என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல்"

    • கரகாட்டம், காவடி, வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது.
    • பொங்கல் விழாவை, நொய்யல் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரின் மையப் பகுதியாக நொய்யல் நதி அமைந்துள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் விழாவை ஊர் மக்கள் கூடி நடத்தும் திருவிழாவாக நொய்யல் ஆற்றின் கரையில் நடத்த, திருப்பூர் நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து ஆலோசனை மற்றும் விழாக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. வருகிற ஜனவரி 14, 15-ந் தேதிகளில், இந்த அமைப்பு சார்பில், பொங்கல் விழாவை, நொய்யல் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதில், தமிழர்களின் கலைகளாக உள்ள பறையாட்டம், வள்ளி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், களரி, சிலம்பாட்டம், திருவண்ணாமலை பெரிய மேளர், தேவராட்டம், கரகாட்டம், காவடி, வழுக்கு மரம் ஏறுதல், நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது. 

    • வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.
    • வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அல்லது ரேசன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறது.

    சென்னை:

    பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 1000 ரூபாய் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்தது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது.

    இதில் உருண்டை வெல்லம் வழங்கியதில் பல இடங்களில் தரமான வெல்லம் வழங்கப்படாததால் புகார்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன.

    இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.

    வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அல்லது ரேசன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறது.

    ஏனென்றால் இந்த பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்க பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இதுவரை கொள்முதல் செய்ய தற்போது வரை டெண்டர் விடப்படவில்லை.

    இதன் காரணமாக இந்த ஆண்டு பண்டிகைக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் வழக்கமாக வழங்கப்படக்கூடிய பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பரிசுத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    • தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.
    • கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம. நாராயணன் தலைமையில் இன்று அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புது அரிசியை புது பானையில் பொங்கலிட புதுப்பானையும், அடுப்பும் ரேசன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசித்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தேவையான களிமண்ணை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.

    மண்பாண்ட தொழிற்பயிற்சி கல்லூரி ஒன்றை உருவாக்க வேண்டும்.

    கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 36 நலவாரியங்களை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இதில் சங்க நிர்வாகிகள் பாவலர் கணபதி, மகேஷ் கண்ணன், எஸ்.என்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பது பற்றி முடிவு செய்தனர்.
    • வருகிற 18-ந்தேதி (ஞாயிறு) பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ஜனதா உயர்மட்ட குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன், கரு.நாகராஜன் உள்பட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லி தலைமை வகுத்து கொடுத்த செயல்திட்டங்களை செயல்படுத்திய விபரம் பற்றி விவாதித்தனர்.

    மேலும் தொகுதி வாரியாக நிலவும் பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான அணுகுமுறைகள் பற்றியும் விவாதித்தனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிப்பது பற்றி முடிவு செய்தனர். வருகிற 18-ந்தேதி (ஞாயிறு) பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தைப்பொங்கல் பாரம்பரிய விழாவை விவசாய அணி, மகளிர் அணியினர் மண்டல் வாரியாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 1,300 மண்டலங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

    இதில் அந்த பகுதியில் உள்ள சமுதாய பெரியோர்களை அழைத்து கவுரவப்படுத்துதல், இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துதல், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவற்றுக்கு திட்டமிட்டுள்ளனர்.

    • 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை.
    • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்கு பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது.

    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்தப் பொருட்கள் தரமற்றவை என்றும், 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

    மொத்தத்தில், 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை என்றும், பயனடைந்தவை தனியார் நிறுவனங்கள்தான் என்றும், 1,200 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.

    அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வண்ணமும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும்.

    தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, அண்ணாநகர், கபிலக்குறிச்சி, பிலிக்கல் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பொன்மலர் பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், அய்யம்பாளை யம், வடகரையாத்தூர், தண்ணீர் பந்தல், சோழசிராமணி, மாரப்பம்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    இந்த கரும்புகளை விவசாயிகள், கபிலர்மலை ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆலைகளில் கரும்புகளை இயந்திரம் மூலம் சாரு பிழிந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை என தயாரிக்கின்றனர்.

    தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்கள் உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் இதை வாங்கி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட் டங்கள், பல்வேறு மாநிலங்களுக்கும் அனு ப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,150-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,270-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெல் லத்தை, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதி களில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.
    • திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.

    அதன்படி கடந்த 12-ந் தேதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு விரைவு பஸ்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி 13-ந்தேதி பயணம் செய்ய 10 ஆயிரம் பேரும், 12-ந்தேதிக்கு 4 ஆயிரம் பேரும், 14-ந்தேதிக்கு 1000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 800 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.

    திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு நடந்துள்ளது. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். முன்பதிவில் இணைக்கப்பட்டுள்ள விரைவு பஸ்கள் நிரம்பியவுடன் பிற போக்குவரத்து கழக பஸ்கள் இணைக்கப்படும்.

    தீபாவளியை போல பொங்கலுக்கு பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுங்கள்.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம்போல இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அமைச்சர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் மண்பானைகள், அடுப்புகள் ஆகியவை தயாரிக்கும் பணி குறிச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • மலேசியாவிற்கு அனுப்புவதற்காக 3 லிட்டர், 2.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் மண்பானைகள் தயாரித்துள்ளோம்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் மண் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பானைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வது மட்டுமின்றி மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஜி-20 மாநாடு அடுத்து ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பயன்படுத்துவதற்காக 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ்கள் தயாரிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தயாரிக்கும் பணியினை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்த மண்பாண்ட உற்பத்தி நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து அங்கு ஹாட்பாக்ஸ்கள் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.

