என் மலர்
நீங்கள் தேடியது "slug 151724"
- இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையால் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.
- பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இறுதி தீர்ப்பல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.

அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எங்களின் பூர்வீக சொத்தாகும்.
- எனது பாட்டி சந்தியா மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.
அதேநேரத்தில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமை கொண்டாடி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் வீட்டை சசிகலா மறைமுகமாக வாங்க டிரஸ்ட் அமைத்துள்ளதாக உறுதி இல்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஜெயலலிதாவின் வீடு யார் கைக்கு போகும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கு ஜெ.தீபா முற்றுப்புள்ளி வைத்து ஜெயலலிதாவின் வீட்டில் தான் குடியேற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக இணையதளத்தில் ஆடியோ ஒன்றை ஜெ.தீபா வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் தீபா கூறி இருப்பதாவது:-
போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எங்களின் பூர்வீக சொத்தாகும். எனது பாட்டி சந்தியா மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது.
எனது தந்தை ஜெயகுமாரும், தாயார் விஜயலட்சுமியும் அங்குதான் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். அந்த வீட்டில் தான் நானும் பிறந்தேன்.
பின்னர் மிகச்சிறிய கருத்து வேறுபாடுகள் காரணமாக எனது தந்தையும், தாயாரும் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்தனர். அதன்பிறகு தி.நகரில் உள்ள மற்றொரு பூர்வீக இல்லத்தில் வசித்து வந்தோம்.
ஜெயலலிதா அழைக்கும் போதெல்லாம் போயஸ் கார்டன் சென்று வருவோம். ஒரு காலக்கட்டத்தில் அவர் கேட்டுக்கொண்டதால் அங்கேயே இருந்து வந்தோம். பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்ட பிறகு அந்த வீட்டில் இருந்து முழுமையாக வெளியே வந்து விட்டோம்.
இந்த பூர்வீக சொத்தை கோர்ட்டு வழியாக நானும், தீபக்கும் திரும்ப பெற்றுள்ளோம். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்ததால் அவருடன் பயணித்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்திருக்கலாம். அப்படி உள்ள எல்லோருமே அவருடைய சொத்துக்கு உரிமை கோர முடியாது.
குடும்ப அந்தஸ்தை பெறவும் முடியாது. குடும்ப சொத்துக்களிலும் உரிமை கோர முடியாது. ஜெயலலிதாவுடன் பயணித்தோம் என்று சொல்லும் சசிகலா குடும்பத்தினருக்கும் இது பொருத்தமானது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் விற்பனைக்கு வரும் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அந்த வதந்திகளை நான் கடுமையாக மறுக்கிறேன். அந்த வீடு விற்பனைக்கு என்று நாங்கள் யாரும் சொல்லவும் இல்லை. யாரையும் அணுகவும் இல்லை. யாரும் எங்களை அணுகவும் இல்லை.
வேதா நிலையத்தை பொறுத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை நான் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருக்கிறேன். மிக விரைவில் அங்கு குடியேறும் எண்ணம் எனக்கு இருக்கிறது. எனவே இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஜெயலலிதா வீட்டை விற்பனை செய்வதற்கு ஓசை இல்லாமல் முயற்சிகள் நடக்கிறதாம்.
- ஜெயலலிதா வீட்டை வாங்க சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
சென்னை:
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்பனை செய்ய தீபாவும், தீபக்கும் முடிவு செய்து இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதை தீபா, தீபக் இருவரும் உடனே மறுத்தனர். ஆனால் உண்மையில் ஜெயலலிதா வீட்டை விற்பனை செய்வதற்கு ஓசை இல்லாமல் முயற்சிகள் நடக்கிறதாம்.
தமிழகத்தில் உள்ள கோடீசுவரர்கள் சிலர் அந்த வீட்டை வாங்க முதலில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அரசியல் சர்ச்சை, சட்ட சிக்கல் போன்றவற்றுக்கு பயந்து எல்லா பணக்காரர்களும் இப்போது விலகி விட்டனர். இதனால் ஜெயலலிதா வீட்டை வாங்க சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
டிரஸ்ட் ஒன்றை தொடங்கி அதன் வழியாக ஜெயலலிதா வீட்டை வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அந்த டிரஸ்ட்டில் சசிகலா, தீபா, தீபக் ஆகியோர் முக்கிய பொறுப்பில் இருப்பார்களாம். இந்த திட்டம் வெற்றி பெற்று நிறைவேறினால், சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறி விடுவார்.
