என் மலர்
நீங்கள் தேடியது "slug 164462"
- கேரள பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
- கவர்னரின் உத்தரவுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்
திருவனந்தபுரம்:
கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் மகாதேவன் பிள்ளையால் நியமிக்கப்பட்ட 15 செனட் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் இறுதி எச்சரிக்கை விடுத்தார். ஆனால், கவர்னரின் இறுதி எச்சரிக்கையை துணைவேந்தர் நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து, ராஜ்பவனே ஒரு அசாதாரண நடவடிக்கையாக 15 உறுப்பினர்களை செனட்டில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின் நகல்கள் துணைவேந்தர் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவுக்கு செனட் கூட்டத்தை நடத்தவும், செனட்டின் பரிந்துரையாளரை வழங்கவும் கவர்னர் பலமுறை உத்தரவிட்டும் கவனிக்கப்படாமல் போனதால், கவர்னர் இந்த அசாதாரண நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வி.மகாதேவன் பிள்ளை, செனட் உறுப்பினர்களை நீக்கியதில் சில விதிமீறல்கள் இருப்பதாகவும், செனட் உறுப்பினர்களை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் பல்கலைக்கழக வேந்தரான கவர்னரிடம் தெரிவித்தார். கவர்னர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற வகையில், கேரள பல்கலைக்கழகத்தின் செனட்டில் இருந்து 15 உறுப்பினர்களை நீக்கினார். வேந்தரால் பரிந்துரைக்கப்பட்ட 15 உறுப்பினர்கள் செனட் உறுப்பினர்களாக நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்று கேரள பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவர்னர் கடிதம் எழுதினார்.
15 பேரில், ஐந்து பேர் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆவார்கள். தற்போது கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை இன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் கான் உத்தரவிட்டிருந்தார். இதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேரளா கவர்னர் கூறியதற்கு எதிரான மனு மீதான விசாரணை, கேரள ஐகோர்ட்டில் விசாரணை இன்று மாலை சிறப்பு அமர்வில் நடைபெற்றது. மனுவை நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இன்றைய விசாரணையின் முடிவில், 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் கவர்னர் இறுதி முடிவு எடுக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ரூ.13 லட்சம் அபராதம் வசூல்
- குமரி மாவட்ட கனிம வளம் கடத்தல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் நடவடிக்கை
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட கனிம வளம் கடத்தல் பிரிவு சப் - இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் திலீபன். இவருக்கு நேற்று மாலை கேரளாவுக்கு மணல் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சுதாரித்து கொண்டு குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு சென்ற 18 டாரஸ் லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 18 டாரஸ் லாரிகளையும், ரூ. 13 லட்சம் அபராதமும் விதித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் திடீர் நடவடிக்கையால் கடத்தல் கும்பல் அச்சத்தில் உள்ளனர்.
- எம்எல்ஏவின் முன்ஜாமீன் மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
- புகாரை வாபஸ் பெற ரூ.30 லட்சம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எல்தோஸ் மீது திருவனந்தபுரம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், கோவளம் போலீசில் பாலியல் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கோவளம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து எல்தோஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை போலீசார் விசாரணைக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.
இதற்கிடையில் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கேட்டு, எல்தோஸ் எம்.எல்.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் புகாரை வாபஸ் பெற, வக்கீல் மூலம் தன்னை எல்தோஸ் அணுகியதாகவும், இதற்காக ரூ.30 லட்சம் பேரம் பேசியதாகவும் தற்போது மற்றொரு குற்றச்சாட்டை ஆசிரியை தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த அவர், 'கடந்த 10 ஆண்டுகளாக எல்தோசுடன் எனக்கு பழக்கம் இருந்தாலும், சில மாதங்களாக தான் நாங்கள் நெருக்கமானோம். அப்போது அவரது நடவடிக்கை பிடிக்காததால் நட்பை துண்டிக்க முயன்றேன்.
