search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல்"

    • இஸ்ரேலின் மத்திய பகுதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
    • ஏமனில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இஸ்ரேலின் மையப் பகுதி மீது ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

    ஏமன் நாட்டில் மையம் கொண்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் மத்திய பகுதிகளின் மீது நேற்றைய தினம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் மத்திய பகுதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். காசா போருக்கு மத்தியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகினர். கடந்த ஜூலை 19 அன்று இஸ்ரேலின் அமெரிக்க தூதரகம் அருகே நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதிகளின் துறைமுகத்தை இஸ்ரேல் தாக்கி சேதப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹவுதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை பொழிந்துள்ளனர்

    ஏமனில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இஸ்ரேலின் மையப் பகுதி மீது ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் வான் பரப்பிற்குள் வந்த ஏவுகணையை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு தாக்கியது. ஆனாலும், ஏவுகணையின் பாகங்கள் வெடித்து சிதறின. மேலும், ராக்கெட்டுகளும் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதனால், இஸ்ரேலின் மோடின்[Modiin] ரெயில் நிலையத்தில் பாதிப்பு எற்பட்டது. மேலும், பென் ஷபென் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த ஏவுகணை தாக்குதலில் காயமோ, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை 11 நிமிடத்தில் இஸ்ரேலை தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு எமன் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    • ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்.
    • முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன.

    லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதை நடுவானில் இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் அழித்தது.

    இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானில் இருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன. 30 வினாடிகளுக்கு பிறகு 35 ஏவுகணைகள் ஏவப்பட்டன.

    பல ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் திறந்தவெளி பகுதிகளில் விழுந்தது. இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தது.

    • ஈரான்- இஸ்ரேல் இடையிலான பதற்றம் புதிது அல்ல.
    • இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி கலந்து கொண்டார். இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் குறித்து அவரிடம் கேள்வி ஏழுப்பப்பட்டது.

    இது தொடர்பாக இராஜ் இலாஹி கூறியதாவது:-

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான பதற்றம் புதிது அல்ல. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் இந்த பதற்றம் ஈரானில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு புதியதாக ஒன்றும் இல்லை. இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் இந்திய நண்பர்களுக்கு உறுதி அளிக்கிறேன். மேலும், ஈரானுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

    ஈரான் எவ்வளவு பாதுகாப்பானது என்று அவர்களாகவே பார்க்க முடியும். ஈரான் அழகான மற்றும் கவரக்கூடியதாகும். டெல்லி- தெஹ்ரான் இடையே இரண்டு நேரடி விமான சேவை உள்ளது. மும்பை- தெஹ்ரான் இடையே விமான சேவை உள்ளது. இன்னும் விமான சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்களையும் ராணுவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
    • இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதித்தால் அது இஸ்ரேலுடனான அவர்களின் ஒப்பந்தத்தை மீறியதாகிவிடும்.

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 க்கும் அதிகமாக மக்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வரும் அமரிக்கா அதே வேளையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்களையும் ராணுவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதித்தால் அது இஸ்ரேலுடனான அவர்களின் ஒப்பந்தத்தை மீறியதாகிவிடும். நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக காசா மீது இஸ்ரேல் ஏவிய குண்டுகளில் இந்திய நிறுவனங்களின் தயாரிப்பு குறியீடுகள் இருப்பதாக கூறப்பட்டது சர்ச்சையானது.

     

    • இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
    • ஹிஸ்புல்லா கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், மத்திய சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 13 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் அமைப்பின் கூட்டாளியான ஹிஸ்புல்லா கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது.

    லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை அனுப்ப ஈரானுக்கு சிரியா ஒரு முக்கிய வழி என்பதால், சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    • இந்த வார தொடக்கத்தில் எகிப்து அதிபர் துருக்கி சென்று எர்டோகனுடன் காசா போர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
    • துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஐசெனுா் எஸ்கி இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்

    இஸ்ரேலிய  பயங்கரவாதம் 

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40,000 துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். போர் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் துருக்கி நாட்டின் அதிபர் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

     

    இஸ்லாமிய நாடுகளின் கூட்டணி 

    நேற்று இஸ்தான்புல் அருகே கூட்டம் ஒன்றில் பேசிய துருக்கி அதிபர் தாயேப் எர்டோகன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவாகிக்கொண்டே வருகிறது. இஸ்ரேலின் இந்த திமிரையும், அடாவடித்தனத்தையும், இஸ்ரேலிய பயங்கரவாதத்ததையும் அடக்க ஒரே வழி இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பதே என்று தெரிவித்துள்ளார்.

