என் மலர்
நீங்கள் தேடியது "துரைமுருகன்"
- இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
- அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை :
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்கனை மதுரை உயர்நீதிமன்ற கினை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
- தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
- அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்டமாக கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்து பரிமாற்றம் கடுமையாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகமற்றவர்கள் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அந்த வார்த்தையை திரும்ப பெறுவதாக கூறினார். எனினும் அவரை கண்டித்து தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் நேற்று (மார்ச் 12) தமிழ்நாடு முழுக்க கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் வேலூரில் திமுக சார்பில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்டமாக கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால் வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது. தமிழனை தவறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவான், ஜாக்கிரதை" என்று பேசியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகனின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- தி.மு.க. மாணவரணி செயலாளரான எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தி.மு.க. மாணவரணி இணை செயலாளரான எஸ்.மோகன் வர்த்தக அணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
* தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தி.மு.க. மாணவரணி செயலாளரான எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தி.மு.க. மாணவரணி இணை செயலாளர் பூவை சி.ஜெரால்டு சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தி.மு.க. மாணவரணி இணை செயலாளரான எஸ்.மோகன் வர்த்தக அணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊடகங்களில் தி.மு.க. சார்பில் பேசுவதற்காக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.க்கள் செல்வகணபதி, கே.என். அருண்நேரு, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் தி.மு.க. சார்பில் விவாதங்களில் பங்கேற்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசியல் சட்டத்தின் அடையாளத்தை அழிக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் அமையக் கூடாது.
- அரசியல் சட்டத்தின் அடிப்படையான கோட்பாட்டிற்கு இந்த தீர்ப்பு எதிரானது.
திமுக பொதுச் செயலாளரும்,அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களே "செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் நீதிபதி ரவீந்திர பட் அவர்களின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
திமுகவை பொறுத்தவரை இந்த வழக்கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும் கேசவானந்த பாரதி, இந்திரா சாஹ்னி (மண்டல் ஆணையத் தீர்ப்பு) உள்ளிட்ட, இந்த அமர்வை விட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
அரசியல் சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன் வரிகள்.
அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவத்திற்கு எதிராக எந்தச் சட்டத் திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள், ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது.
அதனால்தான் இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட், தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.
நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன் என்று குறிப்பிட்டு விட்டே தனது தீர்ப்பை அவர் எழுதியுள்ளார். இறுதியில் இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
ஆகவே நாட்டில் உள்ள 82 விழுக்காடு பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூக நீதியைக் காப்பாற்றிட, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலை நாட்டிட, சமூகநீதிக்காகத் தொன்று தொட்டுப் போராடி வரும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெரினா போலீசார் கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி கவுன்சிலர் விமலா உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
- கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மயிலாப்பூர் பகுதி 124-வது வட்ட தி.மு.க. செயலாளர் ஆவார்.
சென்னை:
சென்னை சோழிங்க நல்லூரை சேர்ந்தவர் அமர்ராம். சென்னையில் அடகு கடை நடத்தி வரும் இவர் சமீபத்தில் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர், 'நான் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து நாவலூரில் 58 சென்ட் நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி என்பதால் நிலத்தை திருப்பி கேட்டு கிருஷ்ணமூர்த்தி என்னை மிரட்டி வந்தார்.
என்னை கடத்தி சென்று திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து என்னிடம் விற்ற நிலத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் எழுதி வாங்கி கொண்டனர். எனவே எனது நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.
மெரினா போலீசார் கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி கவுன்சிலர் விமலா உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து கிருஷ்ண மூர்த்தியும், அவரது மனைவி கவுன்சிலர் விமலாவும் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து முன் ஜாமீன் பெற்றனர்.
முன் ஜாமீன் உத்தரவு நகலுடன் கிருஷ்ணமூர்த்தியும், விமலாவும் நேற்று எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் உத்தரவு நகலில் அவர்கள் திருத்தங்கள் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி கவுன்சிலர் விமலா அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மயிலாப்பூர் பகுதி 124-வது வட்ட தி.மு.க. செயலாளர் ஆவார். அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்ததும் தி.மு.க. மேலிடம் அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தது. அவரை தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை தென்மேற்கு மாவட்டம், மயிலாப்பூர் கிழக்கு பகுதி, 124 அ-வது வடக்கு கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
- நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.
