search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174809"

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி ஆகும். பிஏபி பாசன தொகுப்பு அணைகளின் இது கடைசி அணையாகும் .இதன் மூலம் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது .உடுமலை நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் வறண்டு கிடக்கின்றன .தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை காரணமாக தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் .அப்போது திருமூர்த்தி அணைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

    தற்போது நீர் வரத்து இல்லாததால் தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் குறைவாக உள்ளது. பிஏபி அணைகளின் தாய் அணையாக கருதப்படும் வால்பாறை சோலையார் அணையில் மொத்தமுள்ள 165 அடியில் வெறும் 22. 49 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. இதே போல் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் 13 .16 அடிக்கும் 170 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில் 67. 75 அடிக்கும் திருமூர்த்தி அணையில் 29. 19 அடிக்கும் மட்டுமே நீர்மட்டம் உள்ளது.

    திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. தற்போது அதைவிட 5 அடி குறைவாக உள்ளது. நீர்வரத்து ஒரு கண அடியாக உள்ளது .27 கன அடி நீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கும். எனவே விரைவில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    • 137 கன அடி தண்ணீர் வரத்து
    • 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது

    கரூர்,

    90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 6 மணி நிலவரப்படி 62 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 137 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 15 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1850 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    • கோழிபோர்விளையில் 95.4 மில்லி மீட்டர் பதிவு
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. நேற்று காலையில் வழக்கமாக வெயிலடித்து வந்த நிலையில் மாலையில் சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

    இரவு மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று 7 மணிக்கு மழை பொய்ய தொடங்கியது. இரவு 9 மணி முதல் சுமார் 1 மணி நேரமாக மழை கொட்டியதையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. கோழிப்போர்விளையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 95.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, கொட்டாரம், கன்னிமார், மயிலாடி, குளச்சல், தக்கலை, இரணியல், முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. குலசேகரம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குளிர் காற்று வீசியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டிய மழையின் காரணமாக அருவியல் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.87 அடியாக இருந்தது. அணைக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 71 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டமும், பாசன குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்னை, ரப்பர் விவசாயி களுக்கும் மழை பயனுள்ளதாக அமைந்து ள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பேச்சிப்பாறை 35.8, பெருஞ்சாணி 9, சிற்றார் 1-21.4, சிற்றார் 2 -32.2, பூதப்பாண்டி 82, கன்னிமார் 38.6, கொட்டா ரம் 30.4, மயிலாடி 17.4, நாகர்கோவில் 59.4, புத்தன் அணை 7.6, சுருளோடு 11, தக்கலை 72.3, குளச்சல் 4.6, இரணியல் 28.2, பாலமோர் 8.6, மாம்பழத்துறை யாறு 53, திற்பரப்பு 73, ஆரல்வாய் மொழி 18, கோழி போர்விளை 95.4, அடையாமடை 37.2, குருந்தன்கோடு 34, முள்ளங்கினாவிளை 84.6, ஆனைக்கிடங்கு 50.4, முக்கடல் 28.7.

    • பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்பட்டு வருகிறது. வனப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் அதன் வழி உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பா ளையம், குடிமங்கலம், மடத்து க்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வரும் வரும் சுனைகளின் தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிரம்பி நின்ற இடங்கள் மணல் திட்டுகளாக காட்சியளிக்கின்றன.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:- வெப்பம் அதிகரித்து இருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. அங்கேங்கே அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யவில்லை. இதனால் கவலையாக உள்ளது. மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணைகளில் தூர்வாரும் பணியை தொடங்கி நீர் நிற்கும் தேங்கி பரப்பை அதிகப்படுத்த வேண்டும். நவீன இயந்திரங்கள் மூலம் ஆழப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்றனர்.

    நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 30.71 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 116 கனஅடி தண்ணீரும் நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது. அணைப்பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும், நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 55.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இந்த தகவலை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக நாளை தண்ணீர் திறப்பு
    • 2 மாத காலத்திற்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தற்பொழுது தண்ணீர் வினியோகிக்கப் பட்டு வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது. நீர்மட்டம் மைனஸ் 19.40 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் மைனஸ் அடியை சென்றதையடுத்து தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க மாநகராட்சி மேயர் மகேஷ் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார். நாளை (25-ந்தேதி) முதல் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே நாளை முதல் அணைகளில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு முக்கடல் அணைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர மாநகராட்சி குடிநீர் லாரிகள் மூலமாகவும் ஒவ்வொரு பகுதியாக சென்று தண்ணீர் வழங் கப்பட்டு வருகிறது. புத்தன் அணை குடிநீர் திட்டம் தற்பொழுது நாகர்கோவில் மாநகர பகுதியில் நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள 5 சதவீத பணிகளை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாத காலத்திற்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது. புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முழுமைபெறும் பட்சத்தில் நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடை இன்றி முழுமையாக தண்ணீர் விநியோகிக்க முடியும். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்த வரை அணைகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.66 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.95 அடியாக உள்ளது. அவ்வப்போது அணை பகுதிகளில் மழை பெய்து வருவதால் மிதமான அளவு தண்ணீர் வருகிறது.

    • பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
    • பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    வாழப்பாடி:

    கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.

    கடந்தாண்டு இறுாதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, கரியக்கோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோயில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாயக்கிழமை நிலவரப்படி 27.52 அடியாக சரிந்து போனது. தற்போது அணையில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது. கோடை தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.
    • கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க உத்தேசிக்க பட்டு இருந்தது.

    இதற்கு எதிராக விவசாயிகள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அனுமதிக்கப்படவில்லை.

    தற்போது இதுகுறித்து மணல் குவாரியில் ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் உத்தேசிபட்டிருக்கும் மணல் குவாரி அமைவிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை, கனிமவளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைவிடம் உள்ள இடத்தை காவிரி ஆற்றில் இறங்கி நடந்து சென்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.

    அப்போது பவனமங்கலம் கிராம மக்கள் சார்பில் வழக்கறிஞர் ஜீவகுமார், பாலகணேசன், பொன்னு ராமன் ஆகியோர் கலெக்டரிடம் பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று மனு ஒன்றை அளித்தனர்.

    இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பவனமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பாசன வசதி அளிக்கும் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டு இங்குள்ள மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, ஊரின் குடிநீர்.

    மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல் குவாரி அமைக்க முயற்சி செய்தபோது பவனமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    எனவே எங்கள் கிராம மக்களின் நலனுக்காகவும் கிராம சபைமுடிவுகளுக்கும் எதிராக பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விவசாயிகளிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரி வித்தார்.

    கடந்த 2018ம் ஆண்டு பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பு குறித்த அறிவிப்பு பலகையும், மணல் குவாரிக்காக அடையாளம் இடப்பட்டு நடப்பட்ட சிமெண்ட் கம்பங்களும் காவிரி ஆற்றில் அப்படியே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.இரு மாவட்ட பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் இம்மாத இறுதி வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.இந்நிலையில் அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 51.87 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,269.45 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 170 கன அடியாகவும், அணையிலிருந்து பாசனத்திற்கு 90 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

    நடப்பாண்டு நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் கோடை காலத்தை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், அணையில் குடிநீர் தேவைக்கான நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரு நாட்களாக மழை பெய்து நீர் வரத்து காணப்படுகிறது. கோடை காலத்தில் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    • புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை 33 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும்.

    மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் பாசனத் திற்காகவும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பாசனத்திற்காக புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடியாக 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.96 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2.47 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு இதுவரை திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் நேற்று முதல் காலிங்கராயன் பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.96 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 298 கன அடியாக குறைந்தது.

    காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஒரு வார காலமாக பனிபொழிவு குறைந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் காலை 37.85 அடியாக இருந்தது. 434க்கு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் முழுவதும் கொட்டி தீர்த்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    கடந்த ஒரு வார காலமாக பனிபொழிவு குறைந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே சிரமப்பட்டனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிப்பிற்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை திடீரென சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மதியம் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு மின்னல் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தது. இன்று அதிகாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் இடைவிடாது பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 4.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் 1.8 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது. அதிகாலை யில் பெய்த மழையின் காரணமாக இதமான குளிர் காற்று வீசியது. பின்னர் காலையில் வழக்கம் போல் வெயில் அடிக்க தொடங்கி யது 

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.85 அடியாக இருந்தது. அணைக்கு 434க்கு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 592 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. அணைக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.51 அடியாக உள்ளது. அணைக்கு 91 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்தும் 1192 தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு உள்ளது. வழக்கமாக பாசனத்திற்காக ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் அணைகள் பிப்ரவரி 26 -ந் தேதி மூடப்படுவத வழக்கம்.

    ஆனால் கடை மடை பகுதிகளில் விவசாயம் கருகும் நிலையில் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மார்ச் 20 -ந்தேதி வரை தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    • அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவ தால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 725 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று 1,500 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,800 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×