என் மலர்
நீங்கள் தேடியது "காற்று மாசுபாடு"
- மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார்.
- மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை காரணம்.
புதுடெல்லி:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது, டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாடு அளவீடுகளை குறிப்பிட்ட அவர், டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும், வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்றும் சொன்னார். "3 நாட்கள் அங்கு தங்கினீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்" என்று கூட்டத்தினரைப் பார்த்து அவர் கூறினார்.
மாசுபாட்டில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு நிலையை அவசரமாக கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார்.
மேலும், "மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை காரணம். நாங்கள் கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடி மதிப்புக்கு புதை படிவ எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை நான் ஆதரிக்கிறேன். புதை படிவ எரிபொருள் இறக்குமதியை குறைத்து, பசுமை எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளின் பைகளில் ரூ.12 லட்சம் கோடி வரை சேமிக்க விரும்புகிறேன்" என்றார்.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் தயாரித்த காற்று தர குறியீட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, மேற்கண்ட எச்சரிக்கை விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.
- காற்று மாசுபாட்டால் நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
- அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு, கூட்டங்கள் நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் உயர் கல்வி மையங்கள் உள்பட சுமார் 1,800 பள்ளிகள் உள்ளன. நேற்று நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவை எட்டியது. டெல்லிக்கு அடுத்தபடியாக மேற்கு உத்தர பிரதேச மாவட்டத்தின் சில பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், காற்று மாசுபாடு காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை வரை 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு கவுதம் புத் நகரின் மாவட்ட பள்ளி கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு அல்லது கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லாகூரில் பிஎம்2.5 எனும் மாசு காரணிகள் அபாய எல்லையை விட 66 மடங்கு அதிகம் உள்ளது
- அமீரக நிபுணர்கள் வானில் 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலை முன்னெடுத்தனர்
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பாகிஸ்தான் 3-வது நாடாகவும் அந்நாட்டின் பஞ்சாப் பிராந்திய லாகூர் நகரம் முதலிடத்திலும் உள்ளது.
நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து புற்று நோயை உண்டாக்க கூடிய மாசுப்பொருட்களில் பிஎம்2.5 (PM2.5) எனும் மாசு காரணிகள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை காட்டிலும் 66 மடங்கு அதிகமாக லாகூர் நகர காற்று மண்டலத்தில் இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்தன.
தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அமில வாயுக்கள், செங்கல் சூளைகளிலிருந்து வரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வயல்வெளிகளில் வைக்கோல் எரிப்பால் கிளம்பும் புகை என பல்வேறு காரணங்களால் பஞ்சாப் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு அதிகரித்தல் தொடர்கதையாகி வருகிறது.
காற்று மாசுபடுதல் அதிகரிப்பதால் அந்நகரில் கடந்த சில வாரங்களாக பல வணிக நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டன; பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.
பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் இதனை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிட அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) முன் வந்தது. வறண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவு உண்டாக்குதல் வழக்கமான ஒன்று. சில்வர் ஐயோடைட் (silver iodide) எனும் மஞ்சள் உப்பு, அசிடோன் (acetone) எனும் ரசாயன கலவையுடன் கலக்கப்பட்டு வானில் மேகங்களில் பல முறை எரிக்கப்படும். இதன் மூலம் மழை மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு தூண்டப்படும்.
குறைந்தளவு மழைப்பொழிவு கூட காற்றில் உள்ள மாசு காரணிகளை சில நாட்களுக்கு கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதிகளவு அசுத்தமடைந்த காற்றினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் க்ளவுட் சீடிங் (cloud seeding) அல்லது ப்ளூ ஸ்கையிங் (blueskying) எனப்படும் செயற்கை மழைகளை வரவழைக்கும் ரசாயனங்களை கொண்ட உபகரணங்களுடன் விமானங்கள் அந்நகரை வலம் வந்தன.
2 விமானங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் விஞ்ஞானத்தில் தேர்ந்த ஐக்கிய அரபு நிபுணர்கள் லாகூரில் முயற்சிகளை முன்னெடுத்தனர். 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலில் ஈடுபட்டார்கள்.
