என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திரா"
- ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் இன்று மாலை 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
இதற்காக அவர் ராஜ மகேந்திரவரம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். மதியம் 3.30 மணிக்கு ராஜ மகேந்திரவரம் தொகுதியில் உள்ள வேமகிரி என்ற இடத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.
இதில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் அந்த தொகுதியின் வேட்பாளர் புரந்தேஸ்வரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அனக்கா பள்ளியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சி.எம். ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திராவில் வருகிற 13-ந் தேதி வாக்குப்பதிவுக்கு முன்பாக தொடர்ந்து 4 பொதுக் கூட்டங்களில் மோடி பேச உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
- 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குபதிவு .
- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.
திருப்பதி:
ஆந்திராவில் வருகிற 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்குபதிவு நடக்கிறது. தற்போது அங்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.
கோணசீமா மாவட்டத்தில் தபால் ஓட்டு வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும் வெள்ளி காசுகளை சில அதிகாரிகள், ஆசிரியர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேர்தல் விதியை மீறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
- இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
- ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
திருப்பதி:
ஆந்திரமாநிலம் ராஜமகேந்திர வரம் அனக்கா பள்ளி ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக அளவில் இந்தியாவின் புகழ் உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளக்கூடிய சாதனைகள்.
நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை கூறிதான் வாக்கு கேட்கிறோம். இந்திய மக்களுக்காக 10 வருடங்கள் உழைத்தோம். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளோம்.
4 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே கடந்த 2014-ம் ஆண்டு வரை இருந்தன. தற்போது அந்த நீளம் 8000 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை திட்டம் நிறைவடைந்துள்ளது. இது இரு மாநில மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நடந்த மோசடிகள் தான் நம் நினைவுக்கு வருகின்றன. அவர்கள் 10 வருடங்களில் பல்வேறு மோசடிகளை செய்தார்கள். எந்திரங்களால் கூட எண்ண முடியாத அளவிற்கு பணத்தை குவித்து வைத்துக்கொண்டு அலறுகிறார்கள்.
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பண மலை ஒன்று சிக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் இளவரசர் பதில் சொல்ல வேண்டும். ஆந்திர மாநிலத்தில் என்.டி ராமராவ் ராமர் கதாபாத்திரத்தின் மூலம் வீடு வீடாக ராமரின் புகழை கொண்டு சென்றார்.
அயோத்தியில் 400 ஆண்டுகால கனவை தற்போது நிறைவேற்றி உள்ளோம். காங்கிரஸ் தலைவர்கள் பக்தியுடன் கோவிலுக்கு சென்றால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
சந்திரபாபு நாயுடு மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். ஆந்திர மக்களுக்கு மோடியின் உத்தரவாதம் சந்திரபாபு நாயுடுவின் தலைமை பவன் கல்யாணின் நம்பிக்கை இருக்கிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை எந்திர ஆட்சி அமைந்தால் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணிகளும் விரைந்து முடிவடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிரசாரம் செய்வது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவன் கல்யாணின் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்வது போல ஆந்திராவில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில் நடிகர் அல்லு அர்ஜுன் திறந்த வேனில் நின்று வாக்கு கேட்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ கடந்த 2022-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. அதனை தற்போது தவறாக பரவ விட்டுள்ளனர்.
இந்த போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
- வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
- சிரஞ்சீவியின் வீடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பு.
திருப்பதி:
ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய தம்பி நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் என்னுடைய தம்பி தன்னை பற்றி சிந்திக்காமல் மக்களை பற்றி அதிகம் சிந்திக்கிறான்.
ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு ஏதாவது செய்வேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் பவன் கல்யாண் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க தனது சொந்த பணத்தை செலவழித்து, நமது எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கும் தாராளமாக நன்கொடை அளித்தார், மீனவர்களுக்கு உதவினார். இதையெல்லாம் பார்க்கும்போது, இவரைப் போன்ற ஒரு தலைவர் மக்களுக்குத் தேவை என்று உணர்கிறோம்.
தனது வாழ்க்கையை அரசியலுக்காக அர்ப்பணித்துள்ளார் சட்டமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இந்த வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். சிரஞ்சீவியின் வீடியோ வைரலாகி வருகிறது.
- முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.
- பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.
மத்திய மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
3 கட்டத் தேர்தல் முடிந்து உள்ளது. 3 கட்டங்களிலும் 283 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவுப் பெற்றுள்ளது. இதில் யார் யாருக்கு? எவ்வளவு வெற்றி கிடைக்கும்? என்பதை உறுதியாக கணிக்க இயலாது.
