என் மலர்
நீங்கள் தேடியது "selling ganja"
- சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதையடுத்து 3 பேரை மடக்கிப்பிடித்த கோபி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சத்தியமங்கலம் தலமலை கஸ்பா பகுதியை சேர்ந்த சின்னராசு (24), கே.என்.பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (29), குருமந்தூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரை மடக்கிப்பிடித்த கோபி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.11,700 மதிப்பிலான 650 கிராம் கஞ்சா, 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர்.
- அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.
கொடுமுடி:
மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தனி ப்படை அமைத்து சோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது,
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ராசாம் பாளையம் ராட்டை சுற்றி பாளையத்தை சேர்ந்த பாலா (வயது 29) மற்றும் அவரது நண்பர் ஈரோடு வி. வி. சி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (22) ஆகியோரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தினர்.
இதில் கஞ்சா மூட்டையை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அவற்றை சிறு பொட்டலங்களாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் பாலா, அஜித் குமார், ஈரோடு அக்ரகார வீதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறை வான கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்ற னர்.
- சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை அடுத்துள்ள சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.
விசாரித்ததில் நெரிஞ்சிப்பேட்டை படகு துறை வீதியை சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ராக்கி (24) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- ௩ பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசாரை கண்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் தப்பிஒட முயன்றனர்.
- திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் (22), அன்பழகன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திண்டிவனம் போலீஸ் உதவி சுப்பிரண்டு அபிஷேக் குப்தாவிற்கு தகவல் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் தப்பிஒட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் வந்து விசாரித்ததில் சாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 28), திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் (22), திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த அன்பழகன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது இவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- அவர் பாலிதீன் கவரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
பவானி:
பவானி அருகில் உள்ள சித்தோடு ஆவின் எதிரே உள்ள டாஸ்மார்க் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சித்தோடு தென்றல் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்குமார் (35) என்பதும், அவர் பாலிதீன் கவரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்காக இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொண்டையம்பாளையம் ஊராட்சி இந்திராபுரம் புதுகாலனி பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணையில் கொண்டையம்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துக்குமார் (22), அன்பழகன் (19) என்பதும் இவர்கள் வைத்திருந்த பையில் இருந்த பாலிதீன் கவரில் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி இருவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் அவர் கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதியம்மாள் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் செங்குந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) என்பதும், கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ.700-யும் பறிமுதல் செய்தனர்.
- பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர், சத்தியமங்கலம், கே.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (27) என்பது தெரியவந்தது.
மேலும், கர்நாடக மாநிலம், புளிஞ்சூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பங்களாபுதூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்த ரூ. 700 மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்
- பெருந்துறை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் பெருந்துறை போலீசார் சம்பவயிடம் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க மாநிலம் பார்ஹனாஸ் சாக்பட்ரியை சேர்ந்த உஜ்ஜால் என்கிற மிஜனூர்காஜி (26), ஓடிசா மாநிலம் பாலன்கீர் சாத்காட்டினை சேர்ந்த ஜிஜேந்திரபட்டேல் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்றார்
- அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் தலத்தெருவைச்சேர்ந்த விஸ்னுபிரியன் (வயது21),. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்றார். இதுகுறித்து நிரவி போலீசார் விஸ்னுபிரியனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.