருகிறது. இதில் சக்தி ரோடு பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் வரை 2 இடத்தில் மட்டுமே சாலையை கடக்கும் வசதி உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாரதி தியேட்டர் சாலையில் திரும்புவதற்கான வழி இல்லை.

    இதனால் வாகனங்கள் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. மாணவ, மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்ப டுவதாக கூறி வீரப்பன்சத்திரம் அனைத்து வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இந்தநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பாரதி திரையரங்கு சாலை சந்திப்பில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 5-ந் தேதி கறுப்பு கொடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் பகுதி வியாபாரிகள் கூறியதா வது:-

    சாலை தடுப்பு வைத்துள்ளதால் தற்போது இருசக்கர வாகனங்கள் ஒரு வழிபாதையில் செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    உயிரிழ ப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலை தடுப்பால் வியா பாரம் முற்றிலும் பாதிக்கப்ப டுகிறது.

    மற்ற சாலைகளில் பல இடங்களில் சாலைகளில் இடைவெளி இருந்தும் இந்த சாலையில் மட்டும் தடுப்புகளை அகற்ற பிடிவாதம் பிடிப்பதன் காரணம் புரியவில்லை.

    இதனால் வியாபாரி களையும், பொது மக்களையும் பாதுகாக்க இந்த பகுதியில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுரை மாநகராட்சி 20-வது வார்டில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    20-வது வார்டு தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டதால் மோசமாக காணப்படும் தெரு. 


    மதுரை

    மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான 20-வது வார்டு விளாங்குடியில் சொக்கநாத புரம் 1, 2-வது தெருக்களில் பாதாள சாக்கடை, முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.

    இதுபோன்று பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது. இதுதொடர்பாக 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதிசித்தன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    சாலை மறியல்

    இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோ ரியும், தெருக்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலை அமைத்துத்தர வலியுறுத்தியும் இன்று காலை கவுன்சிலர் நாக ஜோதிசித்தன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் பிரச்சினை, புதியசாலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பலமுறை கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தென்னல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் ஊராட்சியில் பூஞ்சோலை குப்பம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பலமுறை கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர் ஆனால் பொதுமக்கள் அளித்த மனுவிற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் பள்ளி தென்னல் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுற ங்களிலும் வாகனங்கள் அனிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனங்கள் செல்வதற்கு பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலை வருகிறது.

    ×