search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 208597"

    • தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் தோட்டத்திற்கு சென்றார்.
    • கிருஷ்ணன் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வெள்ளாந்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52).

    இவருக்கு அந்த பகுதியில் ரப்பர் தோட்டம் உள்ளது. தினமும் காலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காக கிருஷ்ணன், தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் தோட்டத்திற்கு சென்றார்.

    அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக கரடி ஒன்று வந்தது. அதனை பார்த்ததும் கிருஷ்ணன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அவரை துரத்திச்சென்று கரடி கடித்தது. இதில் கிருஷ்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை தொடர்ந்து கரடி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. காயத்துடன் கிடந்த கிருஷ்ணன் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கரடி மீண்டும் தோட்டத்திற்கு வராத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.

    • வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
    • கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனப்பகுதியில் கொண்டுவிடும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.

    இதுபோல வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி ஒன்று களக்காடு அருகே பெருமாள்குளம் கிராமத்திற்குள் சுற்றி திரிந்தது. இதன் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த கிராம மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் பெருமாள் குளம் கிராமத்தில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை கூண்டுக்குள் கரடி சிக்கியது. கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனப்பகுதியில் கொண்டுவிடும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • கரடி ஊருக்குள் வந்து செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது.

    ஊட்டி

    வனவிலங்குகள் நடமாட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உள்பட 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அதிக அளவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அருகே உள்ள போர்த்தியாடா எல்லைக்கண்டி பகுதியில் கரடி ஒன்று வளர்ப்பு பிராணி போல் சாலையில் உலா வந்துள்ளது.

    இதன் பின்னர் சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டியில் ஏறி, பிளாஸ்டிக் கவரில் இருந்த உணவு கழிவுகளை எடுத்துக்கொண்டு அங்கேயே தின்றுவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், நீலகிரி போன்ற வனப்பகுதியில் உணவு கழிவுகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டக் கூடாது. குப்பை தொட்டியில் உணவு கழிவுகளை கொட்டுவதால் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. அந்த சமயங்களில் மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம். இதை வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் அதையும் கண்காணித்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இல்லையெனில் வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை தின்று உயிரிழக்கும் அபாயம் உள்ளது, என்றனர்.

    • கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
    • பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.

    இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • உணவு மற்றும் குடிநீருக்காக கரடி கிராமத்திற்குள் புகுந்து வருகிறது.
    • கோவிலின் அருகே கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், பெருமாள்குளம் அருகே உள்ள பொத்தைகளில் தஞ்சமடைந்து உணவு மற்றும் குடிநீருக்காக கிராமத்திற்குள் புகுந்து வருகிறது.

    கடந்த 2-ந் தேதி அதிகாலை அங்குள்ள இசக்கியம்மன் கோவிலில் கரடி உலா வந்த காட்சிகள் சி.சி.டி.வியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனைதொடர்ந்து களக்காடு வனத்துறையினர் கரடி நடமாட்டம் காணப்படும் பெருமாள்குளத்தில் ஆய்வு செய்தனர். அங்கு பதிந்திருந்த கரடியின் கால்தடங்களையும் சோதனையிட்டனர். அதன்பின் கோவிலின் அருகே கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. கூண்டுக்குள் கரடி விரும்பி உண்ணும், அன்னாசி பழங்கள் வைத்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். பழத்தை உண்ப தற்காக கரடி வரும் போது கூண்டுக்குள் சிக்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தெரு நாய்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது
    • அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராம மற்றும் நகர பகுதிகளில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உணவு தேடி கரடிகள் தினந்தோறும் வலம் வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் குன்னூர் நகரப்பகுதியில் ரெயில் வேக்கு சொந்தமான ரேஷன் கடை ஒன்று உள்ளது. அங்கு அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இதன் அருகாமையில் குன்னூர் பஸ் நிலையம் மற்றும் மலை ரெயில் நிலையமும், அமைந்துள்ளது. இதனிடையே இரவு கரடி ஒன்று பூட்டி இருந்த ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே செல்லமுயன்ற போது அங்கிருந்த தெரு நாய்கள் வரவே கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால் அங்கிருந்த உணவு பொருட்கள் வீணாகாமல் தப்பியது. இச்சம்பவம் நடந்த இடத்தை வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் கரடி வந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது. குன்னூர் பஸ் நிலையம் பகுதியில் கரடி ஒன்று சர்வசாதாரணமாக வந்து சென்றது. அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மாஞ்சோலை 12-ம் காடு என்ற பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • சிறிது நேரம் நின்ற நிலையில் தேயிலை செடிகளுக்கள் புகுந்து கரடி மாயமானது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன.