- ஜெயலலிதா படம் வைக்க அ.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.
சிவகாசி
சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவுன்சிலர்கள் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும், தினசரி பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கே வந்து வாறுகால் இல்லாமல் உள்ளது. தண்ணீர் வர வில்லை, சாலை வசதி இல்லை என்ற அடிப்படை வசதிகள் குறித்து எங்களிடம் முறையிட்டு வருகின்றனர் என்றனர்.
மேலும் இதை மாமன்ற கூட்டத்தில் பலமுறை அறிவித்தும் அதிகாரிகள் தொடர்ந்து அந்த பணிகளை செய்வதில் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து அனைவரின் குறைகளும் நிவர்த்தி செய்து அடிப்படை வசதிகள் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் புகைபடங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் கரைமுருகன், தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முன்னாள் முதல்வர்கள் வரிசையில் ஜெயலலிதாவின் புகைப்ப டம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
- கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
- மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் 3-வது நாளாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது.
தொடர்ந்து, நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில்,
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை இன்று விசாரணை நடத்தி வருகிறது. மன்னார்குடி சேரம்குளத்தை சேர்ந்த குணசேகரனை கோவையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குணசேகரன் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்துக்காக டிராவல்ஸிலும் கார் ஓட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தற்போது 3-வது முறையாக கடந்த 11-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து தொண்டர்கள் வரத்து இல்லாததால் அ.தி.மு.க. தலைமை கழகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் எந்த கட்சிக்கும் ஏற்படாத சோதனை தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல கட்டங்களாக சோதனையை சந்தித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க. சோதனைக்கு உள்ளாகி வருகிறது.
எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். 1972 அக்டோபர் முதல் ராயப்பேட்டையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை ஜானகிஅம்மாள் 1957-ம் ஆண்டு வாங்கினார். பின்னர் இந்த இடத்தை 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஜி.ஆருக்கு தானமாக வழங்கினார்.
அ.தி.மு.க. தலைமை கழகம் ஏற்கனவே 2 முறை சீல் வைக்கப்பட்டது. தற்போது 3-வது முறையாக சீல் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அவரது மனைவி ஜானகி அம்மாள் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அ.தி.மு.க. 2 ஆக உடைந்து ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.
இதையடுத்து 1988-ம் ஆண்டு தமிழகத்தில் ஜானகி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மேலும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜானகி தரப்பினரும், ஜெயலலிதா தரப்பினரும் உரிமை கோரினார்கள். எனவே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட சுமார் 15 மணி நேரத்தில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த சீல் வைப்பு சம்பவம் 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி நடந்தது. அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டபிள்யூ.ஐ. தேவாரம் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இரு தரப்பினரும் மாறி மாறி கோர்ட்டில் வழக்குகளை சந்தித்தனர்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வந்தது. இதில் ஜானகி தலைமையிலான அணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 1989-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி இரு அணிகளும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனார். இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகம் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
அதன் பிறகு 1990-ம் ஆண்டு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு 2-வது முறையாக சோதனை வந்தது. அப்போது தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் திருநாவுக்கரசர் தலைமையிலான ஒரு அணியினர் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் புகுந்தனர். அப்போது அ.தி.மு.க. அலுவலகத்தில் மீண்டும் மோதல் நடந்தது. இந்த மோதல் காரணமாக 1990-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கழகத்துக்கு சீல் வைத்தது போலீசாரா? அல்லது வருவாய் துறை அதிகாரிகளா? என்ற சர்ச்சை வெடித்தது.
அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த கே.கே.ராஜசேகரன் நாயர் போலீசார் சீல் வைக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.
இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுமார் 4 மாதம் இந்த வழக்கு நடந்தது. அப்போது கட்சி அலுவலகத்தின் சாவி நீதிபதியிடம் இருந்தது. 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. தலைமை கழகத்தை கோர்ட்டு மீட்டு ஜெயலலலிதாவிடம் ஒப்படைத்தது. அப்போது ஜெயலலிதாவின் வக்கீல் சுப்பிரமணியன், நீதிபதியிடம் இருந்து சாவியை பெற்றார். 1990-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி பெங்களூரில் இருந்த ஜெயலலிதாவிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தற்போது 3-வது முறையாக கடந்த 11-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தொண்டர்கள் வரத்து இல்லாததால் அ.தி.மு.க. தலைமை கழகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் எப்போது தீரும் என்று தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
- 11-ந் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி செல்லாது. நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர்.
- அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். விரைவில் மாற்றங்கள் வருவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
சென்னை:
ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்துடன் சமீபத்தில் திருத்தணியில் இருந்து தனது அதிரடி பிரசாரத்தை தொடங்கினார்.
மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி மீண்டும் அ.தி.மு.க.வை வலுப்படுத்த போவதாக அவர் அறிவித்து உள்ளார். நேற்று அவர் திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் பேசினார்.
விழுப்புரத்தில் மக்களை சந்தித்து விட்டு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு நான்தான் இப்போதும் பொதுச்செயலாளராக இருக்கிறேன். அ.தி.மு.க. என்பது ஒரு தனிநபரின் வீடோ அல்லது தனியார் அமைப்போ அல்ல. அ.தி.மு.க.வை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாநிலத்தில் ஆட்சி செய்யவே எம்.ஜி.ஆர். தொடங்கினார்.
மக்கள் காட்டும் வழியில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். பெரும்பாலான மக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன். மக்களுக்கு பணியாற்றும் விஷயத்தில் ஜெயலலிதா என்னுடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அவரது கனவுகளை எல்லாம் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து நான் மக்கள் பணி செய்வேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. அதை கட்சி தொண்டர்கள் தான் தீர்மானிக்க முடியும். தற்போது அ.தி.மு.க.வில் நடந்து வரும் நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
துரோகிகளை மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். 11-ந் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி செல்லாது. நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர்.
எனவே அடுத்தக்கட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களை திரட்டி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்வேன். நான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். விரைவில் மாற்றங்கள் வருவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
பொதுக்குழு, ஒற்றைத் தலைமை என்று என்னிடம் கேட்கிறீர்கள். அதற்கு நான் திரும்ப திரும்ப சொல்வது தொண்டர்களின் முடிவுதான் இறுதியானது என்பதைத் தான். தொண்டர்களின் முடிவைத்தான் நானும் விரும்புகிறேன். இப்போது நடப்பது பொதுக்குழுவே அல்ல.
என்னுடைய அரசியல் பயணம் தேவையற்றது என சிலர் கிண்டல் செய்வதாக சொல்கிறீர்கள். இது போன்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பேசுவதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
தமிழக மக்களும், எங்கள் கழகத் தொண்டர்களும் பார்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் ரொம்ப நியாயம், நீதி, நன்றி இதற்கெல்லாம் உதாரணமாக இருப்பவர்கள்.
இதற்கு தகுந்த பதிலை எப்பொழுது கொடுக்க வேண்டுமோ அப்பொழுது பொது மக்கள் கொடுப்பார்கள். பிரிந்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். அதுதான் என்னுடைய முடிவு. எல்லோரும் எங்கள் பிள்ளைகள் தான்.
எல்லாக்கட்சியிலும் சுற்றுப்பயணம் சென்றுகொண்டு தான் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினரும் சுற்றுப் பயணம் சென்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு போக வேண்டிய நேரம் வரும்போது நிச்சயம் செல்வேன்.
நான் எப்போதுமே நியாயப்படித்தான் செயல்படுவேன். அதனால் எங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து போவேன். நான் அமைதியாக இல்லை. நான் என்ன செய்ய வேண்டுமோ அதனைத் தொடர்ந்து முறையாக செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
புரட்சித்தலைவர் எப்படி இந்த கழகத்தை நடத்தினாரோ, அவரை தொடர்ந்து இந்த கழகத்தை புரட்சித்தலைவி அம்மா எப்படி நடத்தினார்களோ, அதுபோன்று இந்தக் கழகத்தை நடத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
இது எங்கள் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமல்ல உண்மையாகவும், நேற்று ஒன்று இன்று ஒன்று என்று பேசாமல் ஒரு தலைமை இருந்தது என்றால்தான் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய முடியும். அதனை மட்டும் தான் நான் பார்க்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை அது கொடநாடு வழக்காக இருந்தாலும் சரி, அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற நிகழ்வுகள் என எல்லாமே எனக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தெரிய வேண்டும். யார் யார் சுய லாபத்திற்காக என்னென்ன பேசினார்கள் என்பதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள்.
