search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிஸ்தான்"

    • 41 தூதரக அதிகாரிகளை கனடா அரசு திரும்பப் பெற்றது
    • சர்வதேச சட்ட விதியை இந்தியா மீறியதாக கனடா விமர்சனம்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா- கனடா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய புலனாய்வு அமைப்பிற்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிவித்த கனடா, உயர் அதிகாரியை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. இந்தியாவும் பதிலடியாக இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளை வெளியேற்ற காலக்கெடு விதித்தது.

    இந்த நிலையில் 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுளளது. இதுபோன்று முன்னதாக நடந்தது இல்லை எனத் தெரிவித்த கனடா, சர்வதேச சட்டத்தை இந்தியா மீறியதாகவும் தெரிவித்தது.

    அதேவேளையில் இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த நிலையில் கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில் ''இந்தியாவில் இருந்து கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டது எங்களுக்கு கவலை அளிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ''இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

    கனடாவின் 41 தூதரக அதிகாரிகள் வெளியேறியுள்ளதால் இந்தியாவின் பல நகரங்களில், கனடா தூதரகம் இயங்காமல் உள்ளது.

    இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுனர்கள் ''இந்தியாவுடடான உறவை அமெரிக்கா, இங்கிலாந்து மோசமடைய விரும்பாது. ஏனென்னால் ஆசிய கண்டனத்தில் முக்கிய எதிரியாக திகழும் சீனாவிற்கு பதிலடிகொடுக்க இந்தியா அவர்களுக்கு முக்கியமான நாடாக இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

    • தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்பப்பெற்ற நிலையில் இந்த முடிவு
    • டெல்லி, பெங்களூருவில் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தல்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா, இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

    தங்கள் நாட்டினருக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், "இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், "இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம். ஒருவேளை கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்.

    டெல்லியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கவும். தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    மும்பை, சண்டிகர், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கனடா நாட்டினர் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    பிக்பாக்கெட், சிறிய காயம் போன்ற சம்பவங்கள் பொதுவானது. குற்றவாளிகள் வெளிநாட்டினரை இலக்காக வைத்து தாக்கலாம். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இதுபோன்று நடக்கலாம் என எச்சரித்துள்ளது.

    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்திய புலனாய்வு அமைப்புக்கு தொடர்பு என கனடா குற்றச்சாட்டு
    • இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற்ற உத்தரவிட்டதால் இருதரப்பு உறவில் விரிசல்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், கனடாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அதோடு இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு, தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டது.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 41 பேரை கனடா திரும்பப் பெற்றுள்ளது.

    இந்த தகவலை கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற நாங்கள் அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம் என்று கூறிய அவர், இதற்கான அர்த்தம் எங்களுடைய அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தற்போது வெளியேறிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    41 பேரின் தூதருக்கான விலக்கு திரும்பப்பெறுவது இதுவரையும் இல்லாத ஒன்று. மேலும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இருந்தாலும், பழிக்குப்பழி நடவடிக்கையில் இறங்கும் எண்ணம் கனடாவிற்கு இல்லை. கனடா தொடர்ந்து சர்வதேச சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடரும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்திய ஏஜென்சிக்கு தொடர்பு என கனடா குற்றச்சாட்டு
    • தூதர்களை வெறியேற்ற இரு நாடுகளும் பரஸ்பர நடவடிக்கை

    காலிஸ்தான் பயங்கரவாதி தலைவர் நிஜ்ஜார், இந்தியாவில் இருந்து வெளியேறி கனடாவில் வசித்து வந்தார். கனடா நாட்டின் குடியுரிமை பெற்றிருந்த அவரை, கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி முகமூடி அணிந்த இருவர் சுட்டுக்கொலை செய்தனர்.

    இந்த கொலையில் இந்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு (Agency) தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற்றவும் கனடா உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் உயர் அதிகாரிகளை வெளியேறும்படி இந்திய பதிலடியாக தெரிவித்தது.

    இதனால் இரண்டு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த விசயத்தை இன்னும் பெரிதாக்க விரும்பவில்லை. இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

    இந்த விவகாரம் அப்படியே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கனடாவின் வெளியுறவுத்துறை மந்திரி மெலனி ஜோலி ஆகியோர் அமெரிக்காவின் வாஷிங்டனில் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கனடா தூதர் அதிகாரிகள் மற்றும் இருநாட்டு ராஜதந்திர உறவுகள் பாதிப்பு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து சுமார் 30 அதிகாரிகளை சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் உள்ள தூதரகத்திற்கு மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 10-ந்தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது.

    கனடாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்று இந்தியா கடுமையாக எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்திய அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.
    • எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என இந்தியாவுக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஒட்டாவா:

    இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு, இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது.

    இதுதொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா, இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:

    இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன். அப்போது என் கவலைகளைப் பகிர்ந்துகொண்டேன்.

    இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்.

    இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை. இந்த விஷயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

    • காலிஸ்தான் தலைவர் கொலையில் தொடர்புடையதால் இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது.
    • இதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    ஒட்டாவா:

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது.

    இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையே, காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனடா நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும். தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    • காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளது என கனடா குற்றம்சாட்டியது.
    • கனடா பிரதமரின் குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியது.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் கொலை சம்பவத்தை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டினார்.

    இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் கூறுகையில், ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கனடா கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். கனடாவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டு
    • கனடாவில் இருந்து இந்திய அதிகாரி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தியா பதிலடி

    கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது.

    கனடாவின் இந்த உத்தரவையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடாவின் தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவரிடம், கனடாவில் ராஜதந்திர அளவிலான மூத்த தூதரக அதிகாரி இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

    நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்துள்ளது.

    • ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார்
    • இவரது கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு

    இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.

    இதனால்தான் ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடி- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே மகிழ்ச்சிகரமான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியுள்ளது. ஏற்கனவே இந்தியா- கனடா இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    எதிர்க்கட்சிகள் கூட்டிய பாராளுமன்ற அவசர செசனில் ''நாடுகடத்தப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்ட்-களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டு உள்ளன.

    கனடா மண்ணில் கனடா குடியுரிமை பெற்ற ஒருவர் கொலையில் வெளிநாட்டு அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இந்த விசயத்தை தெளிப்படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

    கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜூலி ''ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்'' என்றார்.

    • கனடாவில் 3-வது முறையாக இந்து கோவில் மீது தாக்குதல்
    • காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த போஸ்டரையும் ஒட்டி வைத்து சென்றுள்ளனர்

    இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர். குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர்.

    அவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காலிஸ்தான் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இந்து கோவில்கள் கனடாவில் தாக்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் இந்து கோவில்கள் தாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றிரவு பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அதோடு கோவில் கதவில் ஜூன் 18-ந்தேதி நடைபெற்ற கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரணை செய்கிறது என போஸ்டரை ஓட்டிவைத்து சென்றுள்ளனர். மேலும், காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த போஸ்டரையும் ஒட்டி வைத்துள்ளனர்.

    கனடாவின் சர்ரே பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் டைகர் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். குருநானக் சீக்கியர் குருத்வாரா சாஹிப்பின் தலைவரான அவர், குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதார்.

    இதனைத் தொடர்ந்து இந்த செயலில் அவரது ஆதரவாளர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    • இந்திய துணை தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
    • சான்பிரான்சிஸ்கோவில் இந்திய துணை தூதரகம் முன் இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி நடத்தினர்.

    வாஷிங்டன்:

    இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க வேண்டுமென பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்தப் பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது கடந்த 2-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்தனர்.

    இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்தும், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தும் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி நடத்தினர்.

    தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு பயங்கரவாத செயல். வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    • காலிஸ்தான் கொடியை ஏந்தியவாறு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
    • இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் தேசிய கொடியுடன் அங்கு திரண்டனர்.

    டொராண்டோ:

    இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க கோரி காலிஸ் தான் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

    சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய துணை தூதர கத்துக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்த போவதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் அறிவித்தனர். அதன்படி அவர்கள் டொராண்டோவில் இந்திய துணை தூதரகத்துக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.

    அவர்கள் காலிஸ்தான் கொடியை ஏந்தியவாறு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர். போராட்டத்தை அடுத்து இந்திய தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் தேசிய கொடியுடன் அங்கு திரண்டனர்.

    அப்போது அவர்களை தாக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் 2 பேர் முயன்றனர். தடுப்புகளை மீறி சென்ற அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கனடாவை தளமாக கொண்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. இதேபோல் லண்டனில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

    ×