என் மலர்
நீங்கள் தேடியது "Saturn transit"
- சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர்.
- நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.
திருநள்ளாறு
புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அமைந்துள்ளது. புராதான சிறப்பு கொண்ட இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும்.

பக்தர்கள் முதலில் நள தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு அதன் பிறகே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ, அல்லது கிழக்கு முகமாகவோ 9 முறை ஸ்நானம் செய்து தலை குளிக்க வேண்டும். அதன்பின்பு பிரம்மதீர்த்தம், சரஸ்வதி குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கர்ப்ப கிரகத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் திரு நாமம் கொண்டு எழுந் தருளியள்ள சிவ பெருமானை வழிபட வேண்டும்.

அவரை தரிசித்து வலம் வரும் போது கட்டை கோபுரச்சுவரில் சிறிய மாடத்தினுள் எழுந்தருளியுள்ள சனிபகவானை தரிசிக்கலாம். இவரை வழிபடத்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள்.
இத்தலம் பேரளம் காரைக்கால் ரெயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. அரிசொல் நதிக்கும். வாஞ்சை நதிக்கும் இடையில் இத்தலம் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக போற்றப் படுகின்றது.
இத்தலத்திற்கு ஆதிபுரி, தர்பிபராண்யம் நகவிடங்கபுரம், நாளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல்+ஆறு திருநள்ளாராயிற்று.
இறைவன் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர். இத்தலத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி ஆலயம் உள்ளது. இது வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் உகந்த தலமாகும்.
இறைவி ஸ்ரீபிராணாம்பிகை, போகமார்த்த பூண் முலையாள். தல விருட்சம் தர்ப்பை. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நளதீர்த்தம்.
சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது பழமொழி. அதனால் அனைவரும் இவரை பயபக்தியுடன் வணங்குவர்.
இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ர நாம அர்ச்சனைகள் உண்டு. திருமால், பிரம்மன், இந்திரன், தசை பாலர்கள், அகத்தியர், புலங்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.
இச்சன்னதியின் முன்புறம் மகர, கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் போடும் பிரார்த்தனை இங்கு விஷேசம். நளதீர்த்தம் கோவிலுக்கு சற்று தள்ளியுள்ள இத்தீர்த்ததில் எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. இதில் நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.
கோவில் முகவரி:
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளார் (அஞ்சல்), காரைக்கால், புதுவை மாநிலம்.

குச்சனூர்
திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு சாப விமோசனம் அளித்தவர் குச்சனூர் சனிபகவான். இந்தியாவிலேயே சனீஸ்வரருக்கு என்று கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டு விளங்கிவரும் தலம்.
சனிபகவான் சுயம்புவாக உள்ளது கூடுதல் விசேஷம். அட்டமத்துச் சனி, கண்டசனி, அர்த்தாஷ்டம சனி பிடித்தவர்கள் குச்சனூர் சென்று சுயம்பு சனி பகவானை வழிபட்டு சுகம் பெறலாம். மேலும் மூர்த்தியான குச்சனூர் சனிபகவானை வழிபட்டால் தீராத வயிற்று வலி தீரும்.
திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மந்தமான வியாபாரம் லாபத்தில் இயங்கும். நிலங்களில் அமோக விளைச்சல் இருக்கும். தேனியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் குச்சனூர் உள்ளது.

திருகொல்லிக்காடு
மங்கு சனியால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு 30 வயதிலிருந்து 60 வயதிற்குள் பொங்குச்சனி கண்டிப்பாக வரும். அப்படிப்பட்டவர்கள் சனிபகவானை மனதார வணங்கி வரக்கூடிய தலம்தான் பொங்கு சனி தலம்.
திருக்கொள்ளிக்காடு சென்று வணங்கி வாருங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். செல்லும் வழி திருவாரூர். விக்கிரவாண்டியத்தில் இருந்து 2½ கிலோமீட்டர் தொலைவில் கோவில் உள்ளது.
- சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது.
- எள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ காலம் என்பது - வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு காலங்களிலும், "திரயோதசி திதி" வருகிறது அல்லவா! இவை சனிக் கிழமைகளில் வருமாயின் சனி பிரதோஷம் என்பர். இது, கிருஷ்ணபட்ச திரியோதசி எனின் மகாப் பிரதோஷம் என வழங்கப்படும்.