இதனால் அவர் என்னை மிரட்டியதுடன் அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். எனவே தான் போலீசில் புகார் அளித்தேன். இந்தநிலையில் தான் புகாரை வாபஸ் பெறுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வக்கீல் அலுவலகத்திற்கு வர வழைத்து ரூ.30 லட்சம் வரை பேரம் பேசினர். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. விரைவில் எல்தோஸ் குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிடுவேன்' என்றார்.
இதற்கிடையில், புகார் அளித்த பெண், எம்.எல்.ஏ.வின் செல்போனை பறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, எம்எல்ஏவின் மனைவி மரியம்மா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நரபலி கொடுத்த 2 பெண்களையும் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர்.
- வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (வயது 51). இன்னொருவர் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி (50). இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களையும் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர். அங்கு போலீசார் தோண்டி பார்த்தபோது பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக இருந்தது. இதுபற்றி கேட்டபோது பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக கூறியிருக்கிறார்கள். மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இதுபோல வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மேலும் பல தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதால் போலீஸ் காவலுக்கு அனுப்பும்படி மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பகவல் சிங், லைலா, முகமது ஷபி ஆகியோரை 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
- கோவில் பிரசாதத்தை மட்டுமே இருவேளை சாப்பிட்டு அந்த முதலை வாழ்ந்து வந்துள்ளது.
- கோவில் குளத்தில் உள்ள மீன்களை அந்த முதலை உண்பதில்லை.
கும்பளா:
கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டம், கும்பளா பகுதியில் உள்ளது அனந்த பத்மநாபசுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. பாபியா என்ற பெயரிப்பட்ட அந்த முதலைக்கு, தினசரி பூஜைகளுக்குப் பிறகு, ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

கோவிலில் நைவேத்தியம் செய்யப்பட்ட பச்சரிசி சாதம் வெல்லம் ஆகியவற்றை காலையிலும், மதியமும் அர்ச்சகர் குளத்தில் போடுவார். அந்தப் பிரசாதத்தையே இந்த முதலை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளது. கோவில் குளத்தில் மீன்கள் அதிகமாக உள்ள போதும் இந்த முதலை அவற்றை உண்பதில்லை. மேலும் பாபியா மூர்க்கமாக நடந்து கொண்டதாகவோ, பக்தர்களைத் தாக்கியதாக இதுவரை எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை.
இந்த கோவிலின் அருகாமையில் ஆறு அல்லது மற்ற நீர்நிலைகள் எதுவும் இல்லை. ஆனால் இந்த முதலை எப்படி கோவில் குளத்தை அடைந்தது என்பதைக் குறிக்கும் பதிவுகள் கோவிலில் இல்லை.1945 ஆம் ஆண்டு ஆங்கிலேய சிப்பாய் ஒருவர் இந்த ஆலயத்தில் ஒரு முதலையைச் சுட்டுக் கொன்றதாகவும், அடுத்த சில நாட்களில் மற்றொரு முதலை, கோவில் குளத்தில் தென்பட்டது என்று கோவில் புராணம் கூறுகிறது.

ஒருமுறை, இந்த முதலை கோயில் கருவறைக்கு முன் வந்து சாமி தரிசனம் செய்ததை அர்ச்சகர் தனது செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த நிலையில் நேற்றிரவு அந்த முதலை இறந்தது. அதன் உடல் கோவில் வளாகத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. தெய்வீக தன்மை கொண்டதாக கருதப்படும் அந்த முதலைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
- 4 வழிச்சாலை பணிகள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே காரணம்
- முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் ஆதாயத்திற்காக மதரீதியான பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அமைதி நாடி அனைத்து மக்களும் இருக்கும்போது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என் கின்ற முனைப்போடு சிலர் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.
30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சனை இல்லாத ஊரில் புதிய பிரச்சினைகள் எல்லாம் எழுப்பி இப்போது பூதாகரமாக கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது. இது மிகவும் துரதிஷ்ட வசமானது.மாவட்ட ஆட்சியாளரும், காவல்துறை கண்காணிப்பா ளரும் ஒரு அழுத்தங்கள் காரண மாக நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது எனக்கு சவால் விட்டு உள்ளார். எங்கு வேண்டு மானாலும் வாருங்கள். விவாதத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். நான் அதற்கு தயாராக உள்ளேன். மனோ தங்கராஜ் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவரது செயல் பாடுகள் அந்த நம்பிக்கையை தரவில்லை.
