search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ்"

    • காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது.
    • ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

    போரும் பிணைக் கைதிகளும் 

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 மரணித்தனர். மேலும் 250 க்கும் மேற்பட்டடோர் பிணைக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதில் அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் சிலரும் அடங்குவர்.

    அவர்களை மீட்கும் முகமாகவும், தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்துடனும் கடந்த 10 மாதங்களாக காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் அதிகமானபாலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். மேலும் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் பிணைக்கைதிகளாக இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாகப் போர் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஹமாஸ் வசம் இருந்த சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதன்பின் பிணைக்கைதிகள் பரிமாற்றத்தில் இதுவரை உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

     

    மீட்பு 

    சில தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கைத் பர்கான் அல்காதி என்ற 52 வயதான பணய கைதி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர் ஆவார். தங்கள் வீரர்கள் சுரங்கத்தை சென்றடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக பிணைக்கைதிகள் 6 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாகக் கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த படுகொலைக்காக ஹமாஸுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் இஸ்ரேலிய மக்கள் நேதன்யாகு வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    ஹமாஸ் 

    தற்போது ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் ஆயுதக் குழு [எசேதைன் அல் காசம் பிரிகேட்] செய்தி தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளதாவது,'பிணைக்கைதிகளை மேற்பார்வையிடும் முஜாகிதீன் போராளிகளுக்கு, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளோம். ஒப்பந்தத்துக்கு முன் வராமல் நேதன்யாகு ராணுவத்தின் மூலம் அழுத்தம் கொடுப்பதைத் தொடர்ந்தால் பிணைக் கைதிகளை சவப்பெட்டிகளுக்குள் வைத்துத்தான் இஸ்ரேலுக்கு அனுப்புவோம் என்று ஹமாஸ் சார்பில் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவின் பரிந்துரைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தத்திற்கு சம்மதம்.
    • நாங்கள் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஹமாஸ் குற்றச்சாட்டு.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காமல் உள்ளது. காசா மக்களை பாதுகாப்பதற்கும், பிணைக்கைதிகளை மீட்பதற்கும் போர் நிறுத்தம் அவசியம் என இந்த மூன்று நாடுகள் கருதுகின்றன.

    இதனால் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை தயார் செய்தது. இந்த பரிந்துரைகளை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

    இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற அவர், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவின் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

    அதன்பின் மத்தியஸ்தராக விளங்கும் எகிப்து, கத்தார் நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர் அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளது. இதனால் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் 9-வது முறையாக பயணம் மேற்கொண்ட நிலையிலும் வெற்றிபெற முடியாமல் ஆண்டனி பிளிங்கன் நாடு திரும்பியுள்ளார்.

    போர் நிறுத்தம் தொடர்பாக ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் "எங்களுடைய மெசேஜ் மிகவும் எளிமையானது. அது தெளிவானது. மிகவும் அவசரமானது. எங்களுக்கு தேவை போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போதுதான் இது எங்களுக்கு தேவை. நேரம் மிகவும் முக்கியமானது" என்றார்.

    நாங்கள் ஏற்றுக் கொண்ட முந்தை பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளுக்கு அமெரிக்கா இணங்குகிறது என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஹமாஸின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில் அளிக்கவில்லை.

    • போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி அறிவித்துள்ளார்
    • போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது

    போரும் பேச்சுவார்த்தையும் 

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாத காலமாக நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த காலங்களிலும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் இருந்துவந்தபோதும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான போர் மூண்டுள்ளது.

    தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தாலும் இதுவரை இஸ்ரேல் எதற்கும் பிடி கொடுக்காமலேயே இருந்து வந்தது. இஸ்ரேலுக்கு உதவும் விதமாக ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் அமெரிக்கா தந்து கொண்டிருந்தாலும், விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர உள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பெருமுயற்சி எடுத்து வருகிறது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருந்தாலும், தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டும் நிலையில் உள்ளது என்று கடந்த வாரம் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

    பாதியில் நின்ற பேச்சுவார்த்தை 

    கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த வாரம் நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்திருந்தது.

