என் மலர்
நீங்கள் தேடியது "Shoes"
- மோடி பிரதமராகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று ராம்பால் காஷ்யப் என்பவர் சபதம் எடுத்தார்.
- திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை சபதம் எடுத்திருந்தார்.
மோடி பிரதமராக பதவியேற்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு அரியானாவை சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்ற சபதம் எடுத்துள்ளார். மோடி பிரதமராக தேர்வான பிறகும் ராம்பால் காஷ்யப் செருப்பு அணியாமலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அரியாணாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 14 ஆண்டுகளாக செருப்பு அணியாத ராம்பால் காஷ்யப் என்ற நபருக்கு ஒரு ஜோடி செருப்புகளை பரிசளித்தார்.
இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "யமுனாநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கைத்தலைச் சேர்ந்த ஸ்ரீ ராம்பால் காஷ்யப் ஜியைச் சந்தித்தேன். நான் பிரதமரான பிறகுதான் செருப்பு அணிவேன் என்று அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு சபதம் எடுத்திருந்தார்.
"ராம்பால் ஜி போன்றவர்களால் தான் நான் பணிவுடன் இருக்கிறேன், அவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் அன்பை நான் மதிக்கிறேன். ஆனால் தயவுசெய்து சமூகப் பணி மற்றும் தேசக் வளர்ச்சிக்கு தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சபதம் எடுத்திருந்தார். தற்போது புதிய தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் செருப்பு வாங்கி கொடுத்ததை அடுத்து அண்ணாமலை தனது சபதத்தை முடித்துக்கொண்டு செருப்பு அணிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
- இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று ராமநாதபுரம் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி விழா, குரு பூஜை விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் 30-ந் தேதி அன்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டும் காலணிகளை விட்டுச் செல்லும் பொதுமக்கள் தரிசனம் முடிந்து திரும்ப எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்தாண்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களின் காலணி களை முன்பக்கம் விட்டு சென்று விட்டு நினை விடத்தில் தரிசனம் முடிந்து பின்பக்கம் வாசல் வழியாக காலணிகளை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
அத்தியாவசிய அலுவலகப்பணி காரணமாக இந்தாண்டு இதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை. முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகப் பணியாளர்கள் பணி மேற்கொண்டதாக தவறான செய்திகள் வெளிவந்துள்ளது. இத்தகைய செய்தி முற்றிலும் தவறாகும். பொதுமக்களுக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ காலணிகளை பாதுகாக்க காவல் துறையினரையோ, வருவாய் துறையினரையோ, பேரூராட்சி துறையினரையோ பணி நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க.வினர் காலணி வீச்சு சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஏற்று கொள்ள முடியாத விஷயம் தான்.
- எங்கள் தலைவரை பொறுத்தவரை யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுப்பார்.
திருவாரூர்:
திருவாரூரில் பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் திரு.வி.க. கல்லூரியில் நடந்த திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் தனக்கு பதிலாக வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்ததாக தவறான தகவல் பரபரப்பட்டு வருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது . கடந்த 2020 பி.ஏ. தேர்வு எழுத அவர் விண்ணப்பித்துள்ளார். முதல் ஆண்டு தேர்வு ஆன்லைன் மூலம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு இரண்டாமாண்டு தேர்வு எழுதுவதற்கு தேர்வுக்கான எந்தவித கட்டணமும் அவர் கட்டவில்லை.
ஆனால் அவருக்கு பதிலாக ஒருவர் தேர்வு எழுதினார் என்பது புரியவில்லை. எனவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளோம். நியாயமான நேர்மையான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை எங்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து மாநில தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
எங்கள் தலைவரை பொறுத்தவரை யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுப்பார். பா.ஜனதா மீது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்கிற நோக்கத்தில் தி.மு.கவினர் செய்த சதியாக இருக்குமோ என நினைக்கிறோம்.
மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க.வினர் காலணி வீச்சு சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஏற்று கொள்ள முடியாத விஷயம் தான். எங்களது கட்சியும் கூட அதை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. அமைச்சர் எதோ பேசியதாக கூறுகிறார்கள். இது எப்படி இருந்தாலும் இப்படிப்பட்ட சம்பவம் நடக்கக்கூடாது நடந்திருக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒடிசா மாநிலம், பூரி நகரில் 12-ம் நூற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு புதிய வரிசை முறையை உருவாக்க நிர்வாகம் தீர்மானித்தது.
இந்த வரிசை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ம் தேதி 12 மணிநேர கடையடைப்புக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம், பின்னர் வன்முறையாக மாறியது.
பூரி ஜகநாதர் ஆலயத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தகர்த்தபடி பலர் ஆலயத்தின் நிர்வாக அலுவலகத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தின்போது போலீசார் துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் உள்ளே நுழைந்ததால் பூரி ஜகநாதர் ஆலயத்தின் புனிதம் மாசுபட்டதாக ஒரு அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகுர்ம் தீபக் குப்தா ஆகியோர் பூரி ஜகநாதர் ஆலயத்துக்குள் துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் போலீசார் நுழைய கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர். #PuriJagannathtemple #SC #PolicemanShoes

6, 9, 10-வது படிக்கும் 16 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ஜியாமெண்ட்ரி பாக்ஸ், 3-வது முதல் 5-வது வரை படிக்கும் 15 லட்சத்து 15 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கலர் பென்சில், 1-வது முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 72 லட்சத்து 55 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, 1-வது முதல் 10-வது வரை படிக்கும் 58 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட உள்ளன.
இவை அனைத்தும் நவம்பர் மாதத்துக்குள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என சென்னை டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.