search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி"

    • சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் நிதியமைச்சரை சந்தித்தார்.
    • அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உணவக நிர்வாகம் விளக்கம் அளித்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், "செப்டம்பர் 11ல் நிதி அமைச்சர் உடனான உரையாடல் வைரல் ஆனதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் அவரை சந்தித்தார்

    இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு நன்றி

    தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். எங்களு ஆதரவு அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
    • அன்னபூர்ணா உணவக உரிமையாளருக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் கருணாஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், "நான் நாட்டிற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறேன். நான் உட்பட பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரி நாட்டு மக்களின் நலன்களுக்கு செலவிடப்படுவதில்லை. மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்.

    அன்னபூர்ணா முதலாளி சராசரி குடும்பத்தில் பிறந்து உழைத்து இந்த முன்னேறியுள்ளார்.நிதியமைச்சரிடம் அவர் பன்னுக்கு வரி இல்லை அதில் தடவுகிற ஜாமுக்கு 18% வரி போடுகிறீர்கள். இனிப்புக்கு ஒரு வரி காரத்துக்கு ஒரு வரி என குழப்பங்கள் இருப்பதாக கேட்கிறார். அவரை அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

    • உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
    • எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உள்ளூர் தொழில் அமைப்பினருடன் ஜி.எஸ்.டி சம்பந்தமாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய தமிழ் நாடு ஒட்டல்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசனிடம், உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இது சம்பந்தமாக சமூக ஊடகத்தின் மூலமாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.

    உண்மை நிலை இப்படி இருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக எதிர்க்கட்சிகள் உண்மை சம்பவத்தை மறைத்து தவறான அறிக்கைகள் கொடுப்பதும், சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை தவறாக சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. இதன் மூலம் தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய நிதியமைச்சகத்துக்கும், தொழில் அமைப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்த முயற்சிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

    எனவே ஜி.எஸ்.டி சம்பந்தமாக உள்ள நியாயமான கோரிக்கைகள் நிறைவேற அடித்தளமாக அமைந்த இந்த கூட்டத்தை அரசியல் கண்ணோட்டத்திற்காகப் புரிந்தும், புரியாமலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொகுசு எலெக்ட்ரிக் காருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி.
    • இரு சக்கர வாகனங்கள் கூட 28 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.

    கோவை கொடிசியாவில் கடந்த 11-ந்தேதி தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.

    அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்லை.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    கேள்வி கேட்டவரை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த செய்தி இந்தியா அளவில் தீயாக பரவி தேசிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் ஒரு படத்தை வெளியிட்டு என்னையா நிர்மலா சீதாராமன் கொள்கை? என கேள்வி கேட்பதுபொல் எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளது.

    கேரள மாநில காங்கிரஸ் அதனுடைய எக்ஸ் பக்க பதிவில் "க்ரீம் உடன் கூடிய பன்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி எனும்போது, சுமார் 2.20 கோடி ரூபாய் மதிப்பிலான அல்ட்ரா- சொகுசு மெர்சிடெஸ் எலெக்ட்ரிக் காருக்கு நிர்மலா சீதாராமனின் கொள்கையின் கீழ் வெறும் 5 சதவீதம்தான் ஜிஎஸ்டி.

    ஒவ்வொரு நாளும் பெட்ரோல் கார்களுக்கு செஸ் வரியுடன் 29 சதவீதம் முதல் 50 சதவீதம் ஜிஎஸ்டி என விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அடிப்படையிலான இரு சக்கர வாகனங்கள் கூட 28 சதவீத வரியை எதிர்கொள்கின்றன. வரி ஏழைகளுக்கு, மானியம் பணக்காரர்களுக்கு" எனக் குறிப்பிட்டுள்ளது.

    • அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
    • மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக கோவை எம்.பி. காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், "உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், யார் என்ன சாப்பிடுகிறார்கள் என தெரியாதா?"

    "மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது. உணவக உரிமையாளர் சீனிவாசனை கேவலப்படுத்துவது, கோவை மக்களை கேவலப்படுத்துவதற்கு சமம்" என்று தெரிவித்துள்ளார்.

    • மதுவை ஒழிக்கட்டும். திமுக வெல்லட்டும்.
    • மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா ராமதாஸ்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மதுவை ஒழிக்கட்டும். திமுக வெல்லட்டும்.

    * மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா ராமதாஸ். அவரை மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைக்க வேண்டும். ஆனால் என்னை மாநாட்டிற்கு அழைக்கவில்லை.

    * 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொல்கிறார். இதற்கு முதல்வரும் ஆமாம் என்று சொல்கிறார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?

    * மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது சத்தியமான உண்மை.

    * அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டாலும் பேசிய உண்மை மாறாது.

    * அவர் கேட்ட கேள்வி நாடெங்கும் பரவிடுச்சு, அதை அதிகாரம் வந்து பணிய வைக்குது. அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவிச்சாலும் அந்த கேள்வியில் உள்ள உண்மையை சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது என்று அவர் கூறினார்.

    • வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டது பதிவாகி உள்ளது.
    • தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எங்கள் நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டது பதிவாகி உள்ளது.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எங்கள் நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

    தமிழக பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து"-குறள் 978, அதிகாரம் 98.
    • சம்பவத்தை மையமாக வைத்து கனிமொழி எம்.பி. இக்கருத்தை பதிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    • Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி..
    • நான் எந்த யாருடைய விமர்சனத்துக்கும் கவலைப்படுவதாய் இல்லை என நிர்மலா சீதாராமன் விளக்கம்

    கோவை:

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.

    அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

    அவரின் வீடியோ வைரலான நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மலா சீதாராமன் இதுகுறித்து விளக்கமளித்தார்.

    அப்போது பேசிய அவர், "பன்னுக்கு வரி இல்லை. அதில் க்ரீம் போட்டுக் கொடுத்தால் வரி வேறு விதமாக இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது என மிகவும் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். இதை கேட்பவர்களுக்கு 'ஆஹா' என்பது போல இருக்கும். அதில் தவறு ஒன்றுமில்லை. அவரின் பாணியில் அவர் பேசியிருக்கிறார்.

    அவர் இதை ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதியாக இருப்போருக்கு அது ஆதாயமாக தெரியும். 'பார்த்தீங்களா ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுட்டாரு. எல்லாரும் சிரிக்கறாங்க. அந்த அம்மாவுக்கு விசயம் தெரியுமா.' என்று சொல்வார்கள். நான் எந்த யாருடைய விமர்சனத்துக்கும் கவலைப்படுவதாய் இல்லை.

    ஜிஎஸ்டியை எளிதாய், மக்களுக்கு சுமை இல்லாமல் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம். கவுன்சிலில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழ்நாட்டு அமைச்சரும் உறுப்பினராக உள்ளார். இந்த 7 ஆண்டுகளிலும், எந்த ஒரு முடிவும் யாரின் எதிர்ப்பை மீறி எடுக்கவில்லை. எல்லோரும் சேர்ந்துதான் முடிவு எடுப்போம். யாரும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. நான் எதையும் முடிவு செய்யவில்லை. சமீபத்தில் கூட, மருத்துவ காப்பீட்டுக்கு வரி இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. உண்மையில் ஜிஎஸ்டிக்கு முன்பே மருத்துவ காப்பீட்டுக்கு வரி இருந்தது. அதை இப்போது குறைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

    • ரூ.1½ கோடியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    பெங்களூரு பையப்பனஹள்ளியை சேர்ந்தவர் கேசவ்தக். தொழில் அதிபரான இவர். கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அதிகாரிகள் என்று கூறி பெண் உள்பட 4 பேர் வந்து அவரை அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கேசவ்தக்கிடம் உங்கள் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றால் ரூ.3 கோடி தரவேண்டும் என்று மிரட்டினர்.

    அதற்கு கேசவ்தக் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர்கள், கேசவ்தக்கை இந்திராநகர் பகுதிக்கு காரில் கடத்தி சென்று தாக்கினர்.

    பின்னர் அவரது நண்பர் ரோஷன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள் ரூ.3 கோடி எடுத்துவரும்படி மிரட்டினர். இதை கேட்ட ரோஷன், ரூ.1½ கோடியை எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கிய கும்பல் கேசவை கீழே இறக்கிவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

    இந்தநிலையில் கும்பல் மீது சந்தேகம் அடைந்த கேசவ்தக், ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறினர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரும் தன்னை ஏமாற்றியதை அறிந்த கேசவ்தக், இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகளான சோனாலி சஹாயி, மனோஜ் சைனி, அபிஷேக், நாகேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கேசவ்தக் வீட்டிற்கு வாடகை காரில் சென்றதும். காரை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கேசவ்தக் வீட்டிற்கு சென்றதும். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சுமார் 15 கிலோமீட்டர் சாலையோரம் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி சோதனை செய்த போது அவர்கள் கேசவ்தக் வீட்டிற்கு வந்து சென்றது உறுதியானது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 34 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 50 காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1½ கோடியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர்.
    • ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 70 இடங்களில் சிட்பி வங்கிகளை நாங்கள் திறக்க உள்ளோம். 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் கடனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5.6 கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் மித்ரா பூங்கா விருதுநகரில் தொடங்கப்பட்டிருக்கிறது. 2028-க்குள் இந்த பூங்கா மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். 

    • ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
    • ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 54 வது சரக்கு மற்றும் சேவை வரி [ஜிஎஸ்டி] கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனிகளுக்காக ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது

    மேலும் ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து நவம்பர் மாதம் நடக்க உள்ள கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க அரசு பரிசீலித்து வந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபனை  தெரிவித்துள்ளனர். சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறியதால் இந்த முடிவை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

    ×