என் மலர்
நீங்கள் தேடியது "மோடி அரசு"
- தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதியை குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீக நிதி ஒதுக்கீடு.
- தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை அண்ணாமலை ஏற்பாரா? என மக்கள் கேள்வி.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, அண்மையில் காசியில் தமிழ் சங்கம் விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கபட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய மத்திய அரசு, தமிழ்மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.
குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை மந்திரி அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா? எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா? என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர். தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடி அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ்மொழிக்கு பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
- கடந்த 10 ஆண்டில் நடந்த சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை இன்று ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும். 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி தொடங்க உள்ள 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால அநியாயங்களை முன்னிலைப்படுத்தும். இந்த யாத்திரை தேர்தலுக்கானது அல்ல. இது கொள்கை ரீதியிலானது.
'அமிர்த காலம்' குறித்த கனவுகளை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார். ஆனால் கடந்த 10 வருடங்களின் உண்மை நிலவரம் என்ன? அது ஓர் அநியாய காலம்.
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். இது ராகுல் காந்தியின் முந்தைய யாத்திரையைப் போல் மாற்றத்தை நிகழ்த்தும் யாத்திரையாக இருக்கும் என தெரிவித்தார்.
- உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது- மத்திய அரசு.
- மன்மோசன் சிங் ஆட்சி கால பொருளாதர சூழ்நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல்.
பொருளாதார வளர்ச்சி என்பது விவசாயத்திலிருந்து தொழில் நிறுவனங்கள், சேவைகள் வரை வேலைவாய்ப்பைப் பன்முகப்படுத்துவதாகும். இதைத்தான் உலக நாடுகள் செய்து வருகிறது. இதுவரை நாமும் பின்பற்றி வருகிறோம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அடைந்த முன்னேற்றம், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பின்னோக்கி செல்கிறது. தற்போதைய ஆட்சியின் "தவறான நிர்வாகம்" பொருளாதார மாற்றத்தை 20 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
விவசாயப் பணிகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 2004-05-ம் ஆண்டை காட்டிலும், 2017-2018-ம் ஆண்டில் 6.7 கோடியாக சரிந்துள்ளது. விவசாயத்துறையில் உள்ள சம்பளத்தை விட உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் கவர்ச்சிகரமான சம்பளம் கிடைப்பதால் அந்தத் துறைகளை பணியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இந்தியாவின் மாற்றத்தில் இதுதான் மோடி அரசின் மிகப்பெரிய வரலாற்று சாதனை என ஜெய்ராம் ரமேஷ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உலக பொருளாதாரத்தில் இந்தியா சவால் விடும் நாடாக மாறி வருகிறது. தற்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3-வது இடத்திற்கு கொண்டு வருவதுதான் எங்களது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கை குறித்து மோடி அரசு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டது.
- படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 15பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரெயில் விபத்துக்கள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் அலட்சியப் போக்கின் நேரடி விளைவாகும். இதனால் தினசரி பயணிகளின் உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்படுகிறது.
இன்றைய விபத்து இந்த உண்மைக்கு மற்றொரு உதாரணம் - பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த அப்பட்டமான அலட்சியத்தை தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசை பொறுப்பேற்க வைப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கமிட்டியில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவ சேனா, லோக் ஜனசக்தி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராம்.
மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியை அமைத்துள்ளது.
இந்த கமிட்டியில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவ சேனா, லோக் ஜனசக்தி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராம், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், ஹெச்.டி. குமாரசுவாமி இடம் பிடித்துள்ளனர்.
அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியில் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா, கிஞ்ஜரபு ராம் மோகன் நாயுடு, ஜித்தன் ராம் மாஞ்சி, சர்பனந்தா ஸ்னோவால், பூபேந்தர் யாதவ், அன்னபூர்னா தேவி, கிரண் ரிஜிஜு, கிஷன் ரெட்டி இடம பிடித்துள்ளனர்.
பாராளுமன்ற விவகாரத்துக்கான கேமினட் கமிட்டியில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜிவ் ரஞ்சன் சிங், நாயுடு, ரிஜிஜு, வீரேந்திர குமார், ஜூயல் ஓரம், சிஆர் பாட்டில் இடம் பிடித்துள்ளனர்.
- பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே மொத்த உற்பத்தி.
- அநீதியான வரிவிதிப்பை நீக்குங்கள், ஏகபோகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்.
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திaல் கூறியிருப்பதாவது:-
மோடி அரசின் கீழ் மொத்தமாக ஏதாவது உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் அது பொருளாதார தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டுமே.
அநீதியான வரிவிதிப்பை நீக்குங்கள், ஏகபோகத்தை ஒழிக்கவும், வங்கிகளுக்கான கதவுகளைத் திறக்கவும், திறமையாளர்களுக்கு உரிமைகளை வழங்கவும்... அப்போதுதான் வலுவான இந்தியா, பொருளாதாரம், வேலைவாய்ப்பை கட்டமுடியும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:-
நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு பிரச்சினை கவலை அளிக்கிறது. இதை ஒரு பிரச்சினையாக பிரதமர் நரேந்திர மோடி கருதவில்லை. இதை ஏற்க மோடி அரசு மறுக்கிறது.

முதலில் நம்முடைய தவறை உணர வேண்டும். அதன் பிறகு அதை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். இதை தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
ரபேல் விவகாரம், ஊழல், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து என்னிடம் நேரடியாக விவாதிக்க மோடிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் என்னிடம் விவாதிக்க தயாராக இல்லை. நான் மேற்கொண்ட இந்த முயற்சி போல உங்களிடம் மோடி நேரடியாக கலந்துரையாட தயாராக இருப்பாரா? உங்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக உள்ளாரா? என தெரியவில்லை.
வேலையின்மை பிரச்சினை குறித்து உங்களிடம் மோடி விவாதிக்க வேண்டும். அவருடைய பார்வையில் பேசுவதை கைவிட்டு, உங்களின் பேச்சை அவர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
மாணவர்களின் கல்விக்காக மாநில அரசுகள் அதிகம் செலவிட வேண்டும். பட்ஜெட்டில் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு அளிக்காது. நாட்டின் வளம் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக புலவாமா தாக்குதலில் இறந்த துணை ராணுவ படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டுவலசில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியின்போது கிராமப்புற விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. மோடி ஆட்சியில் அந்த திட்டத்தை சரிவர அமல்படுத்துவதில்லை. வேலை செய்த விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு பலநாட்கள் சம்பளம் வழங்குவதுமில்லை.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, தேர்தலை சந்தித்தபோது ஜவுளி தொழிலுக்கு விதிக்கப்பட்டு இருந்த சென்வாட் வரியை முற்றிலுமாக நீக்குவோம் என்றோம். நாங்கள் வெற்றி பெற்றவுடன், அந்த துறைக்கு நான் மத்திய மந்திரியாக இருந்தபோது முழுமையாக நீக்கினோம். அதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்ற உத்தரவாதத்தை ராகுல்காந்தி கூறி உள்ளார்.

இந்தியாவின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தியின் மறு உருவமாக அவரது பேத்தி பிரியங்கா காந்தி வந்துள்ளார். அவரது வருகையால் மத்தியில் ஆளும் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது. பிரியங்கா காந்தி நிச்சயம் ஈரோடு வருவார். நீங்கள் வரவேற்க தயாராக வேண்டும்.
ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு உங்கள் வாக்கினை செலுத்த வேண்டும். மத்தியில் பிரதமராக ராகுல் வரவேண்டும். மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். நல்லாட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #EVKSElangovan #PriyankaGandhi #PMModi
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அதில் ரூ.1.50 மத்திய கலால் வரியில் குறைப்பதாகவும் மீதமுள்ள ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமாறும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் பத்து ரூபாய் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது பங்கிலிருந்து ரூ1.50 குறைப்பதாக சொல்வது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆடப்படும் மோசடி நாடகம்.
கர்நாடகா தேர்தலின் போது ஒரு மாதத்துக்கும் மேல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துவிட்டு தேர்தல் முடிந்ததும் ஒரேயடியாக பாஜக அரசு உயர்த்தியது. அந்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயராமல் இருக்கும் போது மக்களிடம் அநியாய வரிவிதிப்பின் மூலம் மோடி அரசு பகல் கொள்ளை அடிக்கிறது.
