என் மலர்
நீங்கள் தேடியது "தெப்பக்குளம்"
- தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.
- மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்துள்ள அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மானாமதுரை அருகில் உள்ள நாராயணதேவன் பட்டியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜய் என்ற காளி (11) அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நாகையாபுரம் நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அஜய் தனது நண்பர்களுடன் அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தான்.அவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தெப்பக்குளத்தில் மூழ்கினான். இதனைக் கண்ட கிராம மக்கள் அஜய்யை மீட்டனர். அவன் தெப்பக்குளத்தில் மூழ்கியதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானான்.
நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- மேயர் மகேஷ் உறுதி
- தெப்பக்குளம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி யில் தழுவிய மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சேத மடைந்து மோசமாக காட்சி அளிக்கிறது.
தற்போது இந்த தெப்பக் குளம் தூர்வார பட்ட நிலையில் குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேசை சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் மேயர் மகேஷ் தழுவிய மகாதேவர் கோவில் தெப்பக்குளத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஆணை யாளர் ஆனந்த மோகன் பொறியாளர் பாலசுப்பிர மணியன் கவுன்சிலர் சுனில் அரசு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். ஆய்வு பணி மேற்கொண்ட மேயர் மகேஷிடம் தெப்பக்குளத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கு குடியிருந்த மக்கள் தெரிவித்தனர். உடனடியாக மேயர் மகேஷ் இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் பேசினார்.
இதை தொடர்ந்து மேயர் மகேஷ் கூறுகையில், தெப்பக்குளம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். அவர்கள் இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். தெப்பக்குளத்தை தற்போது சீரமைக்க வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும்.மழை காலம் வந்துவிட்டால் சீரமைப்பது கடினம். எனவே மழைக்கு முன்னதாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மதுரை வலைவீசி தெப்பக்குளத்தை சுற்றி கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்துள்ளனர்.
- இந்த பகுதியில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் முத்துகுமார், ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் ஆன்மீக மையமாக கருதப்படும் மதுரை கோவில்கள் அதிகம் உடைய மாநகரமாகும். இங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் புராதன பெருமைகள் உடையது. இங்கு நடக்கும் திருவிழாக்கள், திருவிளையாடல் லீலைகள் பிரசித்தி பெற்றது.
ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தெப்பத் திருவிழா, புட்டு திருவிழா, நரியை பரியாக்கிய லீலை, மண்டூக முனிவருக்கு சாப விமோசன லீலை சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலின் வலைவீசி மீன் பிடி திருவிழாவும் பிரசித்தி பெற்றது.
இதற்காக மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே தனியார் ஆஸ்பத்திரி எதிரே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் வலைவீசி தெப்பக்குளம் உள்ளது. இந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட இந்த தெப்பக்குளத்தை சுற்றிலும் அரசியல்வாதிகள் தற்போது காங்கிரீட் கட்டிடம், ெசட் அமைக்கும் பணியை செய்து வருகிறார்கள்.
இந்த தெப்பக்குளம் அந்த பகுதிக்கு முக்கிய நீர்வள ஆதாரமாக உள்ளது. இங்கு கட்டிடம் கட்டுவதால் மீன் பிடி திருவிழாவை பக்தர்கள் காண முடியாத நிலை ஏற்படும். இந்த பகுதியில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர தெப்பக்குளத்தை சுற்றி கட்டிடம் கட்டுவது, நீர்வள ஆதார அமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது இந்த வலைவீசி தெப்பக்குளம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை இந்து சமய அறநிலைய துறையும் கண்டு கொள்ளவில்லை.
ஆறு,ஏரி,குளங்களை ஆக்கிரமிக்கவோ, கட்டிடங்கள் கட்டவோ கூடாது. அப்படி கட்ட அனுமதித்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மதுரை வலைவீசி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி கட்டிடம் கட்ட நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த
27-ந்தேதி கொடி ஏற்றத்து டன் தொடங்கியது. இந்த திருவிழா நேற்று வரை 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், யாகசாலை பூஜையும் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரதீபாராதனையும், பக்தர்களுக்குபிரசாதம் வழங்குதலும்நடந்தது. மாலையில் சமய உரையும், இரவுபஜனையும்நடந்தது.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனிவந்தநிகழ்ச்சிநடந்தது.