இதற்கெல்லாம் தீர்ப்பு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதுமட்டுமல்ல இந்த வழக்கு சம்பந்தமாக என்னிடம் தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசினுடைய விசாரணை காவல்துறை சார்பில் இரண்டு நாட்கள் விசாரித்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் முறையாக பதில் சொல்லி இருக்கிறேன்.
இது சம்பந்தமாக அரசாங்கம் தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது முதல்-அமைச்சராக இருப்பவர் தேர்தல் சமயத்தில் பேசியது இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று கொடநாடு கொலை வழக்கு. ஒவ்வொரு தெருவிலும் சென்று வாக்கு கேட்கும் போது ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு கொலை தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். எனவே கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று முதல்-அமைச்சரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
முன்னதாக தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்து அவரவர்கள் உயர் பதவியில் நீடிப்பதற்காக அடிமட்ட தொண்டர்கள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம். இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.
ஒருசிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களது சுய விருப்பம், வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இது தானா?
ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதே போன்று எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்வதை எந்த அ.தி.மு.க. தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைத்தால் இது இருபெறும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக் கடனாகும்.
தி.மு.க.வினர் அ.தி.மு.க. இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது. அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். ஆனால் எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது அ.தி.மு.க. இயக்கம்.
தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். அனைவருக்கும் வலியுறுத்தி ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தங்க பேனா, தங்க தட்டு, தங்க பெல்ட், தங்க சாமி சிலைகள், தங்க மாம்பழம், தங்க கைக்கெடிகாரம் ஆகியன உள்ளன.
- 11,344 பட்டுப்புடவைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த சேலைகள், 91 கைக்கெடிகாரங்கள் உள்ளன.
பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தண்டனை காலம் நிறைவு பெற்றதால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்ததால் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து ஏராளமான பட்டுப்புடவைகள், செருப்புகள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதும், ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு உள்ளன. 19 ஆண்டுகளாக அந்த பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கஜானாவில் இருக்கிறது.
இந்த நிலையில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான நரசிம்மமூர்த்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்தில் கடந்த 26 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. அந்த பொருட்களை ஏலத்தில் விட வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பொதுமக்களின் வளர்ச்சிக்காக செலவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக மாநில கஜானாவில் இருக்கும் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களின் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
11,344 பட்டுப்புடவைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த சேலைகள், 44 குளிர்சாதன எந்திரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேசுகள், 91 கைக்கெடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 மேஜைகள், 24 மெத்தைகள், 9 உடை அலங்கார டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் மின்விளக்குகள், 20 ஷோபா செட்டுகள்.
750 ஜோடி செருப்புகள், 31 உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள், 215 மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள், 3 இரும்பு பெட்டகங்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 514 மற்றும் ரூ.32 ஆயிரத்து 688 ரொக்கம், 10 டி.வி.க்கள், 8 வி.சி.ஆர்.கள்., ஒரு வீடியோ கேமரா, 4 சி.டி. பிளேயர், 2 ஆடியோ பிளேயர்கள், 24 ரேடியோ பெட்டிகள் மற்றும் 1,040 வீடியோ கேசட்டுகள்.
இதுதவிர தங்கம், வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள், ரத்தின கற்கள், தங்க வளையல்கள், கை செயின்கள், கம்மல்கள், காதுமாட்டிகள், மூக்குத்திகள், வீர வாள்கள், மயில் சிலைகள், விலை உயர்ந்த பன்னீர் சொம்பு, முருக்கு செயின்கள், சந்தன கிண்ணம், தங்க பேனா, தங்க அட்டை, தங்க தட்டு, குங்கம சிமிழ், முதுகு வலிக்கு பயன்படுத்தும் பெல்ட், மோதிரம், தங்க காசு மாலை, தங்க பெல்ட், தங்க சாமி சிலைகள், காமாட்சி விளக்குகள், தங்க கீ செயின், தங்க மாம்பழம், தங்க கைக்கெடிகாரம் ஆகியன உள்ளன.
