search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samatthu Pongal Festival"

    • தென் சென்னை மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் அ. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
    • அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.

    சென்னை

    தமிழ்நாடு மலர் காய்கனி வியாபாரிகள் நல சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா கோயம்பேடு கீரை மார்க்கெட் வணிக வளாகத்தில் தென் சென்னை மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் அ. முத்துக்குமார் தலைமை யில் நடைபெற்றது. பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.

    பா. ம. க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வடக்கு மண்டல இணை பொது செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. மூர்த்தி, மாநில தேர்தல் பணி குழு செயலாளர் மு. ஜெயராமன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஈகை தயாளன், மாவட்ட தலைவர் கே. எம். ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் மு. தாமோதரன், நெடி பு. நல்லதம்பி, ஓம்சக்தி ஜெயமூர்த்தி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கீரை வை. கோவிந்தராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை

    தமிழ்நாடு மலர் காய்கனி வியாபாரிகள் நல சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • திருமங்கலம் நகராட்சியில் சமத்துவபொங்கல் விழா நடந்தது.
    • நகர் மன்றத்தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பொங்கலிட்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகர்மன்ற அலுவலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முகப்பு வாசலில் அடுப்பு வைக்கப்பட்டு புதிய பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. நகர் மன்றத்தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பொங்கலிட்டனர். துணைத்தலைவர் ஆதவன்அதியமான், ஆணையாளர் டெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

    கவுன்சிலர்களுக்கு பொங்கல்பானை, கரும்பு உள்ளிட்டவைகளை நகர்மன்றத்தலைவர் ரம்யாமுத்துக்குமார், திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர் வழங்கினர். சமத்துவ பொங்கல் திருவிழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் வீரக்குமார், பெல்ட்முருகன், சின்னசாமி, திருக்குமார், ரம்ஜான்பேகம், சங்கீதா, மங்களகவுரி, முத்துக்காமாட்சி, ராஜவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×