பிரதோஷ கலம் பரமேஸ்வரனை வழிபட உகந்த காலம் ஆகும். "திருப்பாற்கடலில் பொங்கி வந்த ஆலகால விஷத்தை அமரர்களுக்கும் அடியார்களுக்கும் எவ்வித தோஷமும் ஏற்படா வண்ணம் வேண்டி, சிவபெருமான் பருகிய வேளை தான் பிரதோஷ வேளை" ஆகும். அவ்வாறு பாம்பணிந்த பரமன் நஞ்சுண்ட நாள் சனிக்கிழமை தான். எனவே சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது ஆகும்.
இது போல திங்கட்கிழமை வரும் திரயோதசியை "சோம பிரதோஷம்" என்றும், "செவ்வாய் பிரதோஷம்" என்றும், வியாழக்கிழமைகளில் வரும் திரயோதசியை "குரு பிரதோஷம்" என்றும் கூறுவது மரபு.
திரயோதசி தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி நித்ய பூஜையில் பக்தியோடு ஈடுபட்டு உபவாச மிருந்து சனி பகவானை ஆத்ம சுத்தியுடன் ஆராதித்து எள் முடிச்சுடன் நல்லெண்ணைய் விளக்கேற்றி எள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
மாலையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் பிரதோஷ கால பூஜையில் கலந்து கொண்டு சிவபெரு மானை உளமாற ஆராதிக்க வேண்டும். அன்றைய தினம் மௌன விரதமிருத்தல் மிக விசேஷமானது ஆகும்.
பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் நமது ஈடுஇணையற்ற பக்திக்கு திருவுள்ளம் கசிந்து சிவபெருமான் சனீஸ்வர பகவான், நந்திதேவர், முருகன், விநாயகர் போன்றோர் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வும் தகமை சால் சிவஞான பக்தியும், புத்தியும் அளித்து சர்வ மங்களமுடன் வாழ அருள்பாலிப்பர்.
- ஒன்பது கிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய கிரகம் சனி.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.
ஒன்பது கிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய கிரகம் சனி. ஜாதகரீதியாக இருந்தாலும் சரி, தசாபுக்தி கிரக பெயர்ச்சிகள் இப்படி எதனால் சனிதோஷம் ஏற்பட்டிருந்தாலும் சரி, பாதிப்புகள் நிச்சயம் கடுமையாகத்தான் இருக்கும்.
கெடுக்கும் சனியே கொடுக்கவும் செய்வார் என்றாலும் ஏனோ இவர் பெயரைச் சொல்வதில் பலருக்கும் தயக்கம் உண்டு ஏன்றாலும் இவர்தான் ஆயுள்காரன். உங்களுக்கு சனி தோஷ பாதிப்பு இருந்தால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், பணியிடத்தில் அதீத அலைச்சல், பணிச்சுமை அதிகரிப்பு, அரசு வழியில் எதிர்ப்புகள், செய்யும் தொழிலில் முடக்கம், விளைச்சல் பாதிப்பு, சோம்பல் அதிகரிப்பு, விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு உடல் உறுப்புகளுக்கு ஊறு ஏற்படுதல் இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் ஏற்படலாம்.
உடல் நலத்தில் அடிக்கடி காயம்படுதல், வெட்டுக்காயம், தீக்காயம் ஏற்படுவது, தோல் நிறமாற்றம் ஏற்படுதல், நரம்புப்பிரச்சினைகள், வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய் மானம், சர்க்கரை நோய் போன்ற உபாதைகள் ஏதாவது வரக்கூடும்.