இதன் பயனாக லாகூர் நகரின் 10 இடங்களில் மழைத்தூறல் விழுந்ததாகவும், 15 கிலோமீட்டர் பரப்பளவில் அதன் தாக்கம் கண்காணிக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில காபந்து முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.
காற்று மாசுபாட்டினால் ஏற்படும் எதிர்மறை உடல்நல சீர்கேடு ஓவ்வொரு மனிதனின் வாழ்நாளில் 5 வருடங்கள் குறைத்து விடும் சாத்தியக்கூறு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
- அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு.
- காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
பனிக்காலங்களில் அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. பனிப்புகையும், மனித செயல்கள் மூலம் உருவாகும் காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும். மூச்சுத் திணறல், பெருமூச்சுவிடுதல், சுவாசிக்கும் போது விசிலடிப்பது போன்ற சப்தம், வேகமாக மூச்சுவிடுதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்?

வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு கலந்த புகை, தீங்கான விஷம் கலந்த தொழிற்சாலை புகைகள் மற்றும் சில ரசாயனக் கரைசல்களின் புகைகள் போன்றவற்றை உங்களுக்குத் தெரியாமலேயே நாம் சுவாசித்துக் கொண்டிப்போம். இந்த நச்சுப் புகைகள் தான் சுவாச மண்டலத்தை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
மற்ற காலங்களை விட பனிக்காலங்களில் நமது உடல் வெப்ப அளவை விட மிகக்குறைவாக. குளிர்ந்த வெளிக்காற்று இருக்கும். சுவாசப் பிரச்சினை ஏற்பட இது ஒரு காரணம் ஆகும். மருத்துவரையோ அல்லது நுரையீரல் சிகிச்சை நிபுணரையோ அணுக வேண்டும்.
மருந்தகத்தில் மருந்து- மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதனால் மூச்சுத் திணறல் அதிகமாகும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது ஒரே நாளில் கிடைக்காது. சில காலங்களுக்கு சில விஷயங்களை கடைப்பிடித்தே ஆகவேண்டும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
1) தீங்கு விளைவிக்கக் கூடிய துகள்கள் கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க வேண்டும்,
2) பதப்படுத்தப்பட்ட உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகள், இனிப்பு உணவுகள், இறைச்சி உணவு வகைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
3) நிறமூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்ந்த உணவுகள், குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
4) மன நிம்மதியின்மை, மன அழுத்தம் முதலியவைகளும் மூச்சுத் திணறலை அதிகமாக்கும்.
5) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்கள் குளிரையும், குளிர்ப் பிரதேசங்களையும் தவிர்க்க வேண்டும்.
6) தினமும் உங்களால் முடிந்த ஏதாவதொரு உடற்பயிற்சியை செய்து உடம்பை சூடாக வைத்துக் கொள்ள வேண்டும்.
7) ஊதுவத்தி, கொசு வத்தி, கற்பூரம் போன்றவற்றின் புகை அருகில் இருக்க வேண்டாம்.
8) சிகரெட் புகைப்பவரின் அருகில் நிற்கக்கூட செய்யாதீர்கள். நச்சுக்காற்றின் அபாயங்களைத் தவிருங்கள். நலமுடன் வாழுங்கள்.
- விவசாயிகளின் பண்ணை பொருட்கள் எரிப்பால் புகை மூட்டம் குறையாமல் இருக்கிறது
- PM 2.5 தாக்கத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என NESDC வலியுறுத்தியது
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மக்கள் தொகை சுமார் 72 மில்லியன். இவர்களில் 1 கோடிக்கும் (10 மில்லியன்) அதிகமான மக்கள், காற்று மாசு தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சில் (National Economic and Social Development Council) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
பண்ணை பொருட்களில் தேவையற்றவைகளை எரிக்கும் அந்நாட்டு விவசாயிகளின் பரவலான பழக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ ஆகியவற்றால் புகைமூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
2024 ஆண்டு தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் மாசுபாடு தொடர்பான நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.

நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் இதய கோளாறு போன்ற மாசுபாடு தொடர்பான நோய்களால் நாள்பட்ட கணக்கில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2023ல் முதல் 9 வாரங்களில் 1.3 மில்லியன் என இருந்தது.
