என் மலர்
நீங்கள் தேடியது "Silver"
- தீபாவளி பண்டிகைக்கு போதுமான ஆர்டர்கள் வராததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றியும், வேலை இல்லாமலும் தவித்தனர்.
- பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது.
சேலம்:
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செய்யப்படும் கலை நயமிக்க வெள்ளி கொலுசுகளுக்கு பெரும் மவுசு உண்டு. இதனால் இங்கு தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதையொட்டி சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வெள்ளி பொருட்கள் உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பண்டிகை காலங்களில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்பட வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவியும். ஆனால் கடந்த தீபாவளி பண்டிகைக்கு போதுமான ஆர்டர்கள் வராததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றியும், வேலை இல்லாமலும் தவித்தனர்.
தொடர்ந்து தமிழகத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்பட வெள்ளி விற்பனை அதிகரிக்கும் என்பதால் அப்போது ஆர்டர்கள் வரும் என வெள்ளி தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர்.
அதன் தொடர்ச்சியாக பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்களுக்கான ஆர்டர்கள் தற்போது வர தொடங்கி உள்ளன. இதனால் அதனை தயாரிக்கும் பணியில் வெள்ளி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது-
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது. இந்த ஆர்டர்களை தயாரிக்க தொடங்கி உள்ளோம். முன்பு பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே 75 சதவீத ஆர்டர்கள் கிடைத்து விடும். ஆனால் தற்போது 25 சதவீத ஆர்டர்கள் மட்டும் கிடைத்துள்ளன.
அதாவது ஒரு லட்சம் வெள்ளி கொலுசுகளுக்கு ஆர்டர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 25 ஆயிரம் வெள்ளி கொலுசுகளுக்கு மட்டுமே ஆர்டர் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஆர்டர்கள் குறைந்துள்ளது. மீதி ஆர்டர் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
வெள்ளி விலை ஒரு கிராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 110 ரூபாய் வரை சென்ற நிலையில் தற்போது விலை குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வெள்ளி பொருட்களை பொது மக்கள் வாங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
- மாணவிக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி எம்.எல்.ஏ வாழ்த்துகளை தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி கிருஷாந்தா, மத்தியப்பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற எஸ்பிகேஎப் 7வது நேசனல் கேம்ஸ் 2022 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.
இதன்மூலம் அடுத்த மாதம் நேபாளில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அவருக்கு நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாணவிக்கு பயிற்சி வழங்கியஏ.ஐ.ஒ விளையாட்டு அகாடமிக்கும், ஆதர்ஷ் பள்ளிக்கும் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.
அதுபோல், திட்டச்சேரி ப.கொந்தகை அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஹரிஹரசுதன் - வெற்றிவேல் நினைவாக நடைபெற்ற, 39-ம் ஆண்டு மாபெரும் கபடி தொடர் போட்டி நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.
- மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.
- கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 23).
இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24).
இவர்கள் இருவரும் கடந்த 30-ம்தேதி புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.
பின்னர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் கீழ்வேளூர் அருகே உள்ள கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜித் (23), அகரகடம்பனூர் ஊராட்சி கோவில்கடம்பனூரை சேர்ந்த வினோத் (24), கோவில்கடம்பனூர் ஸ்ரீகண்டி நத்தத்தை சேர்ந்த சுதீஷ் (19) என்பதும் இவர்கள் மூவரும் மேற்படி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
- இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.
சேலம்:
வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் சேலத்தில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்குகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி வெள்ளிப் பொருட்கள் கேட்டு வட மாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
இதனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நவராத்திரி விழாவின் போது வடமாநிலங்களில் பெண்கள் லைட் வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் வாங்குவார்கள். இதையொட்டி வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் தெரிவித்தார்.
- 38 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
- உரிய வரி செலுத்தாமல் எடுத்து சென்றதால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் பூஞ்சைகாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 40).
