search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதிலில் களமிறங்கிய கோவை அணி பேட்டர்கள் துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது.

    கோவை அணி சார்பில் ராம் அரவிந்த் 27, அத்தீக் உர் ரஹ்மான் 25 மற்றும் சுஜய் 22 ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் புத்துர், சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு வழக்கம்போல ரவிசந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மற்ற வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    திண்டுக்கல் அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 52, பாபா இந்திரஜித் 32 மற்றும் சரத் குமார் 27 ரன்களை எடுத்தனர். கோவை அணி சார்பில் சித்தார்த், வல்லியப்பன் யுதீஸ்வரன் மற்றும் கௌதம் தாமரை கண்ணன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

    • இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர்.
    • ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களை விளாசினர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    சேப்பாக் அணிக்கு துவக்க வீரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் ஜோடி களமிறங்கியது. சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆக ஜெகதீசன் மற்றும் அபராஜித் நிதானமாக ஆடினர். ஜெகதீசன் 25 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த வந்த பிரதோஷ் (19), டேரில் ஃபெராரியோ (4), சித்தார்த் (7) என சேப்பாக் அணி அடுத்தத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.

    இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 72 மற்றும் 22 ரன்களை விளாசினர். இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை சேர்த்தது.

    எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு துவக்க வீரரான விமல் குமார் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களையும் விளாசினர். அடுத்து வந்தவர்களில் சரத்குமார் மற்றும் சுபோத் பாட்டி முறையே 12 மற்றும் 14 ரன்களை எடுத்தனர்.

    இதனால் திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திண்டுக்கல் அணி குவாலிபயர் சுற்றின் 2 ஆவது போட்டிக்கு முன்னேறி உள்ளது. எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    டிஎன்பிஎல் குவாலிபயர் 2 சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் கோவை லைகா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும். 

    • கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்.
    • டிஎன்பிஎல் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிசிசிஐ தன்னை புறக்கணிக்கிறதா, கிரிக்கெட் வாரியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "பிசிசிஐ-இல் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அதனால் தான் நான் இங்கு நடராஜனாக அமர்ந்து இருக்கிறேன். காயத்தால் என்னால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. நான் நல்ல முறையில் தயாராகி வருகிறேன். கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்."

    "பிசிசிஐ வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்கள் ஒத்துழைப்பு இருந்ததால், தான் என்னால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடிந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, பலரும் டிஎன்பிஎல் போட்டிகளை பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎல் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது."

    "அதிகளவு இளம் வீரர்கள் ஒவ்வொரு முறையும் டிஎன்பிஎல்-இல் சிறப்பாக செயல்படுகின்றனர். டிஎன்பிஎல் மூலம் கிராமப்புற வீரர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. கஷ்டப்பட்டால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். கடின உழைப்புடன், எப்போதும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன.
    • நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

    நேற்றுடன் 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 ஆட்டத்தில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அதே நேரத் தில் திண்டுக்கல்லுக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது. திருச்சி அணிக்கு ஒரே ஒரு போட்டியே உள்ளது.

    நெல்லை 5 புள்ளியுட னும், திருப்பூர் தமிழன்ஸ் 4 புள்ளியுடனும், மதுரை 3 புள்ளியுடனும், சேலம் 2 புள்ளியுடனும் உள்ளன.

    டி.என்.பி.எல். போட்டியின் 23-வது ஆட்டம் நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில் நெல்லை அணி 5 புள்ளியுடன் இருக்கிறது. திருப்பூர் அணி 4 புள்ளியுடன் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    • மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
    • ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் ஓரளவு விளையாடி 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    19-வது ஓவரில் கோவை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷாருக் கான் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 26 பந்தில் 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

    மதுரை அணி சார்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி கோவையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மதுரை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கோவை அணி சார்பில் கவுதம் தாமரை கண்ணன் 4 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி 1 விக்கெட்டும் வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இப்போட்டியின் மூலம் குவாலிபியர் போட்டிகளுக்கு முதல் அணியாக கோவை தகுதி பெற்றது.

    • டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன.
    • டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் ஓரளவு விளையாடி 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    19-வது ஓவரில் கோவை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷாருக் கான் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 26 பந்தில் 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

    மதுரை அணி சார்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    • ஃபெராரியோ 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சேப்பாக் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் - சந்தோஷ் குமார் முறையே 51 மற்றும் 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் அப்ராஜித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் ஃபெராரியோ 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து ரஞ்சன் பால் - அபிஷேக் தன்வர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து 199 ரன்களை துரத்திய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி சார்பில் ஜாபர் ஜமால் 52 ரன்களையும், வசீம் அகமது 48 ரன்களையும், ராஜ்குமார் 39 ரன்களையும் எடுத்தனர். சேப்பாக் சார்பில் அஸ்வின் க்ரிஸ்ட் 2 விக்கெட்டுகளையும், கனேஷன் பெரியசாமி மற்றும் அபிஷேக் தன்வார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    நெல்லை:

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன.

    இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    • திருச்சி அணி 3 வெற்றி, 2 தோல்வியுன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை நாளை எதிர் கொள்கிறது.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி முதல் ஆட்டத்தில் கோவை கிங்சிடம் 13 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 15 ரன்னிலும், 4-வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 23 ரன்னிலும் வீழ்த்தியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை நாளை (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு எதிர்கொள்கிறது.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சியை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் ஜெகதீசன் (159 ரன்), கேப்டன் பாபா அபராஜித் (143 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (122 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் அபிஷேக் தன்வர், பெரியசாமி (தலா 7 விக்கெட்), டேரில் பெரா ரியோ, ரகில்ஷா (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    திருச்சி அணி 3 வெற்றி, 2 தோல்வியுன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மதுரை, சேலம், நெல்லை ஆகியவற்றை வென்றது. திண்டுக்கல், கோவையிடம் தோற்றது. திருச்சி அணியும் 4-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் திண்டுக்கல்-கோவை (மாலை 3.15), திருப்பூர்-சேலம் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.

    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
    • திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் கடந்த 13-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 8 போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

    இதுவரை 17 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 8 புள்ளியுடனும், 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 புள்ளியுடனும், நெல்லை ராயல் கிங்ஸ் 5 புள்ளியுடனும் முதல் 3 இடங்களில் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 4 புள்ளிகளுடனும், மதுரை பாந்தர்ஸ் 3 புள்ளியுடனும், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 2 புள்ளிகளுடனும் உள்ளன.

    டி.என்.பி.எல். போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் இன்று தொடங்குகிறது. வருகிற 24-ந் தேதி வரை அங்கு 6 போட்டிகள் நடத்தப்படுகிறது.

    நெல்லை இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை-திருச்சி அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த அணி வெற்றி பெற்றால் 7 புள்ளியுடன் முன்னேறும். திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.

    • முதலில் விளையாடிய சேப்பாக் அணி 156 ரன்கள் விளாசினர்.
    • இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஸ் குமார் 14 பந்தில் 33 ரன்கள் விளாசினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சேலம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் கேப்டன் பாபா அபராஜித் தவிர மற்ற வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அபிஷேக் தன்வார் (26 ரன்கள் 8 பந்துகள்) அதிரடியாக விளையாட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 41 ரன்கள் அடித்தார். சேலம் தரப்பில் பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சேலம் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக்- கவின் களமிறங்கினர். இருவரும் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அபிஷேக் 16 பந்தில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராஜேந்திரன் 9 பந்தில் 1 ரன்களும் கவின் 22 பந்தில் 11 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இப்படி அனைவரும் அதிரடியாக விளையாட திணறினர். அடுத்து வந்த ராபின் பிஸ்ட்- முஹம்மது அட்னான் கான் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். முஹம்மது அட்னான் கான் 31 ரன்னிலும் ராபின் பிஸ்ட் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஸ் குமார் 14 பந்தில் 33 ரன்கள் விளாசினார். அதில் 4 சிக்சர் 1 பவுண்டரி ஆகும். கடைசி வரை போராடிய அவரால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.

    இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அப்ராஜித் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • சேலம் அணி தரப்பில் சன்னி சந்து, பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார் - ஜெகதீசன் களமிறங்கினர். தடுமாறிய இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் 15 ரன்னிலும் சித்தார்த் 9 ரன்னிலும் டேரில் ஃபெராரியோ 23 ரன்னிலும் அஸ்வின் கிறிஸ்ட் 0 என வெளியேறினா. ஒரு முனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் அப்ராஜித் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் அதிரடி காட்டிய அபிஷேக் தன்வர் 4 சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து, பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×