search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 115469"

    • மாநிலம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க மாநிலம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தஞ்சை வல்லம் செல்வி கிராமிய தெம்மாங்கு ஆடல் பாடல் இன்னிசை குழுவினரின் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சாலையினை விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கு வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுத்து வருகிறார். சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை 100 சதவீதம் அமல்படுத்தப்பட்ட அனைத்து துறைகளும் கூட்டாக செயல்பட உள்ளதாகவும், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றும் அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், குற்றம் செய்பவர்களுக்கான தண்டனைகள், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சி, திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

    ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, தலைமையாசிரியர் பாலு, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்எஸ்ஐ. முருகவேல், குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், மாவட்ட குழந்தைகள் அலகு உறுப்பினர் வெங்கடாஜலபதி, சைல்டுலைன் பணியாளர் செந்தில்குமார் ஆகியோர் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், குற்றம் செய்பவர்களுக்கான தண்டனைகள், குழந்தைத் திருமணம் குறித்து தகவல் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், சேது முருகானந்தம்,ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியராஜ் செயலர் புவனேஸ்வரன் ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், அங்கன்வாடி ஆசிரியைகள், மகளிர் குழு பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச லெவல் கிராசிங் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் சர்வதேச லெவல் கிராசிங் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் சேலம், நாமக்கல், கரூர் மற்றும் சேலம்- விருத்தாசலம், ஈரோடு- திருச்சி உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள லெவல் கிராசிங் பகுதிகளில் மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி பாதுகாப்பாக செல்வது குறித்து பிரசாரங்களை செய்யும்.

    மேலும் வாகனத்தில் லெவல் கிராசிங் பகுதிகளில் வாகனங்கள் பாதுகாப்பாக எவ்வாறு செல்ல வேண்டும் என்பதைக் குறித்த பாடல்களும் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படும், இந்த வாகனம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி பிரவீன்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்,

    நடைபெற உள்ள தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான அழைப்பிதழ் தயார் நிலையில் உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவையாகும். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,86,397 வாக்காளர்கள் வாக்களிக்க 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 2,60,294 வாக்காளர்கள் வாக்களிக்க 320 வாக்குச்சாவடி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அந்தந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கடும் வெயிலிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சாந்தா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திருமண அழைப்பிதழ் போன்று அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அது வாக்காளர்களிடம் வழங்குவதற்கு தயார் நிலையிலும் உள்ளன. அந்த அழைப்பிதழில் கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ் என்கிற தலைப்பில் அன்புடையீர், நிகழும் மங்களகரமான ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை 5-ந் தேதி 18-04-2019 வியாழக்கிழமை சதுர்த்தி திதியும், ஹஸ்தம் நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் தங்கள் அருகாமையில் உள்ள வாக்கு சாவடியில் நடைபெறுவதால் 18 வயது நிரம்பிய, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது குடும்பத்தின் 100 சதவீதம் வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கின்றோம் என்றும், அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். வைபவம் பற்றிய மேல்விவரங்களுக்கு எண் 1950-ஐ தொடர்பு கொள்ளவும் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் வாக்காளர்களின் பெயர் எழுதி, அவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    அரியலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமங்கள் தோறும் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் தேர்தல் தொடர்பான குறும்படங்கள், திரையிடப்பட்டு வருகிறது. மேலும், துண்டு பிரசுரங்கள். ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைக்குழுவினர் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் எந்திரம் மூலம் செயல் விளக்கம் காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிக்குழுவின் செயலாளருமான சரவணன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜம்முவில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் மாரத்தானில் சுமார் 2000 குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். #JKChildrenMarathon
    ஸ்ரீநகர்:

    ஜம்மு மாவட்டத்தில்  பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடத்தப்பட உள்ளது. ஜம்மு பல்கலைக்கழகத்தில் வரும் 24-ம் தேதி இந்த மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

    இது குறித்து ஜம்மு காஷ்மீரின்  இளைஞர் சேவை மற்றும் விளையாட்டுத் துறை கமிஷனர் சர்மத் ஹஃபீஸ் கூறியிருப்பதாவது:

    இந்த மாரத்தானில் எங்கள் குட்டி நட்சத்திரங்கள் பங்கேற்று, ஜம்மு பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் ஓடுவார்கள். குழந்தைகள் வளரும்போது சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டுத் துறையில் பல்வேறு விளையாட்டுகளில் குழந்தைகள் பங்கு கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கம் ஆகும்.