    அழுத்தம் கொடுக்கும்  அமெரிக்கா - ஆண்டனி பிளிங்கன் பயணம் 

    ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட அமெரிக்கா தயாராக இல்லை. எனவே அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் போர் தொடங்கியதிலிருந்து 9 வது முறையாக இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் நெதன்யாகுவுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய அவர் தற்போது முன்மொழியப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே தற்போது முடிவு ஹமாஸ் கையில் தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆண்டனி பிளிங்கன் வருகையும் அவருடன் நடந்த பேச்சுவார்த்தையும் நல்ல முறையில் அமைந்ததாகவும், முக்கியமான ஒன்று என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

     

    இஸ்மாயில் ஹனியே - ஹிஸ்புல்லா காரணிகள் 

     ஆனால் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்க முடிகிறது. ஹனியே கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ஆனால் மேற்கு நாடுகள் ஈரான் அதிபரை எச்சரித்து வருகின்றனர். ஹெஸ்புல்லா நிலை கொண்டுள்ள லெபனான் பகுதிகளின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் நடத்தி வருவதும் நிலைமையை மோசமாகியுள்ளது. நேற்று லெபனானின் ஹிஸ்புல்லா ஆதிக்க பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த புறக் காரணிகள் பாலஸ்தீன போர் நிறுத்தத்தைத் தாமதமாக்கி வருகிறது.

     ஹமாஸ் திட்டவட்டம் 

    போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தன்,ஆண்டனி ப்லிங்கின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது என்றும் கூறியுள்ளது தெளிவற்றதாக உள்ளது. ஏனெனில் அது குறித்து எங்களிடம் எந்த தகவலும் கூறப்படவில்லை. நாங்கள் அந்த ஒப்பந்தத்துக்கு இசைவு தெரிவிக்கவும் இல்லை . இந்த ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று மத்தியஸ்தர்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். எங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேவையில்லை. [பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆதிக்கம் இல்லாத] புதிய கட்டமைப்பை உருவாக்கினால் அதற்கு நாங்கள் உடன்படுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாஸ் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆண்டனி பிளிங்கன் அடுத்ததாக மத்தியஸ்த நாடுகளான எகிப்து மற்றும் கத்தாருக்கு பயணம் மேற்கொள்கிறார். 

    • 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    தூக்கத்தில் பிரிந்த உயிர்கள் 

    பாலஸ்தீன நாட்டின் மத்திய காசாவில் உள்ள ஸவாடியா Zawayda பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 8 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் டஜன் கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் . உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

    நேற்று இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இஸ்ரேலின் 3 மிசைல்கள் அந்த வீட்டின் மீது ஏவப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் ஹமாஸ் செயல்பாடு இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் மத்திய காசாவில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் நிர்ப்பந்தித்து வருகிறது.

     

    அமைதிப் பேச்சுவார்த்தை 

    இதற்கிடையில் கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேசுவார்த்தை நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டகாக தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்துள்ளது.

    வெற்றியா? தோல்வியா? 

    ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு போர் நிறுத்தத்துக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மத்தியஸ்தர்களின் முயற்சியைப் பாராட்டுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் நிராகரிக்கிறோம் என்றும், போர் நிறுத்தம் வெற்றி அடையவுள்ளது போன்ற பொய் பிம்பம் கட்டமைக்கப்படுவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

     

    மத்திய காசா- தெற்கு லெபனான் தாக்குதல்கள் 

    தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் காசாவில் நேற்று இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்றைய தினம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலான தாக்குதலில் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
    • போர் நிறுத்தம் ஈரான், ஹிஸ்புல்லாவின் பதிலடியை திரும்பப்பெறும் பரிசீலனைக்கு வழி வகுக்கும் என நம்பிக்கை.

    ஹமாஸ் அமைப்பினர குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 10 மாதங்ளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு காசாவில போர் நிறத்தத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தும்போதெல்லாம் காசா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்துவை சுட்டிகாட்டு தடைபட்டு வருகிறது.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாட்டின் அதிகாரிகள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்த முடியும் என மத்தியஸ்தர் நாடுகள் நம்புகின்றன.

    இந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் பங்கேற்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 31-ந்தேதி அமெரிக்க அதிபர் போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை வெளியிட்டார். இதை இரண்டு தரப்பிலும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஹமாஸ் அதில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. இஸ்ரேல் தெளிவுப்படுத்துதல் குறித்து பரிந்துரை செய்தது.

    இருதரப்பிலும் உருவாக்கப்பட்ட புதிய கோரிக்கைகள் தொடர்பாக பரஸ்பர குற்றம்சாட்டியதால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    • ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
    • புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கத்தாரில் இருந்து வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

    2 மாதங்களுக்கு முன்பே அவரது வீட்டில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் ரிமோட் மூலம் குண்டை வெடிக்கச் செய்ததில் ஹனியேவும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்.

