என் மலர்
நீங்கள் தேடியது "கும்பாபிஷேகம்"
- இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
- நாளை முதல் மண்டலாபிஷேகம் நடைபெறும்.
ராம்ஜிநகர்:
முருகப்பெருமானின் 7-ம் படை வீடு என்ற பெருமைக்குரியதும், அருணகிரிநாதருக்கு முருகன் அருளியது என்ற சிறப்புக்குரியதுமாக திகழ்கிறது வயலூர் சுப்பிர மணியசுவாமி கோவில்.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.5 கோடியில் திருப்பணிகள் தொடங்கின. இந்த பணிகள் நிறை வடைந்ததை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் கோலா கலமாக நடைபெற்றது. இதற்கானயாக பூஜைகள் கடந்த 14-ந்தேதி (வெள்ளி க்கிழமை) விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின.
தொடர்ந்து யஜமான சங்கல்பம், புண்யா ஹவாசனம், பஞ்சகவ்யம், தேவதா அனுக்ஞை மற்றும் மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடை பெற்றன.
மறுநாள் (சனிக்கிழமை) மிருத்ஸங்கிர ஹணம் பூஜை நடந்தது. 16-ந்தேதி மாலை முதற்கால பூஜை, இரவு பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜை, மாலை 3-ம் கால யாக பூஜை நடந்தன.
நேற்று காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதை தொடர்ந்து காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சகல விமானங்கள். ராஜகோபுரங்கள், கும்பாபிஷேகமும், காலை 9.50 மணிக்குள் மூலாலய மஹா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தினர்.

அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வயலூரா.. வயலூரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர். கும்பாபிஷேக விழாவில் பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி கும்பாபிஷேக வர்ணனை ஆற்றினார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பகல் 12.15 மணிக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாகம் பல்வேறு பக்தர்கள் சார்பாகவும் ஆங்காகாங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் வயலூர் சாலை முழுவதும் கடும் நெருக்கடியாக காணப்பட்டது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு சுவாமி திரு வீதி எழுந்தருளல் ஆகியவை நடக்கின்றன. நாளை முதல் மண்டலாபிஷேகம் தொடங்குகிறது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன், நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன், அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் அறங் காவலர் குழு, திருப்பணிகள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் தரிசனம் செய்ய் வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழாவையொட்டி திருப்பள்ளி எழுச்சி, விநாயகர் வழிபாடு, வேதிகார்ச்சனை, மற்றும் 4-ம் கால யாகபூஜை, காயத்திரி மந்திரம், ஹோமங்கள் ஆகியவை நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சாமிகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை மேச்சேரி தனபால் அய்யர், ராசிபுரம் ஹரிஅய்யர் குழுவினர் நடத்தி வைத்தனர். விழாவில் கோவில் பங்காளிகள், உறவினர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் அண்ணாமலை, மூர்த்தி, முருகேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.