    மேலும் இந்த மாரத்தானில், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் ஜம்மு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுமார் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #JKChildrenMarathon
    கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    அரியலூர்:

    நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், தாசில்தார் கதிரவன், கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    புதுவையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதின் அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். #KiranBedi #Helmet
    புதுச்சேரி:

    புதுவையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் இன்று முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம் குறித்து கவர்னர் கிரண்பேடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    அவர் நேற்று மாலை ரெட்டியார்பாளையம் பகுதிக்கு சென்றார். மூலக்குளம் அருகே சென்ற போது அவர் தனது காரில் இருந்து இறங்கினார். பின்னர் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி, ‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். அது உங்கள் உயிரை பாதுகாக்கும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்’ என்றார். அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி, கருவடிக்குப்பம் வழியாக கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

    புதுவை அமைதியான, தூய்மையான மாநிலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போக்குவரத்து குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் மதிப்பதில்லை.

    மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது. இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்வது, வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவது போன்றவை குற்றமாக கருதப்படுகிறது. அதுபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதும் குற்றம்தான். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி செல்வதால் விலை மதிப்பில்லாத உயிர் இழப்பு ஏற்படுகிறது. ஒருவர் உயிரிழக்கும் போது அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

    குழந்தைகள் பெற்றோரின்றி தவிக்கின்றனர். விபத்து வழக்கிற்கான கோர்ட்டுக்கு செல்லும்போது நேரம், பணம் வீணாகிறது. விபத்தால் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு விதவை பென்‌ஷன் வழங்குவது மூலம் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. சுகாதாரத்துறைக்கு மருத்துவ செலவும் ஏற்படுகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கூட வாகன விபத்தில் உயிரிழந்தார். அதுகூட ஹெல்மெட் அணியாதது தான் காரணம். எனவே கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது. அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    அவ்வாறு அணியாமல் செல்வோர் மீது போக்குவரத்து போலீசார், பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வலர்கள் வாகன எண்ணை குறித்து வைத்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பது, திருடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கை செய்து விடமுடியுமா? அதுபோல் தான் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை வெறுமனே விடமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #KiranBedi #Helmet
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு லோகோ முத்திரையிடப்பட்டு வழங்கப்படுகிறது. #AavinMilk #AbortionAwareness
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவில் உள்ள பெண் குழந்தைகளை கண்டறிந்து கருக்கலைப்பு அதிகமாக நடந்துள்ளது.

    இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. சமீபத்தில் கருக்கலைப்பு செய்த 2 பெண் டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதனை தடுக்க ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    அதைதொடர்ந்து நேற்று கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் லோகோ முத்திரையிடப்பட்டு வழங்கும் பணி தொடங்கியது.

    இதனை கலெக்டர் கந்தசாமி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்படும் 18 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் விழிப்புணர்வு லோகோ முத்திரையிடப்பட்டு வழங்கப்படுகிறது என்றார்.  #AavinMilk
    #AbortionAwareness



    மானாமதுரை ரெயில்நிலையத்தில், பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுபடையினர் பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    மானாமதுரை:

    மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாட்டுப்பாடி, தாளம் தட்டி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவுப்படி மானாமதுரை ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் ரெயில்வே போலீசார், பயணிகளிடம் பாரம்பரிய முறைப்படி வேட்டி, தலைப்பாகை அணிந்து தண்டோரா போட்டு ஆடலுடன் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அவர்கள் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது, ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படி பொருட்கள் இருந்தால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், விதிகளை மீறி பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாட்டுப்பாடி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நேற்று மதியம் மானாமதுரை வழியாக சென்ற ரெயில் பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் வித்தியாசமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
    பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக சரத்குமார் கூறினார். #SamathuvaMakkalKatchi #Sarathkumar #MeToo
    கரூர்:

    கரூரில் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் உடல்நல விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கிற போது, பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டி பெண்களை அங்கு அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல.