     

    இஸ்ரேல் தான் இதற்குக் காரணம் என்று ஈரான் கடுங் கோபத்தில் உள்ள நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் மூலம் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். 

    இதற்கிடையில் ஹமாஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள யாஹ்யா சின்வார்  அழித்தொழிக்கப்படவேண்டியவர் என்றும்  ஹமாஸ் அமைப்பு உலகத்தில் இருந்தே துடைத்தெறியப்படும் என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
    • 50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன.

    டெல்அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.

    இதில் இஸ்ரேல் மீது ஈரான், ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளன. இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதன்படி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவிட்டார்.

    இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உள்ளது. மேலும் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் தங்களது தளபதி கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில் நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். வடக்கு இஸ்ரேல் பகுதியான பெய்ட் ஹில்லெல்லை குறிவைத்து சுமார் 25 நிமிடங்கள் வரை இடைவிடாமல் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை ஏவினர்.

    50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன. அந்த ஏவுகணைகளை நடுவானிலேயே இடை மறித்து இஸ்ரேல் அழித்தது. இஸ்ரேல் படையினர் வான்வெளி தாக்குதலை தடுக்கும் டோம் அமைப்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை தடுத்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இத்தாக்குதல் தொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வீரம் மிக்க மற்றும் மரியாதைக்குரிய எதிர்ப்பிற்கு ஆதரவாகவும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. கத்யுஷா ராக்கெட்டுகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது.

    ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் குறித்து ஈரான் கருத்து கூறும்போது, ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் இன்னும் ஆழமாக சென்று தாக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஹிஸ்புல்லா இன்னும் அதிக இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தாக்கும் என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இத்தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் நாட்டின் கேபர் கிளா மற்றும் டெய்ர் சிரியனி உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல்-லெபனான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் ஈரான் தாக்குதல் நடத்தினால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அவர் தங்கி இருந்த அறை மீது குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை வீசப்பட்டதாகவும், இதில் இஸ்மாயில் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

    ஏவுகணையில் 7 கிலோ வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது என்றும், இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே இருந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் படுகொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.

    • இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
    • மேற்குலக நாடுகளில் உள்ள 2-வது பெரிய உளவு அமைப்பு மொஸாட் ஆகும்.

    ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார்.

    அந்த சமயத்தில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்து அவரை படுகொலை செய்துள்ளனர்.

    இதனையடுத்து ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகளை நிரப்ப இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் ஈரானின் செக்யூரிட்டி ஏஜெண்டுகளை நியமித்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்தில் மரணமடைந்த ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் தெக்ரான் நகரத்திற்கு வந்திருந்தார். அப்போதே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் அதீத கூட்டம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

    இதனையடுத்து அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள 3 அறைகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு அவரை கொலை செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் பட்ஜெட் மற்றும் 7,000 பணியாளர்களுடன் இயங்கும் மொசாட் அமெரிக்காவின் CIA க்கு அடுத்தபடியாக மேற்குலக நாடுகளில் உள்ள இரண்டாவது பெரிய உளவு அமைப்புஎன்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச்சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர்
    • ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த செவ்வாய்க்கிழமை [ஜூலை 30] அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பளித்து வந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை(IRGC) வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச்சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர் என்று தெரிக்கப்பட்டிருந்தது.




     


    இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது. ஆனால் இஸ்ரேல் இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில் அமெரிக்கா இந்த தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்த கூற்றுப்படி, இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.




     


    இந்த நிலையில்தான் கத்தார் நாட்டில் நடந்த அரசியல் சந்திப்பை முடித்துக்கொண்டு, ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த இஸ்மாயில் அந்த வீட்டில் இருப்பதை உறுதி செய்தபிறகு, மர்ம நபர்கள் அங்கு புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்துள்ளனர் என்று  நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது. இதற்கிடையில் ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.




     




     


    • ஜூலை 17-ந்தேதி முகமது டெய்ஃப் மறைந்து இருந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.
    • வான் தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், முகமது டெய்ஃப் கொல்லப்பட்டரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அவர்களில் சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்திய நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுப்பதாக அறிவித்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    காசாவின் தெற்கு நகரான ரஃபாவைத் தவிர மற்ற நகரங்களை அடையாளம் தெரியாத அளவிற்கு இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் சின்னாபின்னமாக்கியுள்ளது.

