search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயில்"

    MDU03220622: தேனி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமார் (வயது 40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக, சித்தோடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அருண் குமாருக்கு ஈரோட

    மதுரை:

    தேனி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமார் (வயது 40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் அருண் குமாருக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றம் வேண்டும் என்று அருண்குமார், சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தார்.

    இதனைத் தொடர்ந்து அவரை ஜெயில் நிர்வாகம் மதுரைக்கு மாற்றியது. இங்கு அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிறை வெளி வளாகத்தில் தோட்டப் பணியில் இருந்த அருண் குமார் திடீரென அங்கிருந்து தப்பினார்.

    மதுரை மத்திய ஜெயில் வெளிப்புற தோட்ட வளாகத்தில் வேலை முடிந்ததும் கைதிகள் மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் அருண்குமாரை மட்டும் காணவில்லை. இதனால் ஜெயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.இது தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே ஆயுள் தண்டனை கைதி அருண்குமார் தப்பிச் சென்ற விவகாரத்தில் பணியின்போது அஜாக்கிரதையாக இருந்த போலீஸ் ஏட்டு பழனிக்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    தப்பிச் சென்ற கைதியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அருண்குமார் திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    பின்பு அவரை மதுரைக்கு கொண்டுவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வேலூர் ஜெயிலில் மும்பை கைதி பதுக்கி வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலூர்:

    மும்பையை சேர்ந்தவர் மணிவண்ணன் என்கிற சுபாஷ் (வயது 53). கஞ்சா கடத்திய வழக்கில் கடந்த 2012ம் ஆண்டு சென்னையில் போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் 2017ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டது. புழல் ஜெயிலில் அடைக்கபட்டார். கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு 3-வது பிளாக்கில் அடைக்கபட்டார். அவர் செல்போனை பதுக்கி வைத்து பேசி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை சிறைக்காவலர்கள் அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் நேற்று முன்தினம் செல்போன் பேட்டரி சிக்கியது. இதனை பயன்படுத்தியது யார் என்பது தெரியவில்லை ஜெயிலுக்குள் சோதனைக்கு பிறகே அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது.

    அப்படியிருக்க ஜெயில் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது என்பது கோள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ஜெயிலில் பல கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யபட்டுள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது பற்றி துப்புதுலக்குவதில்லை. நடவடிக்கையும் எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கர்நாடக ஜெயிலில் இருந்து தூக்குதண்டனை கைதி தப்பி ஓடியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள். #Karnatakajail

    பெல்காம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள அரலே கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இங்கு ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், ராஜம்மா, காசி, அவரது மனைவி சிலம்மா உள்பட 15 பேர் வேலை பார்த்தனர்.

    இந்த நிலையில் ராஜம்மா, சிலம்மாவிடம் முருகேசன் தவறாக நடக்க முயன்றார். இதில ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன், ராஜம்மா, சிலம்மா, அவரது கணவர் காசி, மகள் ரோஜா ஆகிய 5 பேரையும் வெட்டி கொன்றார். இச்சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி நடந்தது.

    கைது செய்யப்பட்ட முருகேசனுக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெல்காவி ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த முருகேசன் திடீரென்று மாயமானார். அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறை முழுவதும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. முருகேசன் ஜெயிலில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றதால் சிறையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி முருகேசன் தப்பி உள்ளார். அவரை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். #Karnatakajail

    வெளிநாட்டினரை அமெரிக்காவுக்குள் ஊடுருவ உதவிய இந்தியருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Americancourt

    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்தவர் யத்விந்தர்சிங் சாந்து. இவர் 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை வெளிநாட்டை சேர்ந்த 400 பேரை அமெரிக்காவுக்குள் வர கடத்தி வந்து ஊடுருவ உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    டொமினிகன் குடியரசு, ஹைதி பியர்டோ நிசோ, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களை கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ உதவினார். இவரும், இவரது நண்பர்கள் பாம்பா, பூபிந்தர் குமார், ரஜிந்தர்சிங் ராபர்ட் ஹோவர்ட் ஸ்காட் மற்றும் அட்கின்ஸ் லாசன் ஹோவர்ட் ஆகியோர் இந்த செயல்களில் ஈடுபட்டனர்.

    வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்படுவார்கள். முதலில் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா, ஈரான், பனாமா, வெனிசுலா, பெலிஷ் மற்றும் ஹைதி வழியாக டொனிகன் குடியரசு நாட்டுக்கு அழைத்து வந்தனர்.

