என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174809"

    • மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 53 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    அணைக்கு வினாடிக்கு 134 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

    இதேபோல் பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீடடரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.05 அடி நீர்இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 463.89 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 404.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் முக்கிய நீர்ப்பி டிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து 56 நாட்கள் 102 அடியில் பவானிசாகர் அணை நீடித்தது.

    மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,822 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 594 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்த–தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 594 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடி என மொத்தம் 2,600 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    எனினும் அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வந்தது.

    இந்நிலையில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 913 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி என மொத்தம் 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 2,800 கன அடியாக நீர் வரத்து சரிந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 2,800 கன அடியாக நீர் வரத்து சரிந்தது. பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 500 கன அடி தண்ணீரும் என 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணை 102 அடியில் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • குழித்துறை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • பேச்சிப்பாறையில் 67.4 மி.மீ. மழை பதிவு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை அணை பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 67.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிச மான அளவு உயர்ந்துள் ளது. இதனால் அணை களின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியை நெருங்கி வருகிறது. இதை யடுத்து அணையின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டமும் 71.45 அடியை எட்டியது. அணை யின் நீர்மட்டம் 71 அடியை கடந்ததையடுத்து அருவிக்க ரை, திருவட்டார் மற்றும் குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவு றுத்தி வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.87 அடியாக உள்ளது. அணைக்கு 1494 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.45 அடியாக உள்ளது. அணைக்கு 1197 தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.40 அடியாக வும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.49 அடியாகவும், பொய்கை அணை நீர்மட் டம் 17 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர் மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 13.60 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-67.4, பெருஞ்சாணி-44, சிற்றார்-1-55.2 பூதப்பாண்டி- 7.2, கன்னிமார்-8.8, புத்தன் அணை-43, சுருளோடு-18.4, பாலமோர்-27.4, திற்பரப்பு-7.4, அடையா மடை-2.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    மேலும் கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் இன்று 2-வது நாளாக திடீரான தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து வெகு நேரமாகி யும் தொடங்கப்ப டாமல் இருந்தது.

    இதனால் விவேகா னந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற் றத்துடன் கடற்கரையில் நின்றபடியே விவேகா னந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப் படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் சுற்றுலா பயணி கள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத் துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.

    இதன் காரணமாக அணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது.
    • இன்று 11-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது. இருப்பினும் தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 11-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரத்து 800 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 5400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. உபரி நீர் குறைந்த அளவில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது. இதனால் பவானி கரையோர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2½ மணி நேரம் தாமதமாக தொடக்கம்.
    • கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை 3-வது நாளாக தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துஉள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்ட பத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப்படம் மற்றும்செல்பி எடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.இதைத்தொடர்ந்து 2½ மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து காலை10.30மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்ட பத்தை பார்வையிட்டுவந்தனர். இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையின் முன்பு உள்ள தரைப்பாலத்தையும், சொக்கநாதபாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றின் தரைப்பாலத்தையும் மூழ்கி தண்ணீர் செல்கிறது.

    சென்னிமலை:

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் நேற்று காலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 1040 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையில் 16 அடி தண்ணீர் தேங்கி இருந்தது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மாலை 4 மணி அளவில் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்தது. அப்போது வினாடிக்கு 2,523 கன அடி நீர்வரத்து இருந்தது. ஒரே நாளில் 4 அடி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

    அணையில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் அணை முழுவதும் ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பில் உள்ளது. நேற்று மாலை அணையில் இருந்து வினாடிக்கு 2,023 கனஅடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் அணையின் முன்பு உள்ள தரைப்பாலத்தையும், சொக்கநாதபாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றின் தரைப்பாலத்தையும் மூழ்கி தண்ணீர் செல்கிறது.

    இதனால் தரைபாலத்தை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் அணையின் அருகில் உள்ள ஒரத்துப்பாளையம், கொடுமணல், தம்மரெட்டிபாளையம், செம்மங்குழிபாளையம், மறவபாளையம், சொக்கநாதபாளையம், மருதுறை, குருக்கள் பாளையம், நத்தக்காடையூர் உள்பட பல கிராம புறங்களுக்கு இடையே செல்வேர் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து. 101 அடியை எட்டியது.
    • பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்ப ணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து. 101 அடியை எட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 2,327 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் காலி ங்கராயன் பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 105 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    தற்போது பவானிசாகர் அணையின் அடி 101.50 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் ஒரு நாளில் 102 அடியை எட்டி விடும். இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள பாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்ப ணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் குண்டேரி பள்ளம் அணை, பெரும்ப ள்ளம் அணை, வரட்டுபள்ளம் அணை யிலும் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×