search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135129"

    ஈஞ்சம்பாக்கத்தில் வீடுகளை அகற்றுவதை கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரம் வீடுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சமீபத் தில் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. அப்போது முதலே அரசு அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி வீடுகளை அகற்ற முற்பட்டனர்.

    இந்த மாதத்திற்குள்ளாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது அங்குள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனால் பொங்கல் பண்டிகையை புறக்கணித்து விட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த பொங்கலை கருப்பு பொங்கலாக அனுசரித்தனர்.

    அரசு தங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் கருப்பு உடை அணிந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5 ஆண்டுகள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை உள்ள நிலையில் தங்கள் வீடுகளை அகற்றக்கூடாது என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தி.மு.க. எம்.எல்.ஏ, அரவிந்த் ரமேஷ் மற்றும் அ.ம.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
    திண்டுக்கல்:

    தை மாத பிறப்பை முன்னிட்டு நாளை தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தி வருகின்றனர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதற்காக மக்கள் கூட்டம் இன்று கடை வீதிகளில் அலைமோதியது.

    கரும்பு ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையானது. காலை முதலே பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

    பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அனைத்து பூக்களும் கடுமையாக விலை உயர்ந்தது.

    மல்லிகை கிலோ ரூ.3000 வரை விற்பனையானது. செவ்வந்தி ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், வெள்ளை செவ்வந்தி ரூ.200, முல்லைப்பூ ரூ.2200, ஜாதிப்பூ ரூ.1800, வெள்ளை ஜாதி ரூ.2000 சம்பங்கி ரூ.400 என அனைத்து பூக்களும் விலை அதிகமாக விற்றது. மலர்கள் கொண்டு மாலைகள் தயாரிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    பிளாஸ்டிக் தடை காரணமாக தற்போது பெரும்பாலான ஓட்டல்கள், டீக்கடைகளில் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாழை இலையும் கடுமையாக விலை உயர்ந்தது.

    கிழிந்த இலைகளை கூட ஒன்று சேர்த்து சிறிய ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்துவதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

    பெரிய இலைகள் குறைந்தது ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையானது. இதனால் வாழை இலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. #Bhogi #BhogiCelebration #Pongal2019 #Bhogifestival
    சென்னை:

    மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

    அவ்வகையில் இந்த ஆண்டின் போகிப் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் பழைய பொருட்களை சேகரித்து தங்கள் வீடுகளின் முன்பு எரித்தனர்.



    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் சென்னையில் போகி பண்டிகையை கொண்டாடினார்.

    ஆனால், காற்றை மாசுபடுத்தும் வகையில் போகியை கொண்டாடக் கூடாது என்பதில் பொதுமக்களும் கவனமாக இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, ஒருசில பொருட்கள் மற்றும் தேவையற்ற மட்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை கொண்டாடியதை காண முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிய அளவில் நெருப்பு மூட்டி போகியை கொண்டாடினர்.

    ஏற்கனவே அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் போகி புகையும் இணைந்ததால், பெருநகரங்களில் காலை வேளையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. சென்னையின் பல்வேறு இடங்கள் புகை மண்டலங்களாக காட்சியளித்தன. பனி மூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. காற்றின் தரத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து ஆய்வு செய்தது.  #Bhogi #BhogiCelebration #Pongal2019 #Bhogifestival
    தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த இள்ளலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்க போராடுவதற்காக தி.மு.க. தமிழ்நாடெங்கும் இந்த ஊராட்சிசபை கூட்டத்தின் மூலம் மக்களை நேரிடையாக சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி ஆட்சிக்கு மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி வருகிறது. இரண்டையும் அகற்றுவதுதான் நீங்கள் வைக்கப்போகும் முற்றுப் புள்ளி. அதற்கு மாற்றாக தி.மு.க. ஆட்சிக்குவர நீங்கள் செலுத்தும் வாக்குதான் நாட்டில் நல்லது நடப்பதற்கான தொடக்கப்புள்ளி.

    மக்களை நேரிடையாக சந்திக்க தி.மு.க.வைத்தவிர எந்தக்கட்சியாலும் முடியாது. தி.மு.க. ஆட்சியில் இங்கு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாகி பயனடைந்தனர். ஆனால் இன்று வேலைவாய்ப்பு இல்லாமை தலைவிரித்தாடுகிறது. தொழிற்சாலைகள் தொடங்க கமி‌ஷன் கேட்பதால் பல நிறுவன முதலாளிகள் இங்கு வர பயப்படுகின்றனர். அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

    ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது அமைச்சர்களோ மற்றும் நிர்வாகிகளோ பார்க்கவில்லை அவருடைய உடல்நிலைகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் கலைஞர் மருத்துவ மனையில் இருந்தபோது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து அவரை பார்த்தனர். அதுவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்த கட்சி அமைச்சர் ஒருவரே சொல்லியிருக்கிறார்.

    மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களுக்கும், இங்கு வந்துள்ள பெண்களுக்கும் நம்பிக்கை உள்ளது. இன்னும் 4 மாதத்தில் வரப்போகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது என மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சிதேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு தி.மு.க. தான் காரணம் என அ.தி.மு.க. சார்பில் பரப்பப்படுகிறது. உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ளாட்சிதேர்தலை நடத்தவேண்டும் என்றுதான் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தோம். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றினார்கள்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, தலைநிமிர்ந்து நிற்க எண்ணற்ற மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடன் வழங்கப்பட்டது நானே முன்னின்று வழங்கியுள்ளேன். பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மூலம் நுழைய முயற்சி செய்கிறது. மத்தியில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதுபற்றி சட்டமன்றத்திலும் தெரிவித்தோம். ஆனால் அ.தி.மு.க. கபடநாடகம் ஆடுகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடும் 7 பேரை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என்ன ஆனது. ஆனால் தர்மபுரி பஸ் எரிப்பில் தண்டனைக்குள்ளானவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மத்திய மாநிலத்தில் உள்ள இந்த 2 கட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து தி.மு.க. ஆட்சி மலர தொடக்கபுள்ளி வைக்க வேண்டும்.

    ஊராட்சிசபை கூட்டத்தில் பேசிய அனைவரும் தங்கள் பகுதிக்கு பஸ்வசதி, மருத்துவமனை, புதிய பள்ளிக் கட்டிடம், சாலை வசதி, குடிநீர் மற்றும் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டனர்.

    முன்னதாக அங்கு நிறுவப்பட்ட புதிய கொடிக் கம்பத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார். இதில் காஞ்சி வடக்கு மாவட்டசெயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றியசெயலாளர்கள் இதயவர்மன், சேகர், படப்பை மனோகரன், நகரசெயலாளர் தேவராஜ், மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #MKStalin #DMK

    2019-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியை புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடியும் ஆலயங்களில் வழிபாடுகள் செய்தும் இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். #2019NewYear #NewYearCelebration
    சென்னை:

    உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாக ஆங்கில புத்தாண்டு விளங்கி வருகிறது. பரந்து, விரிந்த இந்த பூமிப்பந்தில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கால மண்டலத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது வாணவெடிகள் வெடித்து, ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

    அவ்வகையில், பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலிசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.
     
    இந்நிலையில், (இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

    நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக இந்திய நேரப்படி நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    சரியாக 12 மணி அடித்ததும் நாட்டின் பல முக்கிய பெருநகரங்களில் புத்தாண்டு விழா களைகட்டியது. கடற்கரைகள், பூங்காக்கள், முக்கிய சாலைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மகிழ்ச்சி கேளிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

    குறிப்பாக, சென்னையில் அண்ணா சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எட்வர்ட் எலியட்ஸ் பீச் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.

    அதைதொடர்ந்து, இன்று அதிகாலையில் இருந்தே கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய கோவில்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை, பூஜைகளை செய்து இந்த புத்தாண்டு இனிதாக, வளமாக அமைய தெய்வங்களை வேண்டிக்கொண்டனர்.



    உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்து மக்கள் கங்கை நதியில் புனித நீராடி, பூஜை புனஸ்காரங்கள் செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் தடாகத்தில் சீக்கிய மக்களும் புனித நீராடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதேபோல், ஜைன மதத்தை சேர்ந்தவர்களும் இனிப்புகளை பரிமாறி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு இனிதாகவும், சிறப்பாகவும் அமைய ‘மாலைமலர் டாட்காம்’ வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! #2019NewYear #NewYearCelebration
     
    மத்திய குழு வருகையால் 9 நாட்களுக்கு பிறகு வடகாடு பகுதி மக்கள் மின் விளக்கு வெளிச்சத்தை கண்டனர். அப்போது அவர்கள் பகலில் வந்து ஆய்வு நடத்தும்படி கண்ணீர் மல்க வேண்டினர். #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடகாடும் ஒன்று. மின் கம்பங்கள், மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இந்த பகுதி மக்கள் கடந்த 9 நாட்களாக இருளில் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு மத்திய குழுவினர் வடகாடு பரமன் நகரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்தனர். புயலால் சரிந்து இருளில் விழுந்து கிடந்த மரங்களை அவர்கள் பார்வையிடும் விதமாக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு மின் விளக்குகள் எரிந்தன.