திருவள்ளூர்:
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2960 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.
மேலும் நீர்வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனை அடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர்வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகிறோம். சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்வர். பூண்டி ஏரி கரையை ஒரு அடி உயர்த்தும் திட்டம் உள்ளது.
ஒரு காலத்தில் பூண்டி ஏரி அழகாக இருந்தது, தற்போது இல்லை; இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன், நீர்வளத்துறை துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்யநாராயணா, செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
- துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது "தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள்" நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
அதன்படி தி.மு.க. அணிகளின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி-விவசாயி அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மருத்துவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
துணை பொதுச்செயலாளர் பொன்முடி-பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக செயல்படுவார்.
துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.-மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை ஆகிய அணிகளின் பொறுப்பாளராக இருப்பார்.
துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்-தொண்டரணி, மீனவரணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளின் பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்வார்.
துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி-சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மகாபாரத கதையில் கண்ணனை வெறும் தேரோட்டியாக சொல்ல முடியாது.
- சூத்திரதாரியாக இருந்து கவுரவர்களுக்கு எதிராக பஞ்சபாண்டவர்களை வழிநடத்தியதே கண்ணன்தான்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 'கவர்னர் உரை' விவாதத்துக்கு உரியதாக மாறி இருக்கிறது.
பொதுவாக சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தினாலும் அந்த உரையை தயார் செய்வது ஆட்சி செய்யும் அரசுதான். அரசாங்கம் சார்பில் என்ன தயாரித்து கொடுக்கப்படுகிறதோ அதை கவர்னர் பொறுப்பில் இருப்பவர்கள் வாசித்துவிட்டு சென்று விடுவார்கள். இது மரபு.
ஆனால் இந்த மரபை முதல் முறையாக உடைத்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கடந்த 5-ந்தேதி அவரிடம் தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை வழங்கப்பட்டது. அதை படித்துப் பார்த்த கவர்னர் 6 இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அப்படி எந்த ஒரு பரிந்துரையையும் கவர்னர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சொல்கிறது. ஆனால் திருத்தம் செய்ய சொன்னதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சர்ச்சைக்கு இடையில்தான் கவர்னர் உரையில் திருத்தம் செய்யப்படவில்லை என்பதை அறிந்த கவர்னர் 6 இடங்களில் சில பத்திகளை வாசிப்பதை தவிர்த்தார். அதற்கு உடனடியாக அரசு தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
கவர்னருக்கு அவர் முன்னிலையிலேயே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் எப்படி பதிலடி உடனடியாக கொடுக்க முடிந்தது? என்று அரசியல் நிபுணர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். கவர்னர் இப்படித்தான் நடந்து கொள்வார் என்று தி.மு.க. தலைவர்கள் எதிர்பார்த்தார்களா? அதை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே தீர்மானத்தை தயாரித்து வைத்திருந்தார்களா? என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எதிரொலித்தது.
ஆனால் இதன் பின்னணியில் என்னென்ன நடந்தது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. கவர்னருக்கு உடனடியாக பதிலடி கொடுத்த விவகாரத்தில் சூத்திரதாரியாக செயல்பட்டது அமைச்சர் துரைமுருகன் ஆவார்.
மகாபாரத கதையில் கண்ணனை வெறும் தேரோட்டியாக சொல்ல முடியாது. சூத்திரதாரியாக இருந்து கவுரவர்களுக்கு எதிராக பஞ்சபாண்டவர்களை வழிநடத்தியதே அவர்தான்.
மற்றவர்கள் அறியாத வகையில் பின்புலத்தில் இருந்து சூத்திரதாரியாக கண்ணன் செயல்பட்டது போன்றுதான் நேற்று சட்டசபையிலும் அமைச்சர் துரைமுருகன் சூத்திரதாரியாக திகழ்ந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்.
தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிவிப்புகளை அவர் சரியாக சொல்கிறாரா? என்று வரிக்கு வரி பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் திராவிட மாடல், சட்டம் ஒழுங்கு போன்றவைகளை கவர்னர் தவிர்த்துவிட்டு செல்வதை அவை முன்னவரான துரைமுருகன் கண்டுபிடித்தார்.