தற்போது (2024 தொடக்கத்தில்) இந்த எண்ணிக்கை 1.6 மில்லியன் எனும் அளவிற்கு அதிகரித்துள்ளது.
சுவாச மண்டலத்தை பாதிக்க கூடிய 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைந்த அளவிலான சிறிய, அபாயகரமான துகள்கள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் நுழைந்து விடுகின்றன. தொடர்ந்து, இத்துகள்கள் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுத்தி இருமல் மற்றும் மார்பு இறுக்கத்தை ஏற்படுத்த கூடியவை. இது மட்டுமின்றி இவை இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பாதிப்பை மேலும் அதிகப்படுத்தலாம்.
இத்தகைய துகள்களை "PM 2.5" என சுகாதார நிபுணர்கள் அழைக்கின்றனர்.
பொது சுகாதாரத்தில் "PM 2.5" ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர்க்க தாய்லாந்து அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என NESDC கூறியது.
தாய்லாந்தில், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை கரும்பு தோட்டம் மற்றும் நெல் விளைநிலங்கள் ஆகியவற்றில் வைக்கோல் போன்றவற்றை விவசாயிகள் எரிப்பது தொடர்கதையாகி வருவதால் காற்று மாசுபாடு அந்நாட்டில் பெரும் பிரச்சனையாகி வருகிறது.
- இந்தியா, சீனாவில் அதிக அளவில் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
காற்று மாசுப்பாட்டால் 2021-ம் ஆண்டில் 81 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியா, சீனாவில் அதிக அளவில் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது. சுகாதார விளைவுகள் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் அமைப்பு சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெற்கு ஆசியாவில் இறப்புக்கான முக்கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து இரத்தம் அழுத்தம், உணவு சரியாக சாப்பிடாமல் இருப்பது மற்றும் புகையிழை ஆகியவையும் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நைஜீரியாவில் 1,14,100, பாகிஸ்தானில் 68,100, எத்தியோப்பியா 31,100, வங்காளதேசம் 19,100 குழந்தைகளும் காற்று மாசுபாட்டிற்கு உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக இந்தியாவில் 21 லட்சம் மற்றும் சீனாவில் 23 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் 2021-ம் ஆண்டில் அதிக இறப்புகள் பதிவாகி உள்ளது. 100 கோடிக்கு அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா, சீனாவில் மட்டும் இறப்பு விகிதம் உலக அளவில் 54 சதவீகிதமாக உள்ளது.

இதை தவிர மற்ற நாடுகளை பொறுத்தவரையில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2 லட்சத்து 56 ஆயிரம் பேர், வங்காளதேசம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 300 பேர், மியான்மர் 1 லட்சத்து ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு ஆசியாவை பொறுத்தவரையில் இந்தோனேசியாவில் அதிகபட்சமாக 2 லட்சத்து 21 ஆயிரத்து 600 பேரும் வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகியவை முறையே 99,700, மற்றும் 98,209 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் நைஜீரியா (2,06,700) மற்றும் எகிப்து (1,16,500) பேர் உயிரிழந்துள்ளனர்.
- நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு.
- மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.
நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.
நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாய்வை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கியப்பணி.

மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நுரையீரல் பகுதிகளில் பல நுண்கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்று பைகள் அமைந்துள்ளன. அவை மென்மையான தசைகளை கொண்டவை.
இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால் நுரையீரல் தமனி மூலமாக வந்த ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி புதிய பிராண வாயுவை ஏற்றுக்கொண்டு சிறைகள் மூலமாக இதயத்துக்கு செல்கிறது. இந்த நுண்ணிய பைகளில் தான் காற்று பரிமாற்றம் நிகழ்கிறது.
இந்தியாவில் ஒரு கோடி மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 40 லட்சம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு வருகிறது. இதில் சிறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்படலாம்.
ஆனால் 30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் தான் அதிகமாக நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு 3 காரணங்கள் உண்டு.

