search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா"

    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
    • இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    2011-2012-ம் நிதி அண்டு முதல், 2018- 2019-ம் நிதி ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் எடுத்து விஜயபாஸ்கரின் வருமானத்தை நிர்ணயம் செய்த அதிகாரிகள் அவருக்கு ரூ.206.42 கோடி அளவுக்கு வருமான வரியை விதித்தனர். இந்த பணத்தை விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான 17.46 ஏக்கர் நிலம் மற்றும் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்தனர்.

    இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது தொகுதி பணிகளை மேற்கொள்வதற்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தடையாக உள்ளது என்றார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரியான குமார் தீபக்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், விஜயபாஸ்கர் பல்வேறு தரப்பில் இருந்தும் அதிக அளவில் பணம் வாங்கியது தொடர்பாக விரிவான பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

    விஜயபாஸ்கருக்கு எஸ்.ஆர்.எஸ். கனிமவள நிறுவனம் ரூ.85.45 கோடியை வழங்கி உள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் குட்கா வியாபாரிகளிடம் இருந்தும் விஜயபாஸ்கர் பணம் வாங்கியுள்ளார். அதற்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குட்கா வியாபாரிகளிடம் இருந்து ரூ.2.45 கோடி பணம் பெற்றதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கைப்பற்றினோம். இதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை நடவடிக்கை அவர் மீது பாய்ந்தது.

    இப்படி பல்வேறு வழிகளில் இருந்தும் விஜயபாஸ்கருக்கு சட்ட விரோத அடிப்படையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே சோதனை நடத்தி உரிய ஆவணங்களை கைப்பற்றினோம்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்ற போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்துரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். அவர்களை தங்க வைத்தற்கான செலவு தொகையாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தையும் விஜயபாஸ்கர் ரிசார்ட்டுக்கு வழங்கி உள்ளார். இதற்கான ஆவணங்களும் கிடைத்து உள்ளன.

    இப்படி பல வழிகளில் அவர் பணம் வாங்கியதும், கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    இதற்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    • தனிப்படை போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவ ர்களை கண்டறிய ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை யடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், ஈரோடு பகுதியைச் சார்ந்த தளராம் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்க்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முசிறியில் 781 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
    • கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சிபட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீசார் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி பட்டியில் உள்ள சேகர் என்பவரது வீட்டின் அருகே கண்டெய்னர் லாரியிலிருந்து, டாட்டா ஏசி வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவது கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லட்சக்கணக்கான மதிப்பு உள்ள 30க்கும் மேற்பட்ட குட்கா பான் மசாலா மூட்டைகள் கொண்ட போதைப் பொருட்கள் மாற்றப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து விசாரணை செய்ததில் புனேவிலிருந்து தஞ்சாவூருக்கு பைப் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரான விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அழகர் மகன் வெள்ளைச்சாமி (வயது 23), கிளினர் அசுரப்பட்டி விராலிமலை அகர பட்டியை சேர்ந்த வேலு மகன் சீனிவாசன் ( வயது 25), ஆகிய இருவரும், நாமக்கல்லில் உள்ள லாரி உரிமையாளருக்கு தெரியாமல் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கடத்தி வந்த குட்கா பொருட்களை காமாட்சி பட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுநர் சூரம்பட்டி செல்லிபாளையம் சோழன் மகன் திவாகர் ( வயது 23 )ஏற்ற சென்றுள்ளார். அங்கு மடக்கி பிடித்த முசிறி போலீசார் மூவரையும் கைது செய்து 781 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    சேலம் :

    சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து நடந்த உடன் காரில் வந்தவர்கள் இறங்கி ஓடி விட்டனர்.இரவு ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்று மூட்டைகளை பரிசோதனை செய்தபோது 550 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது?,என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 3 மாவட்டங்களில் சப்ளை செய்த நெல்லை வியாபாரி
    • கைதான 2 பேர் திடுக்கிடும் தகவல்கள்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்ட மாக மாற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திய அவர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவதை தடுக்கும் வகையில் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி னார். இதில் ரெயில் மூலம் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கொரியர் மூலம் போதைப் பொருட்கள் வருவதை அறிந்து அவற்றை யும் கைப்பற்றினார். மேலும் போலீசாரின் நடவ டிக்கையை தீவிரப்படுத்தி யும் அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் குமரி மாவட்ட புகையிலைப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் மகேஷ் ராஜ் மற்றும் போலீசார் ஆரல்வாய் மொழியை அடுத்த முப்பந்தல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வைக்கோல் பாரம் ஏற்றிய மினி லாரி வந்தது.

    அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது லாரியின் டிரைவர் மற்றும் அதில் வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.இதனால் வைக்கோல் பாரத்தை போலீசார் சோதனை செய்தனர்.

    இதில் வைக்கோல்களுக்கு அடியில் 64 மூடைகள் இருப்பது தெரியவந்தது. அதனை வெளியே எடுத்து பார்த்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது. பழனியில் இருந்து அதனை கொண்டு வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.அவற்றை தனிப் படையினர் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    இதனை தொடர்ந்து மினி லாரி டிரைவரான பழனி ரெட்டியார்பட்டி ஆவணி மூல வீதியைச் சேர்ந்த சித்திக் மகன் பீர்முகமது (வயது39) மற்றும் பழனி இறைநாயகன்பட்டி ராஜமாணிக்கம் மகன் மதன கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் வாரத்துக்கு ஒரு முறை வாகனங்களில் பழனியில் இருந்து மூடை முடையாக புகையிலை கொண்டு வருவதும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவற்றை கடைகளுக்கு விநியோ கிப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த வர் பழனியில் மளிகை கடை வைத்துள்ளதாகவும் அவர் தான், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து குட்காவை நேரடியாக கொள்முதல் செய்து, நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விற்பனை செய்து வருவதாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி குட்கா வியாபாரியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து உள்ள னர்.

    தற்போது பிடிபட்ட 64 மூடைகளில் சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது என்றும் அதன் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

    • கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள அரங்கத்தில் நடந்தது.

    இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ-மாணவிகளுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்தார். பின்னர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று இரண்டு முறை என இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றபோது அங்குள்ள ஆம் ஆத்மி ஆஸ்பத்திரியை பார்வையிட்டார். அந்த ஆஸ்பத்திரியின் கட்டமைப்பை பார்த்து தமிழகத்திலும் ஏழை எளிய மக்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்தார்.

    இதையடுத்து தமிழக முழுவதும் 708 ஆஸ்பத்திரிகளை கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நியமித்துள்ளார். தமிழகத்திலேயே கோவை மாவட்டத்திற்கு 72 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சிக்கு 64 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த 708 ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில ஆஸ்பத்திரிகள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது. மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளை முதல்-அமைச்சர் பிப்ரவரி 6-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர மணியக் காரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் 4000 ஆக உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்டத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.56 லட்சம் உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 ஆஸ்பத்திரியில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்ட வரை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.

    அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ.125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 2-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். தமிழகம் காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.

    குட்கா மீதான தடையை கோர்ட்டு நீக்கி உள்ளது ஆனால் தமிழக அரசு போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைதாகி உள்ளனர்.
    • வாகனம் உள்ளிட்ட ரூ.7 லட்சம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைதாகி உள்ளனர்.

    சூளகிரி பகுதியில் பெங்களூருவை சேர்ந்த அப்சல், அப்துல்மஜீத் ஆகியோர் மினிவேனில் புகையிலை பொருட்களை கடத்திவந்த போது ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் கோமசந்திரம் பகுதியில் பிடிபட்டனர். அவர்களை சூளகிரி போலீசார் கைது செய்து வாகனம் உள்ளிட்ட ரூ.7 லட்சம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல ஒடுதேபள்ளி பகுதியில் மல்லேசன் என்பவரும், சாமனூர் பகுதியில் முருகன் என்பவரும் கைதாகினர்.