    இதனால் 9 நாட்களுக்கு பிறகு அப்பகுதி மக்கள் வெளிச்சத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    மத்திய குழுவினர் அங்கு புயலால் சேதம் அடைந்த மரங்கள், வீடுகளை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் மத்திய குழுவினரிடம், “எங்கள் வீடு, தென்னை மரங்கள் என்று எல்லாவற்றையும் இழந்து விட்டோம். எங்கள் வாழ்வாதாரமே அழிந்து போய் விட்டது. நீங்கள் தான் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும். இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஒரு வாரமாக ரோட்டில்தான் நிற்கிறோம். நீங்கள் வந்ததால்தான் எங்களுக்கு வெளிச்சமே வந்துள்ளது. எங்களுக்கு தண்ணீர் மட்டும்தான் தருகிறார்கள். ஆய்வு பணியை செய்ய பகலில் வாருங்கள்” என கண்ணீர் மல்க வேண்டினர்.

    பெண்களில் பலர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கோரிக்கைகளை மத்திய குழுவினர் கருணையுடன் கேட்டு விட்டு அடுத்த இடத்தை பார்வையிட கிளம்பினர். குழு செல்லும் வழி நெடுக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    வீடு வாசல், தோட்டம், துரவுகளை இழந்து தவிக்கும் வேதனையில் யாராவது ஆவேசப்பட்டு அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் அதை தடுப்பதற்காக சாலை ஓரங்களில் கயிறு கட்டி பொதுமக்களை அதனை தாண்ட விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர். இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மத்திய குழுவினரிடம் நேரில் தங்களது ஆதங்கத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் போனது. #GajaCyclone #CentralCommittee
    கஜா புயல் தாக்கிய பிறகு டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. #GajaCyclone #DeltaDistricts
    சென்னை:

    தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட மக்களை கதற வைத்த கஜா புயலின் சோகம் இன்னும் தீரவில்லை.

    ஒரே நாளில் மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்து விட்ட கஜா புயல், ஒரு வாரம் ஆகியும் மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டுள்ளது.



    4 மாவட்டங்களிலும் சுமார் 50 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதில் சுமார் 40 லட்சம் தென்னை மரங்களாகும். இதனால் தென்னையை நம்பி வாழ்ந்து வந்தவர்கள் வாழ்க்கை தலைகீழாக புரண்டுள்ளது. இதே போல மா, பலா மரங்களை வளர்த்து வந்தவர்களின் நிலையும் பரிதவிப்புக்குள்ளாகி இருக்கிறது.

    நெற்பயிர்கள் மற்றும் வாழையை இழந்துள்ள விவசாயிகள், 1200 படகுகளை இழந்துள்ள மீனவர்களுக்கும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை சமாளித்து டெல்டா மாவட்ட மக்கள் எப்படி மீண்டு வரப்போகிறார்கள் என்ற வேதனையும், கேள்விக்குறியும் தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது.

    வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள சுமார் 2 லட்சம் பேர் 650-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். தங்கள் கிராமங்களில் இயல்பு நிலை திரும்பாததால் அவர்கள் தொடர்ந்து முகாம்களையே நம்பி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரமாக டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தவிப்புக்கிடையே உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதும் மக்களுக்கு கடும் சவாலாக உள்ளது.

    அமைச்சர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். சுமார் 3 லட்சம் பேர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் 4 மாவட்டங்களில் அனைத்து ஊர்களையும் கஜா புயல் புரட்டிப் போட்டு இருப்பதால் நிவாரணப் பணிகளை திட்டமிட்டப்படி செய்து முடிக்க இயலவில்லை. தடைகளை கடந்தே நிவாரணப் பணிகளை செய்ய வேண்டியதுள்ளது. இதனால் நிவாரண பணிகள் மந்தமான நிலையில் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கஜா புயல் தாக்கப் போவதற்கு முன்பு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்திருந்த தமிழக அரசு, அந்த புயல் இந்த அளவுக்கு மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி விடும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்டா மாவட்ட மக்களும் தங்களை புயல் புரட்டி போட்டு விடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதனால் புயல் தாக்கும் பட்சத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் மிக, மிக குறைவாகவே இருந்தது.