சங்கடம் தரும் சனிதோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனைகள் பெரிதாக வாட்டாமல் இருக்கும்?
தினமும் ஒரு கைப்பிடி அன்னம் சிறிதளவு எள் சேர்த்து காகத்திற்கு வைப்பது மிக மிக நன்மை தரும்.
சனிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபம் நல்லெண்ணை விட்டு ஏற்துவதும்,
சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது.
தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன் காயத்ரிகளைச் சொல்வதோடு, சனிபகவான் காயத்ரியையும் சொல்லுங்கள்.
சனிப்பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.
திருநள்ளாறு போய் நளதீர்த்தத்தில் நீராடி அங் குள்ள வழக்கப்படி சனிபகவானை வழிபடுவதும், திருக் கொள்ளிக்காடு திருத்தலத்தில் உள்ள பொங்கு சனி பகவானை அர்ச்சனை செய்து ஆராதிப்பதும் நற்பலன் தரும். (திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது திருக்கொள்ளிக்கோடு. இங்கிருப்பவர் பொங்கு சனி பகவான் என்பதால், இவரது பிரசாதத்தை எடுத்து வரலாம்).
இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணை நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இருப்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது.
வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக்கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். கோவில்களில் பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதம் கொடுங்கள்.
அடிக்கடி சிவாலயம் செல்வதும் அங்குள்ள பார்வதியை வழிபட்ட பின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்துவிட்டு வருவதும் நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் உள்ள ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது சிறந்தது. இவற்றுள் உங்களால் இயன்ற பரிகாரத்தினைச் செய்யுங்கள். சனிபகவானால் சங்கடம் ஏதும் வராது.
- சித்தர் கூறிய சிறந்த பரிகாரம்.
- அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
கணிதப் பஞ்சாங்கப்படி வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 9.44 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுதலாகிறார்.
மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சனிபகவான் 3-6-2027-ல் அதிசாரமாக மேஷ ராசிக்குச் செல்வார். அதன் பிறகு 20-10-2027-ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதைத்தொடர்ந்து 23-2-2028 இரவு 7.24 வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டு கோளான குரு பகவான் திருக்கணிதப்படி
குருபகவான் ரிஷப ராசியில் 1-5-2024 முதல் 14-5-2025 வரை
குருபகவான் மிதுன ராசியில் 14-5-2025 முதல் 2-6-2026 வரை
குருபகவான் கடக ராசியில் 2-6-2026 முதல் 26-6-2027 வரை
குருபகவான் சிம்ம ராசியில் 26-6-2027 முதல் 24-7-2028 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு - கேது (திருக்கணிதப்படி)
ராகு- மீன ராசியில் கேது- கன்னி ராசியில் 30-10-2023 முதல் 18-5-2025 வரை
ராகு- கும்ப ராசியில் கேது- சிம்ம ராசியில் 18-5-2025 முதல் 5-12-2026 வரை
ராகு- மகர ராசியில் கேது- கடக ராசியில் 5-12-2026 முதல் 24-6-2028 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷ ராசிக்கு ஏழரைச் சனியில். விரய சனியும், மிதுன ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், சிம்ம ராசிக்கு அஷ்டமச் சனியும், கன்னி ராசிக்கு கண்ட சனியும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், கும்ப ராசிக்கு ஏழரைச் சனியில் பாதசனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும் நடைபெற உள்ளது.

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ரிஷபம், துலாம், மகர ராசி நேயர்கள் அற்புதமான அனுகூலப்பலன்கள் உண்டாகும். கடகம், விருச்சிக ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும்.
சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசி நேயர்களுக்கு கண்டிப்பாக சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது மிகவும் நல்லது.
சனி பகவான் அருள் பெற எத்தனையோ எளிய பரிகாரங்கள், வழிபாடுகள் உள்ளன.
சனிக்கிழமை தோறும் சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு, நீலச் செம்பருத்தி, நீலத்தாமரை ஆகிய புஷ்பங்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம்.
கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.
எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
சனிக்கிழமைதோறும் அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது முடிந்தால் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்லது.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மற்றும் ஜென்ம நட்சத்திர நாளில் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காயை சமமாக உடைத்து, உடைப்பட்ட தேங்காயில் எள், எண்ணெயை நிரப்பி தீபமேற்றி சனி பகவானை வணங்குவது நல்லது.

