என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு வீரர்கள்"

    • விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம்.
    • இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிறவிண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம். ஏற்கனவே அஞ்சல் வழியில் நேரடியாக விண்ணப்பிருந்தாலும், மீண்டும் இணையவழியில்விண்ணப்பிக்க வேண்டும்.இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிறவிண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    • பயிற்சியாளருக்கு 11 மாதத்துக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும்.
    • தேசிய அளவில் சாதனை படைத்து 40 வயதுக்கு உட்பட்ட தடகள வீரர், வீராங்கனைகளில் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான எஸ்.டி.ஏ.டி. விளையாடு இந்தியா மாவட்ட மையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி தினமும் அளிக்கப்பட உள்ளது.

    இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்க, தேசிய அளவில் சாதனை படைத்து 40 வயதுக்கு உட்பட்ட தடகள வீரர், வீராங்கனைகளில் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பிப்பவர்கள் திருப்பூரை சேர்ந்தவராக குறைந்தது 5 ஆண்டுகளாக இங்கு வசிப்பவராக இருக்க வேண்டும். சர்வதேச போட்டி, தேசிய போட்டியில் பதக்கம் பெற்றவரோ, அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராக, சர்வதேச போட்டிகளில், சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராக இருக்க வேண்டும். பயிற்சியாளருக்கு 11 மாதத்துக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும்.

    இதற்கான விண்ணப்பத்தை www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வருகிற 3-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதிவாய்ந்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு திருப்பூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.இந்த தகவலை மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டம்.
    • போட்டிகளில் பங்கேற்று முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி–யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.

    குறைந்தபட்ச தகுதியானது சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    மத்தியஅரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பானது 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

    விண்ணப்–பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்–களாகவும், தமிழ்நாடு சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

    மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

    முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்தமாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி மாலை 5 மணியாகும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள்.
    • புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டங்களில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது.
    • மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

    விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற் கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்"-எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும்.

    அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட் டிற்கு வருகை தந்து பயிற்சி கள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

    இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள் ளார்.

    மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல்-(sportstn2023@gmail.com) முகவரியில் மற்றும் தொலைபேசி எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 சதவீதம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசில் பணி ஆணை வழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 3 சதவீதம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசில் பணி ஆணைகளை வழங்கினார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திறமைமிகு தமிழ்நாட்டின் இளைஞர்களே… மாணவர்களே… விளையாட்டு வீரர்களே…

    களம் காணுங்கள்; உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்; நம் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேருங்கள்!

    உங்கள் வாழ்க்கையை அக்கறையோடு கவனித்துக் கொள்ள நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது.

    களம் நமதே

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் 2024-ம் ஆண்டில் உயிரிழந்தார்.
    • அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக விளங்கிய மார்டின் குரோ, நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். 

    மார்டின் குரோ 1992 உலக கோப்பை போட்டிகளில் மிக சிறப்பாக தன் அணியை வழிநடத்தி, தன் அணி அரையிறுதி போட்டிக்கு இடம்பெற செய்தார். அவரின் மரணத்துக்கு உலகில் உள்ள பல விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆன கிரஹாம் தோர்ப் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.



    இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஸ் பாகர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


    அதிகாலையில் ஜோஸ் பாகர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாகருக்கு என்ன நடந்தது என்ற தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உலகின் நட்சத்திர கூட்டைப்பந்து விளையாட்டு வீரராக வளம்வந்தவர் லாக்கர்ஸ் அணியின் கோபி பிரையன்ட் இவர் ஞாயிற்றுக்கிழமை தனது மகள் ஜியானாவும் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பிரைன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா பிரைன்ட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.


    இந்தோனிசியாவில் 2 எஃப்.எல்.ஒ. பாண்டுங் மற்றும் எஃப்.பி.ஐ. சுபாங் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில் திடிரென மின்னல் தாக்கி 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்பவர் உயிரிழந்தது.


    இளம் ரக்பி வீரரான கோகில சம்மந்தபெரும (28) கோர விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

    அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.