    சபரிமலைக்கு என புனிதம் இருக்கிறது. அதனை காத்திட வேண்டும். சில கோவில்களில் ஆண்கள் சட்டையை கழற்றி விட்டுத் தான் செல்ல வேண்டும் என கூறுவார்கள். அங்கு சட்டையுடன் தான் செல்வேன் என கூற முடியுமா? எனவே கோவில்களுக்கு என்று வகுக்கப்பட்ட நம்பிக்கையை நாம் கடைபிடித்து தான் ஆகவேண்டும். எனவே பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது.

    ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி நடக்கிற போது, அதில் குறைகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதனை மத்திய அரசுக்கு எடுத்து சொல்பவராக தான் கவர்னர் இருக்க வேண்டும். இதை விடுத்து கவர்னர் ஆய்வுக்கு செல்லக் கூடாது. அப்படியெனில் பிரதமர் மோடி செல்ல வேண்டிய இடத்திற்கு, ஜனாதிபதி ஆய்வுக்கு செல்ல முடியுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    சிங்கப்பூரில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறார்கள். எனவே வரும் காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை பாதுகாப்பது, மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து ஆஸ்க் சரத்குமார் என்கிற செயலி மூலம் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறோம்.

    மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா? இல்லையா? என ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் ஆக மாட்டார் என்பது எனது ஆழமான கருத்து.

    கூட்டணி குறித்து பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிற போது எனது நிலைபாட்டை அறிவிப்பேன். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சிக்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

    பெண்களை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். எந்த விதத்திலும் துன்பப்படுத்தக்கூடாது. அது நமது கடமை. பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களில் பாடகி சின்மயி பிரச்சனையால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எந்த தவறு நடந்தாலும் தைரியமாக சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இனி வரும் காலங்களில் பெண்கள் காலதாமதம் செய்யக்கூடாது. எப்போதோ செய்த தவறை பல ஆண்டுகள் கழித்து சொல்லும் போது அந்த மனிதன் மட்டுமல்ல அவனை சார்ந்த குடும்பமும் அசிங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SamathuvaMakkalKatchi #Sarathkumar #MeToo
    சிறுபான்மையினருக்கு அரசு கடன் திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும் என்று ‘டாம்கோ’ மேலாண்மை இயக்குனர் வள்ளலார் அறிவுறுத்தினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனரும், டாம்கோ மேலாண்மை இயக்குனருமான வள்ளலார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழக அரசால் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தமிழகத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள சிறுபான்மையினர் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டாம்கோ நிறுவனத்தின் மூலம் பயனாளிகளுக்கு தனிநபர் கடன், கல்விக்கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் உள்ளிட்ட கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தாய்கோ வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    டாம்கோ திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2017-18-ம் நிதியாண்டில் 252 பேருக்கு ரூ.84 லட்சத்து 37 ஆயிரம் சுயஉதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. தனிநபர் கடன்களை பயனாளிகளுக்கு வழங்கும்போது சம்பந்தப்பட்ட தொழிலுக்கு கடன் தொகையை பயனாளி பயன்படுத்துவதை அலுவலர்கள் உறுதி செய்வதுடன், பெறப்பட்ட கடன்தொகையை குறிப்பிட்ட கால அளவிற்குள் பயனாளிகளை திருப்பி செலுத்த செய்ய வேண்டும்.

    டாம்கோ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் டாம்கோ திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழக அரசால் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அலுவலர்கள் தகுதியானவர்களுக்கு கொண்டு சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் மிருணாளினி, ஆவின் பொது மேலாளர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி செல்வராஜ், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ×