என் மலர்
நீங்கள் தேடியது "விவாகரத்து"
- சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
- சமீபத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நடிகை அமலா பால் தொடங்கி, சமந்தா, தனுஷ், டி இமான், இயக்குனர் பாலா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் மேலும் ஒரு ஜோடி இணைய உள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்த நடிகர் தன்னுடைய மனைவி பெயர் அடங்கிய டாட்டூவை நீக்கி உள்ளது தான்.
அதை செய்தது பாலிவுட் பிரபலம் சையிப் அலிகான் தான். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்தார் சையிப் அலிகான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் பெயர் தான் சாரா அலிகான்.

கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சையிப் அலிகான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம். இருப்பினும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்படுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் சையிப் அலிகானின் டாட்டூ தான். அவர் தன்னுடைய காதல் மனைவி கரீனாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டுவாக குத்தி இருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சையிப் அலிகான் - கரீனா கபூர் ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
- தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.
ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
யூடியூப் சேனல்களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. தங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரி வேண்டுகோள் வைத்த பிறகும் இதுபோன்று கதைகள் பின்னப்படுவது வேதனையாக உள்ளது. ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் பயணிப்போம் என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜிவி பிரகாஷ் இந்த கஷ்டக்காலத்தில் என்னுடன் பயணிக்கும் நபர்களுக்கும், நண்பர்களுக்கும் என் முன்னாள் மனைவி சைந்தவிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நட்சத்திர ஜோடியான இவர்கள் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர்.
- கன்னட பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்ற சந்தன் செட்டிக்கும் நிவேதிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
கன்னட பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான சந்தன் செட்டியும் அவரது மனைவி நிவேதிதா கௌடாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். கன்னட பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்ற சந்தன் செட்டிக்கும் நிவேதிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சாந்தன் செட்டி நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்ற பன்முகத்தன்மையோடு கன்னட சினிமாவில் இயங்கி வருபவர்.

இந்நிலையில் நட்சத்திர ஜோடியான இவர்கள் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர். இந்த செய்தியை நிவேதிதா தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், இந்த நாள், நானும் சந்தன் செட்டியும் நல்ல புரிதலோடு ஒருமனதாக எங்களது திருமணத்தை சட்டரீதியாக முறித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம்.
ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்களது முடிவுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையோடுதான் இருப்போம். உங்களின் ஆதரவு எங்களை இந்த இக்கட்டான காலகட்டத்தை கடக்க உதவி செய்யும். நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நாக சைதன்யா - சமந்தா, ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி என இந்த பாட்டியல் நீளும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.
- தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.
தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.
தமது ஐஃபோன்வழி பாலியல் தொழிலாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வந்த அந்த அவர், குறுந்தகவல்கள் அனைத்தையும் கைப்பேசியிலிருந்து நீக்கிவிட்டார்.
ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.
குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை இயக்கிய ரிச்சர்ட் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.
அவர் மேலும் ஆழமாக ஆராய்ந்ததில் பல ஆண்டுகளாகத் தம் கணவர் அனுப்பி, பின்னர் நீக்கிய குறுந்தகவல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் மனைவி விவாகரத்து கோரினார்.
இந்நிலையில் அந்த தொழிலதிபர், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்பது இவரது வாதம். ஆதலால் அவர் சுமார் 5 மில்லியன் பவுண்ட் (ரூ. 53 கோடி) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
- இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
- காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை.
ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீப காலமாக ஒரு செய்தி பரவியது.
ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
அதைதொடர்ந்து இந்த விவாகரத்து வதந்திக்கு பதில கூறும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீபத்தில் ஒரு பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

"ஜெயம்" படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிறது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த ஆர்த்தி, "காதல் என்பது ஒரு வார்த்தை. அது வார்த்தைகள் அல்ல வாழ்க்கை" என்ற தலைப்பைச் சேர்த்திருந்தார். இவர்களது உறவு குறித்த இந்த ஒரு பதிவை வெளியிட்டு விவாகரத்து குறித்த செய்தியை ஆர்த்தி சரிசெய்தார்.
இந்நிலையில் தற்போது ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார். இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இஸ்டாகிராம் பயோவில் இருக்கும் கணவரின் ஐடியை அவர் நீக்கவில்லை. அதே போல் பெயருக்கு பின்னால் இருக்கும் ரவி என்ற பெயரையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும்.
- தச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் [1986] விஞ்ச முடியாது.
விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம்வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை தற்போது தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
ஜீவநாமசம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி.
- 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பாக அவரது மனைவி பாயல் அப்துல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் அவர்களது திருமணம் முறிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திருமணங்களை கலைக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை அவர் கோரினார்.
உமர் மற்றும் பாயல் அப்துல்லா செப்டம்பர் 1, 1994 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் 2009 முதல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இரு மகன்களின் பாதுகாப்பில் உள்ளனர்.
முன்னதாக, மேலும் அவரது மனைவிக்கு மாதம் 1.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் தலா 60,000 ரூபாய் வழங்கவும் தேசிய மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லிம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
- இஸ்லாமின் ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் AIMPLB உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம்வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், அதை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.
ஜீவநாமசம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவிதித்திருந்தது. மிகவும் முக்கியமான தீர்ப்பாக இந்த தீர்ப்பு பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கு பராமரிப்பு செலவுக்கான ஜீவனாம்சம் வழங்குவது என்பது இஸ்லாமின் ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் AIMPLB உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக வாரியம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- இளவரசி விவாகரத்து செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர்.
துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
விவாகரத்து குறித்து ஷைக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாரகிராம் பக்கத்தில், "அன்புள்ள கணவரே.. உங்களுக்கு வேறொரு துணை கிடைத்துவிட்டதால், நம் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர்.
"இது ஒரு மோசமான செய்தி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று ஒரு பயனர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "உங்களின் முடிவுக்காக பெருமைப்படுகிறேன்" என்றார்.
இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர், 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் மகளை வரவேற்றனர்.
ஷைக்கா மஹ்ரா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபர் மற்றும் பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரின் மகள் ஆவார்.
அவர் பெண்கள் அதிகாரம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்காக வாதிடுபவர். அவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், முகமது பின் ரஷீத் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரிப் பட்டமும் பெற்றுள்ளார்.
- அம்பானி இல்ல திருமணத்திலும் இருவரும் தனித்தனியாகவே வந்து இருந்தனர்.
- விவாகரத்து யாருக்கும் எளிதானது அல்ல.
நடிகை ஐஸ்வர்யாராயும், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் நடந்த அம்பானி இல்ல திருமணத்திலும் இருவரும் தனித்தனியாகவே வந்து இருந்தனர்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் விவாகரத்து குறித்து வெளியிட்ட பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.
அந்த பதிவில், ''விவாகரத்து யாருக்கும் எளிதானது அல்ல. இறுதிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்ற கனவு இல்லாதவர் யாரும் இல்லை. கையை பிடித்துக்கொண்டு சாலையை கடக்கும் வயதான தம்பதி வீடியோக்களை பார்க்கும்போது அதுபோன்று நாமும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் வரும். ஆனால் சில நேரம் வாழ்கையில் நாம் விரும்புவது நடக்காது. பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிரிவதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பதிவை அபிஷேக் பச்சன் 'லைக்' செய்து இருப்பதால் நிஜமாகவே விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டார்களா? அதைத்தான் மறைமுகமாக சொல்லி இருக்கிறாரோ என்று பலரும் பேசத்தொடங்கி உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- செய்தி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
- 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
குவைத் நாட்டில் இந்த வினோத சம்பவம் நடந்தது. திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்தும் நடந்து முடிந்தது.
எல்லா எதிர்பார்ப்புகளுடனும் அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. திருமண நிகழ்ச்சிகள் முடிந்து வீட்டிற்கு புறப்பட தயாரானபோது, மணமகள் கால் இடறி கீழே விழுந்தார். அப்போது மணமகன், 'பார்த்து நடக்கத்தெரியாதா முட்டாள்' என்று திட்டிவிட்டார். இதனால் மணப்பெண் மனம் உடைந்தார். காலமெல்லாம் இவருடன் எப்படி வாழப்போகிறோம் என்று அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கோர்ட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தங்களை பிரித்துவைத்துவிடும்படி கோரிக்கை விடுத்தார். கோர்ட்டும் அவரது கோரிக்கையை ஏற்று திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து கொடுத்தது. இது அந்த நாட்டில் நடந்து முடிந்த மிக குறுகலான குடும்ப பந்தம் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. "மரியாதையற்ற உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்துவிடும்" என்று ஒரு பயனர் எழுதினார்.
2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
- விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
- பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார்.
தன்னை போலீஸ் அதிகாரி என கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 34 வயது நபரை புவனேஸ்வரில் போலீசார் கைது செய்தனர்.
திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை போலீசார் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.
அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.
போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.
அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.