என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயக்குமார்"

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
    • நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன் என்றார் விஜய்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    விஜய்யின் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "உண்மையான களம் அதிமுகக்கும் திமுகவுக்கும்தான்" என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் பேசிய அவர், " தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் விஜய் அவ்வாறு பேசியுள்ளார்.

    ஆனால், உண்மையான களம் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான்" என்றார்.

    • எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம்.
    • நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

    தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசுக்கு திமுக தாரை வார்க்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

    மக்கள் அனுபவிக்கும் எண்ணற்ற கொடுமைகளை பற்றி விவாதிக்க தயாரா ? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டார். தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார்..? நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா ?

    எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம். நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

    திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் அமைச்சர் ரகுபதி. முறைவாசல் செய்பவர்களுக்கொல்லாம் நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    சட்டத்துறை அமைச்சராக உள்ள ரகுபதி அதிமுகவில் அடையாளம் காணப்பட்டவர். அமைச்சர் ரகுபதிக்கு மானம், ரோஷம் இருக்கிறதா ?

    கோபாலபுரத்தின் கொத்தடிமையான ரகுபதியிடம் நாங்கள் பேச முடியாது. முதல்வரை விவாதத்திற்கு அழைத்தால் ரகுபதி வருகிறார். ஆட்டை அழைத்தால் குட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது.
    • சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து ஆராய 2006-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியிலான மத்திய அரசு.

    அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ்-தி.மு.க. மத்திய கூட்டணி அரசு. அப்போது, திமுக சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை.

    இந்த சட்டத்தைத்தான் தற்போதைய பா.ஜனதா அரசு 2019-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

    தி.மு.க. தலைமை, தற்போது பா.ஜனதா தேவையில்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பதுபோல் நடிக்கிறது.

    இன்றைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தி.மு.க.வின் தயவால் அங்கு இடம்பெற்றவை. அவைகளில், இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டு, அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான, இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டை மனமுவந்து வரவேற்பதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிசன் பரிந்துரை அடிப்படையில் பிரச்சினை வந்தபோது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வைத்து நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்.

    மேலும், அரசியல் சாசன சட்டத்தின் 9-வது அட்டவணையில் இதை சேர்த்து அதை உறுதிப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தினார்.

    ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு விஷயத்திலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்ட மன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது.

    சென்னை :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதன் பின்னர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதற்கு உரிய அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கும்படி மனு கொடுத்துள்ளோம். உரிய பாதுகாப்பும், அனுமதியும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அண்மை காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிக மயக்க மருந்து கொடுத்ததன் காரணமாக குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இதுபோல குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் குழந்தை ஒன்று இறந்துள்ளது. பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆட்சியாளர்கள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ற முறையில் இதை எடுத்து சொல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக, பேச்சு அடிபடுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, 'இதற்கு பதில் அளித்து, அளித்து புளித்து போய் விட்டது. அது முடிந்து போன கதை. அது தொடரும் கதை அல்ல. அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே, கூறி விட்டார்' என்று ஜெயக்குமார் உறுதியாக பதில் அளித்தார்.

    • அரசு ‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும்.
    • எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி.

    பொன்னேரி:

    பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    நெசவாளர்களின் துயரத்தை போக்க எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதனை ஜெயலலிதா கடைப்பிடித்தார். இதன் காரணமாக நெசவாளர்கள் பயனடைந்தனர்.

    அதேபோன்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கியபோது குறை கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்தபின் ரூ.1000 மட்டும் வழங்கினால் போதும் என்று நினைக்கிறது.

    இதனால், கரும்பு, மஞ்சள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை விளைவித்த ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

    விவசாய தொழிலுக்கு மூடுவிழா செய்துவிட்டு ஏழைகள் வயிற்றில் அடிக்கக்கூடாது. எனவே அரசு ‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும்.

    காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போன்று சிலர் அங்கும் இங்கும் பதவி சுகத்திற்காக செல்வார்கள்.