ஒன்று மரபணுக்கள் மூலமாகவோ அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவோ அதாவது காற்று மாசுபாடு, விறகு அடுப்பு பயன்படுத்துவது, கொசுவர்த்தி பயன்படுத்துதல். வெல்டிங் கியாஸ் போன்ற பல காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் உணவுமுறைகளினாலோ அல்லது சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது உள்ள காலங்களில் நிறைய பேருக்கு குறைப் பிரசவம் ஏற்படுகிறது இதனால் கூட நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். ஏனென்றால் நுரையீரல் வளர்ச்சி என்பது 36 வாரங்கள் கழித்து பிறக்கும் குழந்தைகளுக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதேநேரத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி என்பது மாறுபடும். இதனால் அந்த குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.
இந்த நுரையீரல் பாதிப்பு சமீப காலமாக கொரோனா தொற்றுக்கு பிறகு அதிகம் ஏற்பட்டு வருகிறது என்று ஆய்வறிக்கைகள் நமக்கு தெரிவிக்கின்றன.

நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்:
நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக புகைப்பிடிப்பதினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் கொசுவர்த்தியில் இருந்து ஏற்படும் புகையின் மூலமும் நுரையீரல் பாதிக்கப்படும்.
ஏனென்றால் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு நாம் வீட்டின் கதவை அடைத்துவிடுகிறோம். அந்த புகை இரவு முழுவதும் அறையை சுற்றியே இருக்கும் அந்த காற்றை தான் நாம் சுவாசிப்போம். கொசுவர்த்தி புகையினால் நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இதுவும் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது.
புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.
புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும்.
- இந்தியாவின் வடக்குப் பகுதியில் 2022-ல் 17.2 சதவீதம் காற்று மாசு குறைந்தாலும் ஆபத்து.
- மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் அதிக சவால்களை எதிர்கொள்ளும் மாநிலமாக திகழ்கின்றன.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.
2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இப்படியே நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக வங்கதேசம் அதிக மாசுபாடு கொண்ட நாடாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அந்த அறிக்கை வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்தியாவின் மிகவும் மாசுபட்ட பகுதி வடக்கு பகுதி ஆகும். இது 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாகும். 2022-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் காற்று மாசுவின் தரநிலை அளவு 17.2% குறைந்தாலும், இந்த மாசு நிலைகள் நீடித்தால் மக்கள் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்ந்தால் ஆயுட்காலம் 1.2 ஆண்டு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் கூட, மேலும் மேலும் காற்று மாசுபடுவதை குறைக்கும் அவசியத்தை நிலைமை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வடக்கு பகுதி தாண்டி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அதிக காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்களாக திகழ்கிறது. இங்கு சராசரியாக 29.23 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் 2.9 வருடங்களை இழக்க நேரிடும்.
தெற்கு ஆசியாவை பொறுத்த வரைக்கும் கடந்த 20 ஆண்டுகளில் 2022-ல் காற்று மாசுபாடு 18 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காற்றின் தரக்குறியீடு 101-200 என்றால் நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.
- 401- 500 என்றால் ஆரோக்கியமான மக்களை பாதிக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக பாதிக்கும்.
இந்திய நகரங்களில் பலவற்றில் காற்று மாசுபாடு அதிகரிப்பதையும், அதைத் தொடர்ந்து காற்றின் தரம் குறைவதையும் காண்கிறோம். இதுபோன்ற நேரங்களில் பலர் தாங்கள் இருக்கும் நகரத்தை விட்டு சிறந்த காற்றின் தரம் உள்ள இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறர்கள்.
காற்றின் தரக் குறியீடு 0-50 இருந்தால் குறைந்தபட்ச தாக்கம், 51-100 என்றால் உணர்திறன் உள்ளவர்களுக்கு சிறிய சுவாசக் கோளாறு, 101-200 என்றால் நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.
201-300 என்றால் நீண்ட நேரம் வெளிப்படும்போது பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத்திணறல், 301-400 என்றால் சுவாச நோய் ஏற்படும், 401- 500 என்றால் ஆரோக்கியமான மக்களை பாதிக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக பாதிக்கும்.
இந்த நிலையில், 241 இந்திய நகரங்களின் மாசு அளவு பட்டியலை நேற்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் சுத்தமான காற்று உள்ள 10 நகரங்களில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் பல்கலைபேரூர் 20 என்ற 'நல்ல' காற்றின் தரக் குறியீடுடன் முதல் இடத்திலும், ராமநாதபுரம் 25 என்ற குறியீடுடன் 4-ம் இடத்திலும், 29 என்ற குறியீடுடன் மதுரை 7-ம் இடத்திலும் உள்ளது.