10-ம் திருநாளான நேற்று தைப்பூச திருவிழா நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு யாக சாலை பூஜையும் 11.30 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை6மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதலும், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை திருக்குளத்தில் வேல்முரு கன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு தீர்த்தவாரி ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாகசுவாமிக்கும், அம்பாள்விக்ரகங்களுக்கும் பொய்கைதிருக்குளத்தின் கரையில்வைத்துபால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம்களபம், குங்குமம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விக்ரகங்களுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து முருகன் குன்றத்தின் மேல் பகுதியில் கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
- லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.
கன்னியாகுமரி:
பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது:-
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற மார்ச் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.
மாசிக்கொடையை முன்னிட்டு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள மற்றும் வெளி மாவட்ட பக்தர்களும் திரளாக மண்டைக்காடு வந்து செல்வர். பக்தர்கள் நீராட மற்றும் புனித கால் நனைப்பதற்கு கோவிலின் மேற்கு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணை நீர் பரம்பை இரணியல் கால்வாய் வழியாக பாய்ச்சப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது.
அணை நீர் இரணியல், நெய்யூர், ஆத்திவிளை, பொட்டல்குழி, காஞ்சிர விளை, தலக்குளம், புதுவிளை, திங்கள்நகர், செட்டியார்மடம், கல்லுக் கூட்டம், லட்சுமிபுரம், கருமங்கூடல் ஆகிய சானல் வழியாக மண்டைக்காடு செல்வதால் இந்த பகுதியில் நிலத்தடி நீராதாரம் பெருகுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களும் பயன் பெறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரணியல் அருகே நெய்யூர் பரம்பை என்னுமிடத்தில் இரட்டை ரெயில் பாதைக்காக இரணியல் கால்வாய் துண்டிக்கப்பட்டது.தண்டவாளத்தின் குறுக்கே தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு அணை நீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது. தொட்டியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை துரிதமாக சீரமைக்க வேண்டும்.
மண்டைக்காடு பக வதியம்மன் கோவில் கொடியேற்று விழாவுக்கு முன்பாக தெப்பக்குளத்தில் நீர் தேக்க வேண்டும்.அதனால் பரம்பை இரணியல் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுவது அவசியமாகிறது. தெப்பக்குளத்தில் நீரை தேக்கினால்தான் மண்டைக்காட் டிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.பரம்பை இரணியல் கால்வாயை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் மேற்படி கால்வாயில் ராட்சத குழாய் பதித்து மண்டைக்காடு தெப்பக்குளத்திற்கு நீர் பாய்ச்ச மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கழிவுநீர்-குப்பைகள் தேங்கி தெப்பக்குளம் துர்நாற்றம் வீசுகிறது.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை
மதுரை நகரின் அடை யாளங்களில் ஒன்றாகவும் முக்கிய சுற்றுலா இடமாக வும் உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்தில் கடந்த 2 வருடங்களாக வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் நிரம்பி தெப்பக் குளம் காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் தெப்பக்குளத்தில் வேகமாக தண்ணீர் குறைய தொடங்கியது. இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மாதம் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது. மேலும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனை பயன்படுத்தி மாரியம்மன் தெப்பக் குளத்தில் தண்ணீர் முழுவ துமாக நிரப்பப்பட்டது. ஆனால் தற்போது அந்த தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும் குப்பைகளும், கழிவுநீரும், பிளாஸ்டிக் பொருட்களும் தெப்பக்குளத்தில் கலந்துள்ளன. இதன் காரணமாக தற்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.