மாவட்டத்திலிருந்து குவாரிகள் மூலமாக வெளிமா நிலங்களுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படு கிறது. இதில் ஆணை பிறப்பிக்க வேண்டியது அமைச்சர்தான். அவர், கோரிக்கை வைக்கக் கூடாது. ஆனால் மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு கொடுக்கிறார்.
கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 51 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கும் ஏறக்கு றைய 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் நிதி இந்த ரூபாயில் 15 சதவீதம் தனியாக தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத ஆணை எல்லா பஞ்சாயத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைவிட தலைகுனிவு வேறு ஏதும் உண்டா?.
குமரி மாவட்டத்தில் இருந்த சூழ்நிலைகளை எல்லாம் தமிழக முதல்-அமைச்சர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் 11-ந்தேதியிலிருந்து 15-ந் தேதிக்குள் நேரம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டு இருக் கின்றது. மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் சேர்ந்து சந்திக்க உள்ளோம்.
நாம் அடுத்த கட்டத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நான்கு வழி சாலையில் நாங்கள் என்ன செய்ய தவறினோம் என்பதை கூறுங்கள். எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளீர்கள். நீங்கள் ராஜினாமா கடிதம் எழுதி தாருங்கள். அடுத்த மூன்று மாத காலத்தில் இந்த மாவட்டத்தில் அனைத்து பணிகளும் தொடங்கப்படுகிறதா என்பதை நீங்கள் பாருங்கள்.
தேங்காய் பட்டின துறைமுகத்திற்கு மத்திய அரசு நிதி கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.இதுவரை 27 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தேங்காய் பட்டினம் துறைமுகத்தை மீண்டும் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இனி அங்கு ஒரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது.
கிழக்கு கடற்கரை சாலை எனது முக்கிய திட்டங்களில் ஒன்று. இங்கிருந்து மகாபலிபுரம் வரை அந்த திட்டம் உள்ளது.தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை ரூ.2600 கோடி திட்டத்தை தற்போது மாநில அரசு கேட்டு வாங்குகிறது. துறைமுகத்தில் தவறு நடந்துள்ளது. அதனை சரி செய்ய கால அவகாசம் கிடைத்துள்ளது. என்ன செய்துள்ளார்கள்? இங்கு மண் இல்லை, ஜல்லி இல்லை. கேரளாவிற்கு கனிமவளங்கள் செல்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தி.மு.க. ஆட்சி காலத்தில் கனிம வளங்கள் கேரளா செல்லவில்லை என்று கூறுங்கள். நாங்கள் பாராட்டுகிறோம்.
4 வழி சாலை பணிகள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே காரணம். ஜல்லி, மண், தண்ணீர் கொடுக்கா விட்டால் எப்படி பணிகள் நடைபெறும். உங்களால் முடியவில்லை என்றால் கூறுங்கள். மத்திய மந்திரி நிதின் கட்கரி கடந்த 26-ந்தேதி எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 4 வழிசாலை பணிகளை விரைவாக தொடங்கி முடிப்பதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வி.கே.சிங் ஆகியோரை சந்தித்து பேசினேன். மாவட்டத்தின் வளர்ச்சி பற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் கவலைப்பட வில்லை. தி.மு.க. தலைவ ராக மீண்டும் பொறுப்பேற் றுள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- குழித்துறை அருகே கார், ஆட்டோ மூலம் முயற்சி
- வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு குழித்துறை அருகே வெட்டுமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று உதச்சிக்கோட்டை பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது அதில் சிறுசிறு மூடைகளாக சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் அதே பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோ ஒன்று வந்துக் கொண்டிருந்தது.ஆட்டோவை நிறுத்துமாறு சைகைகாட்டியும் ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடி விட்டார். ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது அதில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க பட்டது.
இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
பின்னர் ஆட்டோவில் இருந்தும் காரிலிருந்தும் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாக னங்களை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர்கள் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்
- பள்ளி, கல்லூரிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளதாக திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.அவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிகமானோர் கேரளாவில் இருந்து குட்கா மற்றும் கஞ்சாவை வாங்கி வருவதாக தெரிவித்தனர்.
