search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    • இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி என்ற பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.
    • 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தது.

    உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்தது

    இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது. 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது.

    33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருாள் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.

    வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதன் காரணமாக ஆல்-ரவுண்டர் வீரரான லியம் லிவிங்ஸ்டன் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு லிவிங்ஸ்டன் முக்கிய காரணமாக செயல்பட்டார்.

    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 19 ஆம் தேதி துவங்குகிறது. பட்லருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக மாறியிருக்கிறார். 

    • இறப்பை தானே தீர்மானிக்கும் வகையில் வலியில்லாமல் இறப்பதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனம் சூசைட் பாட் ஒன்றை தயாரித்து இருக்கிறது.
    • வயது முதிர்ந்த தம்பதி ஒன்றாக வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், விருப்பப்பட்டு தன்னுடைய இறப்பை தானே தீர்மானிக்கும் வகையில் வலியில்லாமல் இறப்பதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனம் சூசைட் பாட் ஒன்றை தயாரித்து இருக்கிறது.

    இந்நிலையில் இந்த சூசைட் பாடில் இறப்பதற்கு ஒரு பிரிட்டிஷ் தம்பதி முன்வந்துள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது கடைசி தருணத்தை ஒன்றாக செலவிடமுடியும் என நினைத்துள்ளனர். வயது முதிர்ந்த தம்பதி ஒன்றாக வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரிட்டினை சேர்ந்த தம்பதி பீட்டர் ஸ்காட் (வயது 86), அவரது மனைவியான கிறிஸ்டைன் (வயது 80) ஓய்வு பெற்ற செவிலியர். இவர்கள் 46 ஆண்டுகள் திருமண உறவில் மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். கிறிஸ்டைனுக்கு டிமன்ஷியா நோய் இருப்பது ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், தன் மனைவி இல்லாத வாழ்க்கையை கொஞ்சமும் நினைத்து பார்க்க முடியாமல் இந்த முடிவிற்கு இருவரும் வந்துள்ளனர்.

    இதைப்பற்றி பீட்டர் ஸ்காட் கூறுயதாவது "நாங்கள் எங்கள் வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து முடித்து விட்டோம். இதன் பிறகு அவள் நோயால் அவதிப்பட்டு கஷட்டப்படுவதை இந்த வயதில் பார்க்க என்னால் முடியாது."

    "என்னால் முடிந்த அளவுக்கு நான் அவளை கவனித்துக்கொள்வேன். ஆனால் அவள் தன் வாழ்க்கையில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் போது உதவியாக போதுமான அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறாள். அவள் தன்னையும் தன் வாழ்க்கையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறாள். சூசைட் பாட் அவளுக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது, அவள் இல்லாமல் வாழ நானும் விரும்பவில்லை," என கூறியுள்ளார்.

    இதனால் இவர்கள் சுவிட்சர்லாந்து சென்று அந்த டெத் பாடில் தங்களில் உயிரை மாய்த்துக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக இந்த தம்பதி தங்களது கடைசி காலத்தை ஆல்ப்ஸ் மலையில் வாக்கிங் செல்லவும், சுவையான மீன் உணவை சாப்பிடவும் முடிவு செய்துள்ளனர்.

    • இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அடுத்த மாதம் 7ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அடுத்த மாதம் 7ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

    • டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை மொயீன் அலி வீழ்த்தியுள்ளார்.
    • மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.

    2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார்.

    மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

    2019ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022ல் டி20 உலகக் கோப்பையையும் வென்ற இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இடம் பெற்றிருந்தார்.

    2022 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஓய்வு பெறுவது தொடர்பாக பேசிய மொயீன் அலி, "எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்கான நேரம். தொடர்ந்து லீக் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடுவேன். எதிர்காலத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றவும் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    • ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.

    இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ரன்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை ஆகும்.

    இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார். 

    • இங்கிலாந்தின் ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகினார்.
    • மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.

    2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.

    அண்மையில், , இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து ஜூலை 30 ஆம் தேதி மேத்யூ மோட் விலகினார்.

    இந்நிலையில், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக பிரென்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதன் மூலம் அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மெக்கல்லம்.

    • கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
    • 2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

    டேவிட் மலான் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்காக டேவிட் மலான் கடைசியாக 2023-ம் ஆண்டு விளையாடினார்.

    36 வயதாகும் இவர் இதுவரை 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

    2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
    • இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 358 ரன் குவித்தது.

    122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்து இருந்தது. நேற்று 4 ஆம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 326 ரன் எடுத்தது. இதனால் இங்கிலாந்துக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை சார்பில் காமிந்து மெண்டீஸ் 113 ரன்னும், தினேஷ் சன்டிமால் 79 ரன்னும், மேத்யூஸ் 65 ரன்னும் எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளையும், அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    205 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.

    • இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது.

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த போட்டி டிராவில் முடிந்தது. கடசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலயாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில் தற்போது இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20 -ம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமிலும், 3-வது போட்டி ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4-வது போட்டி மான்செஸ்டரிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

    முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877 மார்ச் மாதம் நடைபெற்றது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டை முன்னிட்டு 1977 ஆண்டு சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது

    டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாக்லி அறிவித்துள்ளார்.

    வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877 மார்ச் மாதம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதே மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆனந்தை ஒட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977 ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அன்றைய இரவு சுமார் 1.30 மணியளவில் அந்த குழுவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
    • அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல அந்த பெண் கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏர் இந்தியாவைச் சேர்ந்த ஹோஸ்டஸ் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை லண்டனில் ஹீத்ரோவ் பகுதியில் உள்ள ரெடிஷன் ரெட் ஹோட்டலில் ஏர் இந்தியா விமான பணிக்குழுவினர் தங்கியுள்ளனர். அன்றைய இரவு சுமார் 1.30 மணியளவில் அந்த குழுவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.

     

    தூக்கத்தில் இருந்த பெண் விழித்து அவரை பார்த்து அலறியுள்ளார். இதனால் பதற்றமான அந்த மர்ம நபர் பெண்ணை துணிகளை தொங்கவிடும் ஹேங்கர்களால் கடுமையாக தாக்கியுள்ளார். அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல அந்த பெண் கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.

    அந்த நபரின் பிடியை விடுவிக்க பெண் கடுமையாகப் போராடியுள்ளார். இதனால் பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் கேட்டு யாரும் வந்துவிடுவார்களோ என்று பயந்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஏர் இந்தியா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×