என் மலர்
நீங்கள் தேடியது "பத்திரிகையாளர்"
- துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர்.
- பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏமன் மீதான அமெரிக்காவின் ரகசிய போர் திட்டகங்கள் பொதுவெளியில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் தவறுதலாக அட்லாண்டிக் பத்திரிகை தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க்க்கு சென்று சேர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி இந்த உயர்மட்ட அதிகாரிகள், சிக்னல் செயலி குரூப் சாட்டிங் -இல் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வரவிருக்கும் ராணுவத் தாக்குதல்கள் குறித்து விவாதித்துள்ளனர். இந்த சாட்டிங் இல் அட்லாண்டிக் இதழ் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் தவறுதலாக இன்வைட் செய்யப்பட்டு இணைந்துள்ளார்.
ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூற்றுப்படி, இந்தக் குழுவில் மொத்தம் 18 உறுப்பினர்கள் இருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர். இந்தக் குழுவில் சேருமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸிடமிருந்து தனக்கு இன்வைட் வந்ததாக ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூறுகிறார்.

ஏமனில் தாக்குதலுக்கான இலக்கு இடங்கள், தாக்குதல் வரிசைமுறை மற்றும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் போன்ற முக்கியமான விவரங்கள் இந்த குழுவில் பகிரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கோல்ட்பர்க் தகவலைப் பெற்ற இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. மிகவும் ரகசியமான செயல்பாடுகள் வெளியே கசிந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் தவறுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் இது உண்மைதான் எனத் தெரிவித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. பத்திரிகையாளரை தவறுதலாக இன்வைட் செய்த பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் இந்த விவகாரத்தில் மவுனத்தை கடைபிடித்து வருகிறார். அமெரிக்காவின் வழிகாட்டுதலில் பாலஸ்தீனம், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அமெரிக்கா தீட்டி வரும் போர் திட்டங்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை கூட்டியுள்ளது.
- பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர்.
வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய டிரோன் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
அருகில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த அல்-கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவை டிரோன் குறிவைத்ததாகப் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தனது அறிக்கையில் பெய்ட் லாஹியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது.
இலக்கு வைக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் டிரோன்களை இயக்க உபகரணங்களை சேகரித்து வந்தாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.

- சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
- அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் நர்கிஸ் முகமதி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6 முறை அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்ட நிலையில் தற்போது மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.
சமீப காலங்களாக பெண்களின் ஆடை விஷயத்தில் மிகவும் கடுமை காட்டி வரும் ஈரான் அரசு பொது இடங்களில் சிசிடிவி கண்கணிப்பு மூலமும் எந்நேரமும் தீவரமாக கண்காணித்து வருகிறது . இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து நர்கிஸ் வெளியிட்ட வீடியோவில் பெண்களுக்கு எதிரான தீவிரமான போரை இரான் அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத காரணத்தால் இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாபுக்கு எதிரான கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் வெடித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குறையை பிரயோகப்படுத்தி ஈரான் அடிப்படைவாத அரசு கிளார்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தத்க்கது.

- ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்
- கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
கேமராவை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க்கும் போது ஈரமான மணல் பகுதியால் நிலைதடுமாறி அவர் ஆற்றில் விழுந்தார். சமாளித்துக்கொண்டு நீந்தி வந்த அவரை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் மேலே வர முடியாமல் அவர் திணறினார். கடைசியாக ஒருவழியாக சமாளித்துக்கொண்டு கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- அரசியல்வாதி தாக்கியது தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.
- பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- பத்திரிகையாளருக்கும், ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம்.
- சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.
தேனி:
தேனி-மதுரை சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றனர்.
ஆனால் அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அவரை சூழ்ந்த நிருபர்கள் மலையாள சினிமா குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

ஆனால் அவர் அந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறினார். இருந்த போதும் தொடர்ந்து கேள்வி கேட்டதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ஜீவா உங்களுக்கு அறிவு இருக்கிறதா, நான் எந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.
இதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும், நடிகர் ஜீவாவுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
- பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது,.
சென்னை:
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பத்திரிகையாளர்களின் நலனைக் காப்பதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 'பத்திரிகையாளர் நலவாரியம்' உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் 3300 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர் நலவாரியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
- நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார்
ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்ப்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி [52 வயது] கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார் நர்கிஸ் முகமதி. எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ காரணங்களுக்காக மூன்று வாரங்கள் சிறையில் இருந்து கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
அவரை நோபல் பரிசுக் குழு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இந்த உரையாடலில் வீடியோவை நோபல் பரிசு குழு பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.

