search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123319"

    பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இன்று வலியுறுத்தியுள்ளது. #Indiademands #immediateandsafereturn #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது. 

    மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது, பதவி மற்றும் மதம் ஆகியவை தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வீடியோ காட்சியை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை இன்று மாலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள ஷரத்துகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானி அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபினந்தனுக்கு எந்தவித தீங்கும் ஏற்படக் கூடாது. அவர் விரைவில் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. #Indiademands #immediateandsafereturn #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுகவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார். அவை வருமாறு:-

    1. காலம் காலமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வந்த காவிரி பாசன மாவட்டங்கள் இப்போது படிப்படியாக ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவும், பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு இறுதியில் மேலும் இரு ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. அதன் காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    எனவே கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் தொடங்கி புதுக்கோட்டை - ராமநாதபுரம் மாவட்ட எல்லை வரை உள்ள காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

    2. தமிழகத்தின் பாசனத் தேவைகளை ஓரளவு நிறைவேற்றக்கூடிய அளவில் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

    ரூ.60,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 1100 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும். இது கர்நாடகத்திடமிருந்து நாம் பெறக்கூடிய காவிரி நீரை விட ஆறு மடங்குக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தவிர அத்திக்கடவு - அவினாசித் திட்டம், பாலாறு பாசனத் திட்டம், பாண்டியாறு, காவிரியில் தடுப்பணைகள், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் உள்பட 20 பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    3. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கவுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் சமூகநீதி யாருக்கு தேவை என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    எனவே, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்து சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

    4. ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அதற்கான தீர்மானத்தை கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 164 நாட்களாகியும் இதுவரை எந்த பயனும் இல்லை.

    இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் மூலமாக ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனரை திருப்பி அனுப்பச் செய்ய வேண்டும். பின்னர் அதே பரிந்துரையை அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்கும்போது வேறு வழியின்றி அதை ஆளுனர் ஏற்றுக்கொண்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்து தான் தீர வேண்டும்.

    5. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தலா 500 மதுக்கடைகளை மூடியது. அதன்பிறகு வேறு எந்த மதுக்கடைகளும் மூடவில்லை. இந்த வி‌ஷயத்தில் வாக்குறுதி கடைபிடிக்கப்பட வேண்டும்.



    அதன்படி உடனடியாக தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மீதமுள்ள மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்க வேண்டும்.

    6. தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைவது, கடல் நீர் ஊடுருவுதல், பாலங்கள், அணைகள் போன்றவை வலிமை இழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் செயற்கை மணல் உற்பத்தியையும், வெளிநாட்டு மணல் இறக்குமதியையும் அதிகரிப்பதன் மூலம் இப்போது செயல்பாட்டில் உள்ள மணல் குவாரிகளை படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    7. தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அந்த கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால் அவற்றை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    8. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்

    மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்காமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    9. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, ரூ.5,800 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார்.

    கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

    10. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குளித்தலையில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது.
    குளித்தலை:

    படித்த இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குளித்தலையில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு குளித்தலை ஒன்றிய தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர். 
    கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏமூர் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று கொண்டார். கூட்டத்தில், கரூர் அருகே ஏமூர் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட 3 ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் பொதுமக்கள் வயல்வெளியிலுள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் 1,250 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த நவம்பர் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கல்வி அதிகாரியிடம் கேட்ட போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்டவற்றின் கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு பெற தவறியதால் தாமதம் ஏற்படுவதாக கூறுகிறார். இதனால் வீட்டு வாடகை செலுத்துவது, மளிகை சாமான் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு பணம் இல்லாமல் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத சம்பளத்தை வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி-மேலப்பாளையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலப்பணிகள் நடந்தன. 70 சதவீத பணிகள் நிறைவடைந்த போதும், மீதிப்பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டனர். எனவே அதனை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வீரராக்கியம் ரெயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால், அங்குள்ள ஊர்களுக்கு பொதுமக்கள் தடையின்றி செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் வேலை செய்யும் செவிலியர் உதவியாளர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் செவிலியர் உதவியாளருக்கான 2 ஆண்டு டிப்ளமோ படிப்பினை படித்து முடித்து விட்டு தான் மருத்துவமனைகளில் வேலை செய்கிறோம். எனினும் நாங்கள் படித்த படிப்பின் சான்றிதழ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினால் ஏற்று கொள்ளாத நிலை உள்ளது. இதனால் அரசு வேலை உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மத அடையாள கோவில் கட்டப்படுகிறது. மத அடையாளங்கள் அரசு அலுவலகங்களில் இருக்க கூடாது என்கிற உத்தரவினை மீறும் வகையில் உள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட சமநீதி கழகத்தினர் மனு கொடுத்தனர்.

    மண்மங்கலம் நடையனூரை சேர்ந்த முன்னாள் நிலஅளவை துறை ஊழியர் அர்ச்சுனன் (வயது 55) அளித்த மனுவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டு பணிநீக்கம் செய்து விட்டனர். இது குறித்து விசாரித்து மீண்டும் எனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், குடும்பர், பண்ணாடி என அழைக்கப்பட்ட பிரிவினை ஒன்று சேர்த்து தேவேந்திர குலவேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஆண்டாண்டு காலமாக தாங்கள் விவசாயம் செய்து வருவதை காட்டும் விதமாக நெற்பயிருடன் வந்து தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் சிலரும் மனு கொடுத்தனர்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு மடக்குகோல் மற்றும் கருப்பு கண்ணாடி, மடக்கு சக்கர நாற்காலி மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி என ரூ.26,150 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் தேசிய அளவில் தமிழக அணியில் இடம் பெற்று புனேயில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தனியார் பள்ளி மாணவர்களை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மணப்பாறை:

    மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட முத்தன்தெரு பகுதியில், கஜா புயல் பாதிப்புக்கு பின்பு இன்னும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று காலை மணப்பாறை பஸ் நிலையம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடும்படி கூறினர்.