அடுத்த வினாடி அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. உடனடியாக எழுந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்று ஏதோ பேசினார். பிறகு சபையில் இருந்து எழுந்து வெளியில் சென்றார். சட்டசபை அதிகாரிகளை சந்தித்து பேசிவிட்டு மீண்டும் இருக்கைக்கு திரும்பினார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் கவர்னருக்கு பதிலடி கொடுக்கும் தீர்மானம் மின்னல் வேகத்தில் தயாரானது. சபை விதி 17ஐ தளர்த்தி தீர்மானம் கொண்டுவர தீர்மானித்து அதற்கேற்ப 2 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த நிகழ்வுகள் எதையும் அறியாத கவர்னர் ஆர்.என். ரவி தனது உரையை 10.48 மணிக்கு முடித்தார். அடுத்து எழுந்து சபாநாயகர் கவர்னர் உரையை தமிழில் வாசிக்கத் தொடங்கினார். 11.31 மணிக்கு சபாநாயகர் வாசித்து முடித்தார்.
இதற்கிடையே சூத்திரதாரி துரைமுருகனால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டு இருந்தது. சபாநாயகர் வாசித்து முடித்ததும், இருக்கையில் இருந்து எழுந்து மு.க.ஸ்டாலின் அந்த 2 பக்க தீர்மானத்தை படித்து தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரையை முழுமையாக சபை குறிப்பில் இடம்பெற செய்தார்.
வழக்கமாக கவர்னர் உரை முடிந்ததும், தேசிய கீதம் பாடப்பட்டு கவர்னர் வழியனுப்பி வைக்கப்படுவார். வழக்கத்துக்கு மாறாக முதல்-அமைச்சர் பேசியதும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உஷாரானார்.
அவர் இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு தான் கவர்னருக்கு ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். தனது உதவியாளர்களிடம் கேட்டு தனக்கு எதிராக தீர்மானம் வருவதை அறிந்தார்.
அதன் பிறகு தேசியகீதம் பாடுவதற்குகூட காத்திருக்காமல் சபையில் இருந்து வெளியேறினார்.
- தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது.
- நீங்கள் தி.மு.க.வை காப்பாற்றி இருக்கிறீர்கள்.
சென்னை :
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-
கருணாநிதி எப்படி இந்த இயக்கத்தை நடத்தினாரோ, அப்படியே இந்த இயக்கத்தை நடத்தக்கூடிய ஆற்றலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். அவர், ஆட்சியிலும், கட்சியிலும் ஆற்றுகிற பணி எல்லோரையும் வியக்க வைக்கிறது.இந்தியாவில் இப்படிபட்ட ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். இதோடு அவருக்கு பணி தீரவில்லை. இன்றைக்கு அவரை நாடு எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவரை அகில இந்தியா நோக்குகிறது.
அன்றைக்கு உங்கள் (மு.க.ஸ்டாலின்) தந்தை (கருணாநிதி) இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றினார். இன்றைக்கு நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். உங்களால்தான் முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
நீங்கள் கருணாநிதியின் மகன். உங்களுக்கு அந்த வல்லமை, திராணி, தைரியம் உண்டு என்று நாடு கருதுகிறது. நீங்கள் தி.மு.க.வை காப்பாற்றி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வந்து இருக்கிறது. இதற்கு அடையாளமாக தான் பல திசைகளில் இருந்து தலைவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின் அவர்களே, எனது அரசியல் அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். இந்திய நாடு ஒரு நாள் இந்த கோபாலபுரம் இல்லத்துக்கு நுழைந்து உங்களை பார்த்து நீங்கள்தான் நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டும் (பிரதமர் பதவி) என்று சொல்லும் காலம் வரும்... வரும்... வரும்...
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.
- தி.மு.க. ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல், விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும்.
- தி.மு.க. அரசை கவிழ்க்க முயல்வதாக தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்தும்.
திருச்சி:
திருவாரூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டமானது அ.தி.மு.க.வின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை. இந்த திட்டத்தில் மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த முடியும்.
தமிழகத்தில் வடமாநிலத்தவர் மீதான தாக்குதல் நடத்தப்படாமலேயே நடத்தப்பட்டதாக கூறுவது தவறு. ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை திசை திருப்பவும், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என முதல்வர் விடுத்த அறிவிப்பை மக்கள் மத்தியில் இருந்து திசை திருப்ப வேண்டும் என சிலர் செய்த சிறுபிள்ளைத்தனமான செயல்.
