என் மலர்
நீங்கள் தேடியது "சந்திரசூட்"
- தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
- அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.
புதுடெல்லி :
சுப்ரீம் கோர்ட்டில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மற்றும் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது ஆன்லைன் மூலம் முதலில் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் இதனை பரிசீலனை செய்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்.
இதனை அவர் ஆய்வு செய்து, வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவாளருக்கு உத்தரவிடுவார். இந்த நடைமுறை காலதாமதமாகும்போது மனுதாரர் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி தங்களது மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கலாம்.
இதற்கிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.
இதேபோல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு தானாக பட்டியலிடும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இந்த நடைமுறையை செயல்படுத்துமாறு பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவசர வழக்குகளை விசாரிக்க வழக்கம்போல முறையீடு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை,
- உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று (பிப் 20) தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, இன்று டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்ட உரையின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் நீதிமன்றங்களை கோயில்களாக கருதுகிறோம். நீதி வழங்குவது கடவுளின் வேலை, அதனால் தான் நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவிக்கும் போது அதனை கடவுளின் தீர்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். நேற்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எனக்கு கிருஷ்ணர் உருவில் தெரிந்தார் என்று கூறியுள்ளார்.
பாஜகவின் பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கடவுளே வந்து அம்பலப்படுத்தினார். பாஜக தேர்தலில் நியாயமாக வெற்றி பெறாமல், குறுக்கு வழியில் வெற்றி தேடியதை வீடியோ ஆதாரம் மூலமாக இந்திய நாடே பார்த்தது என்று பேசியுள்ளார்.
- பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
- அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார். பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.
பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
- தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் கணபதி பூஜை நடைபெற்றது.
- இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் இன்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.
பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
- பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தது சர்ச்சையானது.
- ஐகோர்ட் நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
புதுடெல்லி:
கர்நாடக மாநில ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளருக்கும், குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில் பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது.
இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது ஐகோர்ட் நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது. இரு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த், ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, நீதித்துறை நடவடிக்கைகளின்போது, பெண் வெறுப்பு அல்லது சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் பாதகமானதாகக் கருதப்படும் கருத்துக்களை வெளியிடாமல் கோர்ட்டுகள் கவனமாக இருக்கவேண்டும்.
நாட்டில் உள்ள பெரும்பாலான கோர்ட்டுகள் தற்போது வழக்கு விசாரணையை நேரலை செய்து வருகின்றன. இந்த நேரலை என்பது மக்கள் மத்தியில் நேரடியாக செல்பவை என்பதை நீதிபதிகள், வக்கீல்கள், நீதித்துறையினர் மனதில் கொள்ள வேண்டும்.
எனவே எந்தக் கருத்தையும் கூறுவதற்கு முன் இதனை மனதில் வைத்திருக்க வேண்டும். நீதிபதியின் இதயம், மனசாட்சியும் பார பட்சமற்றதாக இருந்தால் மட்டுமே நீதியை வழங்கமுடியும். நீதித்துறையில் முடிவெடுப்பதற்கு வழிகாட்டு மதிப்புகள் மட்டுமே அரசியலமைப்பில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீதித்துறையின் அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். எனவே இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று யாரும் அழைக்கவேண்டாம். இது தேச
ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.
நீதி என்பது சூரிய ஒளி போன்று பிரகாசமானது. அது மேலும் பிரகாசமானதாக இருக்கவேண்டும். அதனடிப்படையில் கோர்ட்டில் நடப்பதையும் வெளிச்சத்தில் கொண்டு வர வேண்டுமே தவிர, மூடி மறைக்கக் கூடாது என்பதே ஆகும் என்றார்.
மேலும், தான் தெரிவித்த கருத்துக்களுக்காக கர்நாடக நீதிபதி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதால் இவ்வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
- என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி என்று கோபமாக பேசியுள்ளார்
- பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது
உச்சநீதிமன்றம் ஒன்றும் காபி ஷாப் இல்லை என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வக்கீலுக்கு பாடம் எடுத்த சம்பவம் நிகழ்ச்த்துள்ளது. இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வக்கீல் ஒருவருடன் சட்டப்பிரிவு 32 இந்த கீழ் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீது சந்திரசூட் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
2018 தேதியுடைய அந்த மனுவில் அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை அந்த வக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 2018 இல் இந்த வக்கீல் வாதாடிய அந்த பொதுநல வழக்கை அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அந்த மனுவில் எந்த தவறும் இல்லை என்பதால் அதை தள்ளுபடி செய்திருக்கக்கூடாது என்று தற்போது மீண்டும் அந்த வக்கீல் உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவை சமர்ப்பித்துள்ளார். எனவே அதில் ரஞ்சன் கோகாய் பெயரை வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது என்று சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துப் பேசிய வக்கீல், சாதாரணமாகப் பேசுவதுபோல், 'யா [Yeah] யா [Yeah], அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய்... மறுபரிசீலனை மனு..' என்று இழுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசூட், உடனே அந்த வக்கீலை இடைமறித்து, 'இது ஒன்றும் காபி ஷாப் கிடையாது, என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி, இதற்கு இங்கு அனுமதி கிடையாது' என்று கோபமாகக் கடிந்துகொண்டார். இதனால் நீதிமன்ற அவையே சற்று நேரம் சற்று நேரம் அமைதியில் மூழ்கியது.
- சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் இந்த சிலையை திறந்துவைத்தார்.
- சட்டம் குருடு அல்ல என்ற வாசகத்துடன் புதிய நீதி தேவதை சிலை அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.
இப்புதிய நீதிதேவதை சிலை, சட்டம் குருடு அல்ல என்பதையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.
