என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem"

    • சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது.

    சேலம்:

    சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியதால் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இதேபோல சேலம் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி , கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    தலைவாசல் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தமுடன் குதூகலம் அடைந்தனர்.

    5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றனர். மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில் 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆனைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, சங்ககிரி 13, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஸ்பேட்டை 10.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.7 மி.மீ. மழை கொட்டியது.

    நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், வெண்ணந்தூர், நாமகிரி பேட்டை, குமாரபாளையம், மங்களபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு, கொல்லி மலை, பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் மற்றும் மங்களபுரத்தில் 22.6, மோகனூர் 2, நாமக்கல் 15, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 21.8, சேந்தமங்கலம் 18, கலெக்டர் அலுவலகம் 12.5, என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊ.மாரமங்கலம் ஊராட்சி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26 ). இவர் ஓமலூர் அருகே உள்ள பஞ்சகாளிப்பட்டி பகுதியில் பட்டு நெசவுத் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார். இதுபற்றி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யபப்ட்டது.

    புகாரின் பேரில் மணி கண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடு வதை அறிந்த மணிகண்டன் இரவு நேரத்தில் சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டுவிட்டு சிறுமியின் அக்கா 19 வயது பெண்ணை கூட்டி சென்றார்.

    இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்களுக்கு அடைகலம் கொடுத்த உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருப்பதாக அறிந்து அங்கு சென்ற போலீசார் பார்த்தபோது மணிகண்டன் நெசவு தொழிலில் செய்து வருவ தும், அவருடன் சென்ற சிறுமியின் அக்காள் அதே பகுதியில் தனியார் கம்பெ னிக்கு வேலைக்கு செல்வ தும் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்துவதும் தெரிய வந்தது.

    இருவரையும் அழைத்து வந்த போலீசார் மணி கண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சம்ப வம் நடைபெற்று 11 மாதங்க ளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும், மிகப் பழமை வாய்ந்ததுமான சுகவ னேஸ்வரர் கோவில் உள்ளது.
    • விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்றதும், மிகப் பழமை வாய்ந்ததுமான சுகவ னேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி யது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

    இரவு நேரத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் சுகவனேஸ்வ ரருக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து உற்சவ மூர்த்தியான சுகவனேஸ்வ ரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு பட்டு ஆடைகள் உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ராஜகணபதி கோவில் முன்பு உள்ள, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை எழுந்தருளினார்.

    இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்ச னைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு திருத்தே ரோட்டம் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர் கள் நமச்சிவாயா நமச்சி வாயா என கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த தேரானது ராஜகண பதி கோவிலில் தொடங்கி, 2-வது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்து மீண்டும் ராஜ கணபதி கோவில் அருகே வந்தடைந்தது.

    தேர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருத்தேர் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, இன்று அந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஏராளாமான போலீசார் ஷிப்ட் முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்த போது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.

    இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.96.53 கோடி செலவில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டப்பட்டது.
    • இன்று காலை முதல் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.96.53 கோடி செலவில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டப்பட்டது. இந்த பஸ் நிலைய கட்டுமான பணி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது .

    பணிகள் நிறைவ டைந்ததை அடுத்து மறு சீரமைப்பு செய்யப்பட்ட இந்த பஸ் நிலையம் கடந்த 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தபஸ் நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் 54 பேருந்துகள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது தவிர கடைகள், அரசு அலுவலகங்களும், மொட்டை மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன.

    பஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சோலார் பேனல் அமைக்கப் பட்டுள்ளது. வைபை இணைப்புடன் பயணிகள் தங்கும் அறை உள்ளது. பேருந்து நிலையம் 430 பஸ்கள் வந்து செல்லும் வகையில் விஸ்தாரமாக உருவாகி உள்ளது.

    11500 சதுர மீட்டரில் தரைத்தளம் அமைக்கப்பட்டு 4586 சதுர மீட்டரில் வணிக உபயோகத்திற்காக 54 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 1,181 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 29 கடைகளும் 11 அலுவலகங்களும் கட்டப் பட்டுள்ளது. இத்தளத்தில் 26 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும் 2-ம் தளத்தில் 47 கடைகள் அமைக்கப்பட்டு 26 பேருந்துகள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கூரை தளத்தில் 11 கடையும், ரெயில் நிலையத்தில் உள்ளது போல் வைபை இணைப்பு வசதியும், ஏ.சி. வசதியும், பயணிகள் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் பணிகள் 100 சதவீதம் முழுமை பெறாததால் பஸ்களின் இயக்கம் ஒத்திவைக்கப்பட்டது .

