என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரிகையாளர்கள்"

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பொரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்களின் கோரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

     

     

     

     

    இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

     

    கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதன் புகாரில், இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வழக்கம்போல் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பாகிஸ்தானில் 6 பேர், வங்கதேசத்தில் 5 பேர் மற்றும் இந்தியாவில் 3 பேர் அடங்குவர்
    • உலகம் முழுவதும் 520 பத்திரிகையாளர்கள் தற்போது சிறையில் உள்ளனர்

    உலகளவில் இந்த ஆண்டு [2024 இல்] 104 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ) தெரிவித்துள்ளது.

    இன்று அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவான 104 கொலைகளில் பாதி காசாவில் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் களத்தில் செய்தி சேகரித்த 55 பாலஸ்தீனிய ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

    உலகளவில் கடந்த ஆண்டு [2023 இல்] 129 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இறப்பு குறைந்திருந்தாலும் கூட இது மோசமான ஆண்டுகளில் ஒன்றாகவும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான ஆண்டாக அமைந்துள்ளது என IFJ பொதுச் செயலாளர் அந்தோனி பெல்லாங்கர் தெரிவித்துள்ளார். உலகின் கண்களுக்கு முன்பாக நடக்கும் இந்த படுகொலைகளைக் கண்டிப்பதாக பெல்லங்கர் கூறியுள்ளார்

     

    மேலும் காசாவில் கடந்த "அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து, குறைந்தது 138 பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று IFJ கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

    மேலும் காசாவில் களத்தில் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் தவிர்த்து வேண்டுமென்றே பல ஊடகவியலாளர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பெல்லாங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மத்திய கிழக்கிற்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக ஆசிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆசிய நாடுகளில் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களில் பாகிஸ்தானில் 6 பேர், வங்கதேசத்தில் 5 பேர் மற்றும் இந்தியாவில் 3 பேர் அடங்குவர் என்று IFJ அறிக்கை கூறுகிறது.

     

    கோப்புப் படம் 

    மேலும் உக்ரைன் போரில் 2024 இல் நான்கு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 520 பத்திரிகையாளர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு மட்டுமே 427 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி செய்தியாளர்களைச் சிறை வைப்பதில் சீனா முதலிடத்தில் உள்ளது. 

    • சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டது.
    • சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவராக சுரேஷ் வேதநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1972ம் ஆண் தொடங்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கசைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

    இதைதொடர்ந்து, பதிவுத்துறை சட்டத்தின்படி சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில், நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. அதன்படி, கடந்த 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைதொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. இதில், நீதிக்கான கூட்டணி வெற்றி பெற்றது.

    தலைவர் - சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது, இணைச் செயலாளர் - நெல்சன் சேவியர், பொருளாளர் - மணிகண்டன், துணைத் தலைவர் - சுந்தர பாரதி, துணைத் தலைவர் - மதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    நிர்வாக குழு உறுப்பினர்களாக, ஸ்டாலின், பழனி, கவாஸ்கர், விஜய் கோபால், அகிலா உள்ளிட்டோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

    இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், " சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (Chennai Press Club) 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, என்றும் நடுநிலையுடன் ஊடக அறத்தைப் போற்றி, புதிய நிர்வாகக் குழு வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகிறேன்" என்றார்.

    • 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்.
    • 15 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.7.5 லட்சம்.

    தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிதி உதவியினை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.

    அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
    • காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது மத்திய காசாவில் அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனை மீது இஸ்ரேல் காசாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

    மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் நியூஸ் நெட்வொர்க்கில் [Quds News] பணியாற்றிய பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடாத்தியுள்ளது.

     

    இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவிற்குள் வெளிநாட்டு பத்ரிக்கையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது. 

     

    • கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 35 பத்திரிகையாளர் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.
    • கொரோனா தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.

    இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு, மறைந்த பத்திரிகையாளர்கள் 35 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

    பத்திரிகையாளர்கள் நல நிதியிலிருந்து 7 பத்திரிகையாளர்கள் மற்றும் 35 பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 16 பத்திரிகையாளர் குடும்பங்களும் அடங்கும். இவர்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

    மேலும் நிரந்தர உடல்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2 பத்திரிகையாளர்கள், பெரிய நோய்களுக்கு சிகிச்சைபெறும் 5 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, மொத்தம் ரூ.1.81 கோடி நிதியுதவி வழங்க இக்குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    காஷ்மீர் பத்திரிகையாளர்கள் ஒரு வரம்பை வகுத்துக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் சுஜாத் புகாரியின் (சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்) நிலைதான் உங்களுக்கு என பாஜக தலைவர் லால் சிங் பேசியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு - காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னர்  "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக - பிடிபி கூட்டணி உடைவதற்கு முக்கிய காரணமாக இந்த சம்பவம் கூறப்பட்டது. 

    இந்நிலையில், அம்மாநில பாஜக மூத்த தலைவர் லால் சிங் நேற்று பேசுகையில், “காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள், தாங்கள் கொண்டுள்ள பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கும், செய்திகளை உண்மைத் தன்மையுடன் அளிப்பதற்கும் இடையே ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும்” என மிரட்டல் தொணியில் பேசினார்.

    லால் சிங்கின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இதற்கு அந்த மாநில பத்திரிகையாளர் சங்கமும், தேசிய மாநாட்டுக் கட்சியும், பிடிபி கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி லால் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு, பின்னர் மந்திரி பதவியி இருந்து லால் சிங் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த போது ரஜினிகாந்த் ஒருமையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்க்கு இல்லை என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். #Rajinikanth
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பவர்களை சந்தித்து விட்டு நேற்று சென்னை திரும்பியபோது ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, சில கேள்விகளுக்கு ஆவேசத்துடன் பதிலளித்த அவர் “ஏய் வேறு ஏதாவது கேள்வி இருக்கா?” என கூறினார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த பத்திரிகை சங்கம் ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இதனை அடுத்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது, “விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
    ×