என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை தேர்தல் ஆணையர்"

    • வாக்காளர்களுக்கு பணம், மது, இலவசங்கள் தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
    • நேர்மையான முறையில் தேர்தலை நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணையம் தகவல்.

    குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், 788 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    பணம் கடத்தப்படுவதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன.  தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மோசமான நடைமுறையாகும், நாங்கள் அதை முற்றிலும் தடுக்கும் முயற்சியை செய்கிறோம். குஜராத்தின் அண்டை மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வருவாய் புலனாய்வு இயக்குநரகம், வருமானவரித்துறை, தீவிரவாத தடுப்புப்படை மற்றும் மாநில காவல்துறை இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

    குஜராத்தில் கடந்த 2017 தேர்தலின் போது ரூ.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்க பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. 


    தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கையால் இந்த முறை கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. வதோதராவில் பெரிய அளவில் ஜப்தி நடக்கிறது. ரூ.450 கோடி வரை பறிமுதல் செய்யப்படும். 171 கோடி மதிப்பில் இலவசங்கள் இருந்தன. பணம், மது, போதைப்பொருள் மற்றும் இலவச பொருட்களை வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் வழங்க கூடாது என்று நாங்கள் அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தி உள்ளோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதையே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    • ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக் கான அட்டவணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் வாரியாக தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியன குறித்து அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    மக்களவைத் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் ஆணையக் குழுவினரின் வருகை தள்ளிப்போயுள்ளது.

    இதனிடையே, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை அந்தந்த மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் விளக்க உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்படும்.

    மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏதேனும் முக்கிய பண்டிகைகள் வருகிறதா என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநில சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்க இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு டெல்லி சென்றுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம்.
    • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம் என்றார்.

    புவனேஸ்வர்:

    அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

    • ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.
    • வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

    ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும். முதல் கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

    மேலும் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா இங்கே. 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி உள்ளோம். நல்லாட்சி மற்றும் துறைகள் முழுவதும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் செல்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய 11 மாநில சட்டசபை தேர்தல்களில் 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்தோம்.
    • போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகம், சத்தீஸ்கர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, இமாசல பிரதேசம், குஜராத் மற்றும் திரிபுரா ஆகிய 11 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தி உள்ளோம்.

    கடந்த இரு ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தியுள்ளோம். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,400 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம்.

    சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். போலி செய்தி பரப்பக் கூடாது. போலியான தகவல்கள் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக் கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதி ஏழு மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முழுமையாக நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தேர்தல் முடிவுகள் எண்ணுவதற்கு முன் தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்தித்தது. அதன்படி செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முதலில் வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

     


    இதைத் தொடர்ந்து பேசிய அவர், "நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம் 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்றனர்."

    "இந்த தேர்தலில் மொத்தம் 64 கோடி பேர் வாக்களித்து உள்ளனர். இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும். வாக்குப்பதிவை ஒட்டி நாடுமுழுக்க 135 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் நான்கு லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன."

    "தேர்தல் திருவிழா காலக்கட்டத்தில் நாடு முழுக்க ரூ. 10 ஆயிரம் கோடி வரை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும். வாக்கு எண்ணிக்கை பணி மிகவும் வலுவான ஒன்று ஆகும். இது கடிகாரம் இயங்குவதை போன்றே மிக சரியாக நடைபெறும்," என்று தெரிவித்தார்.

    • நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
    • இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பேசிய அவர், "காணாமல் போன தேர்தல் ஆணையர்கள்' என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பகிரப்படுவதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்கேயேதான் இருக்கிறோம். இப்போது காணாமல் போன தேர்தல் ஆணையர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று மீம்ஸ் போடலாம் என்று கிண்டலாக பேசினார்.