    இதில் ஒரு நகரம்தான் கான் யூனிஸ். கான் யூனிஸ் நகரில் எங்களுடைய நோக்கம் முடிவடைந்தது என இஸ்ரேல் தெரிவித்து, இந்த நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலஸ்தீனர்கள் குடியேறலாம் என பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது.

    இதற்கிடையே பாலஸ்தீன மக்களுடன் ஹமாஸ் அமைப்பினரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

    இந்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி கான் யூனிஸ் நகரம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. முகமுது டெய்ஃப் மறைந்து இருந்த இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவர் மறைந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்த கூடாரங்கள் வசித்து வந்த 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் முகமது டெய்ஃப் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தவில்லை, ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தவில்லை. இவர்தான் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டடார்.

    இந்த நிலையில்தான் புலனாய்வு மதிப்பீட்டின்படி வான் தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் வான்தாக்குதல் மூலம் கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளது.

    தலைவர் கொல்லப்பட்ட இரண்டு நாளில் முக்கிய தலைவர் தாக்குதலில் உயிரிழந்தார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது ஹமாஸ் அமைப்பினருக்கு போரில் அடுத்தடுத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை.

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.


    உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை என்றார்.

    காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, போலியோ தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

    • கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
    • 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய 8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.

    பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து பாலஸ்தீனத்தின் காசா மற்றும் ரஃபா நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 8 மாதங்களாக நடக்கும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 38,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது டெய்ஃப் கான் யூனிஸ் பகுதியில் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு இன்டலிஜென்ஸ் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

     

    இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டாரா என்று உறுதிசெய்யப்படவில்லை.

     

    தற்போது 58 வயதான 'முகமது டெய்ஃப்' என்று அழைக்கப்படும் முகமது டெய்ஃப் இப்ராஹிம் அல் மஸ்ரியை கொல்ல முயற்சித்து இஸ்ரேல் இதுவரை 7 முறை தாக்குதல் நடத்தி தோல்வியடைந்துள்ளது. நேற்று நடந்துள்ள தாக்குதல் அவர் மீதான எட்டாவது கொலை முயற்சி ஆகும். முகமது டெய்ஃப் ஐ கொல்வது இந்த போரில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக உள்ளது.

    1948 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்காக பெருமபாலான பாலஸ்தீன மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்குளேயே அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். அப்படி கான் யூனிஸ் நகரில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த தாய் தந்தைக்கு 1965 ஆண்டில் அகதி முகாமில் வைத்து பிறந்தவர் முகமது டெய்ஃப். காசாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்ற டெய்ஃப் 1987 வாக்கில் அப்போதைய பாலஸ்தீனிய இளைஞர்கள் பலர் செய்ததைப் போலவே தங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை எதிர்க்க உருவான ஹமாஸ் அமைப்பில் சேர்ந்தார்.

     

    தற்போதய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக இருக்கும் டெய்ஃப் ராணுவ விவகாரங்களில் திறனுடையவராக இருந்தார். 1989 இல் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பின்னர் 90 களில் அமைதிப் பேசுவார்த்தையை ஏற்காமல் ஹமாஸ் தலைவர்களை படுகொலை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையில் பல தற்கொலை தாக்குதலைகளை திட்டமிட்டு அரங்கேற்றினார். அவர் மீதான இஸ்ரேலின் கடந்தகால தாக்குதலைகளில் தனது ஒரு ஒரு புற கண்ணை டெய்ஃப் இழந்ததாக ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

    பல முறை படுகாயமடைந்து மீண்டுள்ளார் டெய்ஃப். சிலர் அவர் வீல் சேரில் தான் இருப்பதாக கூறுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் ரகசிய சுரங்கபாதைகள் அமைப்பது, ராக்கெட்டுகள் உருவாக்குவது, வீரர்களுக்கு பயிற்சியளிப்பது என ஹமாஸின் ராணுவத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார் முகமது டெய்ஃப். இதன் உச்சமாகவே கடந்தஅக்டோபர் 7 தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்.

     

    முகமது டெய்ஃப் தனது 20 களில் இருந்த புகைப்படமும், சமீபத்திய புகைப்படம் ஒன்றும், தாக்குதலுக்கு பின் கிடைத்த அவரின் ஆடியோ செய்தியில் உள்ள குரல் மட்டுமே வெளியுலகிற்கு அவரைப் பற்றி கிடைத்த சொற்ப ஆதரங்களாகும். இந்நிலையில் 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய  8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.

    ×