    இது போன்ற மரணங்கள் அந்தந்த விளையாட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன
    • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.16 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

    மேலும் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்கள் வென்றதற்காக 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான 8 சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், 4 பயிற்றுநர்கள், 4 உடற்பயிற்சி இயக்குநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் 3 நடுவர்கள் என மொத்தம் 19 நபர்களுக்கு முதல்-அமைச்சர் விருதுகளையும், விருதிற்கான ஊக்கத் தொகையாக ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

    விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விவரங்கள், தகவல்கள், புகார்கள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்திட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள "ஆடுகளம்" தகவல் மையத்தின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    இந்த தகவல் மையம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். இதுதொடர்பாக 9514000777 என்ற அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வசதி மூலமாகவும், ஆடுகளம் ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும், அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் நேரடியாகவும் இந்த போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம்.

    முதற்கட்டமாக கபடி போட்டிக்கான முன்பதிவு பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் பிரிவு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் வகையில் பதிவு தொடங்கப்படுகிறது.

    படிப்படியாக தடகளம், கூடைப்பந்து, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான முன்பதிவும் தொடங்கும்.

    விழாவில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவ. வீ. மெய்யநாதன், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரி, பல்கலைகழக விளையாட்டுப்போட்டிகள் முழுமையாக நடத்தப்படவில்லை.
    திருப்பூர்:

    நாடு முழுவதும் பல்கலைக்கழகம், மண்டலம், அகில இந்திய அளவில் நடக்கும் போட்டிகளில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் பங்கேற்கும் மாணவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரி, பல்கலைகழக விளையாட்டுப்போட்டிகள் முழுமையாக நடத்தப்படவில்லை.

    இதனால் 2019-2021 வரை படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில் நடப்பு கல்வியாண்டு மட்டும் (2021-2022) தேசிய  பல்கலைக்கழகங்களுக்கு  இடையேயான போட்டியில் பங்கேற்பதற்கான வயது வரம்பை 26 ஆக உயர்த்தி இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட கல்லூரி விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #SportspersonsQuota #EdappadiPalaniswami
    சென்னை:

    தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    இதையடுத்து தமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசும்போது, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடானது 3 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

    ‘தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலிடத்திற்கு வர அரசு அனைத்து உதவிகளையும் செய்யும், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களின் பலத்தை மதிப்பீடு செய்து திட்டமிட வேண்டும். இந்த அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் விளையாட்டுத் துறைக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு  நிதி உதவி வழங்கி வருகிறது.

    சென்னை தவிர்த்து 31 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்திற்கு விளையாட்டு மைதானம், உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.’ எனவும் முதல்வர் பேசினார்.

    விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். #SportspersonsQuota #EdappadiPalaniswami
    தேசிய அளவில் பதக்கம் வெல்லும் புதுவை விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்க வேண்டும் என்று புதுவை ஒலிம்பிக் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் காந்தி வீதியில் உள்ள ஒட்டல் செண்பகாவில் நடந்தது. ஒலிம்பிக் சங்க தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் வேல்முருகன், வாழ்நாள் தலைவர் பூங்காவனம், மூத்த துணை தலைவர் உதயகுமார், துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், ஜெயராஜ், பொருளாளர் சுப்ரமணி, இணை செயலாளர்கள் சூரியமூர்த்தி, ஸ்டாலின் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் ஊழியர்களுக்கு 8 மாத காலமாக சம்பளம் கொடுக்காமலும், அங்கீகாரம் பெற்றுள்ள விளையாட்டு சங்கங்களுக்கு 2012 முதல் நிதி ஏதும் கொடுக்காமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    பல ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பண பரிசு வழங்கப்படவில்லை. இதனை அரசு உடனே வழங்க வேண்டும்.

    புதிய விளையாட்டு சங்கங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவை மாநில விளையாட்டு குழு மத்திடம் அங்கீகாரம் கோரியும் அங்கீகாரம் தராமல், அவர்களுக்கு வேண்டிய சங்கங்களுக்கு மட்டும் புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அங்கீகாரம் கொடுத்து உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    விளையாட்டின் மீது அக்கறையே செலுத்தாமல் விளையாட்டு சங்கங்களுக்கு சரியான நிதி கொடுக்காமல் அனுபவமிக்க உறுப்பினர் செயலாளரை கொண்ட புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் இது குறித்து முதல்-அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் துணை தலைவர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுப்பது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றால், அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.
    சண்டிகர்:

    அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் அம்மாநில விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டது.

    விளையாட்டு வீரர்கள், எதிர்க்கட்சிகள் என கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பரிசு வென்றால் அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.



    ஒரு வீரர் பதக்கம் வெல்லும் போது சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கான மாநில அரசின் பரிசுத்தொகையை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியானா அரசின் இந்த முடிவுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    ×