    மேலும் பேசிய அவர், "2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் 39 இடங்களில் மட்டும் தான் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

    எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்" என்று தலைமை தேர்தல் ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

    • ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணைய கட்டடத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ரஷியவுக்கு நெருக்கமான நாடாக உள்ள ஜார்ஜியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ள ஜார்ஜியன் டிரீம் கட்சி 53.93 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளது. ஜார்ஜியா தலைநகர் திப்லிசி [Tbilisi] - இல் உள்ள மத்திய தேர்தல் ஆணைய கட்டடத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகளை அறிவிக்கப்பட இருந்த நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த டாவிட் [Davit Kirtadze] என்ற தலைவர் திடீரென அனைவர் முன்னிலையிலும் தலைமை தேர்தல் ஆணையர் ஜியோர்ஜி [Giorgi Kalandarishvili] மீது கருப்பு மையை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
    • . தனது பதவிக்காலத்தில் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

    முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் (CEC) நவீன் சாவ்லா இன்று [சனிக்கிழமை] காலமானார். அவருக்கு வயது 79.

    சாவ்லாவின் மரணத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார். மூளை அறுவை சிகிச்சைக்காக சாவ்லா டெல்லி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்காட்டிருந்தார்.

    இந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு டெல்லி கிரீன் பார்க் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து குரேஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஸ்ரீ நவீன் சாவ்லாவின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    நவீன் சாவ்லா, 2005 மற்றும் 2009 க்கு இடையில் தேர்தல் ஆணையராக (EC) பணியாற்றினார், பின்னர் ஏப்ரல் 2009 முதல் ஜூலை 2010 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றினார். தனது பதவிக்காலத்தில் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

    சாவ்லா பாரபட்சமாக செயல்படுவதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்குமாறு அப்போதைய பாஜக எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட 204 எம்.பிக்கள் அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாமிடம் மனு அளித்தனர். மேலும் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் பாஜக வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
    • புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இருந்து வருகிறர். இவர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். வழக்கமாக அவருக்கு அடுத்தப்படியாக உள்ளவர் தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்படுவார். 3-வது நபரை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்யும்.

    பிரதமர் தலைமையிலான குழுவில் பிரதமர், கேபினட் அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இருப்பார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 22-ந்தேதி இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. அதுவரை இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தக்கூடாது என ராகுல் காந்தி தனக்கு இந்த கூட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளார்.

    ஆனால், தேர்தல் ஆணையத் தலைவர் பதவி காலியிடமாக இருக்கும் என்பதால் தேர்வு செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிப்போட விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நீதிமன்றம் நியமனத்திற்கு தடை விதிக்கவில்லை. மேலும், சட்டப்பூர்வ கருத்து கோரப்பட்டு வழங்கப்பட்டது, பிரதமர் தலைமையிலான குழு தொடர்ந்து செயல்படுமாறு கூறப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான கோப்பிலும், புதிய அதிகாரியை நியமிப்பதற்கான கோப்பிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில் "தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் நியமிப்பது தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் வருகிற 22-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் நாங்கள் ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைக்க விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியுடன் சட்டக்குழு இதை ஆதரிக்கிறது. நாம் ஈகோவில் செயல்பட முடியாது, மேலும் உச்ச நீதிமன்றம் முன்கூட்டியே முடிவெடுக்கும் வகையில் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு தேர்தல் ஆணையத்தை தன்னுடன் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது. அதனுடைய நம்பகத்தன்யை குறித்து கவலைப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளது.

    வழக்கமாக பிரதமரின் ஆலோசனைப்படி தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். தலைமை தேர்தல் ஆணையருக்கு கீழ் உள்ள மற்ற இரண்டுபேரில் சீனியர் அடிப்படையில் மூத்த ஆணையர் தலைமை ஆணையராக தேர்வு செய்யப்படுவார். அதன்படி ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

    சட்ட அமைச்சர் ஐந்து பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து தேர்வுக்குழுவிற்கு அனுப்புவார். தேர்தல் குழுவில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர், கேபினட் அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள்.

    ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக கேபினட் அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    • இந்த நியமனம் கேலிக் கூத்தானது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
    • வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவி காலம் இன்று முடிவடையும் நிலையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த நியமனம் கேலிக் கூத்தானது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    முக்கிய வழக்குகளை விசாரித்த பிறகு தேர்தல் ஆணையர் நியமன வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ×