என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி காயம்"

    • பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் திரு.வி.க பஸ் நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, பூண்டி, மற்றும் ஆந்திர மாநிலம் காளாஸ்திரி திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் (வயது 59) என்பவர் பஸ் ஏறுவதற்காக வந்தார். அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பஸ்நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அப்துல் சலீம் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், வேடங்கி நல்லூரில் ரூ84 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ரெயிலில் எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு மற்றும் வழக்கு செலவை வழங்கும்படி ரெயில்வே துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Railways
    சேலம்:

    சேலத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரை எலி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர், டிக்கெட் பரிசோதகரிடம் கூறியபோது முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்யவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில்தான் சிகிச்சை பெற முடியும் என்று கூறியிருக்கிறார்.

    கடைசியாக எழும்பூர் ரெயில் நிலையம் வந்ததும், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். முதலில் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேசமயம், எலி கடித்ததால் மனவேதனை அடைந்ததாகவும், இதற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 4 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் இப்போது நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட பயணி வெங்கடாச்சலத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மருத்துவச் செலவிற்கு ரூ.2 ஆயிரம் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.5 ஆயிரம் வழங்கும்படி ரெயில்வே துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தொகையை மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். Railways
    கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் மீது கல்வீசியதில் பயணி மண்டை உடைந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நேற்றிரவு மின்சார ரெயில் ஒன்று சென்றது. பரங்கிமலை நிலையம் நெருங்கும் முன்பாக கிண்டி மடுவங்கரை மேம்பாலத்தில் ரெயில் சென்ற போது திடீரென கல் பறந்து வந்தது. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பயணி சாம்சுந்தர் மீது கல் விழுந்தது.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பரங்கிமலை நிலையத்தில் இறங்கிய அவர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். ரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்ட அவரை உடனே ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குரோம்பேட்டையை சேர்ந்த அவர் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி போலீசாரிடம் விளக்கி கூறினார்.

    இதைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் இரவு கல் வீசப்பட்ட பகுதிக்கு சென்றனர். அப்போது போலீசார் மீதும் கற்களை வீசிவிட்டு ஓடிவிட்டனர். கிண்டி ரெயில் நிலையம் பகுதியில் உள்ள சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதி போலீசார் அவர்களை ‘பொறி’ வைத்து தேடி வருகிறார்கள்.

    ×