- ஜெயலலிதா பயன்படுத்திய கோடிக்கணக்கான மதிப்பிலான கைப்பற்றபட்ட பொருட்கள் அனைத்தும் கர்நாடகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
- ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடும் பட்சத்தில் அவரது நல விரும்பிகள் அதனை வாங்கி பொக்கிஷமாக பாதுகாத்து வைப்பார்கள்.
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் சசிகலா, இளவரசி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கடந்த 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது ஏராளமான பட்டுப்புடவைகள், செருப்புகள் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. 11,344 சேலைகள், 1040 வீடியோ கேசட்டுகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள், 91 கைக்கடிகாரங்கள், 24 டேப்ரிக்கார்டர்கள், 2 ஆடியோ டிஸ்க், 4 சி,டி பிளேயர், 1 வீடியோ கேமரா, 8 வீடியோ காசட் ரிக்கார்டர்கள், 10 டி.வி.க்கள், 12 குளிர்சாதன பெட்டிகள், 3 இரும்பு பெட்டகங்கள், 44 ஏ.சி. எந்திரங்கள், 33 டெலிபோன் மற்றும் இண்டர்காம்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 131 சூட்கேசுகள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின் விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 9 டிரஸ்சிங் டேபிள்கள், 81 தொங்கும் விளக்குகள், 20 சோபா செட்கள், கண்ணாடிகளுடன் கூடிய 31 டிரஸ்சிங் டேபிள்கள், 215 படிக வெட்டு கண்ணாடிகள், ரொக்க பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கடந்த 2003-ம் ஆண்டு பெங்களுரு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதா பயன்படுத்திய கோடிக்கணக்கான மதிப்பிலான கைப்பற்றபட்ட பொருட்கள் அனைத்தும் கர்நாடகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போது இந்த பொருட்களை கர்நாடக அரசு பெங்களுருவில் உள்ள அரசு கருவூலத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது.
இந்த நிலையில் பெங்களுருவை சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கைப்பற்றபட்ட ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் 26 ஆண்டுகளாக கருவூலத்தில் இருப்பதால் அது வீணாக வாய்ப்பு உள்ளது. சேலைகள் பண்டல் கட்டி வைக்கப்பட்டு உள்ளதால் அதன் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. தோலால் ஆன செருப்புகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகும் சூழல் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு உரிய சட்டத்திற்கு உட்பட்டு இந்த பொருட்களை ஏலத்தில் விட வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடும் பட்சத்தில் அவரது நல விரும்பிகள் அதனை வாங்கி பொக்கிஷமாக பாதுகாத்து வைப்பார்கள்.
இதனால் பொருட்கள் சேதமாவது தடுக்கப்படும். இந்த ஏலம் மூலம் கிடைக்கும் பணத்தை மக்கள் நல பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா சேகரித்து வைத்து இருந்த 11,344 சேலைகள், மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
- விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிலை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி திறந்து வைக்கப்பட்டது.
அந்த சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லாமல் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைப்பு பணி நடந்தது.
ஜெயலலிதாவின் புதிய சிலையை நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா சிலையை பழைய வேஷ்டியால் மூடி வைக்கப்பட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெயலலிதா சிலை மீது வேஷ்டி போட்டு மறைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியானது.
இதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
முன்பு அவசர கதியில் திறக்கப்பட்ட அம்மாவின் சிலைக்கு மாற்றாக புதிய சிலையை திறந்த நிகழ்வில் அம்மாவை அவமதிக்கும் விதத்தில் அச்சிலையை பழைய துணியால் மூடி வைத்து பின்பு திறந்துள்ளனர்.
இது அம்மாவின் லட்சோப லட்ச தொண்டர்களின் மனதை வேதனையிலும் பெரும் கொதிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அம்மாவுக்கு உரிய மரியாதை எப்போழுதுமே செலுத்த நினைக்காத பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் சார்பாக எனது கடும் கண் டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dinakaran #jayalalithaidol #admkheadoffice