என் மலர்
நீங்கள் தேடியது "டிராபிக் ராமசாமி"
சுப்ரீம் கோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.
இவர்கள் விபத்தில் இறந்ததாக சொன்னாலும், அது சந்தேகத்துக்கு இடமான ஒன்றாகவே இருந்தது. மேலும் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் எதுவும் இல்லை. அவர் பத்திரிகை மற்றும் டி.வி.சேனல்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று முடிவு செய்கிறோம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #SC #KodanadEstate #CBI
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிக்கு நேற்று மாலை டிராபிக் ராமசாமி காரில் வந்தார். திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் பேனர்களை கண்டவுடன் டிராபிக் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்கிருந்த பேனர்களை தனது செல்போன் மூலம் படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.
இதுகுறித்த தகவல் அங்கு பரவியதால் திருவையாறு கடைவீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி கேள்விப்பட்டதும் திருவையாறு போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது அங்கு பேனருக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளையும், கம்புகளையும் அகற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார். இதனால் பேரூராட்சி பணியாளர்கள் அந்த கட்டைகளை அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டிராபிக் ராமசாமியை தாக்க முயன்றனர். உடனே அவருடன் வந்த பாதுகாப்பு போலீசார், டிராபிக் ராமசாமியை பத்திரமாக அவரது காருக்கு அழைத்து சென்றார்.
அப்போது டிராபிக் ராமசாமி ஆவேசமாக, என்னை தாக்க முற்பட்டவர்கள் மீதும், கொலை செய்வதாக கூறியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டை செல்வேன் என்று கூறினார்.
இந்த சம்பவத்தால் திருவையாறு கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டிராபிக் ராமசாமி பாபநாசம் பகுதிக்கு சென்றார். ஆனால் அவர் வருவதை தகவல் அறிந்து பாபநாசம் கடை வீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை போலீசாரே இரவோடு இரவாக அகற்றினர். #trafficRamasamy
ஆலந்தூர்:
கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர்.
அவர்களை வரவேற்று விமானநிலையத்தில் இருந்து கத்திபாரா பாலம் வரை காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள் வைத்து உள்ளனர். அனுமதி பெறாமல் பேனர்களை வைத்ததாக கூறியும் அதை அகற்ற கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று போராட்டம் நடத்தினார்.
ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பரங்கிமலை தாபால் நிலையம் அருகே ரோட்டில் பிளாட்பாரத்தில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், ஆலந்தூர் பகுதி செயலாளர் சீதாபதி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் கோவிந்த ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்தனர். போலீசாரிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைத்ததாக காங்கிரசார் தெரிவித்தனர். அதையடுத்து டிராபிக் ராமசாமியுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். #TrafficRamasamy #soniagandhi #karunanidhi
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:-
‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பெங்களூரு ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், அதை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தாலும், வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்றார்.
மனுதாரர் டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் அரவிந்தன் கூறியிருப்பதாவது:-
‘இந்த வழக்கு தொடர்ந்த பின்னர், சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது குறித்து போயஸ் கார்டன் பகுதி மக்களில் கருத்தை தமிழக அரசு கேட்டுள்ளது.
இதற்காக நடந்த கூட்டத்தில், அப்பகுதி மக்கள், வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டை இதுபோல நினைவிடமாக மாற்றினால், அதனால் அப்பகுதியில் வசிப்பவருக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும் என்றும் பொதுமக்கள் வந்து சென்றால், எதிர்காலத்தில் போயஸ் கார்டன் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கும் என்று கூறியுள்ளனர். எனவே, இதுகுறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளோம்’.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 20ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கூடுதல் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Jayalalithahome #PoesGarden #TrafficRamasamy
ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி கூறியதாவது:-

அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ‘இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவுத்துறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள்’ என்று அறிவித்தார். #HighCourt #TrafficRamasamy
கோவை வந்த டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அது பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடம். அங்கு சமாதிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து உள்ளனர். எனவே அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும், அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய இடம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து மறுநாளே தீர்ப்பும் வழங்கப்பட்டது.
நான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என்னையும், எனது வக்கீலையும் மிரட்டினார்கள். ஆனாலும் நாங்கள் வழக்கை வாபஸ் பெறவில்லை. இருந்தபோதிலும் கோர்ட்டு நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
அதற்கான நகல் எனக்கு கிடைத்ததும், தற்போது மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இதற்காக எனக்கு எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன். அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றும்வரை நான் ஓயமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தனியாக முறையீட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
‘‘300 ஏக்கர் உள்ள இந்த நிலம் அரசின் புறம்போக்கு நிலம் என்றும், இந்த நிலத்தை முறைகேடாக அரசு அதிகாரிகள் தனியாருக்கு வழங்கி உள்ளனர்.
இவ்வாறு அரசு நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூறையீட்டு மனுவை அனுமதித்த நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரை கொண்ட அமர்வு, இம்மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
மதுரை அழகர்கோவில் ரோட்டில் வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே உள்ள பிளாட்பாரத்தில் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
இன்று காலை அந்தப்பகுதிக்கு வந்த பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது செல்போனில் பிளக்ஸ் பேனர்களை படம் பிடித்தார். மேலும் அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கான நடைபாதையில் எவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது? என்பது குறித்து டிராபிக் ராமசாமி அதிகாரியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். ஒருசிலர் நடுரோட்டில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அ.தி.மு.க.வினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவத்தால் மதுரை-அழகர்கோவில் சாலையில் இன்று சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சிறிது நேரத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் ராமசாமியை சந்தித்து பேசினார்.
உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது.



சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். ஆனால், அதே இடத்தில் மீண்டும் பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசாரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி வாதிட்டார். போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தையும் போலீசார் அப்புறப்படுத்திவிட்டனர் என்று கூறினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ‘சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அந்த நபர்கள் மீது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை?’ என்று கேட்டார்.
மேலும், ‘ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று கட்சி பாகுபாடு எதுவுமின்றி சட்டவிரோதமாக அனைவரும் பேனர்களை வைக்க அனுமதிப்பது ஏன்?. டிராபிக் ராமசாமி ஒன்றும் தனக்காக போராடவில்லை. பொதுநலனுக்காகத்தான் போராடுகிறார். சட்டவிரோதமாக சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்கள் சரிந்து பொதுமக்கள் மீது விழுந்தால், பாதிக்கப்படுவது யார்? என்பதை அதிகாரிகள் யோசிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
பின்னர், ‘எழும்பூர் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை போலீஸ் கமிஷனர் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