தெப்பக்குளத்தை சுற்றி காலை வேளையில் ஏராள மானோர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். மாலை வேளைகளில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் அமர்ந்து பொழுதுபோக்கி செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். தெப்பக்கு ளத்தின் அருகில் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இந்த நிலையில் மதுரை நகரில் ஒரே பொழுதுபோக்கு இடமாக உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்திற்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக அதிருப்தி அடைந்து ள்ளனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தெப்பக் குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.
- நாச்சியார், சண்முகராஜா மற்றும் தனி யார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை நகரின் மத்தியில் 10 ஏக்கர் பரப்பில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு பிளாஸ்டிக், குப்பை கள் கொட்டப்பட்டு தண்ணீர் அசுத்தமானது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவியது.
இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெப்பக்கு ளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதனை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பாண்டீ ஸ்வரி தலைமையில் ஏராளமானோர் படகில் சென்று தெப்பக்குளத்தில் கிடந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.
இதில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதில் நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், ஜெய காந்தன், காந்தி, ராமதாஸ், வீரகாளை, நாச்சியார், சண்முகராஜா மற்றும் தனி யார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
- கோவிலுக்கு வரும் பக்தா்கள் மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவு பொருள்களை அளிப்பது வழக்கம்.
- கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.
அவினாசி :
அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான தெப்பக்குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தா்கள், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவுப்பொருள்களை அளிப்பது வழக்கம்.
இந்தநிலையில், புதன்கிழமை காலை, கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன. இதையடுத்து, கோவில் நிா்வாகத்தினா் உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்தினா். கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.
- பாகம்பிரியாள் அம்மன் கோவில் தெப்பக்குளம் தூர்வாரப்படுகிறது.
- தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற் றியூரில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமையானது மான சிவகங்கை சமஸ்தா னம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வல்மீக நாதர் சமேத ஸ்ரீ பாகம்பி ரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு தமிழகத் தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து பக்தர்கள் தினமும் சாமி கும்பிட வருகின்றனர். அதிலும் முன்தினம் கோவி லில் தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள வாசுகி தீர்த்தக்கு ளத்தில் நீராடிச் சென்றால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகி றார்கள்.
இந்நிலையில் இங்கு உள்ள தீர்த்தக்குளமான வாசுகி தீர்த்த தெப்பக் குளத்தில் தண்ணீர் அசுத்த மாகி அதிலிருந்த மீன்கள் இறந்து தெப்பக்கு ளம் மாசு ஏற்பட்டது. அதனைத்தொ டர்ந்து தேவஸ்தானம் நிர்வாகத்தின் மூலம் கெட் டுப்போன தண்ணீரை முழு மையாக வெளியேற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு வரு கிறது.
இப்பகுதியைச் சேர்ந்த குட்லக் ராஜேந்திரன் யூனி யன் சேர்மனாக இருந்த போது சுமார் 20 ஆண்டுக ளுக்கு முன் தூர்வாரப்பட் டது. அதன்பிறகு தற்போது தூர்வாரப்படுவதால் இப்ப குதி மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
இரு பிரம்மோற்சவ விழாக்களை முன்னிட்டு தூய்மைப்படுத்தி, சீரமைக்கும் பணிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி வரை ஒரு மாதத்துக்கு கோவில் தெப்பக்குளம் (புஷ்கரணி) மூடப்படுகிறது. தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குளிப்பதற்காக புஷ்கரணியின் பின் பக்கம் குழாய்கள் அமைக்கப்பட்டு வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புஷ்கரணியில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட உள்ளது. தண்ணீரை வெளியேற்றியதும், படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தரை தளம் ஆகியவை சீரமைக்கப்பட உள்ளது. படிக்கட்டுகளை சிமெண்டு பூசி சீரமைத்து, வர்ணம் பூசும் பணிகள் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் புஷ்கரணி ஆரத்தி நடப்பது வழக்கம். எனவே தெப்பக்குளம் இன்று முதல் மூடப்படுவதால் ஒரு மாதத்துக்கு புஷ்கரணி ஆரத்தி நடப்பது ரத்து செய்யப்படுகிறது எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.