என் மலர்
நீங்கள் தேடியது "கார்த்தி சிதம்பரம்"
- பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
- இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தெரிவித்தார். அப்போது அமித்ஷா, தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது மிகப்பெரிய விவாதப்பொருளாகியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அரசு என மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும் இதுபற்றி பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கட்சி தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணி, துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றதுதான் என்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை. அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களிடம் பேசியபோது, அவர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது என்றார்.
- தங்கள் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா?
- எத்தனை மாணவர்கள் தமிழை ஒரு மொழி விருப்பமாகப் படித்துள்ளனர்?.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.
இந்நிலையில் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக மு.க. ஸ்டாலினை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்து வருகிறார்.
செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் பேசிய யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.
உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உ.பி. சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தங்கள் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா?.
எத்தனை மாணவர்கள் தமிழை விருப்பம மொழிப் பாடமாக படித்துள்ளனர்?. தமிழ்நாட்டில் மாணவர்கள் கட்டாயமாக இந்தி கற்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தமிழ் குறித்த முன் அறிவு இல்லாமல் வருகிறார்கள். இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து இருந்தார்.
- பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சியில் முக்கிய தலைவர்கள் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சந்தித்து 25 மாவட்டத் தலைவர்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதில் அளித்த செல்வப்பெருந்தகை, கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது மறைந்த ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் திருநாவுக்கரசு ஆதரவாளர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார். பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தி, பிரியங்காவிடம் நெருக்கமாக இருப்பதால் பதவியை பெற்று விட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார்.
- பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி
பாராளுமன்றத்தில் நேற்று அதானி குழும விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. எம்.பி.க்களின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச்சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அது வருமாறு:-
கனிமொழி (தி.மு.க. எம்.பி.):- அதானி குழுமத்தின் நிலையால் பொதுத்துறைகளில் சாமானிய மக்கள் முதலீடு செய்த பணம் என்ன ஆனது என நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் பா.ஜனதா இதை காதில் வாங்கவில்லை. அவையை ஒத்தி வைத்துவிட்டனர். நாங்கள் கூட்டுக்குழு விசாரணை கேட்டு இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதை வலியுறுத்துகிறார். நிச்சயம் நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
கார்த்தி ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.):- வெளிப்படையான, தரமான சந்தை பரிமாற்றம் உள்ள ஒரு நாட்டில் வெளிநாட்டு அமைப்பு சில கருத்துகளை சொன்னால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கவனிக்கும் மந்திரியோ, அதிகாரியோ மக்களை சந்தித்து நாட்டின் நிலை என்ன? என்று வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். சாதாரண மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பொதுத்துறைகளை நிர்வகிக்கும் செபி, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளன. இதையெல்லாம் பற்றி அரசு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவையை ஒத்திவைத்து விட்டனர். இதுபற்றி முதலில் அரசு பதில் அளிக்கட்டும். அது திருப்தியா? இல்லையா? என்பதை பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.
வெளிநாட்டு அமைப்பு சொல்வதாலேயே அது உண்மை என ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?. இதில் பொதுமக்களின் பணமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அது பத்திரமாக இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.
ஜோதிமணி (காங்கிரஸ் எம்.பி.):- அதானி குழுமம் வீழ்ச்சியால் அதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யில் ஒரே நாளில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடி நாசமாகியுள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை இந்த பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கடந்த 8 ஆண்டுகளாக இது அதானி அரசு என்று சொல்வது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
- கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.
ராய்பூர்:
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;
"வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தெருநாய்களின் தொல்லை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
- தெருநாய்கள் கடித்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ள அவர், இதில் உடனடி கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுள்ளார்.
புதுடெல்லி:
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தெருநாய்களின் தொல்லை குறித்து கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீபத்தில் ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தெருநாய்கள் கடித்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ள அவர், இதில் உடனடி கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுவதை சுட்டிக்காட்டி, கருத்தடை பணிகள் தோல்வி அடைந்தது போலத் தெரிவதாகவும், எனவே மத்திய அரசு தெருநாய்களை கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்து தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார்.
- வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
புதுடெல்லி:
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும், அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.
நாடு முழுவதும் காங்கிரசார் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமோ போராட்டங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது செயலை பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார். அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்திருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி உள்ளே சென்ற ராகுல் காந்தி, கைகொடுக்க காத்திருந்த கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
- ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
- கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
புதுடெல்லி :
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 4 லட்சம் ஆகும். அவற்றில், கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.
- ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
- உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.
எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது.
- விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும்போது தொகுதிகளை கணிக்கும் வேலையில் கட்சிகள் ஈடுபட்டாலும் இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காய் நகர்த்துவார்கள்.
அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை அலசும் வேலையில் இப்போதே இறங்கி விட்டார்கள். இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் சிலர் தொகுதி மாறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையேயான லடாய் எல்லோரும் அறிந்ததே.
இந்த நிலையில் ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது. இதை சாக்காக வைத்து வருகிற தேர்தலில் அவருக்கு இந்த தொகுதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிய வந்துள்ளது.
முன்பு அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை தொகுதி பக்கம் வருவதில்லை என்பதை சொல்லித்தான் ஜோதி மணியை வெற்றி பெற செய்தோம்.
இப்போது அதே போல் ஜோதிமணியும் தொகுதி பக்கம் வராமல் இருக்கிறார். எனவே மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தி.மு.க. ஒரு தொகுதியை இழக்க நேரிடும். எனவே இந்த தேர்தலில் கரூர் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் தீர்மானமே போட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்த தொகுதி தி.மு.க.வுக்குதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று பேசியது உறுதிப்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.
எனவே சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. அதை விடுதலை சிறுத்தைக்கு விட்டுக்கொடுக்க வற்புறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் மாணிக்கம் தாகூர் சிவகங்கை தொகுதிக்கு மாற விரும்புகிறார். காரணம் விருதுநகர் தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கவும் அந்த தொகுதியில் வைகோ மகனை போட்டியிட வைக்கவும் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
எனவே காங்கிரசுக்கு சாதகமான சிவகங்கையை மாணிக்கம் தாகூர் குறி வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகுதியின் 'சிட்டிங்' எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் விட்டுக் கொடுப்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால் ராகுல் காந்திக்கு கார்த்தி சிதம்பரம் மீது நல்ல அபிப்ராயம் இல்லாததால் தனக்கு கிடைக்க ராகுல் உதவுவார் என்று நம்புகிறார்.
ஆனால் ப.சிதம்பரம் சோனியாவிடம் செல்வாக்குடன் இருப்பவர். எனவே யார் கை ஒங்குமோ அதை பொறுத்தே இந்த தொகுதியின் வேட்பாளரும் முடிவாகும்.
- எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.
- அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா.
கார்த்திப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது :-
அமலாக்கத்துறையால் கிடுக்கிப்பிடி அப்படி... இப்படி... என்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு 20 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இது நேரத்தை வீணடிக்கவும், மன உளைச்சலை ஏற்படுத்தவும் தான். எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.
அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா. அவ்வளவு தான். அவர்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது.
- அண்ணாமலைக்கு வருவதை விட அதிகமான கூட்டம் நடிகர் வடிவேலுக்கு வந்தது உண்டு.
- எங்களால் ஓரளவுக்கு தான் செயல்பட முடியும்.
காங்கிரஸ் எம்.பி.கார்த்தி ப.சிதம்பரம் கூறியதாவது:-
அரசியலில் அண்ணாமலைக்கு கூட்டம் வருவதை வைத்து அவ்வளவும் ஓட்டாக மாறி விடும் என்று நினைக்க முடியாது. அண்ணாமலைக்கு வருவதை விட அதிகமான கூட்டம் நடிகர் வடிவேலுக்கு வந்தது உண்டு. தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்த போது வந்த கூட்டத்தை பார்த்து நானே அசந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு கூட்டத்தை வேறு யாருக்கும் நான் பார்த்ததில்லை. ஆனால் என்னாச்சு? எனவே அண்ணாமலைக்கு வரும் கூட்டம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப முடியாது.
ஏனென்றால் தமிழ்நாட்டில் பா.ஜனதாவை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனக்கும் ஒரு ஆசை உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்ற சின்ன ஆசை. அதை விட பெரிய ஆசை ஆட்சி செய்ய வேண்டும் என்றும் இருக்கிறது. சினிமா துறையில் இருப்பவர்கள் கூட முதல்வராக ஆசைப்படும் போது இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கும் எனக்கும் அந்த ஆசை வரத்தானே செய்யும்? ஆனால் அதற்கான காலமும், நேரமும் இருக்க வேண்டும். என்னால் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியும். அண்ணாமலை தமிழகத்திற்கு என்று என்ன திட்டம் வைத்துள்ளார். எந்த பாதையில் தமிழகத்தை நடத்தப்போகிறார். அது பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார். இப்போது அவர் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் எதிர் கட்சியான அ.தி.மு.க. மவுனமாக இருப்பதால் பா.ஜனதா செய்வதெல்லாம் எடுபடுகிறது. எங்களை பொறுத்தவரை எதிர் கட்சியும் இல்லை, ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கிறோம். எனவே எங்களால் ஓரளவுக்கு தான் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரவுடிகள் பா.ஜனதாவில் தான் இருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு தான் நல்லாட்சியை தரப்போகிறார்களா?