என் மலர்
நீங்கள் தேடியது "sensex"
- நிஃப்டி 22,115 எனும் புதிய உயரத்தை எட்டியது
- சென்செக்ஸ் 73,402 எனும் புதிய உயரத்தை எட்டியது
ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.
பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்வை தொட்டன.
நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், மக்களவை தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறு உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty), 22,053 என தொடங்கி முதல் முறையாக 22,115 எனும் புதிய உயரத்தை எட்டி, 22,097 எனும் அளவில் நிறைவடைந்தது.
மும்பை பங்கு சந்தையின் (BSE) குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex), 73,049 என தொடங்கி முதல் முறையாக 73,402 எனும் புதிய உயரத்தை எட்டி 73,327 எனும் அளவில் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது
- 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 சரிந்து, 21,997 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் இன்று ஒரே நாளில் ₹90,000 கோடி சரிவை கண்டுள்ளது. அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் 5.5% சரிவையும், அதானி போர்ட்ஸ் 5.3% சரிவையும் கண்டுள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி மற்றும் அதானி வில்மர் ஆகியவற்றின் பங்குகள் 4 முதல் 7 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் ஒட்டுமொத்தமாக ரூ.90,000 கோடியை இழந்துள்ளது. இது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமான ரூ. 15.85 லட்சம் கோடியில் 5.7%. ஆகும்.
- மும்பை பங்குச் சந்தை முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது.
- இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது.
மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் நேற்று 74.221.06 சென்செக்ஸ் புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் 74.253 சென்செக்ஸ் புள்ளிகளுடன் தொடங்கியது.
நேரம் செல்லசெல்ல வர்த்தகத்தின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றது. மதியம் 3.15 மணியளவில் வர்த்தகம் 75,499.91 புள்ளியை தொட்டது. மும்பை பங்கு சந்தையில் இதுவரை இந்த உயரத்தை வர்த்தகம் தொட்டது கிடையாது.
முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது. இன்று குறைந்தபட்சமாக 74,158.35 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் உச்சத்தை எட்டியது. நேற்றைய முடிவில் இருந்து கணக்கிடும்போது மும்பை பங்குச்சந்தை வர்த்தம் 1196.98 புள்ளிகள் அதிகரித்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது. இன்று அதிகபட்சமாக நிஃப்டி 22,993.60 புள்ளிகளில் வர்த்தகமானது. 22,967.65 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.
மகிந்திரா அண்டு மகிந்திரா, லார்சன் அண்டு டூர்போ, ஆக்சிஸ் பேங்க், மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், இந்துஸ்இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஐசிஐசி பேங்க், டைட்டன், டாட்டா கல்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டட்ரிஸ் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.
சன் பார்மா, பவர்கிரிட், என்டிபிசி பங்குகள் சரிவை சந்தித்தன.
மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் பங்கு ஆதாயம் (ஈவுத்தொகை) கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்காகும். வரவிருக்கும் அரசின் வருவாய் உயர்வுக்கு இது உதவியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமையை பொறுத்தவரையில் ஆசிய பங்குசந்தைகளில் சியோல் பங்கு சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது. ஷாங்காய், ஹாங்காங் இறக்கத்தில் முடிவடைந்தது. ஐரோப்பிய மார்க்கெட்டுகள் ஏறக்குறைய ஏற்றத்தில்தான் இருந்தது.
- தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
- நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.
மக்களவைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திற்கு வர முடியாததால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இறக்கத்துடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.
மேலும் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கருத்துக் கணிப்பு அடுத்த நாளில் மும்பை பங்குச் சந்தை தாறுமாறாக எகிறியது.
- பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியதால் வாக்கு எண்ணிக்கை நாளில் தலைகீழாக இறங்கியது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்போது மும்பை பங்கு சந்தை, இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படும்.
நிலையான ஆட்சி அமைகிறதா? நிலையறற ஆட்சி அமைகிறதா? என்பதை கருத்தில் கொண்டு முதலீட்டார்கள் முதலீடு செய்வார்கள். முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்வார்கள்.
அதேபோன்றுதான் கடந்த வாரம் சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் பிரதமர் மோடி மீண்டும் பதவி வகிப்பார் என தகவல் வெளியானது.
இதனால் திங்கட்கிழமை (ஜூன் 3-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மும்பை பங்கு சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் தாறுமாறுமாக ஏறி வர்த்தகம் ஆனது.
