என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி"

    • ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
    • அவர்கள் அப்பாவியாக தங்களை காட்டிக்கொண்டு கொண்டு மற்றவர்களிடம் பிரசங்கம் செய்கிறார்கள்.

    டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று முன் தினம் திருமணம் செய்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் புஷ்பா 2 படத்தில் வரும் சாமி பாடலுக்கு தனது மனைவி சுனிதாவுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    டெல்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

    இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணம் குறித்து பாஜக விமர்சித்துள்ளது. "திருமணங்கள் எளிமையாக இருக்க வேண்டும், எந்த ஆடம்பரமும் இருக்கக்கூடாது" என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய பழைய வீடியோவை டெல்லி பாஜக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    "முதலில், அவர்கள் அப்பாவியாக தங்களை காட்டிக்கொண்டு கொண்டு மற்றவர்களிடம் பிரசங்கம் செய்கிறார்கள். பின்னர் கோடிக்கணக்கில் செலவு செய்து, 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் குடும்ப திருமணங்களை நடத்துகிறார்கள்," என்று பாஜக  விமர்சித்துள்ளது. 

    • பாஜக இந்த போதையிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு ஒருபோதும் மதம் இருக்கக்கூடாது
    • இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

    வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான விவாதத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் 3 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் அவைக்கு வெளியே ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் பாஜகவினரும் இடையே மோதல் வெடித்தது.

    ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மெஹ்ராஜ் மாலிக், பண்டிகைகளின் போது இந்துக்கள் குடிபோதையில் இருப்பார்கள் என்று கூறியதற்காக பாஜக எம்எல்ஏக்களால் அவைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டார்.

    "ஒரு முஸ்லிம் சம்பந்தப்படும் போதெல்லாம் பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்துக்கள் போதைக்கு அடிமையாவது குறித்து அவர்களுக்கு கவலையில்லை. மதுக் கடைகளை மூடுவார்களா என்று கேளுங்கள்.

    இல்லை, பண்டிகைகளின் போதும், திருமணங்களின் போதும் இந்துக்கள் குடிப்பதால் அவர்கள் அவற்றை மூட மாட்டார்கள், ஆனால் பாஜக இந்த போதையிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு ஒருபோதும் மதம் இருக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏக்கள் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதன்பின் அவைக்குள் சென்ற மெஹ்ராஜ் மாலிக் தன்னை பாஜக எம்எல்ஏக்கள் தாக்கியதாக மேஜை மீது ஏறி நின்று முறையிட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

    • அதிக செலவழித்து ஆடம்பரமாக மாற்றி வாழ்ந்தார் என்று பாஜக தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தது.
    • மார்ச் 31, 2015 முதல் டிசம்பர் 27, 2022 வரை அரவிந்த் கெஜ்ரிவால் மொத்தம் 29.56 கோடி ரூபாய் செலவிட்டார்.

    கடந்த நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 10 வருடமாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. ரேகா குப்தா டெல்லி முதல்வர் ஆனார். ஆம் ஆத்மி தோல்விக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறை சென்றது ஒரு காரணம்.

    இரண்டாவதாக பாஜகவால் முன்னெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஷீஷ்மகால் பிரசாரம். அதாவது, கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது முதல்வர் இல்லத்தை, அதிக செலவழித்து ஆடம்பரமாக மாற்றி வாழ்ந்தார் என்று பாஜக தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தது.

    தங்கத்தில் கழிவறை இருந்ததாகவும் பாஜக கூறியது. இதுதொடர்பாக சிஏஜி அறிக்கை கசிந்ததாகவும் கூறியது. மேலும் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில் 2015 முதல் 2022 வரை முதல்வரின் பங்களாவைப் பராமரிக்க கெஜ்ரிவால் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் செலவிட்டார் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலைச் சுட்டிக்காட்டி, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது, ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முதல்வரின் பங்களாவை பராமரிக்க மார்ச் 31, 2015 முதல் டிசம்பர் 27, 2022 வரை அரவிந்த் கெஜ்ரிவால் மொத்தம் 29.56 கோடி ரூபாய் செலவிட்டார்.