    குறிப்பாக டெல்டா மாவட்ட கிராமங்களில் கஜா புயலை நினைத்து மக்கள் பயப்படாமல் இருந்தனர். அந்த கிராமங்களுக்குள் நுழையக் கூட முடியாத அளவுக்கு சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப் பகுதிகளை நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் இன்னமும் சிரமம் நீடிக்கிறது.

    சரிந்து விழுந்துள்ள மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்களை முழுமையாக அகற்றினால்தான் நிவாரணப் பொருட்களை கிராமங்களுக்குள் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் உணவு மற்றும் குடிநீருடன் டெல்டா பகுதிக்கு செல்லும் தன்னார்வத் தொண்டர்கள் நடந்தே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

    பெரும்பாலான இடங்களில் இடிந்த வீடுகள், சரிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றினால், நிவாரண உதவி கிடைக்காமல் போய் விடும் என்ற தவறான வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அத்தகைய ஊர் மக்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்து மரங்கள், இடிந்த வீடுகளை அகற்றி வருகிறார்கள். மரங்களை அகற்றும் உபகரணங்கள் குறைவாக இருப்பதும் நிவாரண பணிகள் தாமதமாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

    வேரோடு சாய்ந்த 2.17 லட்சம் மரங்களில் நேற்று வரை 91 ஆயிரத்து 960 மரங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. சரிந்து விழுந்த 1.03 லட்சம் மின் கம்பங்களில் 13 ஆயிரத்து 848 மின் கம்பங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. இவை முழுமையாக அகற்றப்பட்டால்தான் நிவாரணப் பணிகளை 100 சத வீதம் விரைவாக செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

    இதற்கிடையே கஜா புயல் சேத விபரங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வரும் அதிகாரிகள் மூலம் தினமும் அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. புயல் சீற்றத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சரிந்த மரங்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. இன்னமும் கணக்கெடுப்பு முடியவில்லை.

    இந்த நிலையில் வீடுகளை இழந்து தவிப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை புயல் தாக்கிய பிறகு முதல் 2 நாட்களில் சுமார் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது.

    நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தகவலில், புயலுக்கு 1½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று, டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.

    வீடுகளை இழந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் முகாம்களில் தங்கி உணவு பெற்று அரசின் பல்வேறு உதவிகளையும் பெற்று வருகிறார்கள். மற்ற 60 சதவீதம் பேர் அதாவது சுமார் 2½ லட்சம் பேர் வீடுகளை இழந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உதவியை எதிர்பார்க்காமல் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் திட்டங்களில் 6955 திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதில் 6204 குடிநீர் திட்டங்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் சப்ளை தொடங்கி உள்ளது.

    அரிசி, கோதுமை மற்றும் உணவுப் பொருட்களும் தேவைக்கு ஏற்ப டெல்டா மாவட்ட பகுதிகளில் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலும் அதிகமாக அனுப்பப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடக்கிறது.

    ஆனால் இந்த நிவாரணப் பொருட்கள் கிராம மக்களிடம் விரைவாக, தினமும் சென்று சேரவில்லை என மனக்குறை 70 சதவீத மக்களிடம் உள்ளது. மின்சாரம் இல்லாததும் மக்களிடம் குமுறலை அதிகப்படுத்தி உள்ளது.

    மின்சாரம் தங்கு தடையின்றி கிடைத்து, உணவு பொருட்கள் சப்ளையும் சீராகி விட்டால் டெல்டா மக்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும். ஆனால் அந்த சுமூக நிலை திரும்ப எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. #GajaCyclone #DeltaDistricts
    டெல்லியில் திறக்கப்பட்ட புதிய சிக்னேச்சர் பாலத்தில் செல்லும் பலர் தங்கள் உயிரை பணயம் வைத்து வாகனங்களில் சென்றபடி செல்பி எடுக்கின்றனர். #DelhiSignatureBridge #SelfieSpots
    புதுடெல்லி:

    டெல்லியில் யமுனை ஆற்றின் நடுவே பிரமாண்டமாக கட்டப்பட்ட சிக்னேச்சர் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் தற்போது செல்பி மையமாக மாறி உள்ளது. பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பலர் தங்களை விதவிதமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர். பாலத்தையும் பல்வேறு கோணங்களில் படம்பிடிக்கின்றனர்.