வெள்ளிக்கிழமை மும்பை பங்கு சந்தை வர்த்தகம் 73,961.31 புள்ளிகளுடன் முடிவடைந்தது. திங்கட்கிழமை காலை அதாவது ஜூன் 3-ந்தேதி காலை சுமார் 1600 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் தொடங்கியது. அன்றைய தினம் 46,468.78 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் முடிவடைந்தது. இதனால் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அதாவது ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும். பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலை நிலவியதால் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் பாதாளத்திற்கு சென்றது. அன்றைய தினம் சுமார் 4 ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
76468.78-ல் இருந்து 72079.05-க்கு இறங்கியதால் முதலீட்டார்கள் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர் எனத் தகவல் வெளியானது. இது மிகப்பெரிய மோசடி. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.
பின்னர் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளுடன் நிலையான ஆட்சி அமைக்கப் போவதாகவும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் எனவும் உறுதியான தகவல் வெளியானது.
அத்துடன் ஆர்பிஐ வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி உயர்த்தப்படாது. இந்தியாவின் ஜிடிபி அதிகரிக்கும் எனத் தெரிவித்தது. இதனால் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் சரிவில் இருந்து மீண்ட்டது.
5-ந்தேதி 3 சதவீதம் உயர்ந்து 74,382 புள்ளியுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றும் ஏறுமுகமாக இருந்து 75,074 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை 75,031 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் சென்செக்ஸ் புள்ளிகள் ஏறிக்கொண்டு இருந்தது. இறுதியாக 76,606 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 76,790.63 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிலான உச்சமாகும்.
- ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட் ஏற்றம் கண்டன.
- மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் சரிவை சந்தித்தன.
மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.
வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) ஆகியவை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்வை சந்தித்து வர்த்தகமானது.
சென்செக்ஸ்
மும்பை பங்கு சந்தை வர்த்தகம் நேற்று 78,053.52 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,094.02 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல உயர்ந்து வண்ணம் இருந்தது. மதியம் 3 மணியளவில் 78,759.40 புள்ளிகளை தொட்டு வர்த்தகம் ஆனது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். அதன்பின் சற்று குறைந்து வர்த்தகம் சென்செக்ஸ் 78,674.28 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 0.80 சதவீதம் உயர்ந்தது.
நிஃப்டி
அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இதுவரை இல்லாத அளவிற்கு 23,889.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைய வர்த்தகம் நிஃப்டி 23721.30 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,723.10 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
சற்று ஏற்ற இறக்கம் கண்ட நிலையில் புதிய உச்சமான 23,889.90 புள்ளிகளில் வர்த்தகமாகி 23,868.80 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.
30 சென்செக்ஸ் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட், சன் பார்மா, அதானி போர்ட், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பஜாஜ் பினான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.
மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
ஆசிய மார்க்கெட்டுகளான சியோல், டோக்கியோ, ஷாங்காள், ஹாங் காங் மார்கெட்டுகளும் இன்று உயர்ந்து காணப்பட்டன.
- நேற்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
- இன்று அதையும் தாண்டி 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக இருந்தது.
இந்த நிலையில் இன்று 79 ஆயிரத்தை கடந்த 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி இது இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று சென்செக்ஸ் 78,674.25 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 78,758.67 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகம் முடிவடைவதற்கு சற்றுமுன் 3.15 மணியளவில் 79,396.03 புள்ளிகளை எட்டியது. அதன்பின் சற்று குறைந்து 79,243.18 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று குறைந்த பட்சமாக 78,467.34 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
நிஃப்டி
அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இன்று இதுவரை இல்லாத வகையில் 24,087.45 புள்ளிகளை எட்டி வர்த்தகம் ஆனது. நேற்று 23,868.80 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,881.55 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய குறைந்த வர்த்தகம் 23,805.40 புள்ளிகள் ஆனது.
மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.
வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.
- நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
- இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.
நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.
இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.

- சென்செக்ஸ் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
- முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி குறைந்துள்ளது
மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையானது வாரத்தின் முதல் நாளிலேயே வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.மேலும் தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 698 புள்ளிகள் சரிந்து 24,019.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை ஒப்பிடுகையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு ரூ. 457.16 கோடியாக இருந்த நிலையில், அதில் சுமார் ரூ.15 லட்சம் கோடி குறைந்துள்ளது.
உலகளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள்ள போர் பதற்றமும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். மேலும் நிஃப்டி குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடன் வர்த்தகமானது.
- நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
- அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.
அதானி குழும முறைகேடுகளை வெளிப்படுத்திய ஹிண்டன்பர்க் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதானியின் வெளிநாட்டு நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பங்குகளை செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் வைத்திருப்பதனாலேயே முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.