     

    ராஜாங்க உறவுகள் 

    மேலும் எகிப்து மற்றும் சிரியா உடனான ராஜாங்க உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் துருக்கி உள்ளது. இதன்மூலம், அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒரே அணியாக நிற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லெபனான் மற்றும் சிரியாவும் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் உள்ளது என்று எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் எகிப்து அதிபர் துருக்கி சென்று எர்டோகனுடன் காசா போர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 12 வருடங்களுக்குப் பிறகு எகிப்து அதிபர் ஒருவர் துருக்கி வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

    உயிரிழந்த பெண்ணும் உலக அரசியலும்

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சமூக செயல்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்கப் பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

     

    துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஐசெனுா் எஸ்கி சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்நதவர். அவரது கொலைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த கொலைக்கு துருக்கி அதிபர் எர்டோகன் தனது பேச்சின்போது கண்டனம் தெரிவித்து ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய கிழக்கில் முக்கிய நகர்வாக பார்க்கப்டுகிறது. 

    • காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. காசாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த போரை தற்காலிமாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தின. இதற்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஒத்துக் கொண்டன.

    இதையடுத்து காசாவில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள காசாசிட்டி, தெற்கு பகுதியில் உள்ள ரபா நகரில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

    இதனால் மத்திய காசா பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


    முகாம்கள் நடக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றாலும் மற்ற பகுதிகளில் நடத்தப்படும் தொடர் தாக்குதலால் முகாம்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சர் மஜித் அபு ரமதான் கூறும்போது, போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடத்த, தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

    • ஹமாஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர்.
    • இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க மிரட்டல்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வரும் பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே பேச்சு வார்த்தை மூலம் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்தனர். இன்னும் ஹமாஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர்.

    இதற்கிடையே காசாவில் உள்ள ஹமாசின் சுரங்கப் பாதையில் பிணைக்கைதி கள் 6 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டது.

    இதையடுத்து இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. பிணைக் கைதிகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிரதமர் நெதன்யாகு கூறும்போது, "6 பிணைக்கைதிகளையும் தலையின் பின்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் திரும்பக் கொண்டு வராததற்காக உங்களிடம் (மக்கள்) மன்னிப்பு கேட்கிறேன். இதற்கு ஹமாஸ் பெரும் விலை கொடுக்க நேரிடும்" என்றார்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா கூறும் போது, "பிணைக்கைதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு தொடர்ந்து வலியுறுத்தினால் பிணைக்கைதிகள் சவப்பெட்டிகளுக்குள் அவர்களின் குடும்பங்களுக்குத் திரும்பி அனுப்பப்படுவார்கள்.

    இஸ்ரேல் ராணுவம் நெருங்கினால் பிணைக் கைதிகளை வைத்திருக்கும் போராளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கைதிகளின் பரிமாற்ற ஒப்பந்தத்தை வேண்டுமென்றே தடை செய்ததால் கைதிகளின் மரணத்திற்கு நெதன்யாகுவும், இஸ்ரேல் ராணுவமும்தான் முழு பொறுப்பு" என்றார்.

    • காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது.
    • ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

    போரும் பிணைக் கைதிகளும் 

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 மரணித்தனர். மேலும் 250 க்கும் மேற்பட்டடோர் பிணைக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதில் அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் சிலரும் அடங்குவர்.

    அவர்களை மீட்கும் முகமாகவும், தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்துடனும் கடந்த 10 மாதங்களாக காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் அதிகமானபாலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். மேலும் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் பிணைக்கைதிகளாக இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாகப் போர் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஹமாஸ் வசம் இருந்த சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதன்பின் பிணைக்கைதிகள் பரிமாற்றத்தில் இதுவரை உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

     

    மீட்பு 

    சில தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கைத் பர்கான் அல்காதி என்ற 52 வயதான பணய கைதி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர் ஆவார். தங்கள் வீரர்கள் சுரங்கத்தை சென்றடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக பிணைக்கைதிகள் 6 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாகக் கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த படுகொலைக்காக ஹமாஸுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் இஸ்ரேலிய மக்கள் நேதன்யாகு வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    ஹமாஸ் 