தி.மு.க. ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல், விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும். தி.மு.க. அரசை கவிழ்க்க முயல்வதாக தலைவர் கூறி இருப்பது என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை உணர்த்தும்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களையும் தி.மு.க. அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் ஆளும் கட்சியாக மாறும் போது செய்த செயல்பாடுகளை முடக்கப் பார்ப்பார்கள். ஆனால் தி.மு.க. அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த மாநாடு நாளை தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
துபாய் :
துபாயில் 9-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நாளை (சனிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.
இதில் பங்கேற்க சென்னையில் இருந்து துரைமுருகன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவரை மாநாட்டின் துணைத்தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்றார்.
இதுகுறித்து பிரசிடெண்ட் அபூபக்கர் கூறுகையில், 'துபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும். தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க இந்த மாநாடு பெரும் துணையாக இருக்கும். 3 நாட்கள் துபாய் மாரியட் அல் ஜடாபில் நடக்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
எனவே தமிழ்நாட்டில் உள்ள வளம், அரசின் கொள்கை நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவம், போன்ற பல விஷயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்' என்று தெரிவித்தார்.
- தி.மு.க.தொண்டர்கள் குறிப்பிட்ட தேதி முதல் உறுப்பினர்களை சேர்க்கும் பணியைத் தொடங்கி உடனுக்குடன் படிவங்களை தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- உறுப்பினர் படிவங்களுடன் உறுப்பினர் கட்டணத் தொகை தலைமைக்கழகத்திற்கு கிடைத்த பின்னரே படிவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-
ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதி வரை, "முத்தமிழஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழக பவள விழா ஆண்டு" உறுப்பினர்களை சேர்த்தல் பணிகளை உடன்பிறப்பு களாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்புடன் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
எனவே தி.மு.க.தொண்டர்கள் குறிப்பிட்ட தேதி முதல் உறுப்பினர்களை சேர்க்கும் பணியைத் தொடங்கி உடனுக்குடன் படிவங்களை தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
1. உறுப்பினர் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.
2. உறுப்பினர் சேர்க்கை படிவத்திற்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு ரூ.25.
3. உறுப்பினருக்கான கட்டண தொகையை மணி யார்டர், டிமாண்ட் டிராப்ட் (டி.டி.) மூலம் அனுப்புகின்றவர்கள் அந்த கட்டணத் தொகை விவரத்தையும் மணியார்டர் ரசீது அல்லது டி.டி. எண்ணையும் அதற்கென்று படிவத்தில் உள்ள கட்டத்திற்குள் குறித்து அனுப்ப வேண்டும்.
4. விதி 5, பிரிவு 5-ன்படி உறுப்பினர்களை அவர்கள் குடியிருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினராக சேர்க்கலாம்.
5. உறுப்பினராக சேர விரும்புவோர், உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிடுவதுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், எண்., புகைப்படம் உள்ள முதல் பக்கத்தினை மட்டும் நகல் (ஜெராக்ஸ்) எடுத்து இணைத்திட வேண்டும்.
6. விதி 5, பிரிவு 3-ன்படி உறுப்பினர் பதிவுத்தாளில் சம்பந்தப்பட்ட வார்டு கிளையின் நிர்வாகிகள், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மேலமைப்பு நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட கழக, மாநகர் மாவட்ட கழக, மாநகர கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், அந்தந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதற்கு முன்னதாக நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் ஆகியோர்களில் எவரேனும் ஒருவர் கையொப்பமிட்டு உறுப்பினர் விண்ணப்பப் படிவங்களில் பரிந்துரை செய்யும் தகுதி பெற்றவராவர்.
7. உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்தவுடன் காலம் தாழ்த்தாமல், மொத்தமாக சேர்த்து வைக்காமல், உடனுக்குடன் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
8. உறுப்பினர் விண்ணப் படிவங்களையும், அதற்குரிய கட்டணத் தொகையினையும் "பொதுச்செயலாளர், தி.மு.க. தலைமை நிலையம், அண்ணா அறிவாலயம், 367 & 369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018" என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
9. உறுப்பினர் படிவங்களுடன் உறுப்பினர் கட்டணத் தொகை தலைமைக்கழகத்திற்கு கிடைத்த பின்னரே படிவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பரிசீலித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட படிவங்களில் இடம்பெற்றவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்படும்.
இவ்வாறு பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.