இந்த புதிய அறிக்கை இன்றைய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தபடியே வாரத்தின் முதல் நாளான இன்றுபங்குச்சந்தை பெரும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.
- அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 46.65 ரூபாய் குறைந்து 3,140.90 ரூபாயாக உள்ளது.
- அதானி போர்ட் பங்கு இன்று 35.80 ரூபாய் குறைந்து 1,498 ரூபாயாக உள்ளது.
அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் என்று ஹிண்டர்பர்க் நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.
இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும். முதலீட்டார்கள் லட்சக்கணக்கான கோடிகளை இழக்கும் அபாயும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்திருந்தது.
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளுடன் ஆரம்பானது. அப்போது சுமார் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. அதன்பின் மெல்லமெல்ல வர்த்தகம் உயர்வை கண்டது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,106.18 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக 3.30 மணிக்கு வர்த்தகம் சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்ததை வர்த்தகம் 56.99 சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது.
இந்திய பங்குச்சந்தை நிஃப்டி வெள்ளிக்கிழமை 24,367.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு 24,320.05 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. சுமார் 47 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் இன்று அதிகபட்சமாக 105 புள்ளிகள் அதிகரித்து 24,472.80 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக நிஃப்டி 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்ததை விட 20.50 சதவீதம் குறைவாகும்.

அதானியின் டோட்டல் கியாஸ் லிமிடெட் பங்கு 3.95 சதவீதம் குறைந்த 835.50 ரூபாயாக இருந்தது. இன்று 34.35 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.
அதானி எனர்ஜி பங்கு 3.25 சதவீதம் குறைந்து 1067.90 ரூபாயாக உள்ளது. இன்று 35.90 ரூபாய் குறைந்துள்ளது. என்டிடிவி பங்கு 2.32 சதவீதம் குறைந்த 203.50 ரூபாயாக உள்ளது. 4.83 ரூபாய் குறைந்துள்ளது.
அதானி பவர் பங்கு 1.24 சதவீதம் குறைந்த 687 ரூபாய் உடன் நிறைவடைந்தது. இன்று 8.40 ரூபாய் குறைந்துள்ளது.
அதானி வில்மர் லிமிடெட் பங்கு 4.10 சதவீதம் குறைந்து 369.35 ரூபாயுடன் நிறைவடைந்தது. இன்று 15.80 ரூபாய் குறைந்துள்ளது.
அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 1.46 சதவீதம் குறைந்து 3,140.90 ரூபாய் உடன் உள்ளது. இன்று 46.65 ரூபாய் குறைந்துள்ளது.
அதானி போர்ட் பங்கு இன்று 2.33 சதவீதம் குறைந்துள்ளது. 1,498 ரூபாயாக உள்ளது. இன்று 35.80 ரூபாய் குறைந்துள்ளது.
- நேற்றைவிட இன்று 692.89 புள்ளிகள் குறைந்து 78,956.03 வர்த்தகம் நிறைவடைந்தது.
- 208 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 24139 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.85 சதவீதம் குறைவாகும்.
அதானி குழுமம்- செபி தலைவர் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்), இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) நேற்று கடும் சரிவை சந்திக்கும் என வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தினர்.
ஆனால் நேற்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை வர்த்தகம் பின்னர் உயர்ந்து காணப்பட்டது. இறுதியாக மிகப்பெரிய அளவில் இல்லாமல் சற்று சரிவுடன் முடிவடைந்தது.
ஆனால் இன்று இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 208 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை நேற்று சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து 79,552.51 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.
அதிகபட்சமாக 79,692.55 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. குறைந்தபட்சமாக 78,889.38 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைவிட இன்று 692.89 புள்ளிகள் குறைந்து 78,956.03 வர்த்தகம் நிறைவடைந்தது. இது சுமார் 0.87 சதவீதம் குறைவாகும்.

இந்திய பங்குச் சந்தை நி.ஃப்டி நேற்று 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 5 புள்ளிகள் குறைந்த 24,342.35 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக நிஃப்டி 24,539.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 24116.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
இறுதியாக 208 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 24139 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.85 சதவீதம் குறைவாகும்.
இன்று ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு 3.26 சதவீதம் (54.20) குறைந்து 1,605.90 ரூபாயாக உள்ளது. டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், ஜேஎஸ்எடபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.
டைட்டன், ஹெச்.சி.எல். டெக், நெஸ்லே, சன் பார்மா, ரிலையன்ஸ், மஹிந்த்ரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டது.