    பங்களாவைப் பராமரிக்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை விசாரிக்க டெல்லி அரசிடம் கேட்போம்" என்றார்.

    • காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் நேற்று மாலை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
    • இந்த மசோதா முஸ்லிம்களின் மத மற்றும் கலாச்சார சுயாட்சியைக் குறைக்கிறது.

    பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, மேல்சபையில் நேற்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.

    வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். வக்பு வாரிய சட்டத் திருந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் நேற்று மாலை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் வக்பு மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் வக்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    "அரசியலமைப்பையே சவால் செய்யும் இந்த மசோதா முஸ்லிம்களின் மத மற்றும் கலாச்சார சுயாட்சியைக் குறைக்கிறது. தன்னிச்சையான நிர்வாகத் தலையீட்டை செயல்படுத்துகிறது. மேலும் சிறுபான்மையினர் தங்கள் மத மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை.
    • பாஜக அரசு மவுனப் பார்வையாளராக உள்ளது.

    டெல்லியில் பாஜக அரசு, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், டெல்லி கல்வி முறை "கல்வி மாஃபியா"க்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறியதாவது:-

    டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை. நீண்ட நேரம் மின்சார தடை எற்பட்டு வருகிறது. தற்போது, கல்விக் கட்டணத்தை உயர்த்தி தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து கொள்கை அடிக்கின்றன.

    பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். அதிகரிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்தவில்லை என்றால், மாணவ-மாணவிகள் வக்குப்பறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை. பாஜக அரசு மவுனப் பார்வையாளராக உள்ளது.

    இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி "ஆம் ஆத்மி 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்துவதை நிறுத்தியது, தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் கொள்ளைடியக்க தனியார் பள்ளிகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது" என்றார்.

    • ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார்.
    • இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது.

    கடந்த பிப்ரவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோற்ற பின்னர் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் முறையாக டெல்லியில் உரையாற்றினார்.

    இன்று பகத் சிங் நினைவு நாளை ஒட்டி டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கெஜ்ரிவால், பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனதில் என்ன கனவுகள் வைத்திருந்தார்களோ, இன்று அவர்களின் ஒரு கனவு கூட நிறைவேறவில்லை. பகத் சிங் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறைய இருந்தன. ஆனால் ஆங்கிலேயர்கள் அவற்றை தடை செய்யாமல் பகத் சிங்கின் தோழர்களுக்கு அனுப்பினர்.

    நான் சிறையில் இருந்தபோது, துணை நிலை ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினேன், எனக்கு பதிலாக அதிஷி கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த கடிதத்தை அனுப்பவேண்டி நான் சிறை கண்காணிப்பாளருக்கு கொடுத்தேன்.

    ஆனால் அந்தக் கடிதம் துணைநிலை ஆளுநரை அடையவில்லை. அத்தகைய கடிதத்தை எழுத எனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்கும்விதமாக ஷோ-காஸ் நோட்டீஸ் தான் வந்தது. பகத் சிங்கிற்கு எந்தக் கடிதமும் எழுத சுதந்திரம் இருந்தது. ஆனால் என்னால் இரண்டு வரிகள் கொண்ட கடிதம் எழுத முடியவில்லை. நீங்கள் (பாஜக) பிரிட்டிஷாரை விட மோசமானவர்கள்.

    எங்கள் முன்மாதிரிகள் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங். ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார். இல்லையெனில், வெள்ளை நிற ஆட்சியாளருக்கு பதிலாக பழுப்பு நிற தோல் ஆட்சியாளர்கள் வருவார்கள். இதுதான் நடந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசமானவர்கள்.

    பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் உருவப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டன. பகத் சிங்கை விட நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

    இதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், இதையெல்லாம் பாஜக செய்தபோது, காங்கிரஸ் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார். மேலும் மகளிருக்கு பாஜக அளித்த ரூ.2500 உதவித்தொகை வாக்குறுதி உள்ளிட்டவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.  

    • உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.
    • தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்குக் சொல்லுங்க பார்ப்போம்.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இன்று உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தின் போது குற்றம் முதல் சட்டம் வகுப்புவாத வன்முறைகள் அதிகரிப்பு குறித்து ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். 