    சிலர் ஆர்வக்கோளாறில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டியபடியும், கார்களின் ஜன்னல்களில் ஏறி அமர்ந்தபடியும் செல்பி எடுப்பதை காண முடிகிறது.

    1518 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் டெல்லியின் புதிய அடையாளமாக மாறி உள்ளது. பாலத்தின் உச்சியில் பிரமாண்ட கண்ணாடி பெட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பெட்டியில் இருந்து பார்த்தால் நகரின் முழு அழகையும் காண முடியும். இதற்காக லிப்டுகள் மூலம் சுற்றுலாப் பயணிகள், அந்த பெட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். செல்பி எடுப்பதற்கும் இந்த பாலத்தில் தனியாக இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. #DelhiSignatureBridge #SelfieSpots
    பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் போரின் மூலம் கிளர்ச்சியாளர்கள் உட்பட இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    வாஷிங்டன்:

    2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக செயல்பட்டது.

    இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்திய அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மக்கள் நல நிறுவனமான வாட்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு போர் நடவடிக்கை மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் முதல் 5 லட்சத்து 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.



    கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர், ராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆய்வில் அடங்குவர் என்றும், மிக துல்லியமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது எனவும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 272 முதல் 2 லட்சத்து 04 ஆயிரத்து 575 பொதுமக்கள் இந்த போர் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அதேபோல், 38 ஆயிரத்து 480 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானிலும், 23 ஆயிரத்து 372 மக்கள் பாகிஸ்தானிலும் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.



    இதையடுத்து, தூத்துக்குடிக்கு வந்தடைந்த அந்த ஆய்வுக்குழு ஆலையை ஆய்வு செய்தது. பின்னர் இன்று அப்பகுதி மக்களிடம் கருத்துக்கள் அடங்கிய மனுக்களை பெற்றது. ஆலைக்கு ஆதரவு அளிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்நிலையில், மக்களின் மனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருண் அகர்வால், மக்களிடம் கருத்துகள் அடங்கிய மனுக்களை பெற்றுவிட்டதாகவும், மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    தேவைப்பாட்டால் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் எனவும், மக்கள் பெரும்பாலானோர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாகவும் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் ஆய்வை முடித்த ஆய்வுக்குழு நாளை சென்னை திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ThoothukudiSterlite
    பவானி ஆற்று தண்ணீரின் வேகம் குறைந்திருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் கொட்டிய மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருந்தது.

    இதனால் அணை கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிரம்பியது. வரலாறு காணாத வகையில் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் சீற்றம் ஏற்பட்டது. சத்தியமங்கலம், கோபி, கொடிவேரி, அரசூர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பவானி கரையோரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

    இதனால் வெள்ளத்தால் பாதுகாப்பான இடத்துக்கு சென்ற மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். தண்ணீர் வீட்டுக்குள் புகுந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் யாவும் நனைந்து விட்டது. நேற்று முதல் இந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்கள் காய வைத்து வருகிறார்கள்.

    மேலும் பல வீடுகளில் மாணவ-மாணவிகளின் புத்தகப் பைகளும், நோட்டு புத்தகங்களும் முழுவதும் நனைந்து விட்டன. இதையும் மாணவர்கள் காய வைத்து வருகிறார்கள்.

    எனவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

    70 ஆயிரம், 50 ஆயிரம், 40 ஆயிரம் கன அடி தண்ணீர் என பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை 12700 ஆயிரம் கன அடி வீதம் மட்டும் திறந்து விடப்பட்டது.

    ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைந்தாலும் பவானி கரையோரப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெரும் நிலையில் இருக்கும் இம்ரான் கான் சீனாவை முன்மாதிரியாக கொண்டு மக்கள் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். #PakistanElections2018 #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 4 மாகாண சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரையில், இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் உள்ளது. இதுவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி மூலம் இம்ரான் கான் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.



    இந்நிலையில், தனது வெற்றி குறித்து பேசிய இம்ரான் கான், வாக்களித்த பாகிஸ்தான் மக்களுக்கும், தனது 22 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு இந்த வெற்றியை தந்த இறைவனுக்கும்  நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர தாம் பார்த்துள்ளதாகவும், ஆனால் தற்போது பாகிஸ்தான் முற்றிலும் சீரழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் மக்கள் நல அரசை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழில் செய்வதற்கு உகந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சீனா தனது 70 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதை சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானை முன்னேற்றுவதில் சீனாவை முன்மாதிரியாக கொண்டு பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  #PakistanElections2018 #ImranKhan
    ×