என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர்"

    • மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
    • போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    இந்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி குழு என்ற அமைப்பு தொடங்கியது. வர்த்தகர்களும் போராட்டத்தை குதித்தனர். மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுதந்திரம் தேவை என கோஷம் எழுப்பினர். இதில் முஷாபராபாத் உள்பட சில மாவட்டங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சில இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினரை மக்கள் தாக்கினார்கள். இதில் சில போலீஸ்காரர்களை பள்ளத்தில் தள்ளி விட்டனர்.

    இந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 90 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசாரும்,துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் குண்டுகளை வீசினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரம் அடைந்துள்ளது.

    • திர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முசாபராபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.

    ஆனாலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், முசாபராபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    துணை ராணுவ வீரர்களின் வாகன கான்வாய் முசாபராபாத் சென்றடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே பொதுமக்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ வீரர்கள் பொதுமக்களை கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் பொதுமக்களில் 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 4 இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ஜம்மு காஷ்மீர்துணை நிலை கவர்னர் மனோஜ்சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலை அமித்ஷா வழங்கினார்.

    இந்நிலையில் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள அரகம் பகுதியில் நேற்றிரவு 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் உள்ள ஹடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.
    • பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜம்மு காஷ்மீர்:

    ஜம்மு-காஷ்மீரில் மலைப்பாங்கான மாவட்டத்தில் ஜூன் 11-12 தேதிகளில் இரட்டை பயங்கரவாத தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். இரட்டை தாக்குதல்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். மற்றும் மாவட்டத்தில் ஊடுருவி செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.

    இந்த நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



    • பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர்.
    • பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மேலும், பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்.
    • காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் 370-வது சட்டப் பிரிவு அமலில் இருந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத் துடன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது.

    இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் அனுபவித்து வந்த சிறப்பு சட்ட சலுகைகள் பறிபோனது. இதற்கு காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    370-வது சட்டப்பிரிவை நீக்கியதோடு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு என்று யூனியன் பிரேதசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதை ஒடுக்குவதற்காக மத்திய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட 5-வது ஆண்டு தினமான இன்று (திங்கட்கிழமை) காஷ்மீரிலும் பஞ்சாப் மாநிலத்திலும் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படை சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

    காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் அவர்களது இந்திய ஆதர வாளர்களுடன் தொலைபேசியில் பேசியதை ஒட்டு கேட்டு உளவுப்படை இதை உறுதிப்படுத்தி உள்ளது.

    சர்வதேச உளவு அமைப்புகளும் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலுக் கான சதி திட்டம் நடந்து வருவதாக இந்தியாவை எச்சரித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பும், சோதனை யும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்காத வகையில் வாகன சோதனையும் நடந்து வருகிறது.

    • அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

    புதுடெல்லி:

    மராட்டிய மாநில சட்ட சபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ந்தேதி நிறைவு பெற உள்ளது. அதுபோல அரியானா மாநில சட்டசபை யின் 5 ஆண்டு கால பதவி காலம் நவம்பர் 3-ந்தேதி நிறைவு பெறுகிறது.

    ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிய உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் முதல் செய்ய தொடங்கியது.

    இதனால் இந்த 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். முதல் கட்டமாக இந்த 4 மாநி லங்களிலும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அரசு உயர் அதிகாரிகளை மாற்றம் செய்யும் பணி நடந்தது.

    இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் 4 மாநிலங்களிலும் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்தது. அதோடு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தியது. அடுத்த கட்டமாக அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஓட்டுப்பதிவை எப்போது நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 மாநிலங்களுக்கும் சென்று வந்தனர்.

    குறிப்பாக காஷ்மீரில் பாதுகாபபு ஏற்பாடுகள் பற்றி கடந்த சில தினங்களாக தீவிர ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

    இதையடுத்து 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதனால் இந்த 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

    இதையடுத்து 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்த தொடங்கி உள்ளன.

    இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. மராட்டி யத்தில் பா.ஜ.க.-சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சி உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    காஷ்மீரில் யூனியன் பிரதேச கவர்னர் மூலம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மிக மிக தீவிரமாக உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் இப்போதே களை கட்ட தொடங்கி உள்ளது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க போகிறேன் என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன.
    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கி உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு ரத்து செய்தது. அதோடு அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரித்தது. அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.

    காஷ்மீரில் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டசபையில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18-ந்தேதியும், 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு 25-ந்தேதியும், 3-ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் மாதம் 1-ந்தேதியும் தோ்தல் நடத்தப்பட உள்ளது.

    முதல் கட்ட தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 24 தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 279 பேர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன.

    அப்போது 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மீதமுள்ள 244 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற இன்று பிற்பகல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று கட்சி மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள். இறுதியில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது இன்று மாலை தெரியவரும்.

    இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கி உள்ளது. கங்கன், ஹஸ்ரத் பால், லாக் சவுக், ஈத்கா, பத்காம், பீா்வா, கான்சாஹிப், குலாப்கா் (தனி), காலாகோட்-சுந்தா்பானி, நெளஷேரா, ரஜவுளரி (தனி), சுரன்கோட் (தனி), பூஞ்ச் ஹவேலி உள்பட இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    2-ம் கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 7.74 லட்சம் போ் உள்ளனா். கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதி களுக்கும் இந்த கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பிறகு 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும்.

    பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    • வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
    • தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப் படுகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    கடந்த 18-ந்தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2-ம் கட்டமாக நேற்று 26 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுபதிவு நடத்தப்பட்டது. 2 கட்ட வாக்குப்பதிவும் அமைதியாக நடந்து முடிந்தது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    காஷ்மீரில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பாரதீய ஜனதாகளம் இறங்கி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    3- ம் கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் இன்று மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    3-ம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வருகிற 29-ந்தேதியுடன் பிரசாரம் முடிவடைய இருக்கிறது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி போட்டியிடுகிறது. மேலும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளும் களத்தில் உள்ளன.

    தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க போவது யார்? என்பது தெரிந்து விடும்.

    • தாக்குதலில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
    • கடந்த 2 வாரங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த உஸ்மான் மாலிக்(20) மற்றும் சோபியான்(25) என்பது தெரியவந்துள்ளது. காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும்.

    கடந்த மாதம் 20-ந்தேதி கந்தர்பால் மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த இருவர், ஒரு டாக்டர் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.2700 கோடி செலவில் 6.5 கி.மீ. நீளத்திற்கு இசட் வடிவ சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
    • 8,650 அடி உயரத்தில் இந்த சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாட்டின் உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    அந்த வகையில் மேம்பாலங்கள், ரெயில் நிலையங்கள், புதிய விமான நிலையங்கள் என நாடெங்கும் கட்டப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதின் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் இசட் வடிவ சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.


    ஸ்ரீநகர் தேசிய நெடுஞ் சாலையில் ரூ.2700 கோடி செலவில் 6.5 கி.மீ. நீளத்திற்கு இசட் வடிவ சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் இந்த சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    சோன்மாா்க் சுரங்கப் பாதை செயல்பாட்டுக்கு வரும் சூழலில், ஸ்ரீநகா்-லே இடையே அனைத்து பருவ நிலைகளிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக் கப்படாமல் இருக்கும்.

    'ஜீ-மோா்க் சுரங்கப்பாதை திறக்கப்பட்டால், சோன் மாா்கிற்கு ஆண்டு முழு வதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம். சோன் மாா்க் ஒரு சிறந்த பனிச்சறுக்கு விளையாட்டு மையமாக மேம்படும்.

    குளிர் காலத்தில் ஊரை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் சோன்மாா்க் மக்களுக்கு இருக்காது. மேலும், ஸ்ரீநகரில் இருந்து காா்கில் மற்றும் லே வரையிலான பயணநேரம் குறையும்.

    தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள இச்சுரங்கப்பாதை சுற்றுலாப் பயணிகளின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    6.5 கி.மீ. நிளத்திற்கு கட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதை இருவழிப் பாதையாக தலா 7.5 மீட்டர் அகலம் கொண்ட சிக்சாக் (வளைவுகள் அதிகம் கொண்ட) வடிவில் கட்டப்பட்டுள்ளது.

    இச்சாலையில்பயணம் செய்தால் 15 நிமிடத்தில் அடுத்தப் பகுதியை அடைந்து விடலாம்.

    அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    உடையக்கூடிய இமயமலைப் புவியியலைக் கருத்தில் கொண்டு என்.ஏ.டி.எம். சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

    காஷ்மீர் மாநிலம் சந்தர் பால் பகுதியில் அமைந்துள்ள இச்சுரங்கப் பாதையை நாளை (திங்கட்கிழமை) பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இந்த பொறியியல் சாதனைக்காக கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் அயராது பணியாற்றிய கட்டுமான தொழிலாளா்களையும் பிரதமா் மோடி சந்தித்து, கலந்துரையாடுகிறார்.

    இந்த சுரங்கப்பாதையின் அருகில் 10 மீட்டர் அகலத்தில் 7.5 மீட்டர் அகலம் கொண்ட மற்றொரு சுரங்க பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மெயின் சுரங்க பாதைக்கு இணையாக இந்த சுரங்க பாதை செல்கி றது. அவசர காலத்தில் இதனை பயன்படுத்தும் வசதியாக அமைக்கப் பட்டுள்ளது. மேலும் ரெயில்வே சுரங்கப்பாதை யாகவும் இதனை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சுரங்க பாதையால் பாதுகாப்பு தளவாடங்களை அதிகரிப்பதோடு ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கில் பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக -கலாசார ஒருங்கிணைப்பு மேம்படும்.

    ×