    இந்த நிலையில் இன்று முதல் பஸ்கள் இயக்க மாநகராட்சி மற்றும் போக்குவரத்து கழகம், போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் . அதன்படி இன்று காலை முதல் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன.

    மேல் தளத்திலிருந்து ஜங்ஷன் ,அஸ்தம்பட்டி, தாரமங்கலம், சித்தர் கோவில் மார்க்க பஸ்கள் இயக்கப்பட்டன. தரைதளத்திலிருந்து வாழப்பாடி, காரிப்பட்டி ,மல்ல சமுத்திரம் , ஆட்டையாம்பட்டி மார்க்கமான பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதை ஒட்டி பஸ் நிலையம் பரபரப்பாக காட்சியளித்தது. நீண்ட காலத்துக்கு பிறகு பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்களும் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் பாலசந்தர் முன்னிலையில் நடந்தது.
    • யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் பாலசந்தர் முன்னிலையில் நடந்தது. துணை மேயர் சாரதா தேவி, மண்டல தலைவர்கள் கலை அமுதன், உமாராணி, தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கே.சி.செல்வராஜ் பேசுகையில், புதிய பஸ் ஸ்டாண்டில் அனுமதி இல்லாமல் ஏராள மான கடைகள் வைக்கப் பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடைமேடையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடுதலாக வைக்கப்பட் டுள்ள கடைகளை அப்புறப்ப டுத்த வேண்டும். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தா விட்டால் குடி தண்ணீர் மூலம் பெறும் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

    சிவதாபுரம் ஏரி நிரம்பி தண்ணீர் ஊருக்குள் செல்கி றது. இதனை தடுக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி அனுமதிகள் முறையாக நடைபெறுவதில்லை. மாநகராட்சி திருமண மண்ட பங்களில் வருமானங்களை முறைப்படுத்த வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க கவுன்சிலர் சசிகலா பேசுகையில், பள்ளப்பட்டி ஏரி முறையாக பணி நிறைவு பெறவில்லை, ஆனால் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் குடிமகன்களுக்கு பாராக செயல்படுகிறது. ஏரியின் முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றபடவில்லை என்றார்.

    தி.மு.க கவுன்சிலர் சங்கீதா பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் சிலையை அண்ணா பூங்காவில் அமைத்ததற்கும், எனது வார்டில் மருத்துவ முகாம் நடத்தியதற்கும், அதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    கவுன்சிலர் கோபால் பேசுகையில், அம்பாள் ஏரியை சீரமைத்து சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அ.தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், குடிநீர் மஞ்சள் நிறத்தில் மிகவும் மோசமான நிலையில் வழங்கப்படுகிறது. இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

    கொசு மருந்து முறையாக அடிக்கவில்லை. குப்பைகள் தேங்கியுள்ளது. குடி தண்ணீரில் 2 நாட்களில் புழுக்கள் உருவாகிறது. இதனால் குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அதில் முறையான அளவு நோய் தடுப்பு பவுடரை கலக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர்கள் ஈசன் இளங்கோ, சாந்தமூர்த்தி, மூர்த்தி, சரவணன் ஆகியோர் அதிகம் நேரம் பேசக்கூடாது என்று அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது யாதவமூர்த்தி என்னை பேசக்கூடாது என்று மேயர் மட்டும் தான் சொல்ல வேண்டும், வேறு யாரும் சொல்லக்கூடாது, இந்த மாமன்றத்தில் ஒரு மேயரா, இல்லை 9 மேயரா என்று கேள்வி எழுப்பினார்.

    இதை அடுத்து பேச வாய்ப்பளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்கிறோம். இங்கு ஜனநாயகம் இல்லை என்று கூறியபடி யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் தங்களது வார்டில் செய்யப்பட்ட பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக பேசினர். அவை அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.

    மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரவணன், குமாரவேல், தமிழரசன், சீனிவாசன், சாந்தமூர்த்தி, ஜெயக்குமார், கோபால், தனலட்சுமி சதீஷ்குமார், கனிமொழி கணேசன், முருகன், பி.எல்.பழனிச்சாமி, அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆணை வரதன், சசிகலா, ஈசன் இளங்கோ, மோகனப்பிரியா, சந்திரா, ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது.
    • அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட தாபா கடைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர் கந்தசாமி( 50) என்பவரை கைது செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலாடுதுறையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் சேலம் சென்றடைகிறது.
    • மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து மதியம் புறப்பட்டு இரவு மயிலாடுதுறை வந்தடைகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை எம்பி இராமலிங்கம் , ரயில்வே துறை முதன்மை செயல் இயக்குனர் தேவேந்திர குமாருக்கு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு மயிலாடுதுறை முதல் சேலம் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

    இது குறித்து, புது தில்லி முதன்மை செயல் இயக்குனர் தேவேந்திர குமாருக்கு, கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மயிலாடுதுறை எம் பி ராமலிங்கம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, 13.5.2022, 29.11.2022 தேதிகளில் எனது கடிதத்தில் கீழ்கண்டவாறு வலியுறுத்தி இருந்தேன்.