    ஆனால் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கட்சி.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். பாராளுமன்ற தேர்தலிலும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவையும் அதிருப்தியில் இருக்கின்றன.

    அந்த கூட்டணியில் உள்ள 11 கட்சிகளும் கட்டி வைத்துள்ள நெல்லிக்காய் மூட்டை. அதை அவிழ்த்து விட்டால் சிதறி போய்விடும். தி.மு.க. கூட்டணி வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் தேய்ந்து போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வில் 4 அணிகள் கிடையாது.
    • தி.மு.க.வில் உழைப்பவருக்கு மரியாதை இல்லை.

    சென்னை :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் 4 அணிகள் கிடையாது. எந்த பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலர் நீக்கப்பட்டு உள்ளார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 62 பேர் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறார்கள். தலைமைக்கழக நிர்வாகிகள் 75 பேரும், மாவட்ட செயலாளர்கள் 75 பேரும் கட்சியில்தான் இருக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அணிகள் அல்ல பிணிகள்.

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உலகுக்கே தெரியும். அதனால்தான் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது சட்டப்படியான விஷயம்தான்.

    தி.மு.க.வில் உழைப்பவருக்கு மரியாதை இல்லை. புதிதாக வந்தவர்களுக்கு கூட பதவிகள் வழங்கப்படுகிறது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். தி.மு.க.வில் குமுறல் எழுந்துள்ளது. அது உள்ளக்குமுறல் நீறு பூத்த நெருப்பு. அதன் வெளிப்பாடாகத்தான் முதலில் ஒரு பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது. இன்னும் நிறைய பேர் வருவார்கள். அந்த அளவுக்கு அந்த கட்சியின் நிலைமை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் முடிவாகும்.
    • தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசும்போது, "அ.தி.மு.க. பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி வாழ்க..., ஓ.பன்னீர்செல்வம் வாழ்க..." என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல தேவையில்லை. அவசியமும் இல்லை. அவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி வைப்பதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றது. அதே போன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே அ.தி.மு.க.வை இணைக்க பா.ஜனதா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்காத நிலையில் பா.ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தனித்து போட்டி என்ற அண்ணாமலையின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு நாங்கள் தலைமை வகிக்கிறோம்.

    2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் முடிவாகும். தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.

    அவர்கள் கட்சி நிலைப்பாட்டை பேச அவர்களுக்கு முழு உரிமை உண்டு. நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சிக்காரர்களை குஷிப்படுத்தவும் பேசி இருக்கலாம்.

    எந்த கட்சி எங்களோடு இணைந்தாலும் சரி. எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி விட்டார்.

    எத்தனை கட்சிகளாக இருந்தாலும் சரி. எந்த கட்சியாக இருந்தாலும் சரி. எங்களோடு கூட்டணிக்கு வரும் போதுதான் அவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது
    • புயலில் பாதிப்படைந்த மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.

    அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கினார்.

    பின்னர் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் ரூ.18 கோடி முதலீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
    • முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார்.

    மாமல்லபுரம்:

    மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கப்பட்டினம், மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம், உய்யாலி குப்பம், கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆலிக்குப்பம் போன்ற பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீன்பிடி சாதனங்கள், படகுகள் சேதம் அடைந்தன.

    இந்த நிலையில் பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். உய்யாலிகுப்பம் கிராமத்தில் சேதத்தை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் ரூ.18 கோடி முதலீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.

    அம்மாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தினால் இந்தப் பகுதி கிராமம் மிகவும் பாதுகாக்கப்பட்டது என்று மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், எஸ்.வந்த்ராவ், ராகவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்.
    • இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளான வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை அவரது நினைவிடத்தில் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்புக்கு அனுமதி கோரி உள்ளோம்.

    அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதில் என்ன உங்களுக்கு சந்தேகம். இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். அதேபோல மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. மாநிலத்தின் உரிமையை யார் மீட்டெடுத்தது. காவிரி நதி நீர் பிரச்சினையில் தி.மு.க. என்ன செய்தது. கச்சத்தீவு விஷயத்தில் என்ன செய்தார்கள். நாங்கள்தான் வழக்குத் தொடுத்துள்ளோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் யார் உரிமையும் பறிக்ககூடாது. உரிமையைப் பறித்தால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க.வாகத்தான் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்பந்தமே இல்லை.
    • பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பெயரை கெடுத்துக்கொள்ள கூடாது.

    சென்னை :

    சொத்துவரி, பால் விலை, விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் சென்னையில் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தங்கச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநில-மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-

    'நீட்' தேர்வு ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, மாதந்தோறும் மின் கணக்கீடு, கல்விக்கடன், நகைக்கடன் ரத்து, 'கியாஸ்' சிலிண்டருக்கு ரூ.100 மானியம், வருடத்தில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை இந்த அரசு நிறைவேற்றவில்லை.

    வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம், கழிவுநீர் வரி போன்றவற்றை உயர்த்தி மக்களை துன்புறுத்தலாமா?. மக்களின் சாபத்துக்கு இந்த அரசு ஆளாகி வருகிறது. குறிப்பாக விலைவாசி உயர்வால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். தாலிக்கு தங்கம், மானிய விலை ஸ்கூட்டர், அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்ற அ.தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதிலேயே இந்த அரசு குறிக்கோளாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பது போட்டி கூட்டம் இல்லை. 'ஓ.பி.எஸ். பிரைவேட்' (தனியார் நிறுவனம்) கம்பெனிக்கு நடக்கும் நிர்வாகிகள் கூட்டம்தான் அது. இது கட்சி கூட்டம் அல்ல. ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து நியமித்தார்கள். அவர்களை வைத்து கூட்டம் நடத்துகிறார்கள்.

    அ.தி.மு.க.வுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவரது செயல்பாடுகள் ஒருபோதும் அரசியலில் எடுபடாது. அவரிடம் உள்ளவர்கள் அ.தி.மு.க.வின் தொண்டர்களே கிடையாது.

    'எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சேர்த்துக்கொள்வோம்' என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியிருக்கிறார். அவர் ஏன் இப்படி ஆகிவிட்டார்? என்று தெரியவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பெயரை கெடுத்துக்கொள்ள கூடாது. கூடா நட்பை அவர் தவிர்ப்பது நல்லது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் இருக்கிறது. பா.ஜ.க.வுடன் நட்பு தொடருகிறது.

    ஆனால் அது கூட்டணியா? என்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு எடுக்க முடியும். பூத் கமிட்டி போட்டிருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாராகி கொண்டுதான் இருக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்பு அலை நிச்சயம் எங்களுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் அ.தி.மு.க. அரசின் நல்ல திட்டங்களை மக்கள் நினைத்து பார்த்து வருகிறார்கள்.

    பரந்தூர் விமான நிலையம் திட்டம் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்டதாக தி.மு.க.வினர் விமர்சிக்கிறார்கள். நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்றால் நிறுத்திவிடலாமே... தி.மு.க.வினர் வீட்டில் உலை கொதிக்கவில்லை என்றாலும் அ.தி.மு.க.வைதான் குற்றம் சொல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது.
    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணிதான் அமையும். அவரது தலைமையை ஏற்றுத்தான் எல்லோரும் வருவார்கள்.

    1989, 1991-ம் ஆண்டுகளில் ஓ.பி.எஸ். யார் என்று தெரியாது. 1996-லும் கூட அவர் யார் என்று தெரியாது. 2001-ம் ஆண்டுதான் கட்சியில் அவர் யார் என்று தெரிய வந்தது. அதற்கு முன்பு தேனி நகரத்தில் மட்டும்தான் அவரை தெரியும். நான் 1991-ம் ஆண்டே அமைச்சராகி விட்டேன்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×