    பர்கூர் பகுதியில் அகமது பாஷா என்பவர் ஜெகதேவி காலம்மால் காலனியில் புகையிலை பொருட்கள் விற்ற போது சிக்கினார். பாரத கோவில் தெரு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அறியனபள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற நாகராஜ் என்பவர் வேப்பனபள்ளி போலிசால் கைது செய்யப்பட்டார். உப்பாராப்பள்ளி பகுதியில் ரமேஷ் என்பவரும், உளிவீரனப்பள்ளி பகுதியில் பர்வதம்மா என்பவரும் புகையிலை விற்ற போது தளி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    • வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா வரவில்லை.
    • அவசர நிலை கருதி புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரைதான் தற்காலிகமாக தடை செய்ய ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில் ஆணையரின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற நடவடிக்கைகளும் தொடரப்பட்டன. இதற்கு எதிராக ஐகோர்ட்டில் வேறு சில வழக்குகளும் தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா வரவில்லை. அவசர நிலை கருதி இது போன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரைதான் தற்காலிகமாக தடை செய்ய ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. இதனால் புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒரு லட்சம் பணம் பறிமுதல்
    • ஒருவர் கைது

    திருச்சி,

    திருச்சி லால்குடி பகுதியில் போலீசார் குட்கா ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பக்ரூதீன் என்பவர் குட்கா மற்றும் புகையிலை வியாபாரம் செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. அய்யன்வாய்க்கால் கரை பகுதியில் பக்ரூதீனுக்கு சொந்தமான இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 53 மூட்டை தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 8 லட்சம் மதிப்பிலான அந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பக்ரூதீன் கைது செய்யப்பட்டார். 

    • துறையூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 825 கிலோ குட்கா சிக்கியது
    • உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை

    துறையூர்,

    திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவில் நியமன அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு. இவருக்கு துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் துறையூர் தெப்பக்குள தெருவில் உள்ள பாலாஜி (30) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் திடீர் சோதனை செய்தனர்.அங்கு சுமார் 10 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி ரோட்டில் பேன்சி கடை வைத்து நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உத்தம்சிங் (45) என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனை செய்வதாக கூறினார். பின்னர் உத்தம்சிங் கடைக்கு சென்று அங்கு பணிபுரியும் அசுசிங் (25) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், உத்தம்சிங்கின் ஏற்பாட்டில் தெப்பக்குள தெருவில் உள்ள பரிதாபானு என்பவருக்கு சொந்தமான வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.இதனையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டதில் அங்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 825 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் துறையூர் போலீசில் புகார் செய்தார்.இப்புகாரின் பேரில் போலீசார் உத்தம்சிங், அசுசிங், பாலாஜி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அசுசிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். துறையூர் பகுதியில் ஒரே இடத்தில் 800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போதை பொருட்களை சமூக விரோதிகள் கடத்துவதாக தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன்ஜேசுபாதத்திற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய போதை பொருட்களையும், இரண்டு மினி சரக்கு வேன் பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம்,

    கர்நாடகா மாநிலம் பெங்களுருவிலிருந்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை சமூக விரோதிகள் கடத்துவதாக தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன்ஜேசுபாதத்திற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து காரிமங்கலம் நகரம், அகரம் பிரிவு சாலை மொரப்பூர் பிரிவு சாலை, கும்பாரஅள்ளி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கீழ் கொள்ளுப்பட்டியில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு மினிசரக்கு வாகனத்தில் இருந்து மற்றொரு மினி சரக்கு வாகனத்தில் மூட்டைகளை மாற்றி கொண்டிருந்தனர்.

    சந்தேகத்தின் பேரில் போலீசார் சரக்கு வாகனத்தின் அருகில் சென்ற போது டிரைவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.இதில் 50 மூட்டைகளில் சுமார் 2- டன் அளவிலான 3 இலட்சம் ரூபாய் மதிப்புடைய போதை பொருட்களையும், இரண்டு மினி சரக்கு வேன் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.மூட்டை மூட்டையாக குட்கா கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3,54,000-மதிப்பிலான 615 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் சிங் (22)மற்றும் பரத் சிங் (40) ஆகிய இருவரும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக 2 கார்களில் கடத்தி சென்றது, தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களுடன், ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் செய்தனர்.

    ×