இப்போது நான் அடுத்த கட்டத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இருக்கிறேன் என்றாலும், முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.
283 தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தபட்சம் 175 முதல் 200 இடங்கள் வரை பா.ஜ.க கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.
பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். உத்தரபிரதே சத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும்.
தமிழ்நாடு, கேரளாவில் எங்களது வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.
மீண்டும் ஆட்சியமைத்த தும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு ரூ.10 லட்சம் கோடி செலவு செய்துள்ளது.
ஜி.எஸ்.டி. வருவாய் 2 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம் நேரடி வரி விதிப்பில் நியாயமான முறை அமலுக்கு வந்து உள்ளது. இதை ராகுல், எதிர்ப்பது ஏன்? என்று தெரியவில்லை. அவருக்கு யார் யோசனை சொல்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை.
இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
- பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.
பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் ஆந்திரா தேர்தல் 2024 போட்டியிடுகிறார். பவன் கல்யாணுக்கு அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில். மே 7 ஆம் தேதி அல்லு அர்ஜூன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை பதிவிட்டார் அதில் பவன் கல்யாண் காருவின் மீது எனக்கு எப்பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எடுத்துக் கொண்ட பாதையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக் நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.
அதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் ஷில்பா ரவிந்திராவின் வீட்டை சூழ்ந்துக் கொண்டனர். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களுக்கு கையசைத்தும் நன்றி தெரிவித்தும் அன்பை பகிர்ந்துக்கொண்டார் அல்லு அர்ஜூன். பின் அவரது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குமாருக் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே கடுமயான மோதல் வெடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (மே 13) நடந்தது. வாக்குபதிவின்போது ஒரு சில இடங்களில் பிரதான கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகும் இன்று (மே 15) மதியம் திருப்பதி மாவட்டத்தில், சந்திரகிரி தோகுதி தெலுங்கு தேச கூட்டணி வேட்பாளர் புலிவர்த்தி நாணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு பத்மாவதி பலக்லைக்கழகத்தில் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டு திரும்பும்போது நாணி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் நாணி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தெலுங்குதேசம் கட்சியினர் கூறுகையில், சுமார் 150 பேர் கத்தி, மற்றும் தடிகளுடன் வந்து தங்களை சரமாரியாக தாக்கியதாக தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் ஓஎஸ் ஆர் கட்சியினர் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர்கள் விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஓஎஸ்ஆர் கொடிகளுடன் காணப்பட்ட வாகனங்களை தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து உடைத்தனர். இதனால் பத்மாவதி பல்கலைக்கழக வளாகத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- ஆந்திராவில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளது.
- கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்கு பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக 81.86 சதவீதம் வாக்குகள் பதிவானது.
அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்காளர்க ளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் அனைத்து முதியோர்கள், சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள், சிறுபான்மையின சகோதரர்கள், குறிப்பாக கோடை வெயிலைத் தாங்கிக்கொண்டு பெருமளவில் வந்து வாக்களித்த இளைஞர்களுக்கு நன்றி.
கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன்.
இன்று வரை காணப்படும் நல்லாட்சியும் திறமையான நிர்வாகமும் மேலும் மேம்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஆந்திராவில் அதிகபட்ச மாக வாக்குகள் பதிவாகியுள்ளது சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நல்லாட்சி நிர்வாகம் மேம்படுத்தப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பது அவரது கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
- பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
தேர்தல் நாள் அன்று ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேச கூட்டணியில் உள்ள ஜனசேனா, பா.ஜ.க கட்சியினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
தேர்தல் முடிந்த பின்னரும் பல்நாடு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதில் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வன்முறையை தடுக்க தேர்தல் ஆணையம் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வன்முறை ஏற்படும் இடங்களில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்தது.
- பஜ்ஜி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் குண்டூர், ஆவணி கட்டா, நாகை லங்கா பகுதிகளில் பல்வேறு வகையான மிளகாய் பயிரிடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த மிளகாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்தது. மேலும் வெயில் அதிகரிப்பால் பச்சை மிளகாய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக பஜ்ஜி செய்ய பயன்படுத்த கூடிய மிளகாய் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது.
இந்த வகை மிளகாய் கிலோ ரூ.115 வரை விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.74-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இல்லத்தரசிகள் மற்றும் பஜ்ஜி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
- முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.
திருப்பதி, மே.18-
ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.
அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.
உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.

சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.
அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.
சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-
நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.
சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.
சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.