    மகாராஷ்டிராவில் அமைந்துள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை இடிப்பது தொடர்பாக இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி  வந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக நாக்பூரில் கலவரம் ஏற்பட்டது.

    இதை முன்வைத்து அவையில் பேசிய சஞ்சய் சிங், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் 94 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், உங்கள் ஆட்கள் (பாஜகவினர்) நாடு முழுவதும் ஆத்திரமூட்டும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார்கள்.

    உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.

    எந்த வரலாற்றை நீங்கள் கற்பிக்க விரும்புகிறீர்கள், தலித்துகள் முன்னாடி பானை கட்டிக்கிட்டு நடக்கணும், தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்கு சொல்லுங்க. எந்த முஸ்லிம், விலங்குகள் குளத்தில் தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் குடிக்க கூடாது என்று சொன்னான் என்று எனக்கு  சொல்லுங்க பார்ப்போம்.

     

    நீங்கள் வங்கதேசம்-வங்கதேசம் என்ற பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுகிறீர்கள். நாட்டில் நரேந்திர மோடியின் அரசு 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது, அமித் ஷா உள்துறை அமைச்சர் ஆக இருக்கிறார். இரு நாட்டின் எல்லை மேற்கு வங்காளத்துடனும் அசாமுடனும் உள்ளது. அப்படியிருக்க ஊடுருவல்காரர் எல்லையைக் கடந்து டெல்லிக்கு எப்படி வருகிறார்?.

    பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் வசிக்கும் டெல்லி குற்றங்களின் கோட்டையாக மாறிவிட்டது. இங்குள்ள காவல்துறை நேரடியாக உள்துறை அமைச்சரின் கீழ் வருகிறது.

    பெண்கள், குழந்தைகள் மற்றும் எஸ்சி-எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் இரட்டை எஞ்சின் அரசு செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.      

    • அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது
    • டெல்லி தலைமையில் இருந்த கோபால் ராய் குஜராத் ஆம் ஆத்மி மாநில தலைவராக மாற்றலானார்.

    தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகால ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் ஆம் ஆத்மி பறிகொடுத்தது. தற்போது பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் கட்சியை வலுப்படுத்த ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது.

    அதன்படி டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

    அவ்வாறாக டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவராக இருந்த கோபால் ராய்க்குப் பதிலாக சௌரப் பரத்வாஜ் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் மாநில பொறுப்பாளராக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் டெல்லி தலைமையில் இருந்த கோபால் ராய் குஜராத் ஆம் ஆத்மி மாநில தலைவராக மாற்றலானார்.

    கோவாவின் பொறுப்பாளராக பங்கஜ் குப்தாவும், சத்தீஸ்கரின் பொறுப்பாளராக சந்தீப் பதக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் ஆம் ஆத்மி மாநிலத் தலைவராக மகாராஜ் மாலிக் நியமிக்கப்பட்டார்.

    • ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீது மதுபான ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • மற்றொரு அமைச்சரான சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது முதல் மந்திரியாக இருந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது ஏற்கனவே மதுபான ஊழல் வழக்கு உள்ளது. அதுபோல் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி ஆட்சியின்போது பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி நடந்தது தொடர்பாக, முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் ரூ.571 கோடி செலவில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தும் திட்டத்திற்காக லஞ்சம் பெற்றதாக சத்யேந்திர ஜெயின் மீது மற்றொரு ஊழல் வழக்கை டெல்லி அரசின் ஊழல் தடுப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தும் திட்டத்தை டெண்டர் எடுத்த நிறுவனம், உரிய காலத்திற்குள் அந்தப் பணிகளை முடிக்காததால் ரூ.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை தள்ளுபடி செய்வதற்காக ரூ.7 கோடியை சத்யேந்திர ஜெயின் லஞ்சமாக பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கடந்த 2023, மே மாதம் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • குப்பை கிடங்குகள் தொடர்பாக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள்.
    • ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் எதிர்கோஷம் போட்டனர்.

