என் மலர்
நீங்கள் தேடியது "பஸ் டிரைவர்"
- கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.
- அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளநால்லி அடுத்துள்ள கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் (59). தனது தாயார் சரஸ்வதி (82) என்பவருடன் குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை சம்பூர்ணம் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாய் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.
பின்னர் சிறிது நேரத்தில் தீ மலமலவென்ன குடிசையில் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் வீட்டுக்குள் புகை மண்டலமாக காட்சியளித்தது. சரஸ்வதியால் உடனடியாக வெளியேற முடியவில்லை.
அப்போது ஈரோட்டில் இருந்து கொடுமுடி நோக்கி 43-ம் நம்பர் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை மனோகரன் என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் மூதாட்டி வீட்டில் தீ எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோகரன் உடனடியாக பஸ்சை நிறுத்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரஸ்வதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். இதனால் மூதாட்டி சரஸ்வதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் எரிந்து சேதமானது.
உரிய நேரத்தில் சமயோதிகமாக செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்சில் வாடிக்கையாக வரும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் ஈஸ்வரன் (வயது 26). இவர் தனியார் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் அந்த பஸ்சில் வாடிக்கையாக வரும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணமான அந்தப் பெண்ணிடம் பழகுவதை நிறுத்தக் கோரி அவரது தம்பி மற்றும் உறவினர்கள் ஈஸ்வரனை எச்சரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் நண்பரை சந்திக்க ஈஸ்வரன் வந்துள்ளார். அப்போது அவரைத் தேடி வந்த சிலர் அவரிடம் பேச வேண்டும் என கூறி அவர்கள் வந்திருந்த காரில் ஏறச் சொன்னபோது ஈஸ்வரன் மறுத்துள்ளார். இதனால் அவரை தாக்கி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றுள்ளனர். இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து உஷாரான போலீசார், பல்லடம் நால் ரோட்டில் வைத்து அந்த காரை மடக்கி பிடித்தனர் .பின்பு அதிலிருந்த ஈஸ்வரனை மீட்டனர். அவரை கடத்திய செஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), தமிழ் (23), சபரிநாதன்(22), வினோத்குமார்(25), சுந்தர் (24),அருண்குமார்(24),நித்திஷ்(25) உள்ளிட்ட 6 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
- ஒரு வாலிபர் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கொப்பு வாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் தலை,உடல் முழுவதும் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுப்பற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி.ஐமன் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடப்பது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள சாணார் பதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.
மேலும் இவருக்கு திருமணமாகி கல்யாணி (30) என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மாரிமுத்து ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றார்.
அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் உடலில் வெட்டு காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் மாரிமுத்துவின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயராமன், அரசு பஸ் டிரைவர். அவர் ஓட்டி சென்ற பஸ் கீழநெட்டூர் கிராமத்தின் வழியாக சென்ற போது, அதே ஊரை சேர்ந்த காளிமுத்து, அவரது மகன் அஜித்குமார் இருவரும் அவர்களின் வீட்டின் அருகே பஸ்சை நிறுத்தி ஏறினர். இதனை ஜெயராமன் கண்டித்தார். அப்போது இருவரும் ஜெயராமனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
- சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
சென்னை:
சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். மாநகர பஸ்களில் டிரைவராக பணியாற்றும் 40 வயது மற்றும் அதற்குமேல் வயது உள்ள டிரைவர்கள் ஆண்டுதோறும் தங்களது கண்பரிசோதனை அறிக்கையை சம்பந்தப்பட்ட பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்காலிக கண்பார்வை பிரச்சினை மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு இதன் மூலம் எளிதான மாற்றுப் பணிகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கமான பஸ் ஓட்டும் பணியை தவிர்ப்பதற்காகவும், அதற்கு மாற்றாக எளிதான வேலைக்கு செல்லவும் 8 மாநகர பஸ் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து இருப்பது தற்போது தெரியவந்து உள்ளது. அவர்களில் அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
அவர் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் கண்பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற போது போல் போலியான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார். இதில் அந்த சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதே போல் மற்ற பணிமனைகளிலும் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கை வழங்கி எளிதான வேலைக்கு மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் டிரைவர் பணியை தவிர்த்து மற்ற வேலைக்கு மாற்றப்பட்டவர்கள் சமர்ப்பித்த டாக்டர்களின் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- அரசு பஸ் ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை விடுத்தனர்.
- ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் ஊழியர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகம் நகா் கிளையில் டிரைவராக பணியாற்றி வருப வா் முருகேசன் (50). இவா் ராமநாதபுரத்திலிருந்து அழகன்குளத்துக்கு செல்லும் டவுன் பஸ் ஓட்டி வந்த போது, சிலா் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனா். அவர் களை ஓட்டுநா், பஸ் உள்ளே செல்லும் படி அறிவுறுத்தி னாா்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் ராம நாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தேவிபட்டினம் போலீசார் இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் இந்த நிலையில் இரண்டு பேரையும் குண்டா் சட்டத் தில் கைது செய்யக்கோரி நேற்று நகா் கிளை போக்குவரத்து ஊழியா்கள், 57 பஸ்களை இயக்காமல், கிளையின் நுழைவாயிலில் அமா்ந்து தா்ணாவில் ஈடு பட்டனா்.
