என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே"

    • ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாக ஹீத் ஸ்ட்ரீக் இருந்துள்ளார்.
    • சர்வதேச கிரிக்கெட்டில் ஹீத் ஸ்ட்ரீக் இதுவரை 455 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்தார். 49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரீக் 65 டெஸ்ட் போட்டிகள், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    1993 முதல் 2005-ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடி இருக்கும் ஹீத் ஸ்ட்ரீக் 455 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கல்லீரல் புற்றுநோயால் நீண்ட காலம் போராடி வந்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

    • 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.


    இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது. 

    • ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
    • இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக முகமதுல்லா 54 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானியும் பிரையன் பென்னட்டும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில், தடிவானாஷே மருமணி 1 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ஜோடி சேர்ந்த பிரையன் பென்னட்டும் சிக்கந்தர் ராசாவும் வங்கதேச பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 70 ரன்கள் குவித்து பிரையன் பென்னட் அவுட் ஆனார். சிக்கந்தர் ராசா 76 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என வங்கதேசம் கைப்பற்றியிருந்த நிலையில், 5வது டி20யில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

    • இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • நாளை இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஹராரே:

    சுப்மன்கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை ஹராரேவில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய போட்டியில் இந்தியா தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பேட்டிங்கில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ருதுராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பந்து வீச்சில் அலேஷ்கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

    சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, தொடரை இழக்காமல் இருக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் பென்னாட், டியான் மியர்ஸ், மாதேவேரே, முசராபானி, சத்தரா, ரிச்சர்ட் நிகரவா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    வெற்றி கட்டாயத்துடன் களம் இறங்கும் ஜிம்பாப்வே அதற்காக கடுமையாக போராடும். ஆனால் இளம் இந்திய அணி வலுவாக இருப்பதால் ஜிம்பாப்வேவுக்கு கடினமாக இருக்கும்.

    • பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள்.
    • உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் ஜிம்பாப்வே அணி போராடும்.

    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 100 ரன், 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் என்று பெரிய பட்டாளமே வரிசை கட்டி நிற்கிறது. பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மிரட்டு கிறார்கள்.

    எதிர்பாராதவிதமாக முதலாவது ஆட்டத்தில் சிறிய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்த 2 ஆட்டங்களில் அதிக ரன் குவித்து வெற்றிக்கனியை பறித்தது. அதே போல் இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வசப்படுத்தும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். அதே சமயம் கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும். எனவே அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

    ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகந்தர் ராசா, வெஸ்லி மாதவெரே, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், கிளைவ் மடான்டே, முஜரபானி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் ஜிம்பாப்வே அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது.

    ஜிம்பாப்வே: வெஸ்லி மாதவெரே, டாடிவான்சே மருமானி, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன் ), ஜோனதன் கேம்ப்பெல், கிளைவ் மடான்டே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் என்கராவா, சதரா.

    மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது.
    • டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகிறது. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றனர்.

    இதில் நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் சீஷெல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சீஷெல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 91, டி மருமணி 86 ரன்கள் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய சீஷெல்ஸ் அணி 6.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முன்னதாக இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்த 3-வது என்ற சாதனையை ஜிம்பாப்வே அணி படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் (314) நேபாள் அணி உள்ளது. 2-வது இடத்தில் (297) இந்திய அணி உள்ளது.

    • அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன.

    இதில் இன்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரியன் பென்னெட் மற்றும் மருமனி முறையே 50 மற்றும் 62 ரன்களை விளாசினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மேயர்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் ராசா அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 133 ரன்களை விளாசினார். இதில் 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இவரைத் தொடர்ந்து வந்த ரியான் பர்ல் 25 ரன்களும், மடான்டே 53 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக மாறியது.

    இமாலய இலக்கை துரத்திய காம்பியா அணி 54 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் கரவா மற்றும் மவுட்டா தலா மூன்று விக்கெட்டுகளையும், மத்வீர் இரண்டு விக்கெட்டுகளையும் பர்ல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன.

    இதில் நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக மாறியது.

    ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ராசா அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 133 ரன்களை விளாசினார். இதில் 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இவரைத் தொடர்ந்து வந்த ரியான் பர்ல் 25 ரன்களும், மடான்டே 53 ரன்களையும் விளாசினர்.

    காம்பியா தரப்பில் மொத்தம் ஆறு வீரர்கள் பந்துவீசினர். இதில் ஒரே ஓவர் வீசிய இஸ்மாலியா டாம்பா 24 ரன்களை விட்டுக்கொடுத்தார். அர்ஜூன் சிங் மூன்று ஓவர்களை வீசி 51 ரன்களை விட்டுக்கொடுத்தார். இவர் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் நான்கு ஓவர்களை வீசினர். இதில் அனைவரும் குறைந்தபட்சம் 50 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

    இதில் முசா ஜார்படெ 4 ஓவர்களில் 93 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் எனும் மோசமான சாதனையாக அமைந்தது. முன்னதாக இலங்கை அணியின் கசுன் ரஜிதா 4 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக்கொடுத்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முஜீப் உர் ரஹ்மான் இடம் பிடித்துள்ளார்.
    • ஒருநாள் அணிக்கு ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாகிதி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் அணிக்கு ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முஜீப் உர் ரஹ்மான் இடம் பிடித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் டி20 அணி விவரம்; ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது நபி, தர்வீஷ் ரசூலி, ஜுபைத் அக்பரி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், நாங்யல் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல் ஹக் பரூக்கி, பரீத் அகமது, நவீன் உல் ஹக்.

    ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணி விவரம்; ஹஸ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), அப்துல் மாலிக், செடிகுல்லா அடில், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பைதின் நைப், ரஷித் கான், நாங்யல் கரோட்டி, ஏ.எம்.கசன்பர், முஜீப் உர் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, பிலால் சமி, நவீத் சத்ரான், பரீத் அகமது மாலிக்.

    • பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பரோடா அணியில் 3 பேர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    சிக்கிம் அணி தரப்பில் சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காம்பியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் அடித்திருந்ததே டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான்.
    • வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.

    ஜிம்பாப்வே நாட்டின் வடக்குப் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன், சிங்கங்கள், யானைகள் மற்றும் பிற ஆபத்தான வனவிலங்குகளின் இருப்பிடமான மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான வனப்பகுதியில் ஐந்து நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டினோடெண்டா பூண்டு [Tinotenda Pundu] என்று அந்த சிறுவன் டிசம்பர் 27 அன்று வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது சிறுவன் தொலைந்து போனான்

    5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான். நீரிழப்பினால் பலவீனமான நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான். வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.

     

    சிறுவன் ஒரு ஆற்றங்கரையில் குச்சிகளைப் பயன்படுத்தி தண்ணீரைத் தோண்டி, ட்ஸ்வான்ஸ்வா என்ற காட்டுப் பழத்தை உண்டு வாழ்ந்துள்ளான்.

    சிறுவனின் கதையை விவரித்த உள்ளூர் எம்.பி. முட்சா முரோம்பெட்ஸி, சிறுவன் அலைந்து திரிந்து , திசை தவறி, ஆபத்தான மட்டுசடோன்ஹா பூங்காவிற்குத் தெரியாமல் சென்றுள்ளான்.

    ஹாக்வேக்கு அருகிலுள்ள காட்டில் 5 நீண்ட, கொடூரமான நாட்களுக்குப் பிறகு. உமே நதியின் துணை நதி அருகே சிறுவனை ரேஞ்சர்கள் உயிருடன் கண்டுபிடித்தனர்.

    வீட்டிலிருந்து 23 கிமீ தூரம் அலைந்து திரிந்து, கர்ஜனை செய்யும் சிங்கங்கள், யானைகளைக் கடந்து செல்வது, காட்டுப் பழங்களை உண்பது மற்றும் ஆபத்தான காட்டுப் பகுதிகளுக்கு மத்தியில் உறங்குவது, 8 வயது சிறுவனுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று விவரித்தார். மட்டுசடோனா பூங்காவில் சுமார் 40 சிங்கங்கள் உள்ளன.

     

    துணிச்சலான பூங்கா ரேஞ்சர்களுக்கும், நியாமினியாமி சமூகத்தை சேர்ந்தவர்களும், ஒவ்வொரு நாளும் சிறுவன் கேட்கும்படி டிரம்ஸ் அடித்து தேடி கடைசியில் கண்டுபிடிக்க உதவியுள்ளார்கள் என்று நன்றி தெரிவித்த எம்.பி., டினோடெண்டாவைக் கவனித்து, அவரைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்கு ரேஞ்சர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.

    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 50.8 சதவீத வாக்குகளை பெற்ற நங்கக்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவரது கட்சி அறிவித்துள்ளது. #ZimbabwePpresident #EmmersonMnangagwa
    ஹராரே:

    ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்த அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்தது. இதனால், முகாபேவின் பதவி பறிக்கப்படுகிற நிலை உருவானது. இதையடுத்து, தாமாக முன்வந்து சென்ற நவம்பர் மாத இறுதியில் அவர் பதவி விலகினார்.

    முகாபே பதவி விலகலை தொடர்ந்து எம்மர்சன் நங்கக்வா என்பவர் அதிபர் ஆனார். அந்நாட்டில் மொத்தம் உள்ள இடங்கள் 270 என்றாலும் 210 இடங்களுக்குத்தான் நேரடி தேர்தல் நடத்தப்படும். மீதி இருக்கும் 60 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜிம்பாப்வேயில் முதன்முறையாக கடந்த 30-ந் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நடைபெற்ற வன்முறையினால் தாமதத்திற்கு பிறகு பலத்த பாதுகாப்புகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

    இதில், அதிபர் எம்மர்சன் நங்கக்வாவின் ஆளும் ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்று உள்ளது. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் 140 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. நெல்சன் சாமிசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி எம்.டி.சி, 58 இடங்களைப் பிடித்து உள்ளது.

    இதனால்,  ஜானு-பி.எப். கட்சி மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டியை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. ஒதனால் அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தையும் திருத்தும் வல்லமை, ஜானு-பி.எப். கட்சிக்கு வாய்த்துள்ளது. 50.8 சதவீத வாக்குகளை பெற்ற நங்கக்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆளுங்கட்சி அடக்குமுறையைக் கையாள்வதாக கூறி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் தலைநகர் ஹராரேயில் கற்களை வீசிப் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.

    கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் இருந்த நிலையில், ஹராரேயில் இப்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. #EmmersonMnangagwa
    ×