    டெல்லியில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநகராட்சி தேர்தல் நடை பெற உள்ளது. இதனால் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும். பாரதீய ஜனதா கட்சியும் தலைநகரில் எப்படியும் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    டெல்லியை பொறுத்த வரை குப்பை கிடங்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை பாரதீய ஜனதா கட்சி கையில் எடுத்துள்ளது. காசிப்பூர் பகுதியில் பெரிய அளவிலான குப்பை கிடங்கு உள்ளது. இதனை இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் கறுப்பு கொடிகளுடன் அங்கு திரண்டனர்.

    குப்பை கிடங்குகள் தொடர்பாக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் எதிர்கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    • நீங்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதை பொதுமக்களிடம் கேட்டுத் தீர்மானிக்கிறோம்.
    • நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களின் முன்வைக்கப்படும்.

    182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் ஆம் ஆத்மியும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து விடுபட வேண்டும். இவர்கள் (பாஜக) ஒரு வருடத்திற்கு முன்பு முதல்வரை மாற்றினார்கள். முதலில் விஜய் ரூபானி இருந்தார். அவருக்கு பதில் பூபேந்திர பட்டேலை ஏன் மாற்றினார்கள்? அப்போது விஜய் ரூபானியிடம் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

    விஜய் ரூபானியை தேர்வு செய்தபோது பொதுமக்களிடம் ஏன் கருத்து கேட்கவில்லை. இது டெல்லியில் இருந்து எடுத்த முடிவு. ஜனநாயகத்தில் யார் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். 2016ல் நீங்கள் (பாஜக) கேட்கவில்லை. 2021ல் நீங்கள் கேட்கவில்லை.

    ஆனால் ஆம் ஆத்மி கட்சியில் நாங்கள் இதை செய்யவில்லை. நீங்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதை பொதுமக்களிடம் கேட்டுத் தீர்மானிக்கிறோம். பஞ்சாபில் யார் முதலமைச்சராக வேண்டும் என்று மக்களிடம் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மக்களின் விருப்பத்திற்கு, நாங்கள் பகவந்த் மான் என்று பெயரிட்டோம்.

    குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் முதல்வர் வேட்பாளர்தான் குஜராத்தின் அடுத்த முதல்வர். எனவே இன்றே உங்கள் முதல்வராக யார் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

    இதற்காக, பொதுமக்களின் கருத்தை அறிய, 6357000360 என்ற எண்ணை வழங்குகிறோம். இந்த எண்ணில் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் செய்தி அனுப்பலாம் அல்லது குரல் செய்தி அனுப்பலாம். aapnocm@gmail.com என்ற மின்னஞ்சலும் செய்யலாம். எனவே, பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களின் முன்வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு பெற்றுத்தர ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்.

    இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், "ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்யேந்திர ஜெயின், 2019-ம் ஆண்டு, எனக்கு சிறையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்னை மிரட்டி ரூ.10 கோடி பணம் பெற்றார்" என்ற குற்றச்சாட்டை 3 ஆண்டுகளான நிலையில் இப்போது எழுப்பி உள்ளார்.

    இது குறித்து சிறையில் இருந்தவாறு சுகேஷ் சந்திரசேகர், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு ஒரு கடிதம் எழுதி, அந்த கடிதத்தை தனது வக்கீல் அசோக் சிங் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளார் என தகவல்கள் வெளியாகி புதிய சர்ச்சை வெடித்து உள்ளது.

    இதுபற்றி டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "குண்டர் வீட்டில் குண்டர் நடமாட்டம் நடந்துள்ளதாக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த குண்டரின் பெயர் சுகேஷ் சந்திரசேகர். அவரை ஏமாற்றியவர் ஆம் ஆத்மி கட்சி தலைவர் சத்யேந்திர ஜெயின். இவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி என காட்டுகிறது" என சாடினார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்கையில், "மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் செயல் இது" என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, "பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக குமார் பிஷ்வாஸ் மீது குற்றச்சாட்டு கூறினார்கள். குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது. இப்போது சுகேஷ் கதையை உருவாக்கி உள்ளனர்" என குறிப்பிட்டார்.

    ×