search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்பரம்பாக்கம்"

    செம்பரம்பாக்கத்தில் நகைக்காக பெண்ணை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு மாதிரா வேடு பகுதியை சேர்ந்தவர் கோவலன். இவரது மனைவி தனலட்சுமி (35). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 15-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமாகிவிட்டார்.

    இது குறித்து கணவர் கோவலன் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார்.

    இதுபற்றி உடனடியாக போலீசார் விசாரணையை தொடங்கினர். அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில் பூந்தமல்லி உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி, திருவேற்காடு இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

    கோவலன் போலீசில் அளித்த புகாரில், ஜெ.ஜெ. நகர் பகுதியில் கட்டிட வேலைக்காக அழைத்துச் சென்று விட்டேன். கட்டிட மேஸ்திரி சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை ஆகியோருடன் செல்வதாக மனைவி கூறியிருந்தார். அவர்கள் மீதுதான் சந்தேகமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து திருவண்ணாலையை சேர்ந்த 2 பேரையும் போலீசார் அங்கு சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் சேர்ந்து தனலட்சுமியை செம்பரம்பாக்கம் ஏரிக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது.

    வரண்டு கிடக்கும் ஏரியில் ஒரு பகுதியில் மட்டும் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு மீன் பிடித்த 2 பேரும், தனலட்சுமி அணிந்திருந்த கம்மலை கழற்றி தருமாறு கேட்டனர். இதற்கு அவர் மறுத்ததால் அடித்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் தனலட்சுமி அணிந்திருந்த ½ பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு தப்பி சென்றனர். இதன் பிறகு நகையை அடமானம் வைத்து 2 பேரும் ரூ.7 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர்.

    இந்த பணத்தை வைத்து 10 குவாட்டர் மது பாட்டில்களை வாங்கிய இருவரும் போதை தலைக்கேறும் அளவுக்கு மது குடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    கொலையாளிகள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை செம்பரம்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று, தனலட்சுமியின் உடலை மீட்டனர்.

    எப்படியாவது மது குடிக்க வேண்டும் என்கிற எண்ணமே சக்கரவர்த்தி, ஏழுமலை ஆகியோரது மனதில் கொலை வெறியை தூண்டியுள்ளது. இதனால் ½ பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்றுதான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக போலீசார் துப்புதுலக்கி கொலையாளிகளை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜெ.ஜெ.நகர் போலீசில் கோவலன் அளித்த புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை.

    நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம் தற்போது மொத்தம் வெறும் ஆயிரத்து 162 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது வெறும் 10 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 875 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிகளில் இருந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்தக்கொள்ளளவு 3645 மி.கனஅடி) இதே போல் சோழவரம் ஏரியில் 48 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.(மொத்த கொள்ளளவு 1081).

    எனவே வரும் வாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரியும், சோழவரம் ஏரியும் முழுவதும் வறண்டு விடும் சூழ்நிலை உருவாகி உள்ளன. பூண்டி ஏரியில் 236 மி.கன அடியும் (3231 மி.கனஅடி).செங்குன்றம் ஏரியில் 813 மி.கனஅடியும்(3300 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னையில் வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு 140 லிட்டர் என்ற அளவில் மொத்தம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த மாதம் முதலே நீர் சப்ளை குறைக்கப்பட்டுவிட்டது.

    தற்போது 450 முதல் 480 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    இது தினந்தோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரில் 60 லிட்டர் குறைப்பு ஆகும். வரும் நாட்களில் தண்ணீர் வினியோகம் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போதைய நிலையில் மீஞ்சூர், நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விவசாய கிணறுகள், கல்குவாரி நீரை மட்டுமே சென்னை மக்கள் நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டும் உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி இருப்பதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது அதிகரித்து உள்ளது. #tamilnews
    ×