சிறந்த பரிகாரம்:
சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார். அந்த பரிகாரம் வருமாறு:-
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு வியாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கிச் செல்லும்.

அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்துக் கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள்.
இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம்.
இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
- ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரையச் சனி
- 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள்.
ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாக கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும்.
கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும் போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாக சனிபகவானே இருக்கிறார். சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம்.

சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால் தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது.
பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர். குறிப்பாக சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.
ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள்.
ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரையச் சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.
இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சனைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.
சனி 4-ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம். இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.
சனி 7-ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்கிறோம். இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்பு, கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சனைகள், விரயங்கள் உண்டாகும்.
சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டமச் சனி உண்டாகிறது. இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
குறிப்பாக சனிபகவான் சாதகமற்று சஞ்சரிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டமச் சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும். தொழில் ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல.
சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய துலாம், மகரம், கும்பத்தில், அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது.
- வருகிற 29-ந்தேதி சனிப்பெயர்ச்சி.
- சனிப்பெயர்ச்சி மிகவும் நல்ல பெயர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
வருகிற 29-ந்தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி மிகவும் நல்ல பெயர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
சனி பகவான் குருவின் வீட்டில் அமர்வதால், ஆன்மிகம் தொடர்பான பிரச்சினை அதிகரிக்கும். போலி ஆன்மிகவாதிகளை மக்கள் கண்டறிந்து ஒதுக்குவார்கள்.
அதே வேளையில் புனிதமான சந்நியாசிகள் குறு பீடங்கள் தொடர்பாக போலியான செய்திகளும் பரவும். எனவே மக்கள் செய்திகளை பகுத்தறிந்து பார்த்து செயல்பட வேண்டியது அவசியம்.
கல்வி நிறுவனங்கள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரிக்கும். ஒருமித்த கருத்துக்கள் ஏற்படுத்த முடியாமல் ஆட்சி செய்பவர்கள் திண்டாடுவார்கள்.
என்றாலும் சனிபகவானின் பார்வையால் சர்ச்சைகள் அனைத்தும் மக்களுக்கு நன்மையாகவே முடியும். பொருளாதாரம் நல்ல படியாகவே அமையும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியப் பொருளாதாரம் நிலை பெற்று உலக அளவில் மதிக்கப்படும். இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயரும்.
மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள், பெரும் மழைப்பொழிவு ஆகியவை ஏற்படும். அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
கடல்சார் ஆராய்ச்சியிலும் கடல்சார் பொருளாதாரத்தி லும் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். கடல்மாசை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபடும். மீன் வளம் அதிகரிப்பதால் மீனவர்கள் வாழ்க்கை நன்றாக அமையும்.
சர்வதேச கடல் எல்லைப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பெண்களுக்குச் சகல நிலைகளிலும் ஏற்றமும் முன்னேற்றமும் உண்டாக வாய்ப்பு உண்டு.
பெரும்பாலான துறைகளில் பெண்கள் கோலோச்சுவார்கள், அரசியல் சார்ந்த பெண்களின் ஆளுமையும் சாதுரிய மும் உலகை வியக்க வைக்கும். சமூக செயல்பாடுகளிலும் பொது காரியங்களிலும் அவர்களின் பங்களிப்பு வலுவாக இருக்கும்.
மற்றபடி உலகில் ஆங்காங்கே போர் பதட்டங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தமான புதிய நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.
காற்றில் பரவும் நோய்கள் புதிதாக தோன்றும். அதேவேளையில் தீர்க்க முடியாத கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.
இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் பாராட்டப்படும். கலைத்துறையைச் சார்ந்தவர்க ளுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நன்மை தருவதாக அமையும்.
அந்த வகையில் இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம், மீனம், மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் ஏழரைச் சனிக்காலத்துக்கு ஆட்படுகிறார்கள்.
ஏழரைச் சனி என்றதும் பயம் கொள்ளத் தேவையில்லை. அப்படியே அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனி போன்ற நிலைகளை எண்ணியும் கலங்க வேண்டியதில்லை. சனி பகவான் நம் வினைகளைக் கரைக்க அருள் செய்பவர்.
- நல்லெண்ணெய் தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.
- குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும்.
ஏழரைச் சனி நீங்கும்போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் குளிக்கவும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம்.
சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணெய் தலையில் வைத்து குளிப்பது சிறப்பு. குளித்து முடித்தவுடன் ஈரத் துணியுடன் இருக்கக்கூடாது. புத்தாடை அல்லது உலர்த்திய ஆடைகளை அணிய வேண்டும்.

குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் தக்க வேத விற்பன்னர்களை கொண்டு நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். மற்றவர்கள் நவக்கிரக ஸ்லோகங்களை சொல்லலாம்.
முதலில் குறிப்பாக சனீஸ்வர பகவானின் ஸ்லோகம் ஒன்பதையும் சொல்ல வேண்டும். வீடு அழுக்காக இல்லாமல் சுத்தமாக மெழுகி கோலமிட்டு காசு பணங்களையும, நகை ஆபரணங்களையும், பழ வர்க்கங்களையும் சுவாமி பூஜை அறையில் வைத்து கண்ணால் பார்க்க வேண்டும்.
புதிய ஆடை அல்லது அணிந்திருந்த பழைய ஆடைகளை ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும். அதுபோல ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
ஏழை பிராமணர்களுக்கு தாம்பூலம், தட்சிணை கொடுத்து நமஸ்கரிப்பதும் நன்று. மேற்கண்டவைகளை செய்வது விசேஷம். முடியாதவர்கள் 15 நாட்களுக்குள் செய்யலாம். அதற்கும் சூழ்நிலை சரியில்லையெனில் அடுத்து வரும் ஜென்ம நட்சத்திரத்தில் செய்யலாம்.

இவ்வாறு செய்தால் சனீஸ்வர பகவானின் ஆட்சியில் சிக்கிய மனித சரீரம் பற்பல வளம் நலமும் விளையும் புனித பூமியாக மாறும். கஷ்டங்கள் குறையும். கவலைகள் தீரும். களிப்பு மிகும்.
முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணைய், நெய், இலுப்பை எண்ணைய்யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களை திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வரவேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
இந்த தீபத்தை சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இதனைக் கண்கூடாக ஒவ்வொரு நவக்கிரக சன்னதியிலும் காணலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர்-நீலசங்கு புஷ்பம், வன்னி இலை, வில்வ இலைகளால் தீபத்தை பூஜித்து சனி பகவானை சாந்தி பரிகாரம் செய்யலாம்.
ஸ்லோகங்களை ஜெபித்து, இந்த தீப ஜோதியானது இந்த வீட்டில் நிரந்தரமான பிரகாசத்துக்கும், மகிழ்ச்சிக்கும், குதூகலத்துக்கும் ஏற்பட்டுள்ளது என்று மனதில் திடமான சங்கல்பத்துடன் மேற்கு திக்கில் வைத்து எரியவிட வேண்டும்.
இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னல்களில் இருந்து விடுவித்து சாந்தியையும், மகிழ்ச்சியையும் அளித்து சர்வ மங்களமும் அருளும்.
- மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.
- ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய சனிப்பெயர்ச்சி பரிகார விபரம்.
சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் 2½ ஆண்டுகள் சஞ்சரிக்கக் கூடியவர். இவர் மார்ச் 29-ந் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது என்றாலும், ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எவ்வளவு காலம் சஞ்சரிக்கிறது? அவை தரும் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதைப் பொறுத்து அந்த கிரகத்தின் பெயர்ச்சியை மக்கள் அதிகம் கவனிக்கின்றனர்.
அந்த வகையில் சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். குரு ஓராண்டு காலம், ராகு-கேது ஒன்றரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார்கள்.
நவக்கிரகங்களில் ஒரு கிரகம் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக்கூடியது சனி கிரகம் என்பதோடு, அவர் கர்ம காரகன், நீதிபதி போன்று செயல்படுவதால். சனி பெயர்ச்சி முக்கியமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய தற்போதைய சனிப்பெயர்ச்சி பரிகார விபரம் வருமாறு:-
மேஷம்:
அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.
ரிஷபம்:
முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
மிதுனம்:
ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீசக்கரத் தாழ்வாரை தரிசனம் செய்து வர நன்மைகள் கிடைக்கும்.
கடகம்:
முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும். வேப்பி லையை அருகில் இருக்கும் புற்று அம்மன் கோவி லுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சிம்மம்:
தினமும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவதரிசனம் ெசய்து வரவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
கன்னி:
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமை 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.
துலாம்:
குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்:
துர்க்கை அம்மனை செவ்வாய்க் கி ழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.
தனுசு:
வியாழக்கிழமைகளில் குருவை வழிபடவும்.
மகரம்:
ஆஞ்சநேயருக்கு வெண் ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற் றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்:
விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
மீனம்:
பைரவரை வழிபட்டு வரவும். தேய்பிறை அஷ்டமி திதியை 'பைர வாஷ்டமி' என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.
- சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக் கிழமை தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரி சையாக நடைபெறவுள்ளது.
அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், ஆடி பூரத்தை முன்னிட்டும், நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்கா லில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை கள் செய்து சாமிதரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்’ என்பது பழமொழி.
- பெண்கள் வெற்றிக்கனியை பறிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
* `கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்' என்பது பழமொழி. `நீதிமான்' என்றும், `நியாயவான்' என்றும், போற்றப்படும் சனி தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் பொழுது நீதி, நியாயம் கிடைக்க போராட்டங்கள் அதிகரிக்கும். நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.
* அரசியல் சதுரங்கத்தில் கட்சித்தாவல்கள் அதிரடியாய் அமையும். அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் களம் சவாலான போட்டியாக அமையும். ஆயினும் முடிவில் மக்கள் விரும்பியபடி நல்லாட்சி அமையும்.
* முற்காலத்தில் `குடங்களை' சுமந்த பெண்கள், இக்காலத்தில் 'மகுடங்களை' சுமக்க, கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியின் பலத்தால் வழிபிறக்கும். அரசியல் களத்தில் பெண்கள் வெற்றிக்கனியை பறிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
* தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை நினைக்க இயலாத அளவிற்கு உயரும். திடீர், திடீரென விலை குறைவது போல் தோன்றி மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.
* பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை சனிப்பெயர்ச்சி காலத்திலிருந்து இறங்கு முகமாக இருக்கும். ஆயினும் ஜூன் மாதத்திற்கு மேல் விலை ஏறிக்கொண்டே சென்று உச்சத்தைத் தொடும்.
* சனியின் வக்ர காலத்திலும், செவ் வாய், சனியோடு சம்பந்தப்படும் நேரத்திலும் கடல் கொந்தளிப்பு, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். உலக நாடுகளுக்குள் பிரச்சினைகள் தலைதூக்கும்.
* புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்கள், கலைத்துறையினைச் சேர்ந்தவர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
* செந்நிறக் காய்கறிகள், வெள்ளைநிற உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும்.
- பலன் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு.
- நீதி, நியாயம் கிடைக்கும் படியாகச் செய்வார்.
சனி பகவான், சுபஸ்ரீசோபகிருது வருடம் மார்கழி மாதம் நாலாம் தேதி (20.12.2023) புதன்கிழமை, மாலை 5.23 மணி அளவில் அவிட்டம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் சொந்த வீடான கும்பராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். அங்கு, 6.3.2026 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார். "கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்" என்ற பழமொழிக்கேற்ப, நீதிமானும் நியாயவானுமான சனி பகவான், தனது ஆட்சி வீடான கும்பராசியில் சஞ்சரிக்கும் பொழுது, நீதி, நியாயம் கிடைக்கும் படியாகச் செய்வார்.
பலன் பெறும் ராசிகள்:
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்:
கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ஜன.17-ந்தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. ஆனால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த மாதம் 20-ந்தேதிதான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.