    ஆனால் பொதுமக்கள், ‘எங்கள் பகுதியில் குடிநீர் வருவதே இல்லை. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம்’ என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுபற்றி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆணையர் சுதா, பொறியாளர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் முத்தன் தெரு பகுதிக்கு உடனே சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் உடனடியாக நகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்குவதற்கான பணியை தொடங்கினர்.
    குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக கூறி டி.எம்.சி. காலனி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் டி.எம்.சி. காலனியில் நூற்றுக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குழாயில் வரும் குடிநீருடன் அடிக்கடி சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நீரையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்றும் குடிநீர் குழாயில் வந்த குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று இரவு திடீரென திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் இதுபோல அடிக்கடி சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை.

    இதனால் கொசுப்புழுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. எங்கள் பகுதியில் பெரும்பாலானவர்கள் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் எங்கள் பகுதியை சுகாதாரமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரமான குடிநீர், சுத்தமான சாக்கடை வசதிகளை செய்து தரவில்லை என்றால் நாங்கள் மாநகராட்சி துப்புரவு பணியில் ஈடுபடாமல் வேலை நிறுத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    வன்னியன்விடுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள மின்மாற்றிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வன்னியன்விடுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டும், பழுதான மின்மாற்றிகளை சரிசெய்யகோரியும் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன், ஆலங்குடி மேற்கு மின்வாரிய பொறியாளர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் மின்மாற்றிகளை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணமான ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பி கொடுக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு அன்றே பணப்பலனை முழுமையாக வழங்க வேண்டும். 2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். ரிசர்வ் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். விடுப்பு சம்பளம், டி.ஏ. நிலுவையை உடனே வழங்க வேண்டும். அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கிளை முன்பு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் துணை தலைவர் சிங்கராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் கிளை செயலாளர் நடராஜ், அம்பேத்கர் தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் கலியபெருமாள் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். #ADMK #CVShanmugam #KCPalanisamy
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு இணைந்தது. அப்போது, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

    இந்த திருத்தத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி முடிவெடுக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கே.சி.பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்பதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  #ADMK #CVShanmugam #KCPalanisamy

    ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் இங்கு தெருவிளக்குகள் எரியவில்லை, குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் திடீரென அந்த பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலாரகு, மணிமேகலை, முன்னாள் கவுன்சிலர்கள் பாத்திமாவாசு, கல்பனாஆனந்த், ஊராட்சி செயலாளர்கள் விஜயகுமார், அருண்குமார் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    மேலும் திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு சென்ற செய்யாறு உதவி திட்ட அலுவலர் அரிகரன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.பாண்டியன் ஆகியோர் மாலையில் பையூருக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இங்கு கடந்த மாதம் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் வேறு பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில தினங்களுக்கு முன்பு கூட தெருவிளக்குகள் மாற்றப்பட்டது. ஆனால் சில சமூக விரோதிகள் மின்விளக்குகளை சேதப்படுத்தி உள்ளனர். உடனடியாக குப்பைகளை அகற்றியும், தெருவிளக்குகள் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். 
    சீரான குடிநீர் வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி ஈச்சம்பட்டியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

    கல்குறிச்சி ஈச்சம்பட்டியில் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உதவும் மின்மோட்டார்கள் பழுதாகி விட்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. காவிரி குடிநீரும் வாரத்திற்கு ஒருமுறை மிக குறைவான அளவே வருகிறது. எனவே குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு அறிவுறுத்தி, பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் கந்தம்பாளையம் அருகே உள்ள வானக்காரன்பாளையம் ராமதேவம் கிராமத்தை சேர்ந்த பெண்களும் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

    ராமதேவம் கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மின்மோட்டார் பழுதாகி விட்டதால் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. காவிரி குடிநீரும் வாரம் ஒருமுறை மிக குறைவான அளவே வருகிறது. இதனால் குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சீரான குடிநீர் வழங்கக்கோரி இரு கிராமங்களை சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
    சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக அளித்தனர். அதன்படி ஊட்டி மஞ்சனக்கொரை ஜல்லிகுழி பகுதி பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    ஜல்லிகுழி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பொதுமக்களுக்கு சரிவர வினியோகம் செய்யப்பட வில்லை. 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்கள் வேலைக்கு சென்ற பின்னர் குடிநீர் விடப்படுவதால், அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் குடிநீர் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் வெளியில் செல்ல முடிவது இல்லை. மேலும் தடுப்புச்சுவர் அமைத்து கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஊட்டி பிங்கர்போஸ்ட் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் குடியிருப்பை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பிங்கர்போஸ்ட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு அலுவலர்கள் பலர் வசித்து வருகிறோம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு வளாகத்துக்குள் ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. அவை குடியிருப்பின் முன்பகுதியில் அசுத்தம் செய்து விடுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் கொசு உற்பத்தியாகி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகளை பிடித்து செல்லவோ அல்லது வளாகத்துக்குள் கட்டாமல் இருக்கவோ வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும் குடியிருப்பை சுற்றி கால்நடைகள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 213 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், முள்ளிகூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த அய்யப்பன் என்பவரின் மனைவி பீனாவிற்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 23 உலமாக்களுக்கு அடையாள அட்டைகள், தாட்கோ மூலம் ரூ.33 லட்சத்து 32 ஆயிரத்து 385 மதிப்பில் ரூ.15 லட்சத்து 58 ஆயிரத்து 332 மானியத்துடன் கூடிய சுற்றுலா வாகனங்கள் பழங்குடியினர் 4 பேருக்கு வழங்கப்பட்டது.
    ×