    எனது மயிலாடுதுறை தொகுதி பயணிகள், நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவையை கோரி வருகின்றனர்.

    இந்த சேவையை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ்,திருச்சி-கரூர் எக்ஸ்பிரஸ் கரூர்-சேலம் எக்ஸ்பிரஸ் இணைக்கப்பட வேண்டும் எனவும், இதே கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் நாமக்கல் ஏ.கே.பி சின்ராஜ் ஆகியோரும் வைத்துள்ளனர்.

    அந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கடந்த மாதம் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அந்த ரயில்களை இணைக்கும் திட்டத்தை அனுப்பியுள்ளது.

    பயணிக்கும் பொதுமக்க ளின் நலன் கருதி உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இது சம்பந்தமாக உங்கள் முன்கூட்டிய சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு, மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் தனது கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை அடுத்து, கோரிக்கை ஏற்கப்பட்டு, தெற்கு ரயில்வே வெளியிட்டு ள்ள அட்டவணையில் தெரிவித்திருப்பதாவது:

    மயிலாடுதுறையில் காலை 6:20 க்கு புறப்பட்டு குத்தாலம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரபெரு மாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, அய்ய ம்பேட்டை, பசுபதிகோவில், திட்டை தஞ்சாவூர், ஆலக்குடி, பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் ஆகிய அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று, மதியம்1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.

    இதேபோல் மறு மார்க்கமாக, சேலத்தில் மதியம் 2.05மணிக்கு, புறப்பட்டு இரவு 9.40மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது.இவ்வாறு ரயில்வே துறை வெளியிட்டு ள்ள அட்ட வணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறையிலிருந்து சேலத்திற்கு, நாமக்கல் வழியாக நேரடியாக இயக்கப்படும் விரைவு ரயிலை இயக்குவதற்கு ஒப்புதல் அளித்த ரயில்வே துறைக்கு நன்றியையும், விரைவு ரயில் இயக்கத்திற்கு வரவேற்பையும் எம். பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மோகனாவுடன் குணசேகரன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதுடன் சந்தேகப்பட்டு தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மோகனாவின் சொந்த ஊர் ஓமலூர் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
    • புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அடுத்த மாதம் 27-ந் தேதி பல ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக வைபவமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    இந்த நிகழ்வு காட்டு தீயை போல பரவியது. இதனையடுத்து கோட்டை மாரியம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்ந்திருப்பதை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து கோவில் குருக்கள் கூறும்போது எங்கிருந்து பச்சை கிளி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அம்மன் கருவறையில் சிலையின் மீது அமர்ந்து கொள்வதும், அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யும்போது அருகிலேயே அமர்ந்து கொண்டும் கோவில் நடை சாத்தும் போது கூட கருவறையிலேயே பச்சைக்கிளி அமர்ந்து இருக்கிறது.

    கடந்த 3 நாட்களாக கிளியானது கருவறையை விட்டு செல்லாமல் உள்ளது. அம்மனுக்கு வைக்கக்கூடிய பிரசாதத்தையே உண்டு வருகிறது.

    அடுத்த மாதம் அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் கோட்டை மாரியம்மன் கிளி ரூபத்தில் இங்கு வந்து இருப்பதாக குருக்கள் பரவசத்துடன் தெரிவித்தார். மேலும் பச்சை நிறம் அம்மனுக்கு உகந்த நிறம். பச்சைக்கிளி அல்லது வெட்டுக்கிளி இல்லங்கள் வந்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். ஆகையால் அம்மனே வந்து அமர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.6, கரியகோவில் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 13.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக மங்களபுரத்தில் 15, பரமத்திவேலூர் 15, கலெக்டர் அலுவலக பகுதி 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநகரில் பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். ேமலும் பொது இடங்களில் அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது .

    இதனை கவனித்த சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மக்கள் கூடும் இடங்களில் ரெடிேமடு சுகாதார வளாகங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    இதற்கு தேவையான தண்ணீரை அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தும் வகையில் பைப் லைன் அமைக்கவும் நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகரத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Salem District News, சேலம், மாநகராட்சி, 11, சுகாதாரம், வளாகங்கள், Salem, Corporation, 11, Health, Complexes, 

    ×