    தற்போது ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் ஆயுதக் குழு [எசேதைன் அல் காசம் பிரிகேட்] செய்தி தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளதாவது,'பிணைக்கைதிகளை மேற்பார்வையிடும் முஜாகிதீன் போராளிகளுக்கு, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளோம். ஒப்பந்தத்துக்கு முன் வராமல் நேதன்யாகு ராணுவத்தின் மூலம் அழுத்தம் கொடுப்பதைத் தொடர்ந்தால் பிணைக் கைதிகளை சவப்பெட்டிகளுக்குள் வைத்துத்தான் இஸ்ரேலுக்கு அனுப்புவோம் என்று ஹமாஸ் சார்பில் தெரிவித்துள்ளார்.

    • இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
    • நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

    பாலஸ்தீன நகரங்களின்மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். தொடர் போரால் காசா நகரம் முழுவதுமாக உருக்குலைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களும் சுகாதார சேவைகளும் கிடைக்காமல் தோற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது. இதனை முன்னிட்டு இன்று [செப்டம்பர் 1] முதல் 3 நாட்களுக்கு  தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும் நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன.

     

    அந்த வகையில், நேற்றைய தினம் நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி, சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலையில், நேற்றய தினம் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் சொட்டு மருந்து முகாம்களுக்கு தயாரான நிலையில், காசா பகுதியில் அமைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காசாவில் நேற்று அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

    • அயல்நாட்டு அலுவலக தூதரக குழுக்கலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
    • அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

    லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

    "ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. மோதல் தொடர்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது விரைவில் இந்த நிலை மோசமடையக்கூடும். அயல்நாட்டு அலுவலக தூதரக குழுக்கலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்."

    "ஆனால் இந்த மோதல் தீவிரமானால், நாங்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும் இக்கட்டான சூழல் உருவாகலாம். அந்த சமயத்தில் அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது."

    "நிலைமை மோசமானால், மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்படலாம். இதனால் லெபனானில் உள்ள பிரிட்டன் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்பதே என் எளிமையான தகவல்," என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லேமி தெரிவித்தார். 

    • வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவப்பட்டன
    • இஸ்ரேலில் நேற்று அதிகாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது

    இஸ்ரேல் திடீர் தாக்குதல் 

    லெபனான் மீது நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலைகளைக் குறிவைத்து 100 இஸ்ரேலிய பைட்டர் ஜெட் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

    வடக்கு இஸ்ரேலில் பொதுமக்கள் மீது ஹிஸ்புல்லா பெரியளவிலான தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அதனை முறியடிக்கவே இந்த தற்காப்புத் தாக்குதல் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

    ஹிஸ்புல்லா பதிலடி 

    இத் தாக்குதலால் லெபனானில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் பதிலடி கொடுத்தனர். அந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. வடக்கு இஸ்ரேல் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்ட்டனர். இஸ்ரேல் முழுவதும் நேற்று அதிகாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச விமான சேவைகள் பெரிய அளவில் பாதித்தன. இந்த தாக்குதல்களால் லெபனானில் 3 பேரும் இஸ்ரேலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

     

     

    போர் 

    இந்நிலையில் இந்த தாக்குதல்களை மேலும் தொடர இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இருவரும் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தலைவர் ஹசன் நஹ்ருல்லா கூறுகையில், இஸ்ரேல் மீது தொலைதூர ஏவுகணை அல்லது துல்லியமாக தாக்கும் ஏவுகணை பயன்படுத்தும் எண்ணம் ஹிஸ்புல்லாவுக்கு கிடையாது. ஆனால், வரும் காலங்களில் இஸ்ரேல் மீது இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்' என்று தெரிவித்தார்.

     

    இதுதொடர்பாக பேசிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், நாங்கள் முழுமையான போரை எதிர்நோக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, எதைச் செய்தும் எங்கள் நாட்டை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம், எங்களை காயப்படுத்த நினைப்பவர்களை நாங்கள் காயப்படுத்துவோம், இது [தாற்காலிக நிறுத்தம்] கதையின் முடிவல்ல என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தங்களைத் தற்காத்துக்கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமரிக்கா தெரிவித்துள்ளது.  

    ×