    மேலும் அந்த ஹாட்பாக்ஸ்சில் மேல்புறத்தில் ஜி-20 2023 இந்தியா என்ற முத்திரையும், அதனை சுற்றியவாறு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் உள்ளிட்ட வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.

    இந்த பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து பணிகள் முடிந்து மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

    மேலும், அடுத்த மாதம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொங்கல் மண்பானைகள், அடுப்புகள் ஆகியவை தயாரிக்கும் பணி குறிச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஆயிரக்கணக்கான பானைகள் தயாரிக்கப்பட்டு அதற்கு வர்ணங்கள் பூசும் பணியும் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள முருகன் கூறியதாவது:-

    மலேசியாவில் பொங்கல் பண்டிகைக்கு 10 நாளைக்கு முன்னரே பொங்கல் சந்தை என்ற பெயரில் வியாபாரிகள் கூடுவார்கள். அந்த சந்தையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களும் விற்கப்படும்.

    இதற்காக நெல்லையில் ஆர்டர் பெற்று பொங்கல் பானை தயாரிக்கிறோம். மலேசியாவிற்கு அனுப்புவதற்காக 3 லிட்டர், 2.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் மண்பானைகள் தயாரித்துள்ளோம். இந்த பானைக்கு வர்ணம் பூசும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் மதுரையை சேர்ந்த கோவில் கோபுரங்களுக்கு பஞ்சவர்ணம் பூசும் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அடுத்த சில நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து பானைகள் கப்பலில் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு பானையின் விலை ரூ.150 க்கு வழங்குகிறோம். சமீபத்தில் கோவையில் உலக சாதனைக்காக 75 ஆயிரம் மண் ஹாட்பாக்ஸ்கள் தயாரித்து நெல்லையில் இருந்து 17 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

    அங்கு நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் அடுத்து ஆண்டு நடைபெறும் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டின்போது 2 லட்சம் மண் ஹாட்பாக்ஸ்கள் அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதற்காக மத்திய அரசும், மாநில அரசும் உதவுகிறது.

    இதேபோல் வழக்கமாக விற்பனை செய்வதற்காக மண் அடுப்புகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 3 அடுப்பு கட்டி செட் ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

    பெரிய பொங்கல் பானை, அதற்கான மூடி, மண்பானைகளும் தயார் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையின்போது புதுப்பானையில் பொங்கலிடுவார்கள் என்பதால் பெரிய அளவிலான மண்பானைகளுக்கு வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது.
    • அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது.

    கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. பணம் வழங்கப்படவில்லை

    அப்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது.

    இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரையுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை தெரிவித்த கருத்து முன் வைக்கப்பட்டது.

    ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் இன்னும் சில ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

    ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

    இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

    ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது.
    • கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை பதிலாளர்கள், கூடுதல் பதிலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. 33571 நியாய விலைக் கடைகளில் அரசு மூலம் வழங்கப்படும் பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.

    கே: பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது அறிவிக்கப்படும்?

    ப: அதுபற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது உண்மை. அதுபற்றிய முடிவை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். இந்த அறிவிப்பு வந்ததும் எங்களது துறை செயல் படுத்தும்.

    பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது. அப்போது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

    2011-க்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பொருட்கள் வழங்கப்பட்டாலும் இடையில் 1 வருடம் தர வில்லை. அதுமட்டுமல்ல இடையில் 4 ஆண்டுக்கு எதுவும் அவர்கள் வழங்கவில்லை.

    இப்போது தி.மு.க. ஆட்சியில் நாங்கள் வழங்குகிறோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் அவர் அறிவித்ததும் அதை செயல்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
    • அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் ரொக்கப் பணத்தை வழங்குகிறார்கள்.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டன.

    இந்த வருடம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.

    இதன் மூலம் 2 கோடியே 19 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்றும் இதற்காக அரசுக்கு சுமார் ரூ.2,356 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொது மக்களுக்கு வழங்குகிறார்கள்.

    பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நாளை (26-ந்தேதி) முதல் நடைபெறுகிறது.

    ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மூலம் ரேஷன் பொருட்களை பெற முடியும்.

    அது போல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்டுடன் கைரேகையும் பதிவு செய்ய வேண்டும்.

    ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு இந்த முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும்.

    பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே 2-ந்தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்குகிறது.

    13-ந்தேதி போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இவை வழங்கப்பட வேண்டும் என பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்கு ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வழக்கம் போல டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது.

    தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்ய திட்டமிடப்படுகிறது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில் பெற வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்படும்.

    பொங்கல் பரிசு தொகை பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக இதனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். அந்த நாளில் கடைகளில் நெரிசல் இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. வருகிற 27, 28-ந்தேதிகளில் வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.

    இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொங்கலுக்குள் அரசு அறிவித்துள்ள ரூ.1000 ரொக்கம் குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும். கையெழுத்து போட்டு பெற இயலாது. இதில் எவ்வித தவறுக்கும் இடம் அளிக்காமல் முறையாக பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    வெளியூர் சென்று இருந்தாலோ, வீடு பூட்டி இருந்தாலோ அவர்கள் ரொக்கப் பணம் பெற அவகாசம் கொடுக்கப்படும். குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் பணம், பொருட்களை பெற முடியாது.

    ரேஷன் கடை பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் பொங்கலுக்கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×