என் மலர்
நீங்கள் தேடியது "லோக் ஆயுக்தா"
- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
- தாசில்தாரின் வீட்டில் இருந்து சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
விஜயபுரா:
கர்நாடக மாநிலம் விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகளில், லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் பணம் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது.
- ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து அனைவரது பார்வையையும் பெற்றவர் அன்னா ஹசாரே.
- லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் என்றால் மிகையாகாது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பா.ஜனதா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சபை ஒன்று. மற்றொரு மேல்சபை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டசபையில் ஏற்கனவே லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் நேற்று மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக போராடியவருமான அன்னா ஹசாராவை போன் மூலம் தொடர்பு கொண்டு, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா வரம்பிற்குள் முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் அடங்குவர். லோக் ஆயுக்தா அதிகாரி ஒருவரை நியமித்தபின் அவரை மாற்றவோ இடமாற்றமோ செய்ய முடியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் நீக்க முடியும்.
அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குறித்த புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
மத்திய அரசு லோக் ஆயுக்தா மசோதாவை அமல்படுத்த அன்னா ஹசாரே நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழக்க இவரது போராட்டம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், இவருடன் உண்ணாவிரதம் இருந்து கெஜ்ரிவால் தனியாக சென்று கட்சி ஆரம்பித்து டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
- கர்நாடகாவில் இன்று அதிகாலை முதல் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 10 மாவட்டங்களில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொறியாளர் அனுமந்தராயப்பா, பொதுப்பணித்துறை மாண்டியா கோட்ட பொறியாளர் ஹர்ஷா, சிக்மகளூர் வணிகவரி அலுவலர் நேத்ராவதி, ஹாசன், உணவு ஆய்வாளர் ஜெகநாத் ஜி கொப்பல், வனத்துறை அலுவலர் ரேணுகாமா, சாம்ராஜ்நகர் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் ரவி, மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணை அலுவலர் யக்ஞேனந்திரா, பெல்லாரி உதவி பேராசிரியர் ரவி, விஜயநகர மாவட்ட எரிசக்தி துறை அதிகாரி பாஸ்கர், மங்களூரு மெஸ்தாம் அதிகாரி சாந்தகுமார் ஆகியோருக்கு தொடர்புடைய 40 இடங்களில் இந்த சோதனை நடந்துவருகிறது என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பண்ணை வீடுகள், வணிக வளாகங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.
லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் நடத்தி வரும் சோதனையால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
- கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா குழுவினர் இன்று காலை மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 100-க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைக்கு 13 சூப்பிரண்டுகள், 12 துணை சூப்பிரண்டுகள் தலைமை தாங்கி உள்ளனர்.
இதில் பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதுபோல் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பீன்யா போலீஸ் நிலையம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சேத்தன் என்பவர் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டார். அதற்கு போலீசார் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு அவரிடம் கேட்டனர்.
இதையடுத்து பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உதவி கமிஷனர் ஜீப் டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோர் சேத்தனிடம் இருந்து முன்பணமாக ரூ.50,000 வாங்கினார்கள். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணா தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோலார் மாவட்டம் பங்கராபேட் தாலுகாவின் ஜே.குல்லஹள்ளி கிராம பஞ்சாயத்தில் பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தப்பா குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரிடம் பஞ்சாயத்தில் கணக்கு தொடங்க ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முனியப்பா முதலில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்த அவர் மீதி பணம் ரூ.2 ஆயிரத்தை கோவிந்தப்பாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்ட பள்ளாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளர் வீரண்ணா விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது லோக் ஆயுக்தா வலையில் சிக்கினார். 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கும்போது அவர் பிடிபட்டார். அப்போது அங்கு இருந்த இடைத்தரகர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, உத்தர கன்னடா, பிதர், ராமநகரா, கார்வார், சன்னபட்னா உள்ளிட்ட 60 இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம், ஆவணங்கள், சட்ட விரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.
- சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக கவர்னர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார்.
கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சித்தராமையா மீதான புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "என்னை விசாரிக்க லோக் அயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நீதிமன்ற உத்தரவின் முழு நகலையும் படித்துவிட்டு விரிவாக பதில் அளிக்கிறேன்.
விசாரணையை எதிர்கொள்ள, சட்டப்போராட்டம் நடத்த தயாராக இருக்கிறேன். விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை. அனைத்தயும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சித்தராமையா லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
- முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம்.