    இந்த நிலையில் மாஞ்சோலை 12-ம் காடு என்ற பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து சிறிது நேரம் நின்ற நிலையில் தேயிலை செடிகளுக்கள் புகுந்து மாயமானது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அந்த கரடியை வீடியோ எடுத்துள்ளனர்.

    தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் மாஞ்சோலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒன்று தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளியை தாக்கியது.

    • கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • ஊருக்குள் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்னர்.

    இந்நிலையில் கோத்தகிரி அருகே அரவேணு கல்லாடா பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கோவை சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

    வீட்டின் சமையல் அறையில் இருந்து சத்தம் வந்துள்ளது. உடனடியாக அவர் டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது கரடி ஒன்று வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடி கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியான அவர் வெளியில் சென்று சத்தம் எழுப்பினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.

    பின்னர் கரடியை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் கரடி வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது.

    ஊருக்குள் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூண்டு வைத்து பிடிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    • அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 50-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலை யில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதே பகுதியில் கடந்த சில மாதங்களில் சிறுத்தை, கரடி மற்றும் காட்டு பன்றிகள் உலா வந்துள்ளது. எனவே அப்பகுதியில் வனத்து றையினர் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்கா ணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவும் இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரப்பள்ளம் அருகே கரடி தனது குட்டிகளுடன் ரோட்டை கடப்பதற்காக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.
    • வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காரப்பள்ளம் அருகே கரடி தனது குட்டிகளுடன் ரோட்டை கடப்பதற்காக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.

    இதனை பார்த்து வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர். நேரம் ஆக ஆக கரடியினால் ரோட்டை கடக்க முடியாததால் பயங்கரமாக சத்தமிட்டது.

    இதனைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை வேகமாக எடுக்க சென்றனர். பிறகு சிறிது நேரம் கழித்து வாகனங்கள் சாலையில் இல்லாததை பார்த்து தனது குட்டிகளுடன் கரடி ரோட்டை கடந்து சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கரடிகள் ரோட்டை கடந்து சென்று ஆற்றுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிற்பதும், வன விலங்குகளை கண்டதும் செல்ேபானில் படம் எடுப்பதும் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் காணப்படுகிறது.
    • பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வன விலங்குகள் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி முக்கிய நகர பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி ஒன்று உலா வருவதாகவும், அந்த கரடி இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபடும் ஊர் காவல் படையினர் மற்றும் பொதுமக்களை துரத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    அந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் புகார்கள் எழுந்தது. ஆனால் தற்போது கோத்தகிரி போலீஸ் நிலையம் அருகிலேயே அந்த கரடி உலா வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இரவு நேரம் பணியில் இருந்த காவலர்கள் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அங்கு கரடி ஒன்று நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு கரடியை பார்த்து கூச்சலிடவே அந்த கரடி அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று மறைந்தது. போலீஸ் நிலையம் அருகில் கரடி சுற்றி திரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

     கோத்தகிரி

     கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் விநாயகர் கோவில் முன்புறம் கரடி உலா வந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல நேற்று முன்தினம் இரவு ஊர்க்காவல் படையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 43) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் கரடி துரத்தியதில் தவறி கீழே விழுந்து கிறிஸ்டோபர் காயமடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


    ×