இதைத்தொடா்ந்து, அங்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரி பத்மநாதன், ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் ஊழியர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் இன்று காலை ராமநாதபுரத்தில் இருந்து சித்தார் கோட்டை வழியாக அழகன்குளம் வழித்தடத்தில் செல்லும் டவுன் பஸ் அனைத்தும் தேர்போகி பஸ் நிறுத்தத்து டன் திருப்பி செல்லப் பட்டது, இதனால் பனைக்குளம், அழகன் குளம், ஆற்றாங்கரை மாணவ, மாணவிகளும் வியாபாரிகளும், பொது மக்களும் பெரிதும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து போக்கு வரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது, புதுவலசை கிராமத்தில் இருந்து முக்கிய நபர்களை அழைத்து ராம நாதபுரம் டி.எஸ்.பி தலைமை யில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்னர் அந்த பகுதிக்கு பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்தார்.
- மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர்.
புதுச்சேரி:
மயிலாடுதுறை மாவட் டம், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது32).இவர் நாகப்பட்டினம், தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நாகப் பட்டினத்தில் இருந்து செம்பனார்கோவில் வரை மாணவர்களை அழைத்து சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று காலை மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது. அதனால் அன்று மாலை மோகன் பஸ்சை இயக்கவில்லை.
இரவு பஸ்சில் உள்ள கோளாறை சரி செய்து, மறு நாள் மாணவர்களை அழைத்து வருவதற்காக, நாகப்பட்டினத்தில் இருந்து செம்பனார் கோவிலுக்கு அன்று இரவு 10.30 மணிக்கு, காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழி சாலை வழியாக சென்றார். அப்போது அந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஐயனார் கோவில் அருகே பஸ்ஸை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருநங்கைகள் 2 பேர் திடீரென மோகனை வழிமறித்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த மோகன், காரைக்கால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பஸ் நிலையம் அருகே நின்றிருந்த பவானி (வயது 35), சுவாதி (23) ஆகிய 2 திருநங்கைகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, பஸ் டிரைவரிடம் நகையை பறித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12 கிராம் தங்கச் செயினை போலீசார் மீட்டனர்.
- குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை முந்திச்சென்ற கார், வழிமறித்து நின்றது
- அரசு பஸ் டிரைவரை தாக்கிய கும்பல் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி :
குழித்துறை அருகே பாகோடு ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் அஜில் குமார் (வயது 37). மார்த்தாண்டம் டெப்போவில் அரசு பஸ் டிரைவராக உள்ளார். இவர் சம்பவத்தன்று மாலை நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வரும்போது தக்கலை அருகே கல்லுவிளை பகுதியில் பின்னால் சொகுசு கார் வந்துள்ளது. அந்த கார் முந்தி செல்ல முயன்றது ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை முந்திச்சென்ற கார், வழிமறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் அஜில் குமாரிடம் எங்களுக்கு வழி விட மாட்டியா? என கூறி அடித்து உதைத்துவிட்டு தப்பியோடி விட்டனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் தக்கலை போலீஸ் நிலையத்தில் அஜில்குமார் புகார் செய்தார். புகாரை பெற்றுகொண்டு போலீசார் அரசு பஸ் டிரைவரை தாக்கிய கும்பல் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விண்ணப்பிக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று தெரிகிறது.
- விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்படும்.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 டிரைவர் பணி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
நீண்ட நாட்களாக டிரைவர் பற்றாக்குறையால் கடுமையான நெருக்கடியில் இருந்த போக்குவரத்து கழகம் புதிதாக நடத்துனருடன் டிரைவர் பணிக்கான ஆட்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்தும் பஸ் டிரைவர் பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலை வரையில் 4,800 பேர் விண்ணப்பித்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 18-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் விண்ணப்பிக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று தெரிகிறது.
இதுவரையில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்-கண்டக்டர் பணி நியமனத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மட்டுமே நடைப்பெற்றது. தற்போது முதன் முறையாக எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்படும். அக்டோபர் மாதத்தில் எழுத்து தேர்வு நடைபெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
தனியார் ஏஜென்சி மூலம் இந்த பணியினை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.
- பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்தி உள்ளார்.
- இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் :
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில்ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முருகையா (வயது 69). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் திசையன்விளையில் இருந்து கல்லூரி பஸ்சில் மாணவர்களை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்களை இறக்கி விட்டு விட்டு இரவு பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்தி உள்ளார்.
பின்னர் இரவு சாப்பிடுவதற்காக களியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் முருகையா நடந்து சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் மஞ்சுளா (45) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோமதி தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்
- புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிள்ளியூர் :
புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கோமதி (வயது 62). இவர் தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று கோமதி அம்சி சிவன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவரான முருகன் (35) என்பவர் கோமதியை பார்த்து அவதூறாக பேசி, கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கோமதி அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மினி பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயசெல்வி மீது மோதியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இரணியல் :
தூத்துக்குடி மாவட்டம் செட்டிவிளை மணல் மாதா கோவில் பகுதியை சேர்ந்த வர் குருசுமிக்கேல். இவரது மகள் அருட் சகோதரியான ஜெயசெல்வி (வயது 37). இவர் குமரி மாவட்டம் திங்கள்நகர் அடுத்த பட்டரிவிளை ஏசுவின் திரு இருதய கன்னியர்மடத்தில் தங்கி பட்டரிவிளை உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் பட்டரிவிளை யிலிருந்து பள்ளவிளை நோக்கி திருப்பலிக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து மினி பேருந்து ஒன்று புதுவிளை பகுதியில் வைத்து ஜெயசெல்வி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மினி பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயசெல்வி மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் துடிதுடித்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயசெல்வி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர்.
பின்னர் பிரேத பரி சோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீஸ் நிலையத்தில் அருட்சகோதரி ஞான செல்வி புகார் அளித்தார். புகாரின் பேரில் மினி பஸ்சை ஓட்டிய பிலாக்கேடு பகுதியை சேர்ந்த பாண்டி யன் (வயது 27) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.