ஏழை-எளிய மக்களிடம் வரி என்ற பெயரில் வழிப்பறி செய்து கார்ப்பரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடி செய்ய அதைப் பயன்படுத்துகிறது. கடந்த 4 ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில் 3.16லட்சம் கோடி கடன்கள் கார்ப்பரேட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் கொள்கையைக் கைவிட்டு சர்வதேச விலைக்கு ஏற்றபடி அவ்வப்போது அரசாங்கமே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #PetrolDieselPrice
மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டம் சேவாகிராமத்தில் உள்ள மகாதேவ் பவனில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. 1942-ம் ஆண்டு, மகாத்மா காந்தி அங்கு காரிய கமிட்டி கூட்டத்தை நடத்தினார். அதன்பிறகு இப்போதுதான் அங்கு இக்கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய சிந்தனைக்கும், அதன் ஆன்மாவுக்கும், உடலுக்கும் மகாத்மா காந்தி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை எழுப்பினார். அது, வெறும் கோஷம் அல்ல, நமது வாழ்க்கை முறை.
நரேந்திர மோடி அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக உள்ளது. வெறுப்பு, வன்முறை, பழிவாங்குதல், அச்சுறுத்தல், பிரித்தாளுதல், ஆரோக்கியமான விவாதத்தையும், மாற்றுக்கருத்தையும் நசுக்குதல் ஆகியவை கலந்த அரசியலை நடத்தி வருகிறது. அந்த அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
காந்தியையும், அவரது சிந்தனைகளையும் சீர்குலைத்தவர்கள், இப்போது காந்தியின் சீடர்கள் போல் வேடம் போடுகிறார்கள். அவர்கள், காந்தியின் மூக்குக்கண்ணாடியை விளம்பர பிரசாரத்துக்காக வாங்கலாம். ஆனால், அவர்களின் இட்டை வேடத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்.
டெல்லிக்கு சென்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி அதிகார போதையில் மிதக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் சேவாகிராமிலேயே நேற்று மதிய உணவு சாப்பிட்டனர். தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை, அவர்களே கழுவினர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னதாக, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களுடன் பாத யாத்திரை சென்றார். பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட சர்க்கஸ் மைதானம் வரை சென்றார். 50 நிமிட நேரம் நடந்து அந்த இடத்தை அடைந்தார்.
பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது:-
மகாத்மா காந்தி, நாட்டை ஒன்றுபடுத்தினார். ஆனால், மோடியோ நாட்டை பிளவுபடுத்துகிறார். ஒரு சமுதாயத்துடன் மற்றொன்றை மோத விடுகிறார். ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்த கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க வேண்டும்.
பணக்காரர்களின் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். #Congress #SecondFreedomStruggle #Modi #ModiGovernment #RahulGandhi
மத்தியபிரதேசத்தில் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்வகையில், 15 கி.மீ. தூரத்துக்கு வாகன பேரணியாக சென்று மக்களை சந்தித்தார். பின்னர், போபாலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், ராகுல் காந்தி பேசியதாவது:-
70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. இந்த திட்டம், பணக்காரர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க உதவியது. அதனால், 4 ஆண்டுகால மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் இதுதான்.
சிறு வணிகர்களின் கையில் உள்ள பணத்தை பறித்து 15 பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டில் போடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். 15 பெரு நிறுவனங்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை மோடி அரசு ரத்து செய்தது. ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடனை ஏன் ரத்து செய்யவில்லை?
லட்சங்களிலும், கோடிகளிலும் வாங்கப்பட்ட கடன்களை ‘வாராக்கடன்’ என்கிறார்கள். ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயியை ‘கடன் தவறியவர்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் களும் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இதுபோல் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்துள்ளோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #Demonestisation #Modi #RahulGandhi
டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு ராம்தேவ், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
மோடி அரசின் கொள்கைகளை ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். ஆனால் சில கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே இதை மோடி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும்.
இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மோடி அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.
நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி. வலுவான தேசியவாதியும் கூட. முக்கியமான பிரச்சினைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை.
2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவது இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அனைத்து கட்சிகளுடனும் நான் இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன்.
‘தூய்மை இந்தியா’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார். எனினும் அவரை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார். #Ramdev #FuelPriceHike