என் மலர்
நீங்கள் தேடியது "செம்பரம்பாக்கம்"
- மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
- புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. போதுமான தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 34. 65 அடியாகவும் தண்ணீர் இருப்பு 3.028 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
கிருஷ்ணா தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பை குறைக்கும் வகையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் இணைப்பு கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் இருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது. எனவே விரைவில் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து இருந்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்தது. இதனால் ஏரியில் இருந்து கடந்த 13-ந்தேதி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.5 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2860 மில்லின் கனஅடியாகவும், நீர்வரத்து 1700 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 3000 கனஅடியாகவும் உள்ளது.
- பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடும் மதகு பகுதியில் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது.
- மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 81 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் பாதுகாப்பு கருதி டிசம்பர் 12-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதன் பின்னர் மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. தற்போது பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மா பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 380 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து உபரி நீர் வீணாக வெளியேற்றப்பட்டு கடலில் கலந்து வருகிறது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விட்பபட்டது.
மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 81 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். இதில் 3.645 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 22.33 அடியாக உள்ளது. 3.205 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடும் மதகு பகுதியில் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையடுத்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளும் முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. கடந்த வாரம் பலத்த மழை கொட்டியதையடுத்து ஏரிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக 38 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லாததால் குடிநீர் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதே போல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 1,151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை இது மேலும் அதிகரிக்கப்பட்டு 2,149 கன அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 21.34 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் நீர் இருப்பை 21 அடிக்கு கீழ் கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. இதில் 2,944 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியில் நேற்று 1,201 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று காலை நிலவரப் படி ஏரியில் இருந்து 1,698 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 18.97 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,807 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 1,212 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த உயரம் 18.86 அடி. இதில் 16.86 அடிக்கு தண்ணீர் உள்ளது. 372 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. 615 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் 32.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 8,444 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 9,473 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 149 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
பூந்தமல்லி:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி 7-ந் தேதி 5 கண் மதகு வழியாக முதற்கட்டாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் வந்துகொண்டிருந்தால் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக உயர்ந்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2717 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 20.46 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஏரியில் இருந்து நேற்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கன மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2700 கனஅடி தண்ணீர் வருகிறது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. 651 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. எனினும் ஏரியை சுற்றிள்ள பகுதிகளிலிருந்து மழை நீர் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. தொடர்மழை காரணமாக ஏரி வேகமாக நிரம்பியதால் கடந்த 7-ந் தேதி முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக 2000 கன அடி வரை தண்ணீர் திறப்பு உயர்த்தப்பட்டது.
பின்னர் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று முன்தினம் உபரி நீர் திறப்பு 250 கன அடியில் இருந்து 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
இதற்கிடையே நேற்று இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஏரிக்கு 1040 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2804 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 20.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
ஏரியில் இருந்து உபரி நீர் 2151 கன அடி வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.30 அடியை எட்டியுள்ளது (மொத்த உயரம் 24 அடி).
இந்த நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று 1000 கன அடியாக இருந்த உபரி நீர் திறப்பு இன்று 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஏரிக்கு 405 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் 2934 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது (மொத்த கொள்ளளவு 3,645 மி.கஅடி).
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 20.37 அடிக்கு தற்போது தண்ணீர் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியதால் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதலில் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை. இதனால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. எனினும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்படவில்லை.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து 2,151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாக குறைந்து உள்ளது.
ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இதில் 2,695 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது ஏரியில் 20.99 அடிக்கு தண்ணீர் உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் 5 கண் மதகு வழியாக முதற்கட்டாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் வந்துக்கொண்டிருந்தால் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாக உயர்ந்தப்பட்டது.
செம்பரபாக்கம் ஏரிக்கு நேற்று நீர்வரத்து 710 கனஅடியாக இருந்தது. ஆனால் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 100 கன அடியாக குறைந்தது. எனினும் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
காலை நிலவரப்படி ஏரியில் 2,852 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது (மொத்த கொள்ளவு 3,645 மி.கன அடி).
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்ததால் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. (மொத்த உயரம் 24 அடி).
இதையடுத்து நேற்று மதியம் முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. முதலில் 500 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மழை குறைந்ததால் ஏரிக்கு நீர்வரத்து சரிந்தது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 710 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
எனினும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,144 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. இன்று காலை நிலவரப்படி 2,942 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.