இவர் நேற்று ரெயில் நிலையத்தில் மங்களூர் செல்வதற்காக நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த ரெயில்வே போலீசார் வெங்கடாசலபதி வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மங்களுருக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்குரிய உரிய ஆவணம் இல்லை.
இதையடுத்து ரெயில்வே போலீசார் சேலம் வணிகவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்ததில் 38 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். உரிய வரி செலுத்தாமல் எடுத்து சென்றதால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
- காவல்காரர் ஒருவர் பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வையிட்டு செல்வது வழக்கம்.
பேராவூரணி:
பேராவூரணி பேரூராட்சி நாட்டா ணிக்கோட்டையில் ஏற்கனவே இரண்டுமுறை திருடுபோன ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மூன்றாவது முறையாக வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன் (70) வடக்கு நாட்டாணி க்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அடிக்கடி மகளை பார்ப்பதற்காக பெங்களூர் சென்றுவி டுவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைப்பூட்டிவிட்டு பெங்களூர் சென்றிரு ந்தபோது இரண்டு முறை வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த நகை, வெள்ளி பாத்திரங்கள், பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து வெ ங்ட்ரா மன் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி விட்டார்.
வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காமல் பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெங்கட்ராமன் பெ ங்களூர் சென்றுவிட்டார். காவல்காரர் ஒருவர்பகல் நேரத்தில் மட்டும் வந்து வீட்டை பார்வை யிட்டு செல்வதுவழக்கம். இந்நிலை யில் ஞாயிற்று க்கிழமை அதிகாலை, பெங்களூரில் இருந்த வெங்கட்ராமன் மகள், சிசிடிவியை தனது மொபைல் போன் மூலம் பார்த்த போது, அதிகாலை 2:20 மணிக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பெங்களூ ரில் இருந்த அவர் நாட்டா ணிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தகவல் தெரிவித்து அதன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார்திறந்து கிடந்த வீட்டை பார்வையி ட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் பீரோ, அலமாரியில் பொருட்கள் இருக்கிறதா என தேடிப்பார்த்தது பதிவாகி இருந்தது.பேராவூரணி காவல்நிலை யத்தில் போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் இரவு ரோந்து பணிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளதால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
எனவே போலீஸ் நிலையத்திற்கு தேவையான போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகிலேயே சொந்தமாக நகைக்கடையும் வைத்து உள்ளார்.
நேற்று இவருடைய மனைவி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் வெளியில் சென்றுவிட்டார். சந்தோஷ், கடைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
அதில், சந்தோஷ் வியாபாரத்துக்காக தனது வீட்டில் வைத்து இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என சந்தோஷ் வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
அத்துடன் நகை வியாபாரி சந்தோசிடமும், அவரது வீட்டுக்கு யார் யார்? வந்து செல்வார்கள்?, உண்மையிலேயே நகை, வெள்ளி கொள்ளை போனதா? அல்லது நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #GoldRobbery

துவக்கத்தில் சற்று முன்னிலை வகித்த சிம்ரன், அதன்பின்னர் 6-11 என்ற நிலையில் பின்தங்கி தோல்வியை சந்தித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 5 வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளது. #YouthOlympics #IndianWrestlerSimran
52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் 19 வயதான குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
இத்தாலி வீரர் எலியா ஸ்ட்ருச்சியோலி தங்கப்பதக்கமும் (55 புள்ளி), அமெரிக்காவின் நிக் மாஸ்செட்டி வெள்ளிப்பதக்கமும் (54 புள்ளி) பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் குர்னிஹால் சிங், அனட்ஜீத்சிங் நருகா, ஆயுஷ் ருத்ராராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 355 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
செக்குடியரசு தங்கப்பதக்கமும் (356 புள்ளி), இத்தாலி வெண்கலப்பதக்கமும் (354 புள்ளி) வென்றது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 22 பதக்கங்களுடன் 4-வது இடம் வகிக்கிறது. #JuniorShooter #India ##ISSFWCH