    அங்கிருந்து படகுகள் மூலம் பியர்டோரிகா அல்லது புளோரிடாவுக்கு அழைத்து வரப்பட்டு விமானம் மூலம் கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டொமினிக் குடியரசு நாட்டில் இருக்கும்போது அமெரிக்காவுக்குள் நுழைய போலி விசா தயாரித்து வழங்கினர்.

    அதுபோன்று கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ செய்ய தலா 30 ஆயிரம் டாலர் முதல் 85 ஆயிரம் டாலர் வரை பணம் பெற்றுள்ளனர்.

    இதுசம்பந்தமாக கைது செய்யப்பட்ட யத்விந்தர்சிங் சாந்து மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி யத்விந்தர்சிங் சாந்துவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    இவர் 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோரை கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ செய்துள்ளார். பயணத்தின்போது ஒருவர் மட்டும் உயிரிழந்தார். #Americancourt

    புதுவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வழக்கில் கைதான வாலிபரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு பாகூர் பகுதியில் கூட்டு கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பலை பாகூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான 6 பேரிடமிருந்தும் நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் முக்கிய குற்றவாளியான கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27) என்பவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிறை வார்டன் கார்த்திகேயன் ரோந்து சென்றபோது வெடிகுண்டு வழக்கில் கைதான கார்த்திகேயன் அறையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கார்த்திகேயன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து சிறை சூப்பிரண்டு கோபிநாத்திடம் சிறை வார்டன் புகார் கூறி பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஒப்படைத்தார்.

    அதைத்தொடர்ந்து சிறை சூப்பிரண்டு காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார்.

    வேலூர்-திருவண்ணாமலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 110 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். #JactoGeo

    வேலூர்:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மறியல் செய்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்திருந்தனர்.

    இதையடுத்து, நேற்றிரவு 9 மணியளவில் வேலூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் விஸ்வநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் செய்யாறில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதன்படி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட 110 அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  #JactoGeo

    ராயபுரத்தில் வியாபாரியிடம் வழிப்பறி செய்த கொள்ளையனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் வியாபாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ராயபுரம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் வியாபாரி பால முருகனை கத்தியால் குத்து 2 பவுன் நகையை பறித்து தப்பினார்.

    இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் 19-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி சத்யா தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி சுகுமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரத்து 500 அபராத மும் விதித்தார்.

    ஐக்கிய அரபு நாட்டில் சக ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இந்திய வாலிபருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    துபாய்:

    ஐக்கிய அரபு நாட்டில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தியாவை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் சக ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.

    இது தொடர்பான வழக்கு துபாய் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாலிபருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்காக 8 வருடத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் அவருடன் இணைந்திருக்கிறார். #Dhanush #GVPrakash
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை நடிகர் தனுஷை பாட வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் 8 வருடங்களுக்கு தனுஷ் என்னுடைய இசையில் பாடியிருக்கிறார் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.

    இதற்கு முன்னதாக காற்று வெளியிடை படத்தின் நாயகி அதிதி ராவை ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Jail #GVPrakashKumar #Dhanush
    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளை புதூரைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 30). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தற்போது கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கண்ணதாசன் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது பெயர் ரவுடிகள் பட்டியிலும் இடம் பெற்றுள்ளது. 

    தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார். கண்ணதாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார். இதையடுத்து கண்ணதாசன் நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த ஆண்டு இதுவரை 64 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அதிதி ராவ் ஹிடாரி பாடல் ஒன்றை பாடுகிறார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் ஜெயில் படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


    ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
     
    மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவர் நாகர். ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மீது மாதா சிலையை உடைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63), ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர். இவர், ஓய்வு பெற்ற பிறகு மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ ஆலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆலயத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சுந்தர்ராஜனை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் கைப்பற்றிவிசாரணை நடத்தியதில் சுந்தர்ராஜை தாக்கியது ஆணையடி மாத்தார் பகுதியைச் சேர்ந்த ரவி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான், மனவருத்தத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மார்த்தாண்டம் ஆலயத்திற்கு சென்றேன். அப்போது காவலாளி சுந்தர்ராஜை தாக்கினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். திருவட்டார் அருகே ஆணையடி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் சொரூபத்தையும் உடைத்தேன் என்றார். போலீசார் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ரவி, நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    திருவட்டார் பகுதியில் ஆணையடி பகுதியில் மாதா சொரூபத்தை உடைத்ததாகவும், திருவட்டார் போலீசார் ரவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர், ஏற்கனவே 10நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×