இடது கையில் தராசுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் உள்ளது.
ஏற்கனவே இருந்த நீதி தேவி சிலையில், அதன் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் வாளும், வலது கையில் தராசும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது
- கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
- கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த கருத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். ஒரு சாமானியனுக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பணம் இல்லாமல் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். ED, CBI மற்றும் IT ஆகியவற்றின் தவறான பயன்பாடு நிறுத்தப்பட்ட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் நிறுத்தப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- நாங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தின கொண்டாட்டத்திலும் கூட சந்தித்துக்கொள்கிறோம்.
- நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கியது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில், ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு எனது வீட்டுக்கு பிரதமர் மோடி வந்தார். சமூக மட்டத்தில், நீதித்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே இதுபோன்ற சந்திப்புகள் நடப்பது வழக்கம்தான். எனவே, இதில் தவறு எதுவும் இல்லை.
நாங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தின கொண்டாட்டத்திலும் கூட சந்தித்துக்கொள்கிறோம். பிரதமருடனும், மத்திய மந்திரிகளுடனும் தொடர்ந்து உரையாடி வருகிறோம்.
ஆனால் அந்த உரையாடல், வழக்குகள் சம்பந்தப்பட்டது அல்ல. வழக்குகளை நாங்கள்தான் முடிவு செய்வோம். வாழ்க்கை, சமுதாயம் பற்றி பொதுவானதாகவே அந்த உரையாடல்கள் இருக்கும்.
நீதித்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது என்பதற்காக, இருதரப்பும் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்று அர்த்தம் அல்ல. இதுபோன்ற விஷயங்களை அரசியல் உலகம் முதிர்ச்சியுடன் அணுக வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் சுமுக தீர்வுக்காக நான் கடவுளை வேண்டியது உண்மைதான். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவன்.
"பொதுவாகவே, நீதித்துறையின் சுதந்திரம் என்பது நிர்வாகத்திற்கு கட்டுப்படாத சுதந்திரம் என வரையறுக்கப்பட்டது. தற்போதும், நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதையே குறிக்கிறது. ஆனால் அது மட்டுமே நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படையில் அல்ல.
நம் சமூகம் மாறிவிட்டது. குறிப்பாக சமூக ஊடகங்களின் வருகையால், மின்னணு ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் சில குழுக்கள் செயல்படுவதை காண முடிகிறது.
இந்த குழுக்கள் நீதிபதிகள் தங்களுக்கு சாதகமாக முடிவெடுத்தால், அதை நீதித்துறையின் சுதந்திரம் என்று அழைக்கின்றன. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு நீதிபதிக்கு அவரது மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்றோ, அல்லது அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்றோ அர்த்தமில்லை. அது சுதந்திரம் பற்றிய எனது வரையறை அல்ல."
இவ்வாறு அவர் பேசினார்.
- மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?
- அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உச்சநீதிமன்றத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பக (NJMA) திறப்பு விழாவின் போது இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏஐ (AI) வழக்கறிஞரை அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்த கேள்வியைக் கேட்டு ஏஐ வழக்கறிஞரின் அறிவை சோதிக்க தலைமை நீதிபதி முடிவு செய்தார். "இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?" என்று தலைமை நீதிபதி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஏஐ வழக்கறிஞர், "ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டம். இது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு குற்றம் மிக கொடூரமாக இருக்கும் போது அத்தகைய தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறியது.
இந்த பதில் சந்திரசூட் மற்றும் மற்ற வழக்கறிஞர்களை கவர்ந்தது. அருங்காட்சியக திறப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த அருங்காட்சியகத்தின் கருத்தாக்கம் மற்றும் திட்டமிடலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் எடுத்ததாக கூறினார். இந்த அருங்காட்சியகம் நம் தேசத்தின் வாழ்க்கைக்கு நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது."
"இங்குள்ள எனது சகாக்கள் அனைவரின் சார்பாகவும், இந்த அருங்காட்சியகத்தை இளைய தலைமுறையினருக்கு இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.
தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 65 வயதை எட்டியவுடன் பதவியில் இருந்து விலக உள்ளார். இதற்கு மறுநாளான நவம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
- தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பணிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.
- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா 11-ம் தேதி பதவியேற்கிறார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக இவர் பதவியேற்றார்.
இவரது பணிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நிதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 11-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு நேற்று கடைசி பணி நாளாகும். 9 மற்றும் 10-ம் தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், நேற்றே ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரியாவிடை அளித்தனர்.
அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:
நான் இளம் வக்கீலாக இருந்தபோது, கோர்ட்டிற்கு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பேன்.
எப்படி வாதாடுவது, நீதிமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என பலவற்றை கற்றுக் கொண்டேன்.
வாழ்க்கையைப் பற்றி நீதிமன்றத்தில் நான் ஏராளமாக கற்றுக்கொண்டேன். இந்த நீதிமன்றம்தான் தொடர்ந்து என்னை இயக்கிக் கொண்டிருந்தது. முந்தைய வழக்கைபோல புதிய வழக்கு ஒன்று வருவதில்லை, ஒவ்வொன்றும் புதியதாகவே இருக்கும்.
உங்களில் யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தாலோ, பாதித்திருந்தாலோ என்னை மன்னித்து விடுங்கள்.
ஏனென்றால் நான் எதையும் உள்நோக்கத்தோடு செய்யவில்லை. உங்கள் அனைவருக்கும் நன்றி. நாளை முதல் நான் தீர்ப்பளிக்கமுடியாது. ஆனால் பணி ஓய்வு நாளில் நிறைவாக உணர்கிறேன்.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா மிகவும் கண்ணியமானவர் என நெகிழ்ச்சியுடன் பேசி விடைபெற்றார்.