சுத்தமான காற்று உள்ள முதல் 10 இந்திய நகரங்கள் இதோ:
பல்கலைபேரூர் (20)
பாலசோர் (23)
ஐஸ்வால் (25)
ராமநாதபுரம் (25)
சிக்கபல்லாபூர் (28)
மடிகேரி (29)
மதுரை (29)
சிக்கமகளூரு (30)
காங்டாக் (30)
நாகோன் (30)
மோசமான காற்றின் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி 306 AQI உடன் முதலிடத்தில் உள்ளது. இந்தக் குறியீடு 'மிகவும் மோசமானது' என்ற வகையைச் சேர்ந்தது,
மோசமான காற்றின் தரம் கொண்ட முதல் 10 இந்திய நகரங்கள்:-
டெல்லி (306)
மீரட் (293)
காசியாபாத் (272)
பிவானி (266)
ஹாப்பூர் (261)
ஜிந்த் (261)
சர்க்கி தாத்ரி (260)
ஜுன்ஜுனு (260)
பாக்பத் (257)
அனுமான்காட் (255)
- விமான நிலையம் பகுதியில் 324 ஆகவும், அஷர்தாம் பகுதியில் 261 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவானது.
- நகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு நிலவி வருகிறது. இந்த நிலையில் காற்று மாசு கடுமையாக இருந்தது. ஆனந்த் விஹார் பகுதியில் இன்று காலை காற்றின் தர குறியீடு 405-யை தாண்டியது. இது மிகவும் மோசமான அளவு ஆகும். விமான நிலையம் பகுதியில் 324 ஆகவும், அஷர்தாம் பகுதியில் 261 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவானது.
ஒட்டுமொத்தமாக காற்றின் தரக் குறியீடு 352 ஆக இருந்தது. நகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது. இந்த காற்று மாசுவால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதி அடைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
- சட்டவிரோதமாக தீபாவளி பாட்டாசுகள் கொளுத்தி மேலும் மாசு அதிகரித்துள்ளது
- அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழாய் நீரை பாட்டிலில் பிடித்துள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில் நீர்நிலைகளின் தரம் நாளுக்குநாள் சீர்கெட்டு வருகிறது. யமுனை நதி ரசாயன கழிவுகள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
வாகன புகை, வேளாண் கழிவுகளை எரித்தல், ஆலையில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்டவற்றால் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் சட்டவிரோதமாக தீபாவளி பாட்டாசுகள் கொளுத்தி மேலும் மாசு அதிகரித்துள்ளது. இதனால் சமீப நாட்களாக காற்று தரக்குறியீடும் மோசமடைந்துள்ளது.
இது குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டவர்களின் சுகாதார நலனிலும் பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியின் துவாரகா பகுதியில் தண்ணீர் குறைந்த தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து துவாரகா பகுதிக்கு சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால், அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழாய் நீரை பாட்டிலில் பிடித்துள்ளார்.
அதனை அப்படியே கொண்டு சென்று , டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டின் வெளியே தரையில் ஊற்றினார். அந்த பாட்டிலில் இருந்த தண்ணீர் அழுக்கடைந்து, கருப்பு நிறத்தில், துர்நாற்றம் வீசியுள்ளது. தான் கொண்டு வந்த இந்த கருப்பு நிற நீரை டெல்லி மக்கள் குடிக்கவா? என ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடிநீரின் நிலை மேம்படவில்லை எனில், துர்நாற்றம் வீசும் நீருடன் கூடிய லாரியுடன் வருவேன் என்று அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார். ஆனால் தினமும் 10 பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி கேலியாக பொழுதுபோக்குவது அவருடைய வேலையா? என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.
- மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜ.க கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
- மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஆபத்தான வகையில் உள்ளளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் மோசமான காற்றின் தரவரிசையில் டெல்லி முதலிடத்தில் இருந்தது.
டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜ.க கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
இந்த நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற பனிப்படலம்போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.