என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senior"

    • பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.
    • விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    விகடக்கலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்த பாரம்பரிய கலையாகும். சிரிப்பையும் சிந்தனையையும் ஊட்டக்கூடிய வகையில் இக்கலை மிகவும் அரிதாக இருந்துள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தெனாலிராமன் என்ற அரசவை கலைஞர் விகடக்கலையில் சிறந்து விளங்கினார்.

    தெனாலிராமன் கதைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம்.

    இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த கலைமாமணி குன்னியூர் கல்யாணசுந்தரம் (வயது 80) என்பவர் விகடகலையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்த கலையை செய்து வருகிறார்.

    தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமே விகடக்கலையை இன்றும் சிரிப்பும் சிந்தனையுடனும், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நடைபெறும் விழாக்களில் நடத்தி வருகிறார்.

    அதன் மூலம் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இவர் நிகழ்ச்சிகளில் பேசும்போது சமுதாயத்திற்கு சிந்தனை கருத்துக்கள் கூறுவது மட்டும் அல்லாமல், தனது குரலில் பறவைகள், விலங்குகள் போல் மயில், கிளி, குயில், அணில், தவளை, எருமை மாடு, நாய், ரயில், உடுக்கு சத்தம், மோட்டார் இன்ஜின் போன்ற சத்தங்க ளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை ரசிக்க வைப்பார்.

    நாகரிகம் மாற்றத்திற்கு ஏற்றார் போல் விகட கலைக்கு போதிய ஆதரவு இல்லாததாலும், விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.

    இதுகுறித்து விகடக்கலை கலைஞர் கல்யாணசுந்தரம் கூறும்போது, சிறுவயதில் விகடக்கலையை பற்றி தெரிந்து கொண்டு திருவிசநல்லூர் ராமசாமி சாஸ்திரிகளை மானசீக குருவாக ஏற்று தற்போது இந்த கலையை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு செல்கிறேன்.

    போதிய வருமானம் இல்லாததால் இந்தக் கலை தற்போது நலிவடைந்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் பொற்கிழி விருது பெறுவதற்கு முயற்சி செய்கிறேன்.

    இந்தக் கலையை கவுரவப்படுத்தினால் முன்னாள் விகட கலைஞர் தெனாலிராமனை கவுரவிப்பது போல் இருக்கும் என்றார்.

    • சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏழு சீனியர்கள் முதலாம் ஆண்டு மாணவரை கொடூரமான முறையில் ரேகிங் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள கரியவட்டம் அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 அன்று கரியவட்டம் அரசுக் கல்லூரியில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    காவல்துறையிடம் புகார் செய்ததால், சீனியர்கள் மேலும் கோபமடைந்தனர். புகார் அளித்த முதலாமாண்டு மாணவரின் விடுதிக்குள் நுழைந்து அவரை தேடினர். அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

    ஒரு அறையில் வைத்து அந்த ஜூனியர் மாணவரை மண்டியிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் அடித்ததுள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் துப்பிய பிறகு தண்ணீர் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். அவர் இந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தபோது, மேலும் தாக்கப்பட்டார்.

    கல்லூரியின் ராகிங் தடுப்புப் பிரிவு ஜூனியர் மாணவரின் புகாரை விசாரித்தது. கல்லூரி மற்றும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்ததில் நடந்தது உண்மைதான் என்பதை கண்டறிந்து கல்லூரியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    அதன் அடிப்படையில் 7 சீனியர் மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் போலீசார் ராகிங் தடுப்புச் சட்டத்தின கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

    ×