எனது சக கைதிகளில் ஒருவர் சிறையில் ஆண்கள் வார்டில் இருந்த தனது கணவரை தொடர்புகொண்டார். அவர்கள் மூலம் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற செய்தியை அறிந்துகொண்டோம். அது நம்பமுடியாத\தாக இருந்தது
எவின் சிறைச்சாலை முழுவதும் இந்த செய்தி பரவியபோது பெண்கள் வார்டு "பெண் வாழ்க்கை சுதந்திரம்"[Woman Life Freedom] என்ற முழக்கத்தால் நிறைந்ததை முகமதி அந்த வீடியோவில் நினைவு கூர்ந்தார். இந்த வீடியோவில் பச்சை நிற டாப்ஸ் அணிந்திருந்த முகமதி தலையில் எந்தவித உடையையும் [ஹிஜாப்] அணியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முகம்மதியின் நிபந்தனையற்ற நிரந்தர விடுதலைக்கு உளமெங்கிலும் இருந்து சமூக செயல்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
- தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது.
- வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.
1972ம் ஆண் தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கசைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இதைதொடர்ந்து, பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, நேற்று காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.

தலைவர் - சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது, இணைச் செயலாளர் - நெல்சன் சேவியர், பொருளாளர் - மணிகண்டன், துணைத் தலைவர் - சுந்தர பாரதி, துணைத் தலைவர் - மதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், " சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்" என்றார்.
- சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டது.
- சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவராக சுரேஷ் வேதநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972ம் ஆண் தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கசைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இதைதொடர்ந்து, பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, கடந்த 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.
தலைவர் - சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது, இணைச் செயலாளர் - நெல்சன் சேவியர், பொருளாளர் - மணிகண்டன், துணைத் தலைவர் - சுந்தர பாரதி, துணைத் தலைவர் - மதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், " சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (Chennai Press Club) 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, என்றும் நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி, புதிய நிர்வாகக் குழு வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகிறேன்" என்றார்.
- சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவராக சுரேஷ் வேதநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
1972ம் ஆண் தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கசைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இதைதொடர்ந்து, பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, கடந்த 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.
தலைவர் - சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது, இணைச் செயலாளர் - நெல்சன் சேவியர், பொருளாளர் - மணிகண்டன், துணைத் தலைவர் - சுந்தர பாரதி, துணைத் தலைவர் - மதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க,.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'Journalism'-த்திற்கும் 'Sensationalism'-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உணர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
- பிஜப்பூரில் நடந்த சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார்.
சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், முகேஷ் சந்திரகர் [33 வயது]. அம்மாநிலத்தில் மாவோயிட் மற்றும் அரசுக்கு இடையில் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்த இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனார்.
இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஜப்பூரில் பத்திரிகையாளர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
என்டிடிவி உட்பட பல முன்னணி தொலைக்காட்சிகளுக்காக பணியாற்றிய முகேஷ், மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தரில் களத்தில் தீவிரமான செய்தி சேகரிப்பவராக அறியப்பட்டவர்.
ஏப்ரல் 2021 மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட கோப்ரா கமாண்டோவை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிப்பதில் முகேஷ் முக்கிய பங்கு வகித்தார்.
முகேஷ் சமீபத்தில் பிஜப்பூரில் நடந்த அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது விசாரணை நடந்தது. இந்த ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பரிடம் சில நாட்களுக்கு முன் முகேஷ் எடுத்த பேட்டியில் பல கேள்விகளை கேட்டிருந்தார்.

இந்நிலையில் புத்தாண்டில் காணாமல் போன முகேஷ் கடைசியாக சென்ற இடம் சுரேஷின் குடியிருப்புப் பகுதி என சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெரிய வந்தது.
தொடர்ந்து, அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில் ஒரு செப்டிக் டேங்கில் முகேஷ் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கில் சுரேஷின் சகோதரர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகைத்துறையில் 10 ஆண்டுகளாக இயங்கி வரும் முகேஷ், பஸ்தர் ஜங்ஷன் என்ற 159,000 பின்தொடர்பவர்கள் கொன்ற யூடிபூப் சேனலையும் நடத்தி வந்தார்.