பெங்களூரு:
முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) அதற்கு மாற்றாக 14 மனையிடங்களை ஒதுக்கிக் கொடுத்தது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட அதிக மதிப்புள்ள நிலம் நகரின் முக்கியமான மற்றும் ஆடம்பர பகுதிகளில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின்பேரில் நீதிமன்ற வழிகாட்டு தலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2-வது குற்றவாளியாக அவரது மனைவி பார்வதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். 3-வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4-வது குற்றவாளியாக தேவராஜன் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி லோக் ஆயுக்தா போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி சித்தராமையா மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று காலை 10.10 மணிக்கு ஆஜரானார். இதையொட்டி அலுவலகம் வெளியே உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பத்திரிகையாளர்களும் அந்த பகுதியில் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு தி.கா. உதேஷ் தலைமையிலான குழுவினர் முதல்-மந்திரி சித்தராமை யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மூடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விபரங்கள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா விளக்கமாக பதில் அளித்தார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி லோக் ஆயுக்தா அலுவலகம் வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஏற்கனவே சித்தராமையாவின் மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோர் லோக் ஆயுக்தா போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையே மைசூரு பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் லோக் ஆயுக்தா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பினர் இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று போபாலில் லோக் ஆயுக்தா சோதனையின் போது, போக்குவரத்துத் துறையின் முன்னாள் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக 200 ரூபாய் நோட்டுகள் மற்றும் 40 கிலோ வெள்ளி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, போபால் அரேரா காலனியில் வசிக்கும் சவுரப் சர்மா என்பவர் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி, சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இவர் ம.பி. சாலை போக்குவரத்துத் துறை போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். கடந்த ஆண்டுதான் விஆர்எஸ் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
- 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்றும் 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து துறை இணை இயக்குனர் ஷோபா, சிக்கமகளூரு மாவட்டம் கடூர் நிர்வாக மருத்துவ அலுவலர் டாக்டர் உமேஷ், பிதார் மாவட்ட நீர்பாசன துறை பொறியாளர் ரவீந்திரன், பெலகாவி மாவட்டம் கானாபூர் தாசில்தார் பிரகாஷ் ஸ்ரீதர், தும்கூரில் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. ராஜூ, பெல்லாரி தாலுகா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி லோகேஷ், உள்பட 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
- தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி. ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டார்.
- நீதி சாராத 2 உறுப்பினர்களாக வி.ராமராஜ், ஆறுமுக மோகன் அலங்காமணி நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் பதவி ஏற்றுக்கொண்டார். உறுப்பினர்களாக ராமராஜ், ஆறுமுக மோகன் அழகுமணி ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து கவர்னர் உத்தரட்டார். மேலும் நீதி சாராத 2 உறுப்பினர்களாக, மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனின் தலைவர் வி.ராமராஜ் (நாமக்கல்) மற்றும் வருமான வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் இன்னு பதவி ஏற்றுக்கொண்டனர்.
லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் 17.4.2027 வரை பதவி வகிப்பார். மற்ற 2 உறுப்பினர்கள் தங்கள் 70 வயது வரையிலோ அல்லது 5 ஆண்டுகள் வரையிலோ, இதில் எது முதலில் வருகிறதோ? அதுவரையில் பதவியில் நீடிப்பார்கள்.
லோக் ஆயுக்தா தலைவராக பதவி ஏற்றுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமாணிக்கம் 31.5.1959-ம் ஆண்டு பிறந்தவர். 1983-ம் ஆண்டு வக்கீலாக பணியை தொடங்கி, அதன்பின்னர் மாவட்ட நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதி என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு பதிவாளராக பதவியேற்ற அவர் அடுத்த ஆண்டில் (2017) சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனார். 30.5.2021 அன்று நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதி பிரிவு உறுப்பினராக 18.4.2022 முதல் 19.8. 2024 வரை பணியாற்றினார்.
- அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், ரூ.56 லட்சத்திற்கு தங்க நகைகள் சிக்கியது.
- கலபுரகியை சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு சொத்துகள் உள்ளன.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 8 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இதுதொடர்பாக லோக் ஆயுக்தா போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், ரூ.56 லட்சத்திற்கு தங்க நகைகள் சிக்கியது. அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.8 கோடியே 46 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.
பெங்களூருவை சேர்ந்த அதிகாரி கல்லேசப்பா வீட்டில் ரூ.32 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கம், ரூ.16 லட்சத்து 10 ஆயிரத்திற்கு தங்க நகைகள் சிக்கி இருந்தது. அவரது சொத்து மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதுபோல், மின்வாரிய என்ஜினீயரான நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 18 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். கலபுரகியை சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ.4 கோடியே 55 லட்சத்திற்கு சொத்துகள் உள்ளன.
தாவணகெரேயை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான டாக்டர் நாகராஜிக்கு ரூ.6 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்திற்கு நகை, பணம், வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துகள் இருக்கிறது. இதுபோல், டாக்டர் ஜெகதீசுக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளும், பாகல்கோட்டையை சேர்ந்த அரசுஅதிகாரி மல்லேஷ் என்ற மல்லப்பாவின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 92 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். விஜயாப்புராவை சேர்ந்த முதல்நிலை ஊழியரான சிவானந்த சிவசங்கரின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.சோதனைக்கு உள்ளான 8 அரசு அதிகாரிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.36 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரத்து 737 ஆகும். அவர்களது வீடுகளில் இருந்து ரூ.64 லட்சத்து 78 ஆயிரம் ரொக்கம், ரூ.3 கோடியே 73 லட்சத்து 71 ஆயரத்திற்கு தங்க, வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது.
இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட், அவர்கள் இருவரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் 29-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், மதுரை ஐகோர்ட் விதித்த இடைக்கால தடையை நீக்க முடியாது என்று கூறியது. அத்துடன், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு எதிர்மனுதாரர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, எதிர்மனுதாரர் ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் இதில் அவசரம் எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். #Lokayukta #SupremeCourt
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன் உறுப்பினர்களை நியமித்தது. இதில் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார். மேலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து கடந்த 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர்கள் இருவரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அவர்கள் இருவரின் நியமனமும் சட்ட விதிகளுக்கு புறம்பானது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி மற்றும் ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும், ‘லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் தமிழக அரசின் மனு மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய, இந்த வழக்கின் எதிர்மனுதாரர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #LokAyudha #SupremeCourt