என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 185206
நீங்கள் தேடியது "குட்கா"
சேலத்தில் ரூ.22½ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாகன டிரைவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சரக்கு வாகனங்களில் கடத்தப்படுவதாக சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாலையில் ஒரு சரக்கு வாகனம் கருப்பூர் சுங்கச்சாவடியை நோக்கி வந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அடுத்தடுத்து வந்த 2 வாகனங்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தியதில் அதிலும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை ஓட்டி வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் சேலம் குஞ்சுகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னு மகன் கார்த்திக் (வயது 25), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சக்திவேல் (23), பென்னாகரம் அருகே பழையூர் கே.புதூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (33) என்பதும், ஒவ்வொரு வாகனத்திலும் 50 கிலோ என மொத்தம் 150 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவற்றை கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்ததும், இதை கடத்தி வரச்சொல்லி சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த மாதேஸ் (35) என்பவர் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் கடத்தி கொண்டு வந்த ரூ.22½ லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள், 3 சரக்கு வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மாதேஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்த குட்கா பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது, இதற்கு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் குட்கா கடத்தல் தொடர்பாக மாதேஸ் மீது ஏற்கனவே சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 2 சரக்கு வாகனங்கள் மாதேசுக்கும், ஒரு வாகனம் கார்த்திக்கும் சொந்தமானது. ஒரு வாகனத்தில் கூரியர் என எழுதி அதில் குட்காவை கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சரக்கு வாகனங்களில் கடத்தப்படுவதாக சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாலையில் ஒரு சரக்கு வாகனம் கருப்பூர் சுங்கச்சாவடியை நோக்கி வந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அடுத்தடுத்து வந்த 2 வாகனங்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தியதில் அதிலும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை ஓட்டி வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் சேலம் குஞ்சுகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னு மகன் கார்த்திக் (வயது 25), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சக்திவேல் (23), பென்னாகரம் அருகே பழையூர் கே.புதூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (33) என்பதும், ஒவ்வொரு வாகனத்திலும் 50 கிலோ என மொத்தம் 150 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவற்றை கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்ததும், இதை கடத்தி வரச்சொல்லி சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த மாதேஸ் (35) என்பவர் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் கடத்தி கொண்டு வந்த ரூ.22½ லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள், 3 சரக்கு வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மாதேஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்த குட்கா பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது, இதற்கு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் குட்கா கடத்தல் தொடர்பாக மாதேஸ் மீது ஏற்கனவே சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 2 சரக்கு வாகனங்கள் மாதேசுக்கும், ஒரு வாகனம் கார்த்திக்கும் சொந்தமானது. ஒரு வாகனத்தில் கூரியர் என எழுதி அதில் குட்காவை கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு காரில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #GudkhaSeized
கோவை:
கோவை தாமஸ்வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கோவை வழியாக கேரளாவுக்கு குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை- கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடி அருகே கே.ஜி.சாவடி போலீசார் நேற்று காலை வாகன சோதனை நடத்தினார்கள்.
அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 10 மூட்டைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரான எர்ணாகுளத்தை சேர்ந்த விபின் (வயது 30), ரியாஸ் (33) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்கா பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, காரில் பதுக்கி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறி முதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
குட்கா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயல லிதாம்பிகையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். கோவையில் குட்கா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை தாமஸ்வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கோவை வழியாக கேரளாவுக்கு குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை- கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடி அருகே கே.ஜி.சாவடி போலீசார் நேற்று காலை வாகன சோதனை நடத்தினார்கள்.
அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 10 மூட்டைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரான எர்ணாகுளத்தை சேர்ந்த விபின் (வயது 30), ரியாஸ் (33) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்கா பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, காரில் பதுக்கி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறி முதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
குட்கா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயல லிதாம்பிகையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். கோவையில் குட்கா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X