என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்"

    • சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    கான்கெர் நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ராய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் பேசுகையில், நேற்று பிரதமர் மோடி கான்கேருக்கு வந்தார். எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்றார்.

    சாமானியர்களின் வளர்ச்சியை அவர் பார்க்கவில்லை, அதானியின் வளர்ச்சியை மட்டுமே பார்க்கிறார்.

    சுரங்கத்தையும், நாகர்னார் உருக்காலையையும் அதானிக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்.

    அதானிக்கு சுரங்கங்களையும், நகர்நார் உருக்காலையையும் கொடுத்தால்தான் சத்தீஸ்கரில் வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் நினைக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • சூதாட்ட செயலி விளம்பரதாரர்களிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு
    • இந்த விவகாரம் விசாரணைக்குரியதுதான் என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது

    சத்தீஸ்கரில் வருகிற 7 மற்றும் 17-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டுகிறது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.

    இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்ட விரோத சூதாட்ட ஆபரேட்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட ஹவாலா பணத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் மீது ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

    பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் கூறுகையில் "நம்முடைய தேர்தல் வரலாற்றில் இதுபோன்று ஒருபோதும் நடந்தது இல்லை. சத்தீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாகேல் மக்களின் ஆதரவுடன் தேர்தலை எதிர்கொள்வில்லை. சூதாட்ட ஆபரேட்டர்கள் மற்றும் ஹவாலா பணத்தால் போட்டியிடுகிறார். அவர் ஆட்சியில் இருந்தபோது, பந்தய விளையாட்டில் விளையாடினார்" என்றார்.

    சூதாட்ட செயலியின் விளம்பரதாரர்கள், சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு 508 கோடி ரூபாய் கொடுத்ததாக, ஒரு ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி இது விசாரணைக்கு உரியது என்று அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

    இதற்கு பாகேல், தேர்தல் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை தன்னை குறிவைக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான் ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
    • சத்தீஸ்கா் மக்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலைக் காண அழைத்துச் செல்லப்படுவா்.

    ராய்பூர்:

    90 உறுப்பினா்களைக்கொண்ட சத்தீஸ்கா் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவ. 7-ந் தேதியும், எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பா் 17-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'சத்தீஸ்கா் 2023-க்கான மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பிலான பா.ஜ.க. தோ்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டாா்.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

    சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,100 வீதம் கொள்முதல் செய்யப்படும். இதற்கான பணம் ஒரே தவணையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    திருமணமான பெண்களுக்கான உதவித்திட்டத்தின் கீழ், அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12,000 நிதியுதவி அளிக்கப்படும். நிலமில்லா ஏழை விவசாயத் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

    ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கப்படும்.

    கல்லூரி செல்லும் மாணவா்களுக்கு மாத பயணப்படி நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்கள் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிரப்பப்படும்.

    பிரதமரின் வீட்டு வசதி (ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 2 ஆண்டுகளுக்குள் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் வழங்கப்படும்.

    அனைத்துக் குடிமக்களுக்கும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் 50 சதவீத பங்களிப்பு தொகையை மாநில அரசு ஏற்கும்.

    சத்தீஸ்கா் மக்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலைக் காண அழைத்துச் செல்லப்படுவா். இவ்வாறு பா.ஜ.க. தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் 20 வாக்குறுதிகளை அமித் ஷா விவரித்தாா்.

    • 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஜதல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்.

    "பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பேச்சுகளில் 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் வனவாசி என்ற வார்த்தையை உருவாக்கி உள்ளனர். வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது."

    "மத்திய பிரதேச மாநிலத்தில், பா.ஜ.க. தலைவர் ஒருத்தர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்து, அதே சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை வைரலாக்கினார். இது தான் பா.ஜ.க.-வின் மனநிலை. அவர்கள் உங்களது பகுதியை விலங்குகள் வசிக்கும் காடாக நினைத்து, உங்களையும் விலங்குகளை போன்றே நடத்துகின்றனர்."

    "நாட்டில் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாட்டில் ஒரே ஒரு சாதி தான் இருக்கிறது என்றால், அவர் ஏன் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறிக் கொள்கிறார்?," என்று ராகுல் காந்தி பேசினார்.

    முன்னதாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒரே சாதி ஏழ்மை தான் என்று தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் போது தான் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.

    • சத்தீஸ்கரில் 20 இடங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது
    • மிசோரம் மாநிலத்தில் 40 இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

    சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், 17-ந்தேதி 70 தொகுதிகளுக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    20 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. பிரசாரம் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான வேலைகளை செய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறும் இடம் மாவோயிஸ்ட் நிறைந்த இடமாகும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதமுள்ள 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள். சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

    கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.

    • கடந்த ஐந்து ஆண்டுகளில் நக்சலிசம் பெருமளவு பின்வாங்கியுள்ளது- பூபேஷ் பாகெல்
    • பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்- ராமன் சிங்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இடங்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மாவோயிஸ்ட் தாக்குதலில் சிஆர்பிஃஎப் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பா.ஜனதா தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கூறுகையில் ''முதற்கட்ட தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 14 இடங்களில் வெற்றிபெறும். இரண்டு கட்ட தேர்தலும் சிறப்பாக அமையும். முழு மெஜாரிட்டியுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்'' என்றார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கூறுகையில் ''கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் முயற்சியால் நக்சலிசம்

    பெருமளவு பின்வாங்கியுள்ளது. இதனால் கிராமத்திற்கு உள்ளே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் மக்கள் தானாக முன்வந்து வாக்களிப்பார்கள். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

    • சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.
    • காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2-வது கட்டத்தேர்தல் 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் சர்குஜா பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது.

    பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வரலாம் என யாராவது ஒருவர் நினைத்தார்களா?

    நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு பணியை கொடுத்துள்ளீர்கள்.

    காங்கிரஸ் ஆட்சியில் மனித கடத்தல், போதைப்பொருள் தொழில் சர்குஜா பகுதியில் அதிகமாக இருந்தது.

    காங்கிரசின் சமரசம் செய்துகொள்ளும் கொள்கையால், சத்தீஸ்கரின் சர்குஜா பகுதியில் பண்டிகைகளைக் கொண்டாடுவது கடினமாகிவிட்டது.

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது
    • மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

    முதல் கட்டமாக நடந்த தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.

    இதர 10 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் உள்ளவை ஆகும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் இடையே கடும் போட்டி உள்ளது. முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
    • பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளராக ED செயல்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பைகுந்த்பூர் மற்றும் கத்கோரா பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை கொண்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    பைகுந்த்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கார்கே, பா.ஜ.க., பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தொகுதியை மாற்ற முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுத்து நிறுத்த காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் உள்பட நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து கத்கோராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கார்கே, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளர்களாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றன.

    கடந்த செவ்வாய் கிழமை மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இம்மாத இறுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது.
    • காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரை கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 7-ந்தேதி முடிவடைந்தது. 70 தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இதனையொட்டி பிரதமர் மோடி சத்தீஸ்கரில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அவர் இன்று மதியம் முங்கெலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாகவது:-

    தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. டெல்லியில் இருந்து சில பத்திரிகையாளர் நண்பர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்னிடம் சத்தீஸ்கர் முதல்வர் பாகேல் அவர் தொகுதியிலேயே தோற்கடிக்கபடுவார் என்று தெரிவித்தனர்.

    காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடி பெயர் கொண்ட சமூகத்தினரை கடந்த பல மாதங்களாக அவர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர்.

    ஓ.பி.சி. சமூகத்தினரை அவர்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காங்கிரஸ் அம்பேத்கரை அவமதிக்கிறது. அம்பேத்கரின் அரசியலுக்கு முடிவு கட்ட சதி செய்தது காங்கிரஸ். வாக்கு வங்கிற்காகவும், சமரசம் செய்து கொள்வதற்காகவும் காங்கிரஸ் எதை வேண்டுமென்றாலும் செய்யும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.
    • காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, "பா.ஜனதா என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.

    பா.ஜனதா என்றால் வளர்ச்சிக்கான அரசு, பெண்களுக்கான அதிகாரம், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பவர் என்று அர்த்தம். காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்" என்றார்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக கடந்த 7-ந்தேதி 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாளைமறுநாள் (நவம்பர் 17-ந்தேதி) 70 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

    • ம.பி.யில் பா.ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.
    • 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பா.ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும்

    5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஸ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

    ராஜஸ்தான் மாநில மந்திரி மகோஷ ஜோஷி: முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ராஜஸ்தானில ஆட்சியமைக்கும். அதுபோக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்: மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சிறப்பாக உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சூழ்நிலைய நன்றாக இருக்கிறது. தெலுங்கானாவில் நாங்கள் 80 சதவீத இடங்களை பிடிப்போம். காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.

    பா.ஜனதா சீனியர் தலைவர் சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்): பா.ஜனதா ஏராளமான வளர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்து வருகிறமோ, அங்கெல்லாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். மோடி மீதான நம்பிக்கை மக்கள் காட்டியுள்ளனர்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி: இது காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையிலான தேர்தல் அல்ல. 4 கோடி மக்கள் பிஆர்எஸ்-க்கு எதிராக உள்ளனர். இது தெலுங்கானா மக்களின் வெற்றி. முதல் மந்திரிசபை கூட்டத்தில் 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற அனுமதி பெற்று செயல்படுத்துவோம். நாங்கள் முழு வெற்றி பெறுவோம். இதைத்தான் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

    சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாயோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட மாதிரி அளவைக் கொண்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    ராபர்ட் வதேரா: நான் கருத்துக் கணிப்பை பெரிய அளவில் நம்பவில்லை. நான் உண்மையான முடிவை நம்புகிறவன். நான் கடந்த சில மாதங்களாக ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில். ஆட்சியை கவிழ்த்தது தொடர்பான விரக்தி தெரிந்தது.

    பா.ஜனதா எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்: அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதா செய்த பணிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே: கருத்துக் கணிப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதற்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்: கருத்துக் கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் அது குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்வர் சிவ்சராஜ் சிங் சவுகான் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.பி. ரதோர் (ராஜஸ்தான்): மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட பகுதிக்கானது. 3-ந்தேதி முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும்.

    ×