என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டிரைக்"

    • 14 சதவீத தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது
    • 200க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்து கொடுக்கின்றன.

    திருப்பூர் :

    'சைமா' மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் பேச்சு நடத்தி கடந்த 2022 ஜூனில் கட்டண உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 9 மாதமான நிலையில் அங்கேரிபாளையத்தை சேர்ந்த, ஆடை உற்பத்தி நிறுவனமோ இன்னும் முதல் ஆண்டுக்கான 14 சதவீத தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.இதனால் அந்நிறுவனத்துக்கு ஆடை தைத்துக்கொடு ப்பதை நிறுத்தி காலவரையற்ற உற்பத்தி நிறுத்தத்தை தொடங்கி உள்ளது பவர்டேபிள் உரிமையாளர் சங்கம். இது குறித்து பவர்டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாகி கூறியதாவது:-

    அங்கேரிபாளையத்தில் இயங்கும் ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு திருப்பூர், மணப்பாறை, குளித்தலை, புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்து கொடுக்கி ன்றன.மூலப்பொருள் விலை உயர்வு, எரிபொருள், மின் கட்டணம் உயர்வால் பவர்டேபிள் நிறுவனங்கள் பரிதவிக்கின்றன. மற்ற நிறுவனங்களெல்லாம், ஒப்பந்தப்படி கட்டண உயர்வு வழங்குகின்றன. அங்கேரிபாளையத்தை சேர்ந்த ஆடை நிறுவனம் மட்டும் தையல் கட்டண உயர்வு அளிக்காமல் இழுத்த டிக்கிறது.இதுகுறித்து 'சைமா' சங்கத்துக்கு மனு அனுப்பினோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அந்த ஒரு நிறுவனத்துக்கான ஆடை தயாரிப்பை முழுமையாக நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளோம். 'சைமா' சங்கம் தலையிட்டு பேச்சு நடத்தி கட்டண உயர்வை பெற்றுத்தர வேண்டும். அதுவரை உற்பத்தி நிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்ட குடோனில் இருப்பு வைத்து ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
    • வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த போராட்டம் நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் 85-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் பனியன் கட்டிங் வேஸ்ட் துணியில் இருந்து நிறம் வாரியாக சிறு, சிறு துணியை பிரித்து அதை மொத்தமாக வாங்கி ஓ.இ. மில்களுக்கு சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்கள். ஓ.இ.மில்களுக்கான முக்கிய மூலப்பொருளை வினியோகம் செய்யும் வியாபாரிகளாக உள்ளனர்.

    திருப்பூர் டூம்லைட் மைதானம், நெசவாளர் காலனி, மங்கலம் பகுதிகளில் இருந்து பனியன் கட்டிங் வேஸ்ட் பிரிக்கப்பட்ட துணிகளை பெற்று 100-க்கும் மேற்பட்ட குடோனில் இருப்பு வைத்து ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். நாளொன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கழிவுதுணிகளை ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஓ.இ.மில்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து ஓ.இ.மில்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று முதல் தொடர் வியாபார நிறுத்தம் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தக இழப்பு ஏற்படுவதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் உள்ள சிறு, குறு பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், பனியன் தொழில் சார்ந்த சைமா, டீமா, டெக்பா, நிட்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பல்லடம் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பு உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    இதற்கிடையே அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த செப்டம்பர் 7-ந் தேதி பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதன் அடுத்தகட்ட போராட்டமாக செப்டம்பர் 11 முதல் 24-ந்தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம், இ-மெயில், அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இன்று தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தும் தொழிற்சாலைகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றும் போராட்டமும் நடைபெறுகிறது. மேலும் கடந்த காலங்களில் கோரிக்கைகளுக்காக ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. தற்போது தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் 170-க்கும் அதிகமான சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளன. முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த குறு சிறு தொழில் நிறுவனங்களும் மின் கட்டண உயர்வுக்காக கைகோர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் எங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்க உள்ளது.
    • கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்

    கோவை,

    கோவை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி லாரிகள் இயங்காது என்று கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    கனரக லாரிகள் மீதான 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

    அரசுக்கு சொந்தமான மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும், காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித் துள்ளது.

    அதன்படி கோவையில் நவம்பர் 9-ந் தேதி காலை 6 மணி முதல மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்ம் நடத்தப்படும் என்று கோவை லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்கள், சிறிய வாகன உரிமையாளர்கள், இலகுரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    எனவே தொழிற்சாலைகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
    • தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    இதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி பல்லவன் இல்லத்தில் நாளை காலை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நாளை மறுநாள் (8-ந் தேதி) தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

    இதற்கிடையே அமைச்சருடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. #AirIndiaStaff #AirIndiaStrike #MumbaiAirport
    மும்பை:

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் நேற்று இரவு திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 400 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ஒப்பந்த ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாங்காக் செல்லும் விமானம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. நள்ளிரவு 1.30 மணிக்கு  புறப்படவேண்டிய மும்பை-மேவார்க் விமானம் அதிகாலை 4.08க்கு புறப்பட்டுச் சென்றது.



    விமான பயணிகள் பரிசோதனை, சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி மற்றும் விமானத்தை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட முக்கிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை சரிசெய்ய ஏர் இந்தியா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #AirIndiaStaff #AirIndiaStrike #MumbaiAirport
    தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் புன்னக்காயலில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 400 நாட்டுப்படகுகள் உள்ளன. கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

    விசைப்படகுகளால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் விசைப்படகுகளை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்த படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் இன்று புன்னக்காயல் கடலில் கூடினார்கள். கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் படகுகளில் கறுப்பு கொடிகள் கட்டியிருந்தனர். #tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.#SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஏற்கனவே துப்பாக்கி சூடு நடைபெற்ற கடந்த 22-ந்தேதியே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தியிருந்தார்கள். இன்று அவர்கள் 7-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மீனவர்கள் பலரும் காயம் அடைந்தார்கள். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இதனால் தொடர்ந்து மீனவர்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் நெல்லை மாவட்ட மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, பெருமணல் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள மக்கள் இடிந்தகரையிலும், கூடங்குளத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கடந்த 23-ந்தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை,. இன்று 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களது படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டு உள்ளது.#SterliteProtest
    லாரிகள் ஸ்டிரைக் எதிரொலியால் பிரேசில் நகரத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார். #MichelTemer #Lorrystrike

    சாவ்பாங்லோ:

    பிரேசில் நாட்டின் தொழில் நகரம் சாவ்பாவ்லோ. இங்கு லாரி மற்றும் வாகனங்களின் வேலைநிறுத்த போராட்டம் 5 நாட்கள் நடக்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

    லாரிகள் இயக்காமல் நடுரோடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாததால் பொருட்களுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே நிலைமையை சமாளிக்க சாவ்பாவ்லோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து ரோடுகளில் நிறுத்தப்பட் டுள்ள லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை பிரகடனம் குறித்து அதிபர் டெமர் டி.வி.யில் உரை நிகழ்த்தினார். #MichelTemer #Lorrystrike

    ×