இதை யடுத்து மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். எல்லை பகுதியிலுள்ள ஊரம்பு, களியக்காவிளை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு போதை பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதி யாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திருவனந்தபுரம் போலீஸ் சூப்பி ரண்டு ஷில்பா தியா வையா ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆட்டோக்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.கொரியர் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.
வெளியூர்களிலிருந்து இரண்டு கிலோவுக்கு மேல் வரும் பார்சல்களை ஒப்படைக்கும் போது அதை திறந்து பார்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால்
7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத் தரவுப்படி தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத் தில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். இதன் அடுத்த கட்ட மாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை தடுப்பது தொடர்பான நடவடிக்கை தொடங்கி உள்ளோம்.
குமரி மாவட்டம் கேரளா அருகில் உள்ள தால், தற்போது கேரள போலீசாருடன் இணைந்து போதை பொருட்கள் விற்ப னையை தடுத்தல் மற்றும் இது தொடர்பான குற்ற வாளிகளை கைது செய் தல் நடவடிக்கைகளை பரி மாற்றம் செய்து கொள் ளுதல் போன்றவை மேற் கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக தற்போது திரு வனந்தபுரம் மாவட்ட எஸ். பி.யுடன் இணைந்து முதற் கட்டமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளோம். தக வல்களை பரிமாற்றம் செய் யும்போது குற்றவாளிகளை விரைந்து கைது செய்யமுடி யும். கொரியர் சர்வீஸ் சென் டர்களையும் கண்காணித்து வருகிறோம்.
பெரும்பாலும் தற்போது கொரியர் மூலம் கஞ்சா பார்சல்கள் வருவது தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சா, போதை பொருட் கள் விற்பனை மட்டுமின்றி செயின் பறிப்பு குற்றவா ளிகளையும் கைது செய்ய இரு மாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வார் கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா கூறு கையில், கேரள முதலமைச் சர் உத்தரவின்படி போதை பொருள் விற்பனையை தடுக்கவும், இதில் பாதிக் கப்பட்டவர்களை மீட்கவும் நடவடிக்கைமேற்கொண்டு வருகிறோம். பள்ளி, கல்லூ ரிகளில் இது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தி உள்ளோம். போதை பழக்கத்துக்கு அடிமை யானவர்களை கண்டறிந்து அவர்களை அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
பொதுமக்கள், வியா பாரிகள் ஒத்துழைப்பு அவசியம், கேரள எல் லையில் உள்ள அமா விளை சோதனை சாவ டியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இருமாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள் ளும் போது குற்றவாளி களை எளிதில் கைது செய்ய முடியும் என்றார்.
- 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கன்னியாகுமரி:
குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில் சந்தேகப் படும்படியாக வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர்.
பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, வேர் கிளம்பி பகுதியைச் சேர்ந்த விஜி (வயது 22), சஜி (21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வர்களிடம் மேலும் விசா ரணை நடத்திய போது கஞ்சா பொட்டலங்களை கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை யும் பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் தப்பி ஓடியவர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த நிதிஷ் ராஜா, தக்கலையைச் சேர்ந்த ஜெனிஸ், திக்கணம் கோட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீதும் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
- கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு களியக்காவிளை அருகே பி.பி.எம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்று வந்தது.
அந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கோழிவிளை பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது 13 கேன்களில் சுமார் 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் மண்ணெண்ணை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
- போலீசார் தீவிர சோதனை
- பறிமுதல் செய்த கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி:
தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கை யாக இருந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் குழித்துறை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும் படி சொகுசு கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்த போது காரில் சுமார் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது. இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்த கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்ப டைத்தனர். மேலும் தப்பி யோடியடிரைவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
- நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்:
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில், நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், என்ஐஏ சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வீசி தாக்கியதில் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
கடையடைப்பு போராட்டத்திற்க முன்பே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பந்த் போராட்